Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை; பங்கெடுக்காத ட்ரம்ப், புட்டின். மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வியாழக்கிழமை (15) குறிப்பிட்டனர். அதற்கு பதிலாக கிரெம்ளின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமை, “எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல்” இஸ்தான்புல்லில் உக்ரேனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த புட்டின் முன்மொழிந்தார். புதன்கிழமை (14) தாமதமாக, கிரெம்ளின் குழுவில் ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறியது – ஆனால் புட்டினின் பெயர் பட்டியலில் இல்லை. கிரெம்ளினின் தூதுக்குழு அறிவிப்புக்குப் பின்னர், மத்திய கிழக்கில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். பங்கேற்பதற்கான விருப்பத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்கத் தலைவர் முன்னதாகவே கூறியிருந்தார். பேச்சுவார்த்தையில் புட்டின் நேரில் கலந்து கொள்வார் என்று ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் இல்லாதது, 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போரில் ஒரு பெரிய திருப்புமுனைக்கான எதிர்பார்ப்புகளைக் குறைக்கிறது. உக்ரேன் அல்லது ரஷ்யாவை விட அமைதியை அதிகம் விரும்பும் ட்ரம்பிற்கு காட்டும் ஒரு வெளிப்படையான போட்டியில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அவர் பயப்படவில்லை என்றால்” பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு புட்டினுக்கு சவால் விடுத்தார். புதன்கிழமை இரவு ஜெலென்ஸ்கி துருக்கிக்குச் சென்றிருந்தபோது, புட்டின் கலந்து கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன் என்று அவர் கூறியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை தனது இரவு காணொளி உரையில், புட்டினின் பங்கேற்பு குறித்து தெளிவு ஏற்பட்டவுடன் துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் முடிவு செய்யும் என்று ஜெலென்ஸ்கி கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலப் போரை நிறுத்த இரு தரப்பினரும் 30 நாள் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தை ஜெலென்ஸ்கி ஆதரிக்கிறார், ஆனால் அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளை முதலில் தொடங்க விரும்புவதாக புடின் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1431887
  2. இவர் வெளியுறவுத்துறை அமைச்சரானது இன்னும் இந்திய ஊடகங்களுக்கு தெரியாதா? தெரிந்திருந்தால்…. அலுப்பு அடிக்கும் மட்டும் அவவின் பூர்வீகத்தை நோண்டி எடுத்திருப்பார்களே. இல்லாவிடில்…. போருக்கு பாகிஸ்தான் போன நிருபர்கள், இன்னும் திரும்பி வரவில்லையா. 😂🤣
  3. அர்ச்சுனாவிற்கு அடுத்து தங்கம்தான் அதிக வாக்குகளை எடுத்ததாக நினைக்கின்றேன். ஆனபடியால்…. தங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். தங்கம் விரும்பாவிடில் மூன்றாவது மயூரன். அதற்கு அந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் அர்ச்சுனா சம்மதிப்பாரோ தெரியாது. இவர்களுக்குள் நிறைய பிரச்சினை உள்ளது. எல்லாம் வெட்டி ஆடுவதற்குள்… அடுத்த தேர்தல் வந்து விடும். 😂
  4. அரசியலில் தமக்குத் தேவை என்றால், தலைகீழாக மாறி விடுவார்கள். டக்ளஸ் தேவானந்தாவும் 1986’ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமைக்கும், நான்கு பேரை காயப்படுத்தியமைக்குமாக இந்தியப் பொலிசாரால் அறிவிக்கப் பட்ட குற்றவாளியாக இருந்த போதும்… அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்தவுடன் டில்லி வரை சென்று இந்தியப் பிரதமரை சந்தித்து விட்டு வந்தவர்கள். சட்டம் என்பது…. ஏழைகளுக்கு மட்டும் தான். அரசியல்வாதிகளுக்கு அது வளைந்து கொடுக்கும் கேவலம் அவ்வப்போது நடந்து கொண்டு இருப்பதை கண் முன்னால் காண்கின்றோம்.
  5. 👉 https://www.facebook.com/watch?v=496717103435171 👈 எத்தனை பாதுகாப்பு கவசம் கட்டியும்... ரயருக்கு, தேசிக்காய் வைத்தும்.... "ரபேல்" இப்பிடி கருகிப் போச்சே.... 😂
  6. வழக்கு தொடுத்துள்ள ஒசல ஹேரத் இதேபோல கடந்த ஆண்டு டயானா கமகேவை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் வென்றிருந்ததுடன், டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  7. இலங்கை மீன் சந்தையும், தமிழ் நாட்டு மீன் சந்தையும் ஒரே ரூல்ஸ் தானே... பாஸ். 😂
  8. ஒரு நிமிட காணொளி: 👉 https://www.facebook.com/100076314756096/videos/1198119368777102 👈 பாம்பு புற்றுக்குள் கைவிடும் அதிசய மனிதன். காணொளியில் இறுதியில் அதிர்ச்சி காத்துள்ளது. 🤣
  9. அவர்களின் பேச்சை கேட்பதற்காகவே... வேண்டும் என்று எதையாவது வில்லங்கமாக கேட்டு, ரசிப்பதுண்டு. 😂
  10. அலை பேசி பயன்படுத்துபவர்களே...தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும். ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும். play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும். இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும். அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். Prikshanan
  11. சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு... ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க... ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க... பொம்மையா முருகன்
  12. Beltஆல அடிக்காதீங்க அண்ணா.. ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு.. ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது. மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்... சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது... ஜெயிலுக்குள்ளே சாகட்டும்... Ranjith Priyan
  13. எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
  14. கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம். அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்துச் சம்பவமொன்று இன்று(14) இடம்பெற்றுள்ளது. நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த வான் ஒன்றே கொத்மலை- கெரண்டியெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தின் போது குறித்த வேனில் 7 சிறுவர்கள் உட்பட 18 பேர் பயணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆம் திகதி கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431843
  15. ஹ்ம்ம்... இங்கு இறந்தவர்களும் தமிழர்களாகவே உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  16. செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம். யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியைஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன. பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431790
  17. இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்! கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் “வெசாக் பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு “, இரண்டாவது நாளாக நேற்று ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் இரண்டாவது நாளில், இலங்கை விமானப்படை இசைக்குழு, பிரபல பாடகர் இலியாஸ் பேக் மற்றும் இலங்கை விமானப்படை பக்திப் பாடல் குழுவுடன் இணைந்து நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் இந்த பக்தி பாடல் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறுவதோடு வெசாக் கொண்டாட்டங்களைக் காண கொழும்புக்கு வரும் மக்களுக்காக 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சிற்றுண்டி தானசாலை நடைபெறும். இதே வேளை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தன்ஸல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று உயர் இராணுவ அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதுதவிர, கங்காராம “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பௌத்தலோக” வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்ததாக, ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் அண்டிய பகுதிகளில் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகளை மின் விளக்குகளால் அலங்கரித்தல், வெசாக் கூடு கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஜனாதிபதி பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. https://athavannews.com/2025/1431795
  18. கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள். ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ” தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர் எனவும் தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். மேலும் குறித்த உப்பளத்தில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை எனவும், இந்த மாதம் தொடங்கி இதுவரை தமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது எனவும், மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவினையே உப்பள நிர்வாகத்தினர் பயன்படுத்துகின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த உப்பளத்தில் பணி புரியும் தமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்திய போராட்டக்காரர்கள் இவ் உப்பளத்தை திறந்து வைக்கும்போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறிய போதும் 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தடன் ஊழியர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் அதிகாரியை இடமாற்றம் செய்கின்றனர் எனவும், இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் பணி தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர் எனவும், அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர் எனவும், இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பிய ஊழியர்கள் இங்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகத் தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431829
  19. நாமலும்... இப்பவே இனவாதம் கக்க வெளிக்கிட்டுது. தொடர்ந்து பிக்குகளும் ஊளையிட தொடங்குவார்கள். கனடா அமைச்சரவையில்... இரண்டு தமிழர்கள் உள்ளார்கள். அதுகும் இதுகளுக்கு... வயித்து எரிச்சலாய் இருக்கும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன... எந்தக் காலத்திலும், ஆட்சிக்கு வராமல் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது.
  20. சிவஞானம், சுமந்திரனின் தமிழரசு கட்சிடன்... சேர சந்தர்ப்பம் உள்ளது என ஊர்க்கிழவி சொல்லுது.
  21. கோவில் திருவிழாக்களில்... லட்சக் கணக்கான ரூபாய்க்கு வெடி கொளுத்தி... காசை கரியாக்குபவர்களும், திருவிழாவிற்கு யானையை கூட்டி வந்து... அதை மிரள வைத்து... சாமி கும்பிட வந்த மக்களுக்கு, யானையால் மிதி வாங்கிக் கொடுத்து அவர்களை அங்கவீனர்களாக்குபவர்களும் இந்தச் சிறுமிக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இந்த விடயத்தில்... கோவில் நிர்வாகங்கள் அவர்களுடன் பேசி நல்ல ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.