Everything posted by இணையவன்
-
ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்ற கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம்
தைரொயிட் சுரப்பிகள் சரியாக இயங்கத பிரச்சனை உள்ளவர்களுக்கு அயடீன் ஓரளவு கலந்திருப்பது நல்லது. ஆனால் இயற்கையான உப்பில் ஏன் அயடீன் கலக்கிறார்கள் ?
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
2009 ற்கு முன்னர் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பு கடற்கரைப் பகுதியில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதி பிராமி எழுத்துகள் பொறிக்கப்படிருந்ததாக ஞாபகம். இது தொடர்பாக தமிழ்நெட் அப்போது செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. தேடிப் பார்க்கிறேன். பின்னர் அக் கல்வெட்டு காணாமல் போயிருந்ததாக அறிந்தேன்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நேற்று பிரான்சின் Les Echos பத்திரிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றில் இக் கருத்தோவியத்தைப் போட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் தமிழ்சிறி, அவரது கணக்கில் மாற்றம் எதுவும் இல்லை, எல்லாம் சரியாக உள்ளது. அவர் தனது கடவுச் சொல்லை மறந்திருந்தால் கீழுள்ள இணைப்பில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். https://yarl.com/forum3/lostpassword/ அல்லது தனது ஈமெயிலினை மாற்றியிருந்தால் புதிய ஈமெயிலினை அவரிடம் கேட்டுத் தனிமடலில் எனக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நேற்று தொலைக்காட்டியில் முன்னாள் போர் விமானி ஒருவர் பேட்டியளித்திருந்தார். தாக்குதல் விமானத்தால் எதிரியின் இடத்தை அருகில் சென்று தாக்க வேண்டுமாயின் இரு வழிகள் உள்ளன. முதலாவது ரடார்களில் படாதவாறு மிகத் தாழ்வாக தரையோரமாகப் பறந்து சென்று தாக்குவது. இதனை இந்திய இராணுவம் ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் அது பாகிஸ்தான் எல்லைக்குள் இராணுவம் நுளைவதற்குச் சமனானது. இரண்டாவது, மிக உயரமாகப் பறந்து குறித்த தாக்குதல் எல்லையை அடைந்ததும் மிக வேகமாகக் கீழிறங்கித் தாக்கிவிட்டு விலகிச் செல்வது. ஆனால் இவ்வாறான தாக்குதலுக்கு முன்னர் இலக்கிற்கு அருகிலுள்ள விமான எதிர்ப்பு மற்றும் ரடார் நிலைகளைத் தாக்க வேண்டும். இந்தியா இவ்வாறான முன் தாக்குதல்களுக்கு ஒப்புக் கொள்ளாது. ஏனென்றால் அது பாகிஸ்தானுடனான நேரடிப் போர் நடவடிக்கையாக அமையும். இருந்தாலும் முந்தாக்குதல் செய்யாமலே இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. இது இந்திய இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. 20 வருட சேவையில் ரபேல் விமானங்கள் இதைவிட ஆபத்தான போர்முனைகளில் பயன்படுத்தப்பட்போதிலும் இதுவே முதல் முறையாகப் போரில் தாக்கியழிக்கப்படதாகும் என்று தெரிவித்தார். இத் தகவல் உண்மையானால் பாகிஸ்தான் விமானங்கள் 100 கிமீ இந்தியாவுக்கு உள்ளே வந்துள்ளன.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம். தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.
-
புதிய மனிதனாக மாறிய இளைஞன்
இளைஞர்களின் இச் செயல் பாராட்டத்தக்கது. வேறு நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இவர் மறுபடி வீதியோர வாழ்க்கைக்குத் திரும்பாமல் ஒரு வேலையையும் தற்காலிகமாக வசிக்க இடமும் கொடுத்தால் நல்லது. படத்தில் இவரது கை கால்கள் கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். முதலில் இவருடன் பேசி சம்மதிக்க வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
இது போலீசாரின் காட்டுமிராண்டித் தனமான செயல். பாதிக்கப்பட்ட சிறுவர்களை மேலும் துன்புறுத்திய போலீஸ் மீது மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் ஒரு தடவை விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட விடயத்தையே பாராளுமன்றம் வரை கொண்டு சென்று மூக்கால் அழுத சிறிதரன் குறைந்தபட்சம் கண்டன அறிக்கை ஒன்றையாவது உடனடியாக வெளியிட வேண்டும்.
-
விதியற்றவர்
கதையில் இரண்டு விதமான மனிதர்களை அழுத்தமாகக் காட்டியுள்ளீர்கள் என்று விளங்கிக் கொள்கிறேன். முதலாவது, வெளி உலகம் தெரியாத பெண்கள். கதையை வாசிக்கும்போது எனக்கு நெருக்கமான, இங்கிருந்து சென்று தாயகத்தில் திருமணம் செய்து மனைவிமாரைக் பிரான்சுக்கு வரவழைத்த இரு இளம் குடும்பத்தவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஒருவர் தனது மனைவி அதிகம் வெளியுலகு தெரியாமல் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு தனக்குக் கீழ் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். மற்றவரின் மனைவி வேலைக்குப் போகப் பஞ்சியில் பாசை தெரியாமல் சமையல், தொலைக்காட்சி, விரதங்கள், தொலைபேசி என்று சொகுசான குறுகிய வட்டத்துக்குள் உள்ளவர். இப்போது இருவருக்கும் பிரச்சனைகள். அடுத்தது, ஊருக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதிக பணத்துடன் வருவார்கள் என்பது அங்கிருப்போரின் நம்பிக்கை. நாம் சந்திக்கும் நபர்களுக்குப் பணம் கொடுக்காவிட்டால் அவர்கள் ஏமாற்றம் அடைவது சாதாரணமானது. நாம் அங்கு நிற்கும் வரை எல்லோருக்குமான அனைத்துச் செலவுகளையும் நாமே செய்ய வேண்டும் என்பதும் நியதி. இது தவறு என்று சொல்ல முடியாது.
-
இன்றைய அதிசயம்
ஆஹா, இன்னொரு அதிசயம் 😀. இதற்கும் காரணம் இருக்கும்.
-
நியாயத்தின் சாம்பல்
அருமை ! இவ்வாறான பல சம்பவங்கள் வரலாற்றில் புலவர்களின் பக்கச்சார்பான பாடல்களால் மறைக்கப்பட்டுள்ளது. புலவர் இலகுவாகக் கடந்து போன சம்பவத்தை ஆழமாகக் கற்பனை செய்து உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
-
சும்மா ஒர் பதிவு
சும்மா பதிந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு. இன்று அரசாங்கம் என்ற சிக்கலான கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதிலேயே அதிக பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் நீரை வேறு வழிகளில் சேமிக்கவும் இலகுவாக சிக்கனமாகப் பயன்படுத்தவும் வழிகள் உள்ளன. ஆனால் சரியான அறிவூட்டல் இல்லாமையும் சனத்தொகைப் பெருக்கமும் நீர்ப்பஞ்சத்தை உருவாக்குகிறது.
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
எனது உறவினரும் இவ்வாறு செலவு செய்து 3 கோழிகளை வளர்க்க ஆரம்பித்தார். கோழிகளும் முட்டை இட ஆரம்பித்தன. பின்னர் நாய் ஒன்றை வாங்கினார். அன்றிலிருந்து கோழிகள் முட்டை இடுவதை நிறுத்திக் கொண்டன. ஏன் என்று விசாரித்ததில் நாயைக் கண்டு அவை பயந்து விட்டது காரணமாக இருக்கும் என்றார்கள். நாயா கோழியா என்ற போராட்டத்தில் கோழிகளைத் தியாகம் செய்துவிட்டார்.
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
கவலை வேண்டாம். நீங்கள் குடும்பத்துடன் நல்ல நிலையில் உள்ளதையிட்டு உங்கள் அம்மா மகிழ்வுடனேயே சென்றிருப்பார். எனது அப்பா அவர் குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை. அவரது தாயும் தந்தையும் இறக்கும் போதும் அருகில் இல்லை கொள்ளி வைக்கவும் இல்லை. இப்படி எத்தைனையோ குடும்பங்கள் உள்ளன.
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
வாசித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சந்தேகம் வந்தது. ரசோரதன் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார். இருந்தாலும் கார் வந்து இப்ப வந்து கதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?
-
"கும்மிருட்டில் நடனம்"
முள்ளிவாய்க்கால் அவலங்களை மீண்டும் நினைவுபடுத்திய பதிவு.
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
ஐரோப்பிய நாட்டில் குடியேறியும் தொட்டதற்கெல்லாம் தெய்வக் குற்றம் காண்பவர்கள் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம். உலகில் அரங்கேறும் அநீதிகளையெல்லாம் கண்டுகொள்ளாத இறைவன் மீது குறை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளாது என்ற அதீத நம்பிக்கையை விட, இதன் மூலம் கடவுளைத் தாம் எந்தத் தராரதத்தில் வைத்துள்ளோம் என்று கூடச் சிந்திக்க முடியாதவர்களாக உள்ளனர். உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் இச் சமுதாயத்திற்கு அவசியமானவை. நன்றி.
-
இன்றைய அதிசயம்
கவிதையில் அதிசயத்தை ரசிக்க முடிகிறது. மற்றும்படி அதிசயம் என்று உலகில் எதுவுமில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி!
-
"அன்புடன் தேன்மொழி"
வானத்தையும் பூமியையும் ஒரே நேரத்தில் தொடுவதுபோல் பண்டைய நவீன இலக்கியங்களைத் தொட்டு எழுதியுள்ளீர்கள். சமூகப் பிரச்சனையைக் கருவாகக் கொண்ட கதை தீர்வின்றி சோகமாக முடிவடைந்தது உறுத்தலாக உள்ளது.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்த கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது எப்படி முடியப் போகிறது என்று யோசனையாக இருந்தது. வித்தியாசமான முறையில் கடைசிப் பந்தியில் சிறப்பாக முடித்துள்ளீர்கள்.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
தேர்தலில் வென்றபின் ஜேர்மன் வாழ் தமிழர்களைத் திருப்பி எடுக்கும் நோக்கமோ தெரியவில்லை. 😀
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்ஸ்.
-
"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.