-
Posts
6422 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by இணையவன்
-
குமாரசாமி, இலங்கையில் தாக்குதல் நடத்திய விமானியின் படமா இது ? இதன் ஆதாரம் என்ன ? ஏனென்றால் ஒருவரின் படத்தைப் போட்டு ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்துவதும் யாழ் மூலம் பொய்யான தகவலைப் பரப்புவதும் தவறானது.
- 477 replies
-
- 1
-
-
- உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு
- உக்ரேனியர்கள் படுகொலை
- (and 1 more)
-
அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. -
வணக்கம் பிரபா, இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள். நன்றி.
-
புலம்பெயர் தமிழரால் தாயகத்தில் சோம்பேறியாகும் ஒரு தலைமுறை..
இணையவன் replied to பாலபத்ர ஓணாண்டி's topic in சமூகவலை உலகம்
10 வயது முதல் சனி ஞாயிறில் மாட்டுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போட்டு சாணகம் அள்ளி, முற்றம் கூட்டுவதிலிருந்து சிறிய வேலைகள் செய்து வீட்டுக்கு உதவியாக இருந்துள்ளேன். 12 வயதுமுதல் எனது உடைகளை நானே துவைத்து அயன் செய்து வீட்டு வேலைகள் பல செய்யப் பழகியுள்ளேன். இள வயதில் கற்றவையே இப்போதும் எனது சிறிய சம்பளத்தைக் கொண்டு முன்னேறி பிரான்சில் நடுத்தர வர்க்கமாக வாழ உதவுகிறது. அதுமட்டுமில்லாது இங்கு முன்னேற்றத்திற்கான பல்வேறுபட்ட பாதைகள் பரந்து கிடக்கின்றன. இப்போது அங்கு நகரங்களில் வாழ்பவர்கள் இப்படி வாழ வேண்டிய தேவை இல்லையாதலால் இளைஞர்கள் சொகுசான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று நான் அங்கு பிறந்திருந்தாலும் எனது நிலை இப்படித்தான் இருந்திருக்கும், நானும் வெளிநாட்டிலிருப்பவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கலாம். இன்னொருபுறம் மெளிநாட்டில் வசிப்பவர்களில் பலரும் இந்தப் பகட்டு வாழ்க்கையையே வாழ்கின்றனர். குடியிருக்க வசதியான வீடு இருக்காது, சரியான உணவு உண்பதில்லை, ஆனால் சாமத்தியவீடு திருமணம் பிறந்தநாள் என்று வந்துவிட்டால் கோடீள்வரர்களைப்போல் பந்தா காட்டி தமது அதி உச்ச சேமிப்பையும் அதில் செலவிடுவது. இலங்கைக்கு விடுமுறைக்குப் போகும்போது தாங்களை வேற்றுலக ஜீவிகள் போல் காட்டிக் கொள்வது. அத்தியாவசியமில்லாவிட்டாலும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி தாமும் உயர்ந்த நிலையுல் இருப்பதாகக் காட்டிக் கொள்வது. இது போன்று பலதைக் கூறலாம். நாங்கள் வாழும் நாடுகளில் வசிக்கும் பூர்வீக வாசிகளுக்கு இந்த எண்ணம் இல்லை. பாலபத்திரர், நீங்கள் சொல்வதுபோல் இங்கு உழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் குறுக்கு வழியையே தேடும் எம்மவர்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். வரி ஏய்ப்பு, சமூக உதவி மோசடி, வட்டி சீட்டு, கோயில், மதமாற்றம் என்று பட்டியல் நீளும். அங்குள்ளவர்கள் மீது குற்றம் சுமத்துமுன் ஏன் இந்த நிலைக்குள் எம்மவர்கள் எல்லோரும் உள்ளாகியுள்ளனர் என்று ஆராய்வதும் நல்லது. இதற்கான காரணங்கள் எவை ? - கலாச்சாரம் - கல்வி - சமயம் - சாதி - பொது அறிவு - குடும்ப வழிகாட்டல் எது ?- 14 replies
-
- 13
-
-
-
நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!
இணையவன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
https://www.parliament.lk/uploads/bills/gbills/tamil/6123.pdf அந்தச் சட்ட வரைபு இதாகத்தான் இருக்க வேண்டும். இதில் எதை மாற்றியுள்ளார்களோ தெரியவில்லை. அநேகமான குற்றிச் செயல்களைப் பயங்கரவாதம் என்பதற்குள் கொண்டு வரலாம் போலுள்ளது. இலங்கையின் இறைமைக்கு எதிரான, ஒருமைப்பாட்டுக்கு எதிரான என்று பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண குற்றம் செய்த அல்லது செய்ததாகக் கருதப்பட்ட ஒருவரைப் பயங்கரவாதியாக்க முடியும். இதனால் பெரும்பாலும் பாதிப்படைந்தவர்கள் தமிழர்கள்தான். ஏதோ கொஞ்சமாவது மாற்றம் செய்துள்ளது நன்மையே. -
அவை யார் என்பதுதான் பிரச்சனை. சைக்கிளைப் பார்த்து சிலர் குசியாகலாம்.
-
நல்ல கோரிக்கை.
-
கவிழும் பொருளாதாரம்! என்ன நடக்கும்? லாபமா நட்டமா?
இணையவன் replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
இப்ப நான் என்ன செய்ய வேண்டும் ? -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
நீங்கள் குறிப்பிட்டது போன்று நீண்டகால அடிப்படையில் பிட் கொயின் நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன். இந்தச் சடுதியான ஏற்ற இறக்கங்களைத் தாண்டி சீரான நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது தற்போதுள்ளது போன்று குறுகிய காலத்தில் முதலீடு செய்து விற்று பெரும்தொகையை இலாபமாக ஈட்டக்கூடிய நிலை இருக்குமா என்பது சந்தேகம். இந்த சீரற்ற நிலை காரணமாகத்தான் உள்ளூர் பணமாக மிட் கொயினை சல்வடோர் நாடு பயன்படுத்துவதை இரத்து செய்யுமாறு இன்று IMF கேட்டுள்ளது. -
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும்
இணையவன் replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
அருமையான கட்டுரை. இணைப்பிற்கு நன்றி கிருபன். கூட்டமைப்பு ஒற்றுமை என்ற விம்பத்தைத் தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றது. இதனால் தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான கொள்கைக்கான ஒற்றுமை தமிழர் தரப்பினரிடம் சிதைக்கப்படுகிறது. சிங்கள அல்லது முஸ்லிம் கட்சிகள் போன்று வெவ்வேறான கட்சிகளாகவோ கொள்கைகள் கொண்டவர்களாகவோ இருக்கலாம். ஆனால் தமது தரப்பின் உரிமையை வென்றெடுக்க ஒரே குரலில் ஒன்றுபடலாம். அண்மையில் இந்தியாவுக்குக் கடிதம் கொடுப்பதற்கு இவ்வாறான முயற்சி செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு மக்கள் ஆணையை ஏற்று தலைநிமிர்ந்து எங்கேயும் தமக்கு வாக்களித்த மக்களுக்காகப் போராடியதாகத் தெரியவில்லை. தமிழருக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியைக் கூடப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக உள்ளனர். இந்திய அதிகாரிகளைச் சந்தித்து இரகசியமாகப் பேசுவதும் கடிதம் கொடுப்பதும் தவிரக் கூட்டமைப்பால் ஈழத் தமிழரின் ஏகோபித்த குரலாக ஒலிக்க முடியாது. இன்னொரு பக்கம், டக்கிளஸ் சங்கரி போன்றவர்கள் தனியாக இயங்கினாலும் பொதுவான ஒரு காரணத்திற்காக இவர்கள் குரல் கொடுக்கப் போவதில்லை. ஏனென்றால் இவர்களின் அடிப்படை அரசியலே கூட்டமைப்புடன் ஒன்றுபடாமையாகும். அங்குள்ள மக்கள்தான் புதியவர்கள் மூலம் தமிழ் அரசியலில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். -
இந்தியாவில் நடைபெற இருக்கும் முதலாவது metaverse திருமணம்
இணையவன் replied to இணையவன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
நிச்சயமாக. நானும் முன்பு நினைப்பதுண்டு. ஒரு சதுர அடி நிலம் உலகில் எங்காவது தனி அரசு அமைப்பதற்கு அல்லது அப் பிரதேச சட்டத்துகு உட்பட்ட விதத்தில் ஒரு நுண் கிராமகாக உருவாக்கக் கூடியதாக இருந்தால் மீதியை உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைத்து மாபெரும் சக்தியாக உருவாக்க முடியும். ஏறத்தாள இப்போதுள்ள நாடு கடந்த அரசு போல். ஆனால் யாராவது செய்யப் போனால் 'புலிகளே' எதிரியாக வருவார்கள். -
இந்தியாவில் நடைபெற இருக்கும் முதலாவது metaverse திருமணம்
இணையவன் replied to இணையவன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
காணியின் விலை உண்மையான காணியை விட விலை அதிகம். அப்படியே தமிழீழத்தையும் உருவாக்கி விடுவமா ? -
இந்தியாவில் நடைபெற இருக்கும் முதலாவது metaverse திருமணம்
இணையவன் replied to இணையவன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
Meta (facebook) நிறுவனம் உலகிலேயே மிக அதி வேகமுடைய சூபர் கணணி ஒன்றை உருவாக்கி வருகிறது. இக் கணணி அந் நிறுவனத்தின் மாய உலகை இயக்கப் போகிறது என்பது செய்தி. https://www.sciencesetavenir.fr/high-tech/informatique/meta-presente-son-supercalculateur-surpuissant_160969 --- புலம்பெயர்ந்த தமிழர்களில் வயதானவர்களும் பெண்களும் ஒரு நாளில் பல மணி நேரங்கள் சண் ரிவி, விஜய் ரிவி ஆகியவற்றிற்கு முன்னால் பேய் அறைந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். நாடகம் என்பது என்ன ? ஒருவித போலியாக உருவாக்கப்பட்ட குடும்பங்கள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள். இவை எந்த ஆக்கபூர்வமான அறிவியலான கருத்தாக்கத்தையோ அல்லது மனித மேம்பாட்டிற்கான அனுகூலங்களையோ கொண்டிருக்கவில்லை. மாறாக பல கோடி மக்களை இதனுள் மூழ்கவைத்து அவர்களின் வினைத்திறனை மழுங்கடிக்கச் செய்கிறது. எனது குடும்பத்திலேயே இந்த நாடகங்களுக்குள் ஒரு நாள்கூட சஞ்சரிக்காமல் இருக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். இந்தப் போலியான சம்பவங்களைப் பற்றி இன்னொருவருடன் நிஜமாக பக்கத்து வீட்டில் நடைபெற்ற சம்பவம்போல் உரையாடக் கேட்டுள்ளேன். இதுவும் ஒரு மாய உலகல்லவா ? ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சமயங்கள் மூலமாக சொர்க்கலோகம் நரகலோகம் இந்திரலோகம் என்றெல்லாம் யாரும் பார்த்திராத மாய உலகங்களை மக்களை நம்பவைத்தனர். முருகன் மாங்காய்க்காக உலகத்தை மயிலின் முதுகில் ஏறி வலம் வந்தார் என்றும் சூரனனோடு சண்டை பிடித்தார் என்றும் சொல்லப்பட்ட கதைகளை நம்பி கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்து அந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே வரவைக்கிறோம் அல்லவா ? இதுவும் மாயைதான். Meta verse தொழில்நுட்பம்தான் புதிதே தவிர எல்லாம் பழையத்தான். -
நானும் இவரது பேட்டியைப் பார்த்தபோது யோசித்தேன். இவர் போட்டிக்குச் செல்வதற்காக உதவி கேட்டபோது நாம் செய்யவில்லை. யாருக்கும் இவர் தெரியவில்லை. இதெல்லாம் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் இவர் பதக்கம் வென்றவுடன் தீவிர தமிழ் தேசிய வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கோருவதையும் மீம்ஸ் போடுவதையும் சக்கிக்க முடியவில்லை.
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம் திருமண மண்டபத்தை உருவாக்கி வருகிறார். மூலச் செய்தி : https://www.courrierinternational.com/revue-de-presse/futur-un-couple-indien-va-se-marier-dans-le-metavers
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
mining செய்வதில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்ஷியாவும் விரைவில் mining செய்வதைத் தடை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அதன் மத்திய வங்கி பாராளுமன்ற அறிவித்தலை எதிர்பார்த்து நிற்கிறது. பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் கிரிப்டோ தொடர்பான தனது புதிய சட்டங்களை அறிவிக்கலாம். இது கிரிப்டோவுக்குச் சாதகமானதாக இருக்கலாம். பிரான்சில் குறிப்பிட்ட அளவுக்குமேல் கிரிப்டோ மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு அதிகமான வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். https://journalducoin.com/analyses/taxation-et-regulation-de-bitcoin-et-des-crypto-actifs-en-france-en-2022-lheure-du-bilan/ -
புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்!
இணையவன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இவ்வளவு பண வீக்கம் உள்ள இலங்கையில் நிலையான வைப்பு வீதம் வெறும் 5.5 வீதம் தானா ? -
தலைப்பில் இயற்கை அதிசயம் என்று உள்ளது. உலக வெப்பமாதலின் ஒரு தாக்கம்தான் இந்தப் பனிப் பாறைகளின் உருக்கம். முன்பு ஒரு தடவை இப்படி மிதக்கும் ராட்சத பனிமலையை பாரிய படகுகளால் கட்டி இழுத்து ஆபிரிக்காவுக்கு அருகில் கொண்டு வந்தால் ஆபிரிக்காவின் பாதி நாடுகளுக்கு ஒரு வருடத்துக்குக் குடிநீர் வழங்கலாம் என்று கணித்திருந்தார்கள். முதலீடு செய்ய யாரும் இல்லாததால் அத் திட்டம் கைவிடப்பட்டது.
- 1 reply
-
- 2
-
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும். கிரிப்டோவில் முதலீடு செய்ய இன்று சாதகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லாததற்கு நான் கூறும் காரணங்கள் : - சீரற்ற, நிலையற்ற தன்மை. இன்று சந்தையில் உள்ள கிரிப்டோக்களில் நாளை ஒன்று இன்னொன்றை தாண்டி மேலே வரலாம். - கிரிப்டோ தொடர்பான சட்டதிட்டங்கள் இன்று எதுவும் இல்லை. மேலத்தேய நாடுகள் இதனை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. - கிரிப்டோ உலக வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிக்கிறது. இது பற்றி இங்கு பேசப்பட்டதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் சீனாவில் நிலக்கரி மின்சாரத்தில் இயங்கிய கணணிகள் (mining) பின்னர் சீனாவால் தடைசெய்யப்பட அவற்றின் பெரும் பகுதி உக்ரெய்னுக்கு மாற்றப்பட்டு எரிவாயுவினால் உற்பத்தி செய்யப்படும் முன்சாரத்தில் இயங்கின. பின்னர் படிப்படியாக பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இன்று Bitcoin இன் மின் பாவனை நோர்வே நாட்டின் முழு மின்சார உற்பத்திக்கு ஈடாகக் குறிப்பிடப் படுகின்றது. -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இணையவன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
ழேற்று இரவு மட்டும் 1500 டொலர்களுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது. ஒருசிலர் வாங்க முற்படும்போது உருவாகும் ஏற்றத்தைப் பயன்ப்படுத்தி அதிகமானவர்கள் விற்க முயல்கிறார்கள் என்ற்று நினைக்கிறேன். சிரற்ற தன்மையால் வரும்காலத்திலும் இது ஒரு நிலையான முதலீட்டுத் தளமாக மாறுமா என்பது சந்தேகம். யாராலும் அடுத்த 10 நாட்களுக்குள் நடைபெறப்போகும் மாற்றங்களை அண்ணளவாகவேனும் எதிர்வுகூற முடியவில்லை.