Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. பனி குவியலை அகற்றுவதில் இருந்து கடைக்கு போவது வரை வீட்டில் இருந்தே செய்ய முடியாதே.
  2. இங்கும் இடைவெளி விடாது பனி கொட்டித் தள்ளுகின்றது. முடியல...
  3. நான் கார்னிக்கு வேறு வழியின்றியே வாக்களித்து இருந்தேன். ஆனால் இப்போது அதற்காக பெருமைப்படுகின்றேன்.
  4. அப்ப அமெரிக்காவை, நேட்டோ நாடுகளை நம்பினால்...?
  5. மக்களை எந்தவிதத்திலாவது ஏமாற்றி கவர வேண்டும் எனும் நோக்கத்தின் அடையாளம் தான் இது. ஸ்ராலின் மோடிக்கு கடிதம் எழுதுவது, தமிழக முதலைமைச்சர்கள் தம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது எல்லாம் அடிக்கடி நிகழும் எந்த பயனும் அற்ற, எந்த பயனும் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் மக்களை ஏமாற்றச் செய்யும் விடயம் எனும் மிக அற்பமான உண்மையை இவர் அறியாதவராக இருக்க மாட்டார். ஆனால், அதனையே ஒரு சாதனையாக உருப்பெருக்கம் செய்து தம் வங்குரோத்து அரசியலை நிரப்ப பார்க்கின்றார். இவர்கள் இப்படியே படம் காட்டிக் கொண்டு இருந்தால், முழு வடக்கும் தேசியக் கட்சிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு எதுவும் நிகழ்ந்து விடாது.
  6. மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.
  7. ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?
  8. நல்லதொரு முயற்சி. இந்த முனைப்பு வெற்றியளிக்க வேண்டும்.
  9. யுத்தம் விட்டு வைத்தவர் எம்மவர்களை விபத்துகள் கொண்டு சொல்கின்றன...
  10. அமெரிக்கா மட்டுமல்ல நோட்டோ நாடுகள் அனைத்துமே ஏனைய நாடுகளை சீர்குழைத்து அதன் மூலம் தம் வளங்களை பெருக்கி லாபமடையும் நாடுகள். இந்த நேட்டோ அமைப்பே உடைந்து போகட்டும். அதுவும் தம் அமைப்பில் உள்ள நாட்டால் உடையுமெனில் மகிழ்ச்சி.
  11. மிக வித்தியாசமான ஒரு விறுவிறுப்பான திரைப்படம். கடைசி சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. அந்த முடிவை புரிந்து கொள்வதற்கு கூட சில கணங்கள் எடுக்கலாம். ஏராளன் quote பண்ணியுள்ள வசனங்கள் தரும் அர்த்தம் தான் படம். இப்படியான சிக்கலான அதே நேரம் யதார்த்தமான உண்மையை திரைக்கதை ஆக்கும் கலை மலையாள இயக்குனர்களுக்கு கை வந்த கலை. படத்தில் வரும் நாய்கள் தான் உண்மையான கதா நாயகர்களோ என்று எண்ணத் தோன்றும். நேற்றிரவு பார்த்தேன்.. ஒரு போதும் இப் படம் நினைவில் அழியாது இருக்கும். வித்தியாசமான படங்களை விரும்புகின்றவர்களுக்கான சினிமா படம் இது.
  12. துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.
  13. தமிழர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை, சிங்களவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற கடும் இனவாதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாவின் குரலுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே அரசியலில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள்.
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  15. அடடா.. இப்படி ஒரு மகிழ்வான விடயம் நிகழ்ந்ததை கவனிக்காமல் விட்டு விட்டேன். தமிழ் சிறி (தாத்தாவுக்கும்)க்கும், மகள் யாழினிக்கும் (நல்ல அழகான பெயர்), பேத்தி சிவானிக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
  16. வாழ்த்துக்கு நன்றி ஏராளன். என் பெயரை பண்ணியமையால் தான் இந்த திரியே என் ஞாபகத்துக்கு வந்தது. நன்றி யாயினி. என் அம்மாவுக்கு 80 வயது. அனேகமான இரவுகளில் புட்டும் மாம்பழமும் சீனியும், அல்லது புட்டும் வாழைப்பழமும் சீனியும் தான் சாப்பிடுவார். இன்று வரைக்கும் நீரிழிவோ 'சுகர்' பிரச்சினையோ இல்லை. சேயும் தாயின் வழி 😄 நன்றி ரசோ நன்றி அண்ணா நன்றி சுவைப்பிரியன். விரைவில் உங்களை ஊரில் வந்து சந்திக்க விருப்பம். அடுத்த வருடம் பார்ப்பம்.
  17. புட்டைக் கைவிடுவதும் உடலின் ஒரு பாகத்தை இழப்பதும் சமம் எனக்கு. 365 நாளும் புட்டு சாப்பிட ஆசைப்படும் ஜென்மம் நான். எல்லாம் சிவபெருமானால் வந்தது. அந்தாள் புட்டுக்கு மண் சுமந்ததால் வந்த வினை இது ஐரோப்பியர்களும் புட்டினும் (புட்டும்) ஒன்றுதான்.
  18. இன்றிலிருந்து நிழலி புட்டு சாப்பிடுவதையே அறவோடு கைவிடுகின்றான்.
  19. இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
  20. இந்தளவுக்கு ஒரு முட்டாள் இலங்கை யின் எதிர் கட்சித் தலைவராக என்றும் இருந்ததில்லை. எதையாவது உளறிக் கொட்டி அதை மக்கள் நம்பி தன்னை சனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என நினைக்கின்றார். அப்பன் பெயரை கெடுக்க வந்த பிள்ளை.
  21. இந்த விடயத்தில் எம் தமிழ் கடைக்காரர்களை யாரும் விஞ்ச முடியாது. காலாவதியான திகதி இருக்கும் label மேல் புது திகதி கொண்ட இன்னொரு label லை ஒட்டி சக தமிழருக்கே விற்று விடுவார்கள்.
  22. பொய்யைக் கூட ஒழுங்காக, நம்பக் கூடிய விதமாக சொல்லத் தெரியவில்லை பாகிஸ்தான் கடற்படைக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.