-
Posts
14905 -
Joined
-
Days Won
166
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிழலி
-
கடந்து போன காதலைப் பற்றி, அப்படி காதல் இருந்தால் அதை மனதில் இருந்து தூக்கி எறியாமல் இன்னொருவருடன் மண வாழ்க்கை வாழ்வது நேர்மையில்லை என்ற உங்கள் கருத்தைப் போன்று ஒரு மிக அபத்தமான கருத்தை காதல் தொடர்பாக அண்மையில் வாசித்ததாக நினைவில் இல்லை. ஆயினும், 96 பற்றி உங்களிடம் வேறு எழுத இனி ஒன்றும் இல்லை என நீங்களே சொன்னபின் மேலும் சாட்டையை சுழற்ற வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை. நன்றி பி,கு: குணா, மற்றும் காதல் கொண்டேன் கதாநாயகிகள் Stockholm syndrome இனால் தான் மன நிலை பிறழ்ந்தவனை ஏற்றுக் கொண்டனர் எனவும் எழுதியுள்ளீர்கள். முதலில் Stockholm syndrome என்றால் என்னவென தெளிவாக அறிந்து விட்டு, அப்படியான syndrome வருவதற்கு, கடத்திய ஆண் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதையாவது அறிந்து விட்டு எழுதியிருக்கலாம் என நினைக்கின்றேன். அல்லது Natascha Kampusch இன் உண்மையான கதையைப் பற்றியாவது தெரிந்து இருந்தால் நல்லது, நன்றி.
-
திருமணத்தின் பின் பழைய காதலை, நுகர்ந்து பார்ப்பது, நினைத்துப் பார்ப்பது, அந்த காதலை நினைவுபடுத்தும் விடயங்களை நுகர்ந்து , படிமமாக இருக்கும் காதலின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது நெறி தவறிய செயற்பாடுகளா? இங்கு நெறி எனப்படுவது எது? கற்பா? இவ்வாறு பழைய காதலை நினைப்பது கற்பு நெறி சார்ந்த தவறா? உங்கள் பார்வையில் புனிதப்படுத்துவது என்றால் என்ன? புனிதம் கெடுவது என்ன?
-
ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கட்டுரையை படித்தவர்களுக்கு புரியும், காடுகளில் கொட்டப்படும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களாலும், வேண்டும் என்றே அங்கிருக்கும் விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காக அவற்றின் உணவில் கலந்து கொடுக்கப்படும் கண்ணாடித் தூள்களாலும், வெடிகளாலும் விலங்குகள் அடையும் மரண வேதனை பற்றி. இதில் பெரும்பாலும் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஜெயமோகனானல் 'கேரளத்து பொறுக்கிகள்" என்று அழைக்கப்படுகின்றவர்கள் தான். இவ்வாறு காட்டுக்குள் சென்று குடித்து, போத்தல்களை உடைத்து அட்டகாசம் செய்யும் பொறுக்கிகளை மெச்சி படம் எடுத்தால், எல்லாரும் பாரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிழலி replied to நிழலி's topic in வாழும் புலம்
கொலை செய்ததாக கைதானவர் இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர்...! இந்த இளம் வயதில் மிகக் கொடூரமாக சிறுவர்களை கூட கொன்றுள்ளார். -
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிழலி replied to நிழலி's topic in வாழும் புலம்
இவர்கள் கூரான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. // Officers say an edged weapon was used in the crime. The victims have been identified as Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake, 35, her son, Inuka Wickramasinghe, her daughter, Ashwini Wickramasinghe, 4, her daughter, Rinyana Wickramasinghe, 2, and her two-month-old daughter, Kelly Wickramasinghe. Police say a family friend, Ge Gamini Amarakoon, 40, was also killed. // https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/ -
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம். ---- By Alex Black, Kaitlin Lee Posted March 7, 2024 4:11 am. Last Updated March 7, 2024 12:27 pm. The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa. The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located. A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries. The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals. The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo. Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke. One person has been taken into custody and police say there is no further threat to the public. Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence. The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today. “This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post. Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement: Ontario Premier Doug Ford is also expressing condolences. Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday. Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out. Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website. Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca. Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live. https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/
-
இருக்கிற சனத்துக்கு சாப்பாடு போடவே வெளிநாடுகளிடம் இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை... இதற்குள் சனத்தொகை குறைக்கின்றது என கவலைப்படுகினம்.
-
இப்போது இங்கும் வேலை செய்கிறது.
-
இங்கும் வேலை செய்யவில்லை...
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
நிழலி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நான் என் 16 ஆவது வயதில் இதைப் படித்தேன். 😀 -
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
நிழலி replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்
கண்ணீர் அஞ்சலிகள் -
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
நிழலி replied to தமிழ் சிறி's topic in நலமோடு நாம் வாழ
வழக்கம் போல, ஆதவனும் வீரகேசரியும் ஆங்கிலத்தில் வந்த செய்திகள் / தகவல்களை அரை குறையாக புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டுள்ளனர். இந்த பின்விளைவுகள் அரிதானதாகவே நிகழ்கின்றது. ஒரு இலட்சம் பேரில் 50 இற்கும் குறைவானவர்களுக்கே ஏற்படுகின்றது. இந்த எண்ணிக்கை தடுப்பூசிகளால் தவிர்க்கப்பட மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. உலகில் இதுவரைக்கும் 13.5 billion கொவிட் தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன. உலக சனத்தொகை யில் 71 வீதமானோர் ஆகக் குறைந்தது ஒரு கொவிட் தடுப்பூசியையாவது போட்டுள்ளனர். ஆனால் இதன் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது மிகக் குறைவு. உலகில் எதிர்மறையான் பின் விளைவுகள் எவருக்குமே ஏற்படாத தடுப்பூசி அல்லது மருந்து என்ற ஒன்று இல்லை. அப்படியான உணவுப் பொருள் கூட இல்லை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் வந்த செய்தி: https://www.forbes.com/sites/ariannajohnson/2024/02/19/covid-vaccines-linked-to-small-increase-in-heart-and-brain-disorders-study-finds-but-risk-from-infection-is-far-higher/ -
பிறந்தநாள் வாழ்த்துகள் நுணா!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நிழலி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ரபா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் பெரும் மனித பேரழிவுக்குள்ளாகப் போகின்றது என்பதை புரிந்தும் கூட, எந்த ஒரு இஸ்லாமிய / முஸ்லிம் நாடுகளும் அவர்களை தற்காலிகமாகவேனும் அகதிகளாக ஏற்க முன்வருகின்றது இல்லை. அருகில் இருக்கும் எகிப்து கூட அவர்களை ஏற்கத் தயாரில்லை. இது தான் இஸ்லாமியர்களின் 'ஒற்றுமை'. -
“ கப்பு முக்கியம் “ “வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste. கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன். மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது. மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன். திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது. கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது. என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான். இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி் இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை. செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது. இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது. “ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள். “ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் . விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ , கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது. வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில. வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர். கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது. இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது. அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
நிழலி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அடுத்த தேர்தலிலும் ருடோ / லிபரல் வென்று ஆட்சி அமைத்தால் நானே மடகஸ்கார் பக்கம் ஒதுங்குவமா என்று யோசிக்கின்றேன். ஏப்ரலில் இருந்து இந்த அரைவேக்காடு கொண்டு வந்திருக்கும் கார்பன் வரி வீதம் அதிகரிக்கின்றது. இதனால் விலைவாசியும் வாழ்க்கை செலவும் அதிகரிக்க போகின்றது. -
படம் எடுக்க காசு கேட்பதெல்லாம் அடக்கு முறை வகைக்குள் வருகுதாம் இவருக்கு. இவரை இங்கு கனடாவுக்கு வரச் சொல்ல வேண்டும். கிறிஸ்மஸ் தாத்தாவுடன் படம் எடுக்கவே காசு கேட்கின்றார்கள் இங்கு. எப்படியோ மு. தம்பிராசாவுக்கு தன் பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது.
-
ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது. அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் பாகிஸ்தான் மீது மட்டும் தான் ஒரு சிறு தாக்குதலைச் செய்தது. தன் நாட்டில் உள்ள மக்களில், முக்கியமாக பெண்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் இராணுவக் கரம் கொண்டு நசுக்கி, மீறும் பெண்களை அடித்தே கொல்லும் ஈரானிய அரசு, மற்ற விடயங்களில் வெறும் வாய்சவடால்களுடன் காலத்தைக் கடத்துகின்றது.
-
அடுத்து வரும் சில தேர்தல்களில், சனாதிபதி ஒரு கட்சியாகவும், பிரதமர் இன்னொரு கட்சியுமாகவே தெரிந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அங்கு உள்ளது. எவருக்கும் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என நினைக்கின்றேன். பாராளுமன்ற தேர்தல் நடந்தால், சஜித் இன் கட்சி அதிக இடங்களில் வெல்லும், ஆனால் பெரும்பான்மை கிடைக்காது. சனாதிபதித் தேர்தலில் ஜேவிபி வெல்லும்.
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
நிழலி replied to தமிழன்பன்'s topic in நலமோடு நாம் வாழ
சோற்றை, அரிசி மாவில் செய்யும் உணவை வெகுவாக குறைத்து பாருங்கள். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இவை என்று கட்டுப்படுத்தி பாருங்கள். ...அத்துடன் தினமும் நடைப் பயிற்சி. எனக்கு தனிப்பட்ட ரீதியில் அரிசி உணவுகளை தவிர்ப்பது இலகுவாக இருக்கும்....ஆனால் இந்த உருளைக் கிழங்கை கண்டு விட்டால் வாயை கட்டுப்படுத்த முடியாது. முக்கியமாக அவித்த உருளைக் கிழங்கு.