Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. BYD சொகுசு கார்களின் இலங்கை விலை விபரம்! உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை கடந்த வருடம் திறந்து வைத்தது. கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான காட்சியறையின் திறப்பு நிகழ்வானது 2024 ஆகஸ்டம் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், BYD ஸ்ரீலங்கா அவர்களின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) ஆகியவற்றுக்கான சிறப்பு விலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கும் 8 வருட உற்பத்தியாளர் பேட்டரி உத்தரவாதமும் 6 வருட உற்பத்தியாளர் வாகன உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம். BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா https://athavannews.com/2025/1422480 @goshan_che , @விளங்க நினைப்பவன் , @அக்னியஷ்த்ரா , @ரசோதரன் , @நிழலி , @இணையவன் , @ஈழப்பிரியன் , @Justin , @ஏராளன்
  2. அர்ச்சுனா எம்.பி. விவகாரம்; சபாநாயகரின் அறிவிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றில் அறிவித்தார். குழுக்களின் பிரதித் தவிசாளரான கௌரவ (திருமதி) ஹேமாலி வீரசேகர தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயர் அறிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் பற்றியும் சபாநாயர் அறிவித்தல் மேற்கொண்டார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அடிக்கடி தனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனைசெய்ததன் பின்னர், அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அக்கோரிக்கைகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1422486
  3. சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பாக மாணவர்கள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவரின் மரணம் காரணமாக, இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு தேஹ்ரியில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் தலையிட்டு, இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இறுதியில் போராட்டக்காரர்கள் சமாதானம் செய்யப்பட்டு, குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளில் ஈடுபட்டனர். Athavan Newsசசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்ட...பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்க...
  4. இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️ இன்னும்... நூறாண்டு காலம், வாழ்க வளமுடன். ❤️ "ஹப்பி பேர்த்டே".... தமிழ் சிறி. 😂 🤣
  5. மித்தெனிய துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது! தந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்த மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை உறுதிப்படுத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மறுநாள் உயிரழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர், மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1422432
  6. நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது! கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் பெண் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் அவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றும் 26 வயதுடைய பாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிளின் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேக நபரின் எண்ணையும் CCD அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) காலை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு வந்த நபர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422461
  7. மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422447
  8. பெண் கொடுத்த 5000 ரூபாய்க்கு... "ஜொள்ளு" விட்டுக் கொண்டு, நாட்டின் ரகசியத்தை பகிர்கின்றவன், ஒறிஜினல் இந்தியனாகத்தான் இருப்பான். 😂
  9. அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும். ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார். அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முன்னாள் ஜனாதிபதி பைடன் நிர்வாகம் $80 பில்லியன் முதலீட்டில் அமலாக்கத்தை மேம்படுத்தி ஏஜென்சியை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அதன் அதிகாரங்களை கட்டுப்படுத்த விரும்புகிறார் உள்நாட்டு வருவாய் சேவை செய்தி தொடர்பாளர் பணிநீக்கங்களுக்கான சரியான எண்ணிக்கையை வழங்க மறுத்துவிட்டது. எனினும், இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, பணிநீக்கங்கள் மொத்தம் 6,700 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பைடனின் கீழ் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. 2021 இல் பைடன் பதவியேற்பதற்கு முன்பு இருந்த 80,000 பேருடன் ஒப்பிடும்போது, வரி ஏஜென்சி இப்போது தோராயமாக 100,000 பேரை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. Athavan Newsஅமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீ...அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞ...
  10. 200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியாங்சு மாகாணத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் தகவலை மேற்கொள்காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, மூன்று நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகள் சமீபத்தில் மியாவாடியில் தொலைத்தொடர்பு மோசடிக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1422394
  11. பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்! காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபிர் 10 மாதங்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மீதமுள்ள பணயக்கைதிகளுடன் அவரது உடலையும் இஸ்ரேல் திரும்பக் கோரியது. வியாழன் அன்று ஹமாஸால் இஸ்ரேலுக்குக் அவர்களில் உடல்களை திருப்பிய அனுப்பிய பின்னர் ஷிரி பிபாஸின் இரு மகன்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஷிரியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களின் தாயார் ஷிரி என்று கூறப்படும் மூன்றாவது உடல் எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை மற்றும் அடையாளம் காணப்படவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. அபு கபீர் தடயவியல் நிறுவனத்தில் உள்ள நிபுணர்களால் நான்காவது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை (21) அதிகாலை அறிவித்தது. இது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஒப்பந்த மீறல் ஆகும் என ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப ஒப்பந்தத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளகவும் கூறியது. போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து, இஸ்ரேல் முழுவதும் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்கனவே தூண்டியிருந்த நிலையில், உடல்கள் திரும்பப் பெற்ற பின்னர் அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை வந்தது. எனினும், ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. https://athavannews.com/2025/1422378
  12. இஸ்ரேலில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய மூன்று பஸ்கள்! இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் புறநகர்ப் பகுதிகளான பேட் யாம் மற்றும் ஹோலோனில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் மூன்று காலி பஸ்கள் வியாழக்கிழமை (20) இரவு அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இரண்டு பஸ்களிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்புகள் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். காசாவில் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பியனுப்பியதையடுத்து இஸ்ரேல் ஏற்கனவே துக்கத்தில் இருந்த ஒரு நாளில் வெடிப்புகள் நடந்தன. பஸ் வெடிப்புகள் 2000 களில் பாலஸ்தீனிய எழுச்சியின் போது குண்டுவெடிப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர். அதேநேரத்தில், வெடிகுண்டு சப்பர்கள் அருகில் சந்தேகத்திற்குரிய வேறு ஏதேனும் பொருட்களை தேடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், நிலைமை குறித்து தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெற்று வருவதாகவும் வியாழன் இரவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியதாகவும் கூறியது. இதையடுத்து, பயங்கரவாத மையங்களுக்கு எதிராக மேற்குக் கரையில் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு அவர் பிரதமர் அறிவுறுத்தியதாக அறிவித்தது. https://athavannews.com/2025/1422387
  13. எனக்கும்... அந்த நாமல் மீம்ஸை பார்த்து ஒரே சிரிப்பு. முகநூலில்.... இந்த துப்பாக்கி சூட்டை வைத்து, பின்னி பெடல் எடுக்கின்றார்கள். அர்ச்சுனா, சஜித், நாமல், மகிந்த என்று எல்லாரையும் போட்டு, கலாய்க்கிறார்கள். 🤣
  14. Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.
  15. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது! கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422356 கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது! கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422356
  16. வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்! வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது. அத்துடன் இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் தளர்த்திய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422365
  17. பிடியுங்கள்.. பந்தயம். 😎 ரணில் எம்.பி. ஆக முதல்… சுமந்திரன், பின் கதவால் எம்.பி. ஆகி விடுவார். 😂 🤣
  18. வடக்கு கிழக்கில்… எத்தனையோ அரசாங்கங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்… வாள் வெட்டு கோஷ்டிகளையும் பிடித்து… கையையும், காலையும் முறித்து விடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.