Everything posted by இணையவன்
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
நேற்று நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கண் வைத்தியர் ஒருவர் கண்களுக்கான யோகசனப் பயிற்சியைச் செய்து காட்டினார். நமது கண்கள் இயற்கைக்கு மாறாகக் கண்சிமிட்ட்டுவது குறைந்து வருகிறது. பகலில் வேலையில் கணணித் திரை, பிரயாண நேரத்திலும் ஓய்வு வேளையிலும் கைத்தொலைபேசித் திரை, வீட்டுக்கு வந்தால் தொடர்படங்கள் பார்க்க தொலைக்காட்சித் திரை என்று எங்கும் எப்போது திரைகள். திரைகளை நோக்கி எமது கண்கள் அசைவின்றி வெறித்துப் பார்ப்பதினால் மூளையின் செயற்பாடும் குறையுமாம்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
நோர்வே எரிவாயுவும் எரியும். முகவர்களால் ஐரோப்பா வாழ்கிறதென்றால் Gazprom இலாபத்தில் அல்லவா இயங்க வேண்டும். 😀
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஒவ்வொரு ஊடகத்தின் நிர்வாகம், பிரதேசம், அரசியல் கொள்கை நீரியாக ஏதோ ஒரு பக்கம் நிற்கும். பிரான்சில் நடுநிலையாக மதிக்கப்படும் Mediapart போன்ற ஊடகங்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல தடவை தாக்கப்பட்ட Charlie Hebdo போன்றவற்றுக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. சீ என் என் போன்ற தளங்களை எட்டியும் பார்ப்பதில்லை. பி பி சி செய்திகளை அவசியம் ஏற்பட்டாலே ஒழிய தேடிச் சென்று வாசிப்பதில்லை. நான் செய்திகளை இன்ன தளத்தில்தான் வாசிக்க வேண்டும் என்று தேடிச் செல்வதில்லை. ஒரு செய்தியைப் பல்வேறு இணையத் தளங்களில் வாசிப்பதுண்டு. இதன் மூலம் தகவல்களின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். சரி. அடிக்கடி மேற்கின் ஊதுகுழல் என்று வெறுக்கும் இந்த ஊடகங்கள் தவிர உண்மையை எழுதும் செய்தித் தளங்களின் பட்டியலைத் தாருங்கள், இனிவரும் நாளில் நானும் உண்மைச் செய்திகளைப் படிக்கிறேன்.
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
குளிர்பான நிறுவனம் அமைக்க இவ்வளவு செலவாகுமா ? செய்தியில் உள்ளது போல் 230 கோடி தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக இருக்கலாம். பின்னர் அடுத்த வருடங்களில் குறிப்பிடப்படும் தொகை வேறு முதலீடுகளாக இருக்கலம். நேற்று Nvidia நிறுவனம் அப்பிள், மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களையெல்லாம் தாண்டி மூவாயிரம் பில்லியனுக்கு மேல் பங்குச் சந்தை மதிப்பைப் பெற்றது. ஆனால் இத்தனை பில்லியன் பெறுமதியான ஒன்றும் இந்த நிறுவனத்திடம் இல்லை. இதுபோல் வெளியாரின் முதலீட்டினை எதிர்வரும் வருடங்களில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கலாம்.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
எரிவாயு பற்றி விளக்கம் கேட்டதால் ஒரு தகவல். Gazprom. அரச வருமானத்தில் முக்கிய பங்குவகிக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனம். சோவியத் உடைவின் பின் வரலாற்றில் முதல் தடவையாக இந்த நிறுவனம் இந்த வருட ஆரம்பத்தில் நட்டமடைந்துள்ளது. 2023 இறுதியில் ஐரோப்பாவின் எரிவாயு இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 15 வீதமானது. 9 வீதம் குழாய் மூலமாகவும் மிகுதி திரவ நிலையிலும் ஐரோப்பா இறக்குமதி செய்கிறது. குழாய் மூலமான எரிவாயு உக்ரெய்ன் வழியாகவே ஐரோப்பாவுக்குள் வருகிறது. ரஷ்யா ஐரோப்பாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குழாயினை உக்ரெய்ன் அனுமதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் முடிவடைகிறது. இந்த வாரம் ஐரோப்பா கொண்டுவந்த பொருளாராத் தடையின்படி ரஷ்யாவின் திரவ வாயு இறக்குமதி நிறுத்தப்படுகிறது. மேலதிகமாக இன்னொரு தகவல். இறுதியாக புதின் சீனாவுக்குச் சென்று சீன அதிபரைச் சந்தித்தபோது சீனாவுக்கான எரிவாயு வழங்கல் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையில் குழாய் அமைக்கப்பட வேண்டும் என்று புதின் கூறியுள்ளார். சீனாவோ எங்களுக்கு எரிவாயு விற்பதானால் நீங்கள் தான் குழாய் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு Gazprom இடம் பணம் இல்லை.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
பல நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பெண்களுக்கு வாக்குரிமையை அனுமதிப்பதா இல்லையா என்று இழுபறி நடந்துள்ளது. பின்னர் தயங்கித் தயங்கி ஒவ்வொரு நாடாக பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள். ஒருபாலின உறவை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் உடலுறவை மையப்படுத்தியே எழுதியதைக் காண முடிகிறது. மிகவும் கண்ணியமான மென்மையான உணர்வுள்ள பல ஒருபாலினத்தவர்களுடன் பல வருடங்களாகப் பழகியுள்ளேன். சிலர் பார்வைக்குச் சாதாரண ஆண் பெண்களாகவே தெரியும். இவர்களுடனான உரையாடல்களில் என்றும் ஆபாசமோ பாலுணர்வோ தென்பட்டதில்லை. ஐரோப்பாவில் பிறந்து படித்து வளர்ந்த உங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி உரையாடிப் பாருங்கள், அவர்கள் தெளிவாக உள்ளனர். காலம் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது வரலாறு.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
அல்ஜஸீராவுக்கும் 1000 பேர் இறந்தது பெரிய செய்தி இல்லை போலுள்ளது. அதன் முதற் பக்கத்தில் இச் செய்தியை எங்கும் காணவில்லை. அதன் Middle East News பக்கத்திலும் இது தொடர்பான செய்தி இல்லை.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஆம் கடவுளை நம்புபவர்கள் மிக அமைதியானவர்கள். வாகனங்கள் ஓட்டி காற்றினை மாசுபடுத்துவதில்லை, விமானம் ஏறுவதில்லை, தொலைக்காட்சி பார்த்து மின்சாரத்தை வீணாக்குவதில்லை, காடுகளை அழித்து வீடு கட்டுவதில்லை, நாசினிகள் பாவிக்கப்படும் தானியங்களை உண்பதில்லை, மருத்துவர் தரும் மருந்துகளை உண்ணாமல் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்கள். நாத்திகவாதிகள் அதிகமாக வாழும் சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனித நேயமும் ஒழுக்கமும் சுற்றாடல் இயற்கை பற்றிய சிந்தனையும் இல்லாத மூர்க்கமானவர்களால்தான் உலகம் வெப்பமடைகிறது.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சவுதி நாட்டுக்கு ஹஜ் யாத்திரிகை மூலம் 15 பில்லியன் டொலர் வரை வருமானம் கிடைக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் சவுதி அரசு அறிவிப்பதில்லை. இறந்தவர்களின் சொந்த நாடுகளின் தகவல்களின் அடிப்படையிலான ஒரு மதிப்பீடு. முன்னைய வருடங்களில் சன நெரிச்சலில் மிதிபட்டு நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ளனர். ஒரு தடவை இடி விழுந்தும் பலர் இறந்தனர். இலங்கை இஸ்லாமிய இணையத் தளம் ஒன்று இறந்தவர்களைத் தியாகிகளாகியுள்ளனர் என்று எழுதியுள்ளது.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி வீரப்பையன்.
-
உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க ஜி7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல்!
இக் கடனுக்கு உத்தரவாதமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட ரஷ்ய வங்கி இருப்புகளால் கிடைக்கும் வருமானத்தில் கை வைக்கிறார்கள்.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ரஷ்ய துணை இராணுவப் படை ஒன்றுக்குச் சட்டவிரோதமாக இலங்கையர்களைச் சேர்த்த ஜெனரல் தர ஓய்வுபெற்ற இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளைப் போலீஸ் கைது செய்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml ரஷ்ய இராணுவத்தில் சேர்வதற்கு மாதம் 2100 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாகவும் இதுவரை 2000 ற்கு மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு வேகமகப் பழைய நிலைக்கு வருகிறது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ? கணணியிலா தொலைபேசியிலா இப்படி வருகிறது. ஏராளன், Back மூலம் பழைய நிலைக்கு வருவதற்குப் பதிலாக மெனுவில் Activity என்பதை அழுத்தி வரலாமே.
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
- நன்றி கெட்ட உலகமிது 😡
குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களில் முதலாவதை மரின் லுபெனின் தந்தை என்றே குறிப்பிட்டுள்ளேன். இரண்டாவது Badinter பற்றிய சம்பவம் உண்மையானது. இது தவிர மரின் லுபெனுக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜோர்டன் பார்தெலாவின் மறுபுறத்தைத் தேடிப் பாருங்கள் நாசிகளின் தொடர்பு கிடைக்கும். மரின் லுபென் ஜேர்மன் AfD கட்சியோடு நடத்தவிருந்த இரகசிய சந்திப்பும் அண்மையில் கைவிடப்பட்டு செய்திகளில் வந்தது.- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்னுமொன்றையும் கவனியுங்கள். இந்த தேசிய வாதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாசிகளுடன் தொடர்புள்ளவர்கள். அதே நேரம் புட்டின் இவர்களுடன் எவ்வாறு நட்புடன் உள்ளார்? 🫢- நன்றி கெட்ட உலகமிது 😡
சீமான் ஆதரவை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசியலை ஒப்பிட்ட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கதைக்கு உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவர் பாடசாலையில் சக மாணவரோடு விளையாடும்போது அவர்கள் வந்தேறு குடி என்று விளித்திருந்தால் அதனை உங்கள் மகன் உங்களிடம் முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மகனிடம், மகனே அவர்கள் திட்டியது நியாயமானது. வந்தேறு குடிகளான நாம் அதைப் பொறுத்துக் கொண்டு அதிகம் படித்து புத்திசாலியாகி பெரிய பதவிகளிலோ அரசியல் பதவிகளிலிருந்தோ ஐரோப்பியரை ஆளாமல் கொஞ்சமாகப் படித்து அவர்களுக்குக் கீழ்படிந்து வாழ்வதே நியாயமானது என்று சமாதானம் செய்வீர்களா ? சீமானின் இனவாதத்தை வரவேற்றால் அடிமையாக வந்து அமெரிக்காவை ஆண்ட கறுப்பினத்தவர் முதல் புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த சந்ததியின் அரசியல் பிரவேசம் வரை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சி இந்தத் தூய ஆட்சியை எதிர்த்து உருவானது. புரட்சி முடிந்து அடுத்த வருடம் 1790 ஆம் ஆண்டு அவர்கள் இயற்றிய சட்ட வரைபில் வெளிநாட்டு நபர் ஒருவர் 5 வருடம் பிரான்சில் இருந்து பிரெஞ்சு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் அல்லது பிரான்சில் சொத்து வைத்திருந்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜையாகக் கணிக்கப்படுவார் என்று எழுதியுள்ளனர். 1804 இல் நெப்போலிய மன்னன் பிரெஞ்சுக் கல்வியறிவு உள்ளவரும் பிரெஞ்சுப் பிரஜையாவார் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார். மரின் லுபெனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த இராணுவத்தினர் பொதுமக்களுக்கான நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட பிரெஞ்சு மக்கள் விரும்பவிலை. காரணம் ஹிட்லரின் செயல்களை இவர் தொடர்ச்சியாக ஆதரித்து வந்தவர். அண்மையில் இறந்த முன்நாள் அமைச்சர் Robert Badinter இன் அரச மரியாதையோடு நடந்த இறுதிக் கிரியையில் மரின் லுபென் கலந்து கொள்வதை Badinter குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அறிவித்திருந்தனர். இவர் பிரான்சில் சமத்துவம் தொடர்பான பல சட்டங்களை இயற்றக் காரணமானவர். நாம் பிரெஞ்சுப் புரட்சி முதல் இன்று வரை பல உயிர்களைத் தியாகம் சமத்துவத்திற்காக உழைத்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த இனவாதிகள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளக் கூடியவர்கள் என்று இவரது மனைவி தெரிவித்திருந்தார். இனத் துவேசம் அழிவை நோக்கியே செல்லும்.- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இதே கட்சி சில வருடங்களுக்கு முன் பிறெக்சிட் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது. இங்கிலாந்து போல பிரான்ஸும் ஐரோப்பாவிலிருந்து பிரிய வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள். பின்னர் இங்கிலாந்து பிரிந்தபின் குத்துக்கறணமடித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பிரான்சை வலுப்படுத்த வேண்டும் என்று தற்போதைய தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள்.- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர். பிரான்சின் கலாச்சாரம் இந்த வெற்றிலைத் துப்பல் கூட்டத்தினால் சீரழிந்து விட்டதாகவும் தமது வேலைவாய்ப்பினைப் பறித்து வெற்றிலை துப்பாத கூட்டம் முன்னேறி விட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் வெளிநாட்டவர் வேண்டப்படாதவர்கள். ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣 எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலரும் இந்த இனவாதக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். ஏனென்றால் வெளிநாட்டவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம் 😂. இந்தத் தமிழர்கள் யாரென்று பார்த்தால் அரசாங்கத்துக்கு வரி ஏய்ப்புச் செய்பவர்களும் உதவிப் பணத்தை எடுத்துக் கொண்டு களவாக வேலை செய்பவர்களும் மற்றும் வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களுமாவர் இதில் அடங்கும்.- நன்றி கெட்ட உலகமிது 😡
மொத்த வாக்குகளில் 16 வீதம் இந்தக் கட்சி பெற்றுள்ளது. மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?- நன்றி கெட்ட உலகமிது 😡
முக்கியமான ஒன்று இக் கட்டுரையில் விடுபடப்பட்டுள்ளது. ஜேர்மனி இராணுவம் எந்த உரிமையில் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் காலூன்றியிருந்ததோ அதே உரிமை ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக ஜேர்மனிக்குள் வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது மட்டுமின்றி அகதிகளை உள்வாங்குதல் சர்வதேச/ஐரோப்பிய உடன்படிக்கைகளின்படி கட்டாயமான ஒன்று. பாவம் பரிதாபம் பார்த்து அவர்களை ஜேர்மன் ஆதரிக்கவில்லை. வந்தவர்கள் விதிமுறைகளை மீறுவதை வேறு விதமாக அணுக வேண்டும். இது மதத் தீவிரவாதம். தங்கள் சமுதாயம் மேற்குலகினால் பாதிக்கப்பட்டதால் பழவாங்கும் நோக்கத்தோடு வருபவர்கள், மேற்குலகின் வெறுப்பை உள்மனதில் வைத்துக் கொண்டு வருபவர்கள் மற்றும் மூளைச்சலவை செய்யப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள். இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர். https://www.lefigaro.fr/international/deuxieme-jour-de-manifestations-en-allemagne-contre-le-parti-d-extreme-droite-afd-20240121- "காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
ஈழத் தமிழர் வரலாற்று நிகழ்வுகளோடு இனிமையான தருணங்களையும் உள்வாங்கிக் கடந்து வந்த பாதையை அருமையாக எழுதியுள்ளீர்கள். நாம் திரும்பிப் போக முடியாத மனதில் ஆழமாகப் பதிந்த அந்த நினைவுகளை அசை போடுவது இனிமை. - நன்றி கெட்ட உலகமிது 😡
Important Information
By using this site, you agree to our Terms of Use.