Everything posted by Justin
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா? முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன். இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது. அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி? முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும். இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன: 1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும். 2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது. எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.
- இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் அதிர்ச்சித் தகவல்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😎ஓ யெஸ்..முன்னுக்குப் பின் முரணாக, தங்களுக்கே சிரிப்பு வரவைக்கும் விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..இவர்களை வெளியே இருந்து தான் ஒருவர் "மட்டந் தட்ட" வேணும்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😂😂🤣அட்ரா சக்கை! அப்ப விசுகர் ஐரோப்பிய முறைப்படி "உரிய படிமுறைப்படி-due process" போகும் ஆள் போல! அந்த உரிய படிமுறை புலிகளுக்கு மட்டும் தான் கிடைக்க வேணுமோ அல்லது புலிகள் தண்டனை கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் தேவையோ😎? உதாரணமாக, நீலன் மீது புலிகள் வைத்த குற்றப் பத்திரிகை எங்கே? எப்படி அவர் விசாரிக்கப் பட்டார்? எங்கே due process? பி.கு: 10 பக்கம் வந்த பின்னர் திடீரென்று குத்துக் கரணமடித்து நீலனைப் புலிகள் கொல்லவில்லை என்றிருக்கிறீர்கள், அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ! சேச்சே நினைத்திருக்க மாட்டார்- நம்புகிறார் அப்படி😂! விசுகரோடான அரசியல் கொலை பற்றிய உரையாடல்கள் வருடக் கணக்காக இப்படித் தான் முடிகின்றன. முதலில் வேள்விக்காக கொலை, பின்னர் அங்க இங்க ஓட்டம், இது இறுதிப் பாகம்: புலிகள் செய்யவில்லை! இந்த ஜோக் அமீர் யோகேஸ்வரன் கொலை பற்றிய திரியிலும் நடந்தது! இனி இந்த திரி "சிரிக்க சிறக்க" மாதிரி இருக்கும்🤣!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு அரசியல் கொலை பற்றிப் பேசாவிட்டால் கொலைக்கு ஆதரவு என்கிறீர்களா? இதுவும் உங்கட "வில்லாய் வளைஞ்சு குத்தி முறிந்த" கந்தையா தியரிகளில் ஒன்றா😂? இங்கே யாராவது இந்தக் கொலைகளைப் பற்றிப் பேசப் பட்ட திரிகளில், இந்த பலியான நபர்கள் கொல்லப் படவேண்டிய காரணங்களை அடுக்கி வாதிட்டுக் கண்டிருக்கிறீர்களா? நான் யாழில் உறுப்பினராக இருக்கும் கடந்த 17 வருடங்களில் அப்படி நடந்து காணவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அரசியல் கொலைக்காளானவரின் கொலைக்கு நியாயம் கற்பிப்பது இன்னும் கொலைகளை ஊக்குவிக்கும் செயல்பாடு. இப்படியான நிராயுத பாணிகளின் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் ஒருவரைத் தடுப்பது மனிதத் தன்மை. இதில் அரசியல் சார்பு/எதிர்ப்பு எதுவும் அவசியமில்லை. உதாரணமாக நீலனை எடுங்கள், அவரது மக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டார் என்று என்னைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள். இங்கே உங்களைப் போன்றோர் கொலை செய்தவனுக்கே மரண தண்டனை வழங்காத ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, அவர் கொல்லப் பட்டதை எள்ளலோடு நியாயப் படுத்தும் போது, நீலனின் உறவுகளின் காயத்தில் உப்புத் தடவுகிறீர்கள் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருக்கிறீர்கள்?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை? யார் அது வேற தற்கொலை தாரிகள்?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை. புலிகள் இல்லாமல் போன பின்னர் நடந்த ஈஸ்ரர் குண்டு வெடிப்பு புலிகள் அல்ல! அப்ப சீரியசாக நான் பகிடிக்குச் சொன்னதை வைத்து ஹமாஸ், ஹிஸ்புல்லா தான் நீலனைக் கொன்றனர் என்கிறீர்களா? பிறகேன், மேல ரண்டு ஜட்ஜ் மார் நீண்ட தீர்ப்பெழுதி மெனக்கெட்டவையாம்? இப்படி கொமெடியனாக நீங்கள் மாறுவதைப் பார்க்க எனக்குக் கூசுது!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எதிர்பார்த்த திசையில் தான் போகுது உரையாடல்: "நீலனை நாங்க தான் கொன்றோம், இவை தான் காரணங்கள்" என்றார்கள் - எல்லாம் மொக்கைக் காரணங்கள் (இதே காரணங்களுக்காக அன்ரன் பாலசிங்கத்தையும் நாமளே சாக்கோல்லியிருக்கோணும், சீரியசாக!😂) காரணம் சரியில்லை என்றவுடன், "புலிகள் உரிமை கோரினார்களா? எப்படி நிரூபிப்பீர்கள்? என்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீலன் விடயத்தில் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா செய்திருக்கலாமென?? ஏனெனில் அவர்களிடம் தான் தற்கொலைப் படை இருந்தது?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்தா, இரண்டாவது ஜட்ஜும் வந்து concurring decision எழுதியாச்சு😂! கந்தையராவது வாழ்ந்து கற்றவர்..இவரோ மடியில இருந்து கதை கேட்டு வரலாறும் சட்டமும் கற்ற "ஜட்ஜ் ஐயா"! நான் நினைக்கிறன் இனி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம், ஐடியாக்கள் யாராவது முன் வைத்தால், அவர்கள் தங்கள் சொந்தக் காசைப் போட்டாவது அதை நடைமுறைப் படுத்திப் போடோணும்! இல்லையோ பொத்திக் கொண்டிருக்கோணும். இரண்டுக்குமிடையில மாட்டிக் கொண்டால் "kill first, explain later" என்று எங்கள் அரைகுறை ஜட்ஜ் மார் தீர்ப்பெழுதுவீனம்😎!
-
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்த ஆய்வில் - ஆய்வைச் செய்தவர்களே ஒப்புக் கொண்டிருப்பது போல- பல குறைபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பதிவு செய்யப் பட்ட பக்க விளைவுகளை எடுத்து ஒன்றாகக் கூட்டி இந்த 100 மில்லியன் தரவுப் புள்ளிகளை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளில், மக்களினங்களில் இருக்கக் கூடிய மாறிகள், விகாரங்கள், பழக்க வழக்கங்கள், என்பவற்றால் ஏற்படும் விளைவுகள் எவையும் கணக்கிலெடுக்கப் படவில்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு. இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது! சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி. இது போன்ற மூலங்களில் தகவல்களைத் தேடியறிய இயலாமல், நன்னியர் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்பதை அவரது முன்னைய இரு கருத்துக்கள் மூலம் புரிந்து கொண்டதால் நான் பதிலளித்து மெனக்கெடவில்லை. இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கும் தீவிர தமிழ் தேசியர்களின் "மண்ணு லாறி" (உபயம்: கோசான்😂) தத்துவத்திற்கும் ஒரு ஒற்றுமையுண்டு: இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தில், அப்பாவித் தமிழரைப் பிடித்து "No date" அடித்து சிறையில் வைத்து விட்டு, "சந்தேக நபர் குற்றமற்றவர் என்று அவர் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள். இங்கால தீவிர தமிழ் தேசியர்கள் "புலிகளால் கொல்லப் பட்டவர் கொல்லப் படாமலிருக்க உண்மையில் தகுதியானவரா என்பதை கொல்லப் பட்டவரும் அவருக்கு அஞ்சலி செய்வோரும் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள். பி.கு: மேலே Justice கந்தையா உங்கள் வாதத்தைக் கேட்ட பின்னர் நீலனுக்கு posthumous தீர்ப்பெழுதியிருக்கிறார் பாருங்கள்😎!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்! இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை - ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது. ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம். பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எங்கே, யார் இணைத்துள்ளார்கள் ஆதாரம் உங்கள் கூற்றுக்கு? கபிதான் இணைத்த சட்டமூலத்தை தவிர எந்த இணைப்பும் என் கண்ணுக்குத் தெரியவில்லை! நான் குழம்பியிருப்பதாலோ😂?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂? அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள். சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்: 1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர். 2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள். இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது. எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?" நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்! இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்? என்ன "சிரிக்க சிறக்க" பகுதியில் எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்களா? உங்கள் குழப்பமான அலம்பல் உங்களுக்கே புரிகிறதா😂? இப்படிப் பட்ட தீவிர தேசியர்கள் "அப்பன் குதிருக்குள்" இல்லை என்று புலிகளைக் காட்டிக் கொடுக்கும் முழுமையான கூழ்முட்டை கேசுகள்! இப்படிப் பட்டோருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அமரர் விவேக் கொமெடி பார்த்த அளவு சிரிப்பு வரும்😂!
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை, 1930 இல் இருந்து 2014/2015 இற்கு முன்னேறியிருக்கிறியள், மகிழ்ச்சி😂! ஆனால், அதுவும் தவறு தான். நீங்களே இணைத்த றொய்ற்றர்ஸ் கட்டுரையின் வரைபை உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, இந்த இலட்ணத்தில் மற்றவனுக்கு ஆங்கில மொழி புரியவில்லை என்ற நக்கல் வேற! இதைத் தான் சொல்வது: தெரியாதவனும் தேடாதவனும் தெனாவெட்டாகத் திரிய, விளங்கிக் கொண்டவன் வெட்கி நிற்க வேண்டிய கலிகாலமெண்டு😎!
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கூர்ந்து படிக்க பிபிசியை விட அதிகமாகவோ வித்தியாசமாகவோ எதுவும் இல்லை. 1930 இல் இருந்த பெருநிறுவன நன்கொடையை மோடி ரீமின் வங்கி தேர்தல் பத்திரத்தோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதெனத் தெரியவில்லை. காங்கிரசை, பிஜேபியை விட மோசமாகக் காட்ட வேண்டிய அவசரம் என நினைக்கிறேன். இனியாவது கருத்துகளை சும்மா எழுதாமல், செய்தியையொட்டி எழுதுங்கள் - வாசகர்கள், பதிலிறுப்போரின் நேரம் மிச்சமாகும்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்களுக்குச் சுட்டு விட்ட அந்தக் கேள்வியின் பிரதான பாதியை வசதியாக மறந்து விட்டீர்களே😎? ஆமி கொன்ற தமிழ் மக்களெல்லாம் கோத்தா சொன்னது போல, உங்கள் நூதன சிந்தனையில் நீங்கள் கண்டு பிடித்தது போல, "சீருடை அணியாத புலிகள்" என்றால் பிறகேன் இனவழிப்பு, போர்க்குற்றம் என்று முறைப்பட்டுத் திரிகிறோம் என்கிறீர்கள்😂?
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
இது வட்சப் அவியலாக இருக்கலாமென ஊகிக்கிறேன்😂? முதல் அலை விமானங்கள், அமெரிக்க றேடாரில் பதிவாகின, அமெரிக்காவின் பி17 தான் வருகிறதென உயர் அதிகாரி உதாசீனம் செய்யச் சொன்னார். இரண்டாம் அலை விமானங்கள் வந்த போது றேடார் இருக்கவில்லை. மேற்கு எதிர்ப்பு, இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வுகள் நியாயமாக இருக்கலாம், ஆனால் தகவல்கள் சிறிதாக இருந்தாலும் சும்மா "பொங்கல் வைச்சு" உங்களை நீங்களே முட்டாளாகக் காட்டிக் கொள்ளக் கூடதென்பது என் அபிப்பிராயம்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உறவே, தென்பகுதியிலோ வடக்கு கிழக்கிலோ 50 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது தான் ஒரிஜினல் சட்டம். இதை யாரும் மறுக்கவில்லையே? ஆனால், உங்கள் முதல் கருத்து இந்த காணி சீர் திருத்தம் மூலம் தமிழர்கள் காணி சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்பட்டது என்றல்லவா சொன்னீர்கள்? அதைத் தான் ஆதாரமில்லாத கருத்து என்கிறோம். உங்கள் உறவினரின் தென்னங்காணி சிங்களவர்களுக்கு வழங்கப் பட்டதா? இல்லையல்லவா? அது மட்டுமா? 50 ஏக்கருக்கு கூடிய காணி வைத்திருந்தோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் மைனர்களாக இருந்தாலும் ஒரு விலைக்கு விற்கலாம், அல்லது அரசு எடுத்த காணியை அந்தக் குடும்பத்தினர் யாராவது மீள ஒரு நியாய விலை கொடுத்து வாங்கலாம் இப்படியெல்லாம் பல வழிகளில் பரம்பரைச் சொத்து துண்டாடப் படாமல் ஒட்டைகள் விட்டுத் தான் சீர் திருத்தம் நடந்தது. இதெல்லாம் நடந்து 30 வருடங்கள் கடந்த பின்னர் மத்திய மாகாணத்தில் யானைக்கும், கால்நடைகளுக்கும் வைத்தியம் பார்க்க பல வளவுகாரர்களின் எஸ்ரேற்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களது காணிகள் 50 ஏக்கருக்கு மேலாக அப்படியே அவர்களிடம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனவே, காணிச் சீர்த்திருத்தம் தெற்கிலேயே நடைமுறையாகவில்லை, வடக்கு கிழக்கிலும் நடைமுறையாகவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இதனோடு சம்பந்தமில்லாமல் ஆக்கிரமிப்பு மூலம் தமிழர் காணிகள் பறிபோயின.