Everything posted by நிழலி
-
விமர்சனம் : இட்லி கடை!
அப்ப இந்த நிழலி இப் படத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
-
இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்
இனப்படுகொலை போர்க்குற்றமாகி, பின் போர்க்குற்றம், இனப்பிரச்சினை ஆகி, இப்ப இனப்பிரச்சினை வெறும் மோதல் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளை இதுவும் நீர்த்துப் போய் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எந்த விடயமும் நிகழவில்லை எனும் நிலைக்கு வந்து விடும்.
-
கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!
இந்த செய்தியின் மூலம் எது கொழும்பான்? செய்திகள் இணைக்கும் போது அது பிரதி பண்ணப்பட்ட செய்தி தளத்தின் அதற்குரிய பக்கத்தின் இணைப்பை (Link) வழங்க வேண்டும்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
இளம் வயதிலேயே சிறு நீரகப் பிரச்சினை... பாவம். வாழ்வு தொடங்கிய வேளையிலேயே முடிந்து விட்டது.- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.- தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும் - Toronto
இன்று பிற்பகல் 3 மணிக்கு இவ் நிகழ்வு இடம்பெறும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.- திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.- தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும் - Toronto
எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.- தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.- யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
பெருமாள், வெறுமனே tamilwin.com என குறிப்பிடாது, செய்தி வெளியான பக்கத்தின் இணைப்பைக் குறிப்பிடுங்கள்.- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒரு மொக்கன் / முட்டாள்.- ஒரு நல்ல மாற்றம்
என்னுடன் வேலை பார்த்த 55 வயதான பெண்மணிக்கு சுவாசப் புற்றுநோய் வந்தது. அவர் சிகரெட் இனை ஒருக்காலும் தொடாதவர். சிகிச்சையின் பின் குணமாகி விட்டார். அவருக்கு மருத்துவர்கள் மாப்பொருளை பெருமளவுக்கு குறைக்குமாறு கடுமையாக அறிவுறுத்தினார்கள். அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு மாற்றீடாக கின்வா (Quinoa) வினை பரிந்துரைத்தார்கள்.- ”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” - மீனவர் சங்க பிரதிநிதிகள்
காற்றாலை மின் நிலையம் - எமக்கு வேண்டாம் மண்டை தீவு சர்வதேச விளையாட்டு மைதானம் - எமக்கு வேண்டாம் மயிலிட்டி இறங்குதுறை நிர்மாணம் - எமக்கு வேண்டாம் பருத்தித்துறை துறைமுகம் - எமக்கு வேண்டாம் எம்மை யாரும் எட்டிப்பார்க்கினம் இல்லை - வா மச்சான் ..தொடங்குவோம் கையெழுத்து போராட்டத்தை இப்படிக்கு தாயக தமிழன்- ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!
எல்லை தாண்டி சென்று ஈழத்தமிழனின் கடல் வளத்தை கொள்ளையடித்து அவனது வாழ்வாதாரத்தை நாசமாக்காதே என்று சொல்லத் துணிவில்லாத கோழை.- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
ஆக, இறுதிவரைக்கும் சரணடையாது சண்டை செய்து போராடி இறந்த எம் தலைவரின் உடல் அது இல்லை என்கின்றீர்கள்? கோடாரியால் தான் இந்த காயம் வர வேண்டும் என்றில்லை. இறுதி வரைக்கும் போராடி, சரணடைய விரும்பாது முகத்தில், நாடியின் கீழ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டாலும், இந்த வகையான காயம் ஏற்படும். தலைவர் ஒரு உண்மையான வீரன். இறுதி வரைக்கும் போராடி வீர மரணம் அடைந்த ஒப்பற்ற தலைவன்! எம் இனத்தின் காலப் பிழையால் உதித்த உண்மைத் தமிழன்.- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
ராஜபக்சர்கள் மட்டுமல்ல, மைத்திரி, ரணில், சந்திரிக்கா எல்லாரும் அனுர அரசின் நடவடிக்கையால் கடும் சினத்துக்குள்ளாகியுள்ளனர். மகிந்தவை தங்காலையில் வைத்து பலிகொடுத்தாவது (பின் புலம்பெயர் தமிழர்களை காரணம் சொல்லி) தம் பக்கம் காற்று வீச வைக்க முயல்வார்கள்.- இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை ஜோராக கைதட்டவும்!- விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தமையால் தானா சீமான் ரகசியமாக சபரீசனை அண்மையில் சந்தித்தார் (இவ்வாறு ரகசியமாக சந்தித்தார் என ஜூனியர் விகடன் கழுகார் பக்கத்தில் எழுதியுள்ளது)- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
நெதன்யாகுவை ஒன்றுக்கு பல தரம் செங்கம்பளம் விரிச்சு வரவேற்றார் உங்கள் தல. அவர் பக்கமும் நூறு வீதம் நியாயம் இருக்கு என நம்புகின்றீர்கள் தானே..?- இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.- அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?
என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
இவர் (தனி) சொன்னதை எதுக்கும் ஒரு ஸ்கீன் ஷொட் எடுத்து வைப்பம்..- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள். - உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.