Everything posted by இணையவன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ரஸ்யா - உக்ரேன் இஸ்ரேல் - பலஸ்தீன் ஈரான் - இஸ்ரேல் (+மேற்கு)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீன் தனிநாட்டை ஆதரிக்கும் அதே வேளை இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்குகொள்ளும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விபத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். விமான பாதுகாப்பு விதிமுறைகளும் விமான தொழில்நுட்ப பராமரிப்புகளும் நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. அதேவேளை விமானப் பயணங்களும் அதிகரித்து வருகின்றது. ஒரு வருடத்தில் 3 கோடி விமானப் பறப்புகளில் ஏற்படும் 5 முதல் 6 விபத்துகள் மிகக் குறைவானவையே. இருந்தாலும் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு எதிர்காலத்தில் விமான பயணங்கள் மேலும் உறுதியடைய வேண்டும்.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
உண்மையான ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டும் இணையத் தளங்களில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பொருட்களின் கரிமத் தேதியிடல் ஆய்வு முடிவுகள் 2600 வருடங்களையே காட்டுகின்றன. நான் நினைக்கிறேன் 4000 - 5000 ஆண்டுகள் என புரளியைக் கிழப்புபவர்கள் குமரிக்கண்ட கோஸ்டியாகத்தான் இருக்கும். ஆய்வு ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஊகங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. பாலகிருஷ்ணன் அவர்களது கட்டுரை, காணொலிகளைப் பார்த்துள்ளேன். சிறந்த ஆய்வாளர். தமிழ்நாட்டில் உலாவும் 5000 வருடங்களுக்கு முன் இரும்பு பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியான ஆதாரமற்றது என்று நினைக்கிறேன். இதுவரை உலகில் 3500 வருடங்களுக்கு முன்பே இரும்பு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
நான் நம்ப வேண்டுமானால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கோடிக் கணக்கானவர்களை விடுங்கள். சில ஆயிரம் நபர்களை எடுத்து அவர்களின் வாழ்க்கை முறை எண்கணித சாத்திரத்தின்படிதான் நடக்கிறது என்று யாராவது நிறுவியுள்ளார்களா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நிச்சயம் நிறுவவும் முடியாது. எல்லாத் தினசரிகளிலும் இல்லை. அதுவும் ஒதுக்குப் புறமாகப் போட்டிருப்பார்கள். ஏனென்றால் மிகக் குறைந்தவர்களே இதனை வாசிக்கிறார்கள். அதுவும் பலர் இதனைப் பொழுது போக்காகத்தான் வாசிக்கிறார்கள்.
-
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
வளைவுப் பாலமோ வளைவில்லாத பாலமோ, சீனா 625 மீற்றர் உயரமான பாலம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளது. இந்தச் சிறிய இடைவெளிச் சந்தில் மோடி சிந்து பாடியுள்ளார் போலுள்ளது. https://en.wikipedia.org/wiki/Huajiang_Canyon_Bridge
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல. பாடசாலை வாசலில் போதைப்பொருள் விற்பதைத் தடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்கலாம். இதில் காவல்துறை, தமிழ் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என்று எல்லொரும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
போர் முடிந்தபின் எல்லோரும் திட்டமிட்டுத் தையிட்டியை அடுத்த இன மோதல் களமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
ஐரோப்பியர்கள் 13 இனை ஒதுக்கக் காரணம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. அது அப்படியே பரவி விட்டது. எங்கள் ஊரில் 13 இப்படி இல்லையே. சீனாவில் 13 கூடாத இலக்கம் இல்லையாம். மாறாக 4 இனை ஒதுக்குகிறார்கள். பழைய எகிப்த், கிரேக்கத்தில் 7 ஒதுக்கப்பட்டதாம். இந்தியாவில் 8 இனை ஒதுக்குகிறார்கள். எண் சாத்திரம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அல்லது மதத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடுமா ? 😂
-
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
இவர்கள் இருவரினதும் எதிரியான முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் Thierry Breton நேற்று தனது எக்ஸ் பதிவில் பொப்கோர்ன் படம் ஒன்றைப் போட்டிருந்தார். தனைக்கனம் பிடித்த இருவரும் மோதிக் கொள்ளும்போது எங்களுக்குக் கொண்டாட்டம்தான். டிரம்ப் தன்னுடன் மஸ்க்கை வைத்திருந்தால் அவர் ஆதரவாளர்களாலேயே பிரச்சனை வரும். வெட்டி விட்டாலும் பிரச்சனைதான். மஸ்க் பலமானவர். விரைவில் இருவரும் சமாதானம் ஆகாவிட்டால் மஸ்க் டிரம்பை 'வெச்சு செய்வார்' 😀.
-
“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்
ழல்ல திட்டம்தான். குப்பையை அகற்றுவது எளிது. அகற்றிய குப்பைகளை என்ன செய்வார்கள் என்பதில்தான் சவால்கள் உள்ளன.
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது அநேகமானவர்களுக்குத் தெரியும். எங்கே எப்படி விற்கிறார்கள் என்பதும் தெரியும். சிங்களத்தின் திட்டமிடலாக இருக்கலாம், போதைப்பொருள் இறக்குமதியை மறைமுகமாக ஆதரிப்பது சிங்களமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரில் வினையோகம் செய்வது தமிழர்கள். தமிழ் அரசியல் வாதிகள் பலர் இந்த முக்கிய பிரச்சனையாகிய போதைப்பொருளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ? இன்று போட்டோக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இறந்தவரின் கருவின் டிஎன்ஏ அப்குப்பாய்வு மூலம் இக் குழந்தை கணவரினுடையது தான் என்று நிரூபித்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க முடியுமா ? கோபத்தில் நிலைகுலைந்து ஒரு கொலை செய்வது வேறு. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போகுமளவுக்குக் குரூரமான இந்தத் தன்மானத்தான் ஒரு மிருகமே.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
முருகன் அருள்பெற்ற மாம்பழம் பணம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். இனிமேல் வெளிநாட்டிலிருந்து போனவர்களுக்கே கிடைக்கும். உள்ளூர்காரர்களுக்கு உள்ளங்கையில் பஞ்சாமிர்தம் மட்டும்தான்.
-
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்
அது மட்டுமின்றி Usaid மூலம் வறிய நாடுகளுக்குக் கிடைத்த உதவிகளும் 90 வீதம் நிறுத்தப்பட்டுள்ளது. பூமி மாசுபடுதல், வெப்பமாகுதலுக்கு எதிரான வேலைத்திட்டங்களுக்கும் டிரம்ப் அவர்கள் முட்டுக்க்கட்டை போட்டுள்ளார். வரி அதிகரிப்பினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தித் தேங்கல் பற்றிச் சொல்லவே வேண்டாம். டிரம்ப் ஆட்சி வந்தால் உலகத்துக்கே நல்லது என்று எங்கோ எதிரொலி கேட்கிறது. 😂
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
80 வீதம் ஏமாற்று வேலை இருப்பதை நீங்களே சொல்கிறீர்கள். ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பதை நிறுவ வேண்டுமானால் இருக்கின்றது என்பதையே நிறுவ வேண்டும். சுலபமானதும் கூட. இல்லாததை இல்லை என்று நிறுவுவது கடினம். இதே திரியில் எழுதியவர்களில் அரைவாசிப் பேர் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். 50 வீதம் என்பது உண்மை ஆகாது, அது நிகழ்தகவு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த கிருபனுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
ஒருவிடயம் உண்மையாக இருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரே பிறப்பு எண்ணைக் கொண்ட பத்தாயிரம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் குறைந்தபட்சம் 75வீதம் - 7500 பேராவது தமது திகதி எண்ணுக்குரிய ஒரே தன்மையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். 9 எண்கள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் இலகுவானது இதில் பிறந்த திகதி எண்ணுடன் கூட்டெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் 1 வீதம் இருந்தால்கூட 100 பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். திகதி எண், கூட்டெண், பெயர் ஆகிய மூன்றும் பொருத்தமான 100 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவ்வாறு யாராவது செய்திருக்கிறார்களா ? ஒவ்வொரு எண்ணுக்கும் பொதுப் பலன்கள் கூறும்போது பணக்காரன் ஆகுவார், உயர் பதவியில் இருப்பார், பிரபலமானவராக இருப்பார், கடுமையாக உழைத்து முன்னேறுவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கும். ஏழையாக இருப்பார், வாழ்க்கை முழுவதும் தோல்வியடைவார், முட்டாளாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்காது. ஒருவரது வாழ்வில் பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்திருக்கும். பலன்களை வாசிக்கும் ஒருவர் தன்னோடு தொடர்புடைய நிகழ்வுகள் சில ஒத்துப் போகிறது என்றால் மீதியான நிகழ்வுகளைப் புறம்தள்ளி அதனை நம்ப ஆரம்பித்து விடுவார். எண்ணுக்கேற்றவாறு பெயரை வைத்துவிட்டால் எல்னோரும் வாழ்வில் வெற்றியடைந்துவிடுவார்களே. நிலமை அப்படி அல்ல. தெற்கசியாவை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்கள் அடக்குமுறைக்குள்ளும் வறுமைக் கோட்டுக்குக் கீழும், துன்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ரஸ்யா தனது விமானங்களின் இழப்பிற்கு இந்த Treaty காரணம் என்று சொன்னதா ? இல்லை. இதை யார் சொல்கிறார்கள் என்று பார்த்தால், Treaty யை அரைகுறையாகப் புரிந்து கொண்ட சமூக வலைத்தள ரஸ்ய ஆதரவாளர்களின் பிரச்சாரமும் பொய்ச் செய்திகளை வெளியிடும் ரஸ்ய ஆதரவு ஊடகங்களும்தான். Treaty யின் Article 10 இல் 2 ஆவது பகுதியில் இது சொல்லப்பட்டுள்ளதாம். www.state.gov/wp-content/uploads/2019/02/11-205-Russian-Federation-Arms-Limitation-Treaty-and-Protocol.pdf பயிற்சி அல்லது அணுவாயுத சோதனை வேளையில் மட்டும்தான் விமானங்கள் வெளியே நிறுத்தப்பட வேண்டுமாம். 2023 இல் இந்த Treaty யில் இருந்து அரைகுறையாக வெளியேறிய ரஸ்யா 2 வருடங்களின் பின்னரும் தெளிவாகச் சொல்லப்படாத விதிகளைப் பின்பற்றியிருக்கும் என்று நம்பவில்லை. 2023 இலிருந்து அதன் தரவுகளைப் பகிர்வதை ரஸ்யா நிறுத்திக் கொண்டது. 2020 இல் அமெரிக்காவின் B-2 அணுகுண்டு வீச்சு விமானங்கள் பாதுகாப்பு மறைவிடங்களுக்குள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
மேலோட்டமாக வாசித்ததிலிருந்து, நேரடியான சோதனைகள் (Onsite Inspections) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிக் கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. அதற்காக விமானங்களை வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது பற்றித் தெளிவாக எதுவும் இல்லை. விடயம் அதுவல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒப்பந்தம் இருந்தாலும் ரஸ்யா தனது விமானங்களை வெளியில் நிறுத்த ஒப்பந்தம் காரணமில்லை. இந்த ஒப்பந்தத்தால்தான் ரஸ்யா பாதிக்கப்பட்டது என்பது போல் நீங்கள் எழுதிய தகவல் தவறானது. நீங்கள் மீண்டும் தாக்குதலுக்குத் தொடர்பற்ற இந்த அறிக்கையை இழுத்து எழுதினால் அதற்குப் பதில் தரப்போவதில்லை. அதுமட்டுமில்லை, இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் காலாவதி ஆகிறது.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
தவறான தகவல். இவ்வாறான ஒப்பந்தம் இருக்குமோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ரஸ்யா அதனை நடைமுறைப் படுத்துவதற்காக விமானங்களை வெளியே வைத்திருக்காது. இதற்கு வேறு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, வல்லரசு நாடு தனது அணுவாயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய விமானங்கள் எப்போது தயார் நிலையில் உள்ளன என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும். இவற்றின் அசைவுகள் எதிரி நாடுகளினால் செய்மதி மூலம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். அடுத்தது, வெளியில் நிற்கும் விமானங்கள் விரைவாகக் கிளம்பி தாக்குதலை மேற்கொள்ளலாம். ஒரு விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று அறிந்தால் விரைவாக இவற்றை நகர்த்தவும் முடியும். Tu-160, Tu-95 போன்ற பாரிய விமானங்களை பங்கருக்குள் வைப்பதில் செலவும் அதிகம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இவ் விமானங்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்தனவே தவிர ஒப்பந்தத்தால் அல்ல.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உக்ரெய்னிடம் விளையாடுவதற்குத் துரும்புச் சீட்டு எதுவும் இல்லை என்று ட்றம்ப் சில நாட்களுக்கு முன் உக்ரெய்னைக் கேவலப்படுத்தியிருந்தார். உக்ரெய்ன் நேற்று தன்னிடமுள்ள சீட்டு ஒன்றை விளையாடிக் காட்டியுள்ளது. இத் தாக்குதல் புதியதும் அல்ல உயர் தொழில்நுட்பமானதும் அல்ல, தந்திரோபாயமானது மட்டுமே. நேரடி யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் புதின் இப்போதாவது வந்தால் நல்லது.