Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. தாயக மக்களுக்கு அவசியப்படும் விடயத்தை அணுகிய 'கனடாவுக்கு போக வழி ' எனும் திரி, திரியை ஆரம்பித்தவரின் கோரிக்கைக்கு ஏற்ப திரி பூட்டப்படுகின்றது.
  2. நான் சின்ன வயதில் இருக்கும் போது (இப்பவும் சின்ன வயது தான் ), என் அப்பா 'பாக்கியம் ராமசாமியின்' எழுத்துகளை விரும்பி வாசிப்பார். அவரது அப்புசாமி யின் கதைகள் அந்த காலகட்டத்தில் தமிழில் வந்த (பார்ப்பனத் தமிழ்) நல்ல நகைச்சுவை கதைகளாக இருந்தன. நான் பரியோவான் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து அப்புசாமி நகைச்சுவை கதைகளின் ஒரு தொகுப்பை வாசித்து உள்ளேன். மடத்தல் என்றால் என்ன? இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.
  3. ஈற்றில் தங்களுக்கிடையே அடிபட்டு மேலும் பலகீனமாகப் போகினம்.
  4. உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?
  5. வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்
  6. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! யாழில் எல்லாருக்கும பிடித்த உறவு யார் எனக் கேட்டால் அநேகமாக சுவி அண்ணாவைத்தான் சொல்வார்கள் என நம்புகின்றேன்.
  7. அந்த உழவு இயந்திரம் இன்னும் உயிரோட இருக்கா?😄
  8. இல்லை... Software update ஒன்று குழப்பியடித்து விட்டது என நினைக்கிறேன்.
  9. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். யாயினிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.க கடந்த டிச.15 இல் வந்த என் பிறந்த நாளுக்கும் எவரும் வாழ்த்தாது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. 13 வருடங்களாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த் வாழ்த்துகள் கிடைக்காமையால் ஏற்பட்ட கவலை அது.
  10. Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை. சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும். என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது.
  11. ரகு, Silent reader ஆக நானும் இருக்கின்றேன். நேரப் பிரச்சினைகளால் பல வாரங்கள் வாசிக்காமல் ஒரே நாளில் வாசித்து விருப்பும் தெரிவித்துவிட்டு சென்று விடுவேன். இன்னும் மிக முக்கியமான ஒரு விடயம் யாழை பூட்டாமல் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களின் இந்தப் தொடர் மற்றும் உங்கள் பதிவுகளும். நன்னியின் பதிவுகளும் மிக முக்கிய காரணங்கள். நன்றி
  12. நானும் இவ்வாறுதான் நினைத்தேன். ஒரு $5 இல் அவர் வாழ்க்கை செழிக்கப் போவதில்லை என்றாலும் அவ்வாறு கொடுப்பதால் நாங்கள் ஏழைகளாகவும் மாட்டோம். சுமே, உணவு விடுதிகளில் உணவு பரிமாறுகின்றவர்களுக்கும் ஒரு போதும் டிப்ஸ் கொடுப்பதில்லையா?
  13. மிக நன்றாக எழுதுகின்றீர்கள் சுமே. சுவாரசியமாக உள்ளது. ஒருவர் பயணம் போகும் போது, மடிக்கணணியைக் கொண்டு போகாமல், பெரிய கணணியை கொண்டு போனதை வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் வந்து போகும் இடம் இது. சாதாரண நாட்களிலேயே குறைந்தது 1000 பேராவது வருவர். ஆனாலும் ஆகக் குறைந்த சுகாதார வசதி கூட எம்மவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. இது தான் எம் தமிழ் மக்களின் பொறுப்பின்மை. எப்படி கேவலமாக இருப்பினும், காசு கொடுத்து அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் தான் சனம் வருவினம் என்பதால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர். இத்தகைய திமிர் கலந்த பொறுப்பின்மையை தென்னிலங்கையில் காண்பது மிகக் குறைவு.
  14. ஒரே மூச்சில் வாசித்து முடிச்சாச்சு. எமக்கும் பனியுக்குள் வாழ்க்கை என்பதால் பல விடயங்கள் என் அனுபவம் போன்றே இருந்தன. சாதாரண சப்பாத்துடன் போய் பனிகொட்டும் போது வெளியே இறங்க ஒரு தைரியம் வேண்டும். நான் இதுக்கென்றே இரண்டு சோடி சப்பாத்துகள் வைத்துள்ளேன். இங்கு இப்படி சக்கரத்துக்கு சங்கிலி கட்டும் வழக்கம் இல்லை. அனேகமானோர் Winter Tire போட்டு இருப்பார்கள். நான் இதுவரைக்கும் அப்படி Winter Tire போடவில்லை.
  15. ஒரு கடை திறந்து எம்மவர்களை வைத்து வேலை வாங்கி அதை வெற்றிகரமாக நடாத்துவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதென்பதை விபரமாக கதையில் எழுதியுள்ளீர்கள் சுவி அண்ணா. நான் பிரேமா ஒரு இள வயது பெண் என்று நினைத்து இருந்தேன்... அவருக்கு பேரப் பிள்ளைகளும் இருக்குது என்பதை இறுதியில் தான் புரிந்தது. பிரேமாவைப் பிடித்து பொலிசுக்கு கொடுத்து இருக்க வேண்டும், களவாக துணியை எடுத்துக் கொண்டு வந்து தைத்தமைக்கு. மிருதுளா வின் பாத்திரப் படைப்பு சிறப்பு. வெறுமனே செக்ஸ் வைத்தமைக்காக ஒருவனை கட்டாயம் கட்டி அழக் கூடாது, அவனது மிச்ச இயல்புகளும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்த்தி உள்ளீர்கள்.
  16. நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை என நினைக்கின்றேன், நான் பதில் எழுதிய போது, சுவி அண்ணா 4 ஆவது பகுதியை எழுதியிருக்கவில்லை. என் பதிலின் பின் தான் 4 ஆம் பகுதியை எழுதியிருக்கின்றார். அதில் தான் சாவகச்சேரி, கொடிகாமம் எல்லாம் வருகின்றது.
  17. மீண்டும் கண்டது மகிழ்ச்சி பரணி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
  18. வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot ஆகத்தான் இருக்கும். அது என் ராசி 😀 பொதுவாக வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் போது, நேர்முகத்தேர்வு வைப்பவர் பெண் என்றால் எனக்கு வேலை கிடைக்கும். மேலதிகாரி பெண் என்றால், அந்த வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த இடத்திலாவது பெண் ஒருவர் இருந்தால், அவரது உதவி எனக்கு கிடைக்கும். என் வாழ்வில் வந்த அனைத்து பெண் உறவுகளும் நல்ல தோழிகளாகவே இருக்கின்றனர்.
  19. ஓம் அண்ணா. சரி பிழைகளுக்கு அப்பால், ஒரு மனித உயிர் என்னால் ஒரு வினாடியில் பறிக்கப்பட்டதே என்ற குற்றவுணர்வில் மிச்ச வாழ்வு கழிந்திருக்கும். என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது நிகழ்ந்த பின் "எனக்கு படிப்பிக்காதையும்" என்ற மாதிரி கதைப்பதை நிறுத்தி விட்டேன். 😄 எனக்கு புனைவு சரிவராது. என் அனுபவத்தை தான் கொஞ்சம் நீட்டி முழக்கி எழுத முடிகின்றது. இன்னொருவரின் அனுபவத்தை கூட என்னால் கேட்டு அப்படியே எழுத முடியாது. என் அனுபவங்களில் மரணம் ஒரு சக பயணியாக, நிழலைப் போன்று வரும் போது, அதைப் பற்றி அதிகம் எழுத்தில் கொண்டு வராமல் இருக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் எந்த stress சும் அதிகம் இல்லாத, அந்தந்த கணங்களுக்காக வாழ்வது என் இயல்பு. இது உங்களுக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இப்படி வாழ்வதே மரணம் பற்றிய பிரக்ஞை எப்போதும் இருப்பதால் அத்துடன் நாம் ஒரு காலத்தில் 'மரணத்துள் வாழ்ந்தோம்'
  20. உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன. யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது. சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே. சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன். ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது, 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான். உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை. பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான். குளிர் -20 C (மறை 20) ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான். போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். நான் Bluetooth இன் மூலம் காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள். மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது. இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
  21. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
  22. என்ன செய்வது, இப்படி தடக்கு பட்டு விழுந்து விழுந்து விழுப்புண்கள் நிறைய வாங்கினாலும், இந்த மனசு மட்டும் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது..!😂 மனைவியின் இரண்டு சகோதரிகள் உட்பட எல்லாரும் கனடாவில் தான் உள்ளனர் என்பதால், ஊருக்கு போகும் போதோ அல்லது சென்னைக்கு போகும் போதோ குடும்பமாக செல்வதில்லை. அத்துடன் டிக்கெட் செலவில் இருந்து அங்கு தங்கும் செலவு வரை அதிகம் (உறவுகளின் வீடுகளில் தங்குவதில்லை). ... ஆனால் Dominican Republic/ Punta Cana போன்ற கரீபியன் நாடுகளுக்கு குடும்பமாகவே செல்வோம்.. நல்லா வந்துள்ளது. படத்தை சேமித்து வைத்து விட்டேன். மிக்க நன்றி கட்டை வேகும் வரைக்கு மறக்க முடியாத அனுபவம் தான் இது.😄 ஹி ஹி வெந்த புண்ணில் வேல் பாச்சக் கூடாது கண்டியளோ...😂
  23. நல்லதொரு கருத்தை முன்வைத்து ஆக்கம் எழுதியுள்ளீர்கள். இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது. எனக்கு மன நலம் பாதிக்கப்பட்ட சிலருடன் பழகவும், அவர்களை வைத்து சில நாட்களுக்கு பராமரிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. அதே நேரத்தில் அவர்களை அவர்களின் குடும்பம் எவ்வாறு நோக்கியது என்பதை உணரவும் முடிந்தது. என் அப்பா தனக்கு புற்று நோய் வந்துவிட்டது, இறப்பதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன என அறிந்த போதும் கொடுத்த சிகிச்சைகளாலும், மன நலம் பாதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் மிகவும் கஷ்டப்பட்டார். என்னுடைய இங்குள்ள ஒரு இந்திய நண்பரின் மனைவி மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தார். ஆனால் நண்பர் இதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு வீட்டிலேயே வைத்திருக்க, அவர் மனைவி தன் 2 வயது குழந்தையை கொல்லும் நிலைக்கு சென்று, ஈற்றில் பொலிஸ் தலையிட்டு சிகிச்சைக்கு போக வேண்டி வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.