Everything posted by இணையவன்
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
ஆம் beta, தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இருக்கலாம். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கும் பாதகங்கள் உண்டு. இதனைத் தவறாகவும் பயன்படுத்தலாம் என்பதை உங்கள் 2 அனுபவங்கள் காட்டுகின்றன. செயற்கை நுண்ணறிவைப் புகுத்தாவிட்டால் நான் தற்போதுள்ள வேலையில் நின்றுபிடிக்க முடியாது என்பது எனது நிலமை. 2025 ஆம் ஆண்டிலிருந்து பிறக்கப்போகும் குழந்தைகள் Generation Alpha என்று வகைப்படுத்துகிறார்கள். இவர்களின் பௌதீக வாழ்வையும் மின்னியல் தொழில்நுட்பத்தையும் இணைபிரிக்க முடியாது என்று கணிப்பிடுகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் தாக்கங்களை மிக விரைவில் காணப் போகிறோம்.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. ஆனாலும் எனது அணுகுமுறை வேறானது. நான் இப்போதெல்லாம் சந்தேகங்களுக்கு கூகிளை நாடுவது குறைவு. அண்மையில் வீட்டுத் திருத்த வேலைகள் செய்தபோது வெப்ப வழங்கலுக்காகச் சில பழைய fan coil களை வாங்கினேன். இதன் நீர்/காற்று வெப்பம்/வேகம் போன்றவற்றைக் கணக்கிடுவதற்காகப் பல மணிநேரமாக கூகிளில் முயன்று தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ChatGPT யிடம் ஒரு தடவைதான் கேட்டேன். மிகத் துல்லியமாக சகல குறுகிய விளக்கங்களுடன் ஒரு அட்டவணையையும் தயாரித்துத் தந்தது. இத் தகவல்களை எங்கிருந்து பெற்றது என்று தெரியவில்லை. எனது பிள்ளைகளுக்கு நான் சொல்வது இதுதான். தாராளமாக செயற்கை நுண்ணறிவைப் பாவியுங்கள். படிப்பில் எங்கெங்கு இவற்றை இவற்றைப் புகுத்த முடியுமோ தயங்காமல் செய்யுங்கள். நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமானால் ஏணியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. ஏனென்றால் தக்கன பிழைக்கும்.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
குறுகிய நோக்கில் மட்டுமே இலாபம். நேட்டோவின் நோக்கங்களில் ஒன்று ஐரோப்பாவைப் பாதுகாப்பது. ஏன் பாதுகாக்க வேண்டும் ? அமெரிக்காவின் வர்த்தகத்தில் ஐரோப்பா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி மற்றும் சேவைகள் மூலம் ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் வருமானம் (ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத நாடுகள் தவிர்த்து) மட்டும் 870 பில்லியன் டொலர்கள். இரு தரப்பிலும் 10 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து வர்த்தகம் செய்கிறார்கள். ஆகவே அமெரிக்காவுக்கு ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாக்கும் கடமைப்பாடு உண்டு. அதே வேளை ஏனைய நாடுகளைவிட அதிக பணம் செலவளிப்பதால் ஐரோப்பாவை ஒருவகையில் தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கலாம்.
-
தமிழர்களிடையே சர்வநிவாரண ஆரோக்கிய பானம்
சில மாதங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் இன்னொரு நண்பரைச் சந்தித்ததை என்னிடம் விபரித்தார். அந்த நண்பர் முன்னர் இருந்ததை விட உடல் நன்றாக இளைத்து உற்சாகமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார். தான் உடல் இளைத்தமைக்கு இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானம் ஒன்றே காரணம் என்றும் அதை எனது நண்பரையும் பாவிக்கும்படியும் அறிவுரை கூறியுள்ளார். தாங்கள் இவ்வாறான பானங்களைப் பற்றிக் கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு ஒரு முறை வந்து பார்க்குமாறும் கேட்டுள்ளார். இச் சம்பவத்தை எனக்குக் கூறிய நண்பர் அப் பானத்தின் பெயரை மறந்துவிட்டதால் நானும் பெரிதாகப் பொருட்படுத்தாது விட்டுவிட்டேன். இன்னொரு உறவினரை அண்மையில் சந்தித்தேன். அவரும் உடல் இளைத்து உற்சாகமாக இருந்தார். உடல் இளைப்பதற்காகத் தானும் சிலவகைப் பானங்களைப் பாவிக்க ஆரம்பித்துள்ளதாக அது பற்றி ஏராளமாகக் கூறினார். அதன் பெயர் Herbalife. மிகையான புரத பானம், செரிவான விற்றமின்கள், ஊட்டச் சத்துள்ள பானங்கள் என்று பலவகையான பதார்த்தங்கள் உண்டு. இவர் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 300 ஈரோ அளவில் இவற்றை வாங்குவதற்காகச் செலவழிக்கிறார். இணையதில் இது பற்றித் தேடிப் பார்த்ததில் இந்த நிறுவனம் பற்றி நான் அறிந்து கொண்டவை: இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பாரிய நிறுவனம். பங்குச் சந்தையிலும் உள்ளது. இந்த நிறுவனத்தில் உற்பத்திகள் சாதாரண மருந்துக் கடைகளில் விற்கப்படுவதில்லை இதன் உற்பத்திப் பொருட்களை ஆர்வமுடன் பாவிப்பவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் சுற்றத்தாருக்கு விற்கப்படுகிறது. இதற்காகத்தான் அடிக்கடி பாவனையாளர்களுடன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அக் கூட்டங்களில் இப் பொருட்களின் ‘நன்மைகள்’ போதிக்கப்படுககின்றன. தொடக்க நிலை விற்பனையாளருக்குப் பொருட்களின் விற்பனையில் 25 வீதம் கிடைக்கிறது. அவர் முன்னேற்றமடைந்தால் 50 வீதம் வரை இலாபம் உண்டு. இந்த சட்டத்துகு உட்படாத விற்பனை யுக்தியால் பல தடவை அமெரிக்கா உட்பட பல மில்லியன் டொலர் குற்றப்பணம் அறவிடப்படுகிறது இப் பொருட்களில் உள்ளடக்கப்பட்டுள்ள வேறு இரசாயனப் பதார்த்தங்கள் பற்றிய சரியான தகவல்கள் குறிப்பிடப்படுவதில்லை. பல நாடுகளில் இதன் தயாரிப்புத் தொழிற்சாலைகள் இருந்தாலும் சீனாவில் தான் பிரதான தொழிற்சாலை உள்ளது. ஒரு நாட்டில் இப் பொருட்களில் தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருள் பாவிப்பதால் பிரச்சனை ஏற்பட்டால் அந்த நாட்டில் மட்டும் அந்த இரசாயனப் பொருளுக்கு மாற்றீடு சேர்க்கப்படும். அதனால் ஒரே தயாரிப்புப் பொருள் நாடுகளுக்கிடையே வேறுபடும். பக்கவிளைவுகளாலும் சிலர் பாதிப்படைந்தாலும் சாதாரண மருந்துப் பொருள் பாவனைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாகத் தெரிகிறது. இத் தயாரிப்புப் பொருட்கள் பற்றிய எனது கருத்து. இப் பதார்த்தங்களில் அதிசயம் ஒன்றும் இல்லை. செரிவான புரதம் கலந்த பானத்தை அருந்தினால் பசி வராது. இதனால் உடல் பருமனை அதிகரிக்க வைக்கும் மாப் பொருட்கள் கொழுப்புகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. சில பானங்களில் உற்சாகம் தரும் கபேயின் போன்று ஊக்கப் பொருகளும் சேர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இயற்கையான மூலிகைகள் சேர்க்கப்பட்டு இவை தயாரிக்கப்பட்டாலும் மிகைப்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு உட்படுவதால் இயற்கையான உணவு என்ற தரத்துக்குள் வராது. பெரும்பாலும் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஊக்கமளிப்பதற்காக மேலதிக ஊட்டச்சத்துகள் கொண்ட இப் பானங்களை உட்கொள்கிறார்கள் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கும் இவற்றைப் பாவிப்பது நல்லதல்ல கூட்டங்களில் பதார்த்தங்களின் பாவனையுடன் போதிய நீர் அருந்த வேண்டும், மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் நல்ல நித்திரை வேண்டும் என்பனவும் அறிவுறுத்தப்படுகின்றது. அத்துடன் வெவ்வேறான செரிவான ஊட்டச்சத்துகள் அடங்கிய பானங்கள் குளிசைகள் வற்றல் உனவுகள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் ஒருவர் இயற்கையாகப் போதுமான அளவு புரத உணவுகளையும் குறைவான மாச்சாப்பாடுகளையும் பழங்கள் மரக்கறி வகைகளையும் உண்டு, மிதமான உடற்பயிற்சியுடன் போதுமான அளவு நித்திரையும் செய்பவராக இருந்தால் இவ்வாறான இரசாயன மருந்துகளை நாட வேண்டிய அவசியம் இல்லை. இவற்றையெல்லாம் விளங்கப்படுத்தியும் நண்பர் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவர் சொல்லும் காரணங்கள்: மருத்துவர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள் நன்கு படித்தவர்கள் போன்றோர் இவற்றைப் பாவிக்கின்றனர் கூடாத பொருட்கள் என்றால் அவற்றை ஐரோப்பாவில் தடை செய்திருப்பார்களே தனக்கு இவற்றை அறிமுகப் படுத்தியவர் 10 வருடங்களுக்கு மேலாகப் பாவிக்கின்றார். அவருக்கு எதுவும் ஆகவில்லையே இவ்வாறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது மதம் பரப்ப வீடு தேடி வருபவர்களை ஞாபகப்படுத்தியது. இவற்றையெல்லாம் எழுத வேண்டிய காரணம் என்னவென்றால், இப்போது என்னைச் சுற்றியுள்ள தமிழர்கள் மத்தியில் இப் பொருட்களின் பாவனை வேகமாகப் பரவி வருகிறது. 5 வயதுப் பாலகன் முதல் 75 வயது முதியோர் வரை ஊட்டப்படுகிறார்கள். சர்க்கரை வியாதி, கொலஸ்ரறோல், உடற் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணி என்று கணிக்கப்பட்டு மேற்குறித்த நோய்கள் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இன்னொரு படி மேலாக மூளைச் செயற்பாட்டுக்கும் நல்லதாம். நீங்களும் இவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், உங்கள் அனுபவங்களையும் கூறுங்கள். @Justin உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
யார்லுங் சாங்போ ஆற்றை மறிப்பதால் தர்மபுத்திராவுக்கு அதிகளவு பாதிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. இன்று காலை ஏற்பட்ட 6.8 றிச்டர் அளவான பூமிஅதிர்வு இந்தப் பகுதியில்தான் ஏற்பட்டது.
-
கரைச்சல் வேண்டும்
இதெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம், டெஸ்லா காரரின் தொல்லைதான் பொறுக்க முடியாது.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
எலன் மஸ்க் பணத் திமிரில் ஜேர்மன் விடயத்தில் மட்டுமலாமல் பல நாட்டு அரசியலுக்குள் மூக்கை நுளைக்கிறார். இந்த மாத ஆரம்பத்தில் பரிசில் நடைபெற்ற தேவாலையத் திறப்பு விழாவுக்கு ஏறத்தாள அழையா விருந்தாளியாக நுளைந்திருந்தார். டிரம்ப் சீனாவுடனான வர்த்தகச் சச்சரவில் இவர் எதிரான நிலைப்பாடுள்ளவராக உள்ளார். பார்க்கலாம், யானைக்கும் அடிசறுக்கும். இல்லாவிட்டால் இன்னும் நான்கு வருடங்களுக்கு இவரது தொல்லை தொடரும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி.
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
ஒரு தடவை தமிழ் கடை ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகப் போயிருந்தேன். சரியாக வெட்டி முடிந்ததும் முடி வெட்டியவர் திடீரென என் தலையை இரு கைகளாலும் பிடித்து இடது வலது பக்கமாக மாறி மாறித் திருகினார். என்ன நடக்கிறது என்று சுதாகரிக்க முன் பின்னாலிருந்து முழங்கையை மடக்கிக் கழுத்தை நெரித்து மேலே இரண்டு தடவை தூக்கி கழுத்தில் நெட்டி முறித்தார். அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் எடுத்தது. மசாஜ் செய்தவராம். இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
Southfront 🤣 இங்குதான் உண்மைச் செய்திகளை வாசிக்கிறீர்களா !!
- இன்று மாவீரர் தினம்!
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
இவர் சொல்வது முழுவதும் சரியான விளக்கம் கிடையாது. குறிப்பாகப் பனைமர வேர் ஆழமாகச் செல்வது நீரை ஆழத்துக்குக் கொண்டு செல்வதற்கல்ல. மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காகவே. வறண்ட நிலத்தில் பனை வேர் அதிக ஆழமாகவும் நீர்ப் பிடிப்பான நிலத்தில் ஆழம் குறைவாகவும் இருக்கும்.
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
சிங்கள அடக்குமுறை பிடிக்காவிட்டால் எங்களைப்போல் நாட்டை விட்டு வெளியேறாமல் போராடப் போனது தவறுதான். எப்படியிருந்தாலும் சிங்களவரின் கொள்கைகளை விரும்பும் தமிழரும் இருக்கிறார்கள் தானே. அதுமட்டுமல்ல, வெளிநாடு வந்தபின் இங்குள்ள அகதிகளை விரும்பாத இனத்துவேசக் கட்சிகளை ஆதரிப்போம்.😂
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
பனை அபிவிருத்தி பற்றிப் பல காலமாக மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். சிறுவனாக இருந்தபோது மில்க் வைற் நிறுவன உரிமையாளர் பாடசாலையில் வழங்கிய பனங்கொட்டைகளைப் பெற்று வீட்டில் முளைக்கப் போட்டது நினைவுள்ளது. பனை அபிவிருத்திச் சபை மாகண சபை போன்றவற்றை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் தாமாக உணர்ந்து பனை அபிவிருத்தியில் பங்குகொள்ள வேண்டும். இது யாருக்காவது புரிகிறதா ?
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
ஈரான் தரப்பு வாதத்தை நம்ப முடியாது. இந்தப் பெண் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காத் துன்புறுத்தப்பட்டதால் அதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருந்தால் பாராட்டாமல் இருக்க முடியது. இவர் ஈரானிய பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தனது உடலை ஆயுதமாகக் காட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட இப் பெண்ணை மனநல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டாலும் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
சுமந்திரனின் கோரிக்கை சரியானது. பிரான்சில் ஒருவர் அரசியலில் நுளைவதானால் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும். சாராயக்கடை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்லவே. அரசாங்கம் தான் அனுமதி வழங்குகிறது. இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் பகிரங்கமான உரிமையாளைர்களையே கொண்டுள்ளது. சாரக்கடை உரிமையாளரை மட்டும் ஏன் கிசுகிசு தகவல்கள் மூலம் குறிப்பிட வேண்டும் ?
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
ஏராளன், நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. செய்தியை இணைத்தது உங்கள் தவறில்லை. இங்கு பொய்யான செய்தி என்று சுட்டிக் காட்டப்பட்டது தமிழ் செய்தி இணையத்தளங்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தவே. பொறுப்பான இணையத் தளங்கள் எதை எழுதினாலும் வாசித்துவிட்டுப் போகாமல் சரிபிழையை விவாதிப்பது ஆரோக்கியமானது. யாழிணையத்தில் உங்கள் செய்திப் பகிர்வுகளுக்கு நன்றி.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
நான் வாசித்த பிரெஞ்சுச் செய்த்திகளிலும் இப்படித்தான் இருந்தது. ஈரானை வன்மையாகக் கண்டிப்பதோடு இஸ்ரெயிலின் பக்கம் நிற்பதாகப் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது. OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை. கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது. இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
SP500 ஒரு வாரத்துக்குள் விட்ட இடத்தைத் தாண்டிவிட்டது.
-
நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
இதுவும் டிக்டொக்கில் வாசித்ததா ? பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜேர்மனி அதன் அடுத்த வருட பட்ஜெட்டில் செலவுகளைக் குறைக்க முயல்கிறது. இந்த வருட உக்ரெயின் உதவி 8 பில்லியன் ஈரோ. அடுத்த வருடம் இதனை 4 பில்லியனாகக் குறைக்கிறது. மீதி 4 பில்லியன்கள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து வரும் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படும். இதுவும் இறுதி முடிவு கிடையாது, பாராளுமன்றத்தில் பட்ஜெட் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வழிகளைத் திறக்கப் போவதாக உக்ரெய்ன் அறிவித்துள்ளது. ஒன்று ரஷ்யாவை நோக்கியது மற்றையது உக்ரெய்னை நோக்கியது. ரஷ்ய அகதிகளை உக்ரெயின் உள்வாங்கப் போகிறது. 😃 ஏற்கனவே ரஷ்ய அரசியல் அகதிகளுக்கு ஐரோப்பிய நடுகள் புகலிடம் கொடுத்துள்ளன. எந்த நாடென்று பாரபட்சம் பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இது உங்கள் ஊகம்தானே. நேற்று இன்னொரு உறுதிப்படுத்தப் படாத தகவல் சமூக வலத்தளங்களில் உலாவியது. உக்ரேனியர்கள் ரஷ்யாவுக்குள் நுளைந்து ஏராளமான ரஷ்ய படையினரைக் கைது செய்தனர். இறுதியாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிறைக் கைதிகளும் இருந்தனர். அவர்கள் தமக்கு ஒரு கட்டளை வழங்கப்பட்டதாம். அதன்படி தோற்கும்போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டும் என்றும் அப்போது இங்கிலாந்து பிரான்ஸ் இராணுவத்தினரும் அவர்களுடன் இருப்பது போல தோற்றம் தர வேண்டுமாம். இது நீங்கள் எழுதியதுபோல் ஆதாரமற்று ஊகம் மட்டுமே. ரஷ்யாவுக்குள் நுளைவது தற்கொலைக்குச் சமன். ஆயிரக் கணக்கில் ஐரோப்பியர்கள் இதற்கு உடன்பட்டுச் சென்றிருப்பார்கள் என்பது வேடிக்கையானது. இது இரண்டாம் உலக யுத்தம் கிடையாது.