Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆண்மை குறைபாட்டுக்கு.... சிட்டுக்குருவி லேகியம் விற்கும் வைத்தியராக வேலை பார்த்திருக்கலாம். 😂
  2. இதனை ஒரு முஸ்லீம் இனத்தை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற பாராளுமன்ற உறுப்பினர் சொல்லியதில் வியப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர்களுக்கு எப்படியாவது…. நாட்டில் முஸ்லீம் சனத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதே முதல் குறி. இந்த 100 ரோஹிங்கியா முஸ்லீம் மக்களும் இன்னும் பத்து வருடத்தில், பல ஆயிரமாக பெருகி நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களை… பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் நாடுகளே வரவேற்பதில்லை. இந்த விடயத்தில் அரசு அவர்களை நாடு கடத்த எடுத்த தீர்மானம் சரியானது. கிழக்கு மாகாணத்தில்… தமிழ், முஸ்லீம் மக்கள் அடுத்தடுத்து வாழும் பிரதேசங்களை… அறிவு இல்லாத தமிழ் அரசியல்வாதிகள் எமது கண்முன்னாலேயே… புட்டும் தேங்காய்ப்பூவும் என்று புகழ்ந்து பேசி, இன்று அந்த முஸ்லீம்களால் தமது அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குப் பிறகும்… இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களையும் தமிழ் பகுதிகளில் குடியேற்றி புதுப் பிரச்சினைக்கு வழி வகுக்காமல் உடனே திருப்பி அனுப்புவதுதான் புத்திசாலித்தனமானது. நமது நாட்டில் இருக்கும் முஸ்லீம்களின் தொல்லை போதும்.
  3. அல்வாயன்… உங்களுக்கும் இரண்டு கிழங்குக்கு உடையாரிடம் சொல்லி வைத்திருக்கு. எதற்கும் இந்தக் கிழங்கு சாப்பிடுவதால்… பின்விளைவு எப்பிடி இருக்கு, முன்விளைவு எப்பிடி இருக்கு என்று அறிந்து வைக்கிறது நல்லது. 😂 🤣
  4. குமாரசாமி அண்ணை…. ஆபிரிக்க ஆம்பிளையள் சாப்பிடுகிற கிழங்கு என்றால், கட்டாயம் நாங்களும் அந்த மரத்தின்ரை விதையை… உடையாரிடம் வாங்கி, வளவுக்குள்ளை நடத்தான் வேணும். 😂
  5. சுண்ணக்கல்லை தூளாக்கி சல்லி என்று சட்டத்தை ஏமாற்றும் செயலுக்கு எதிராக ஏற்கனவே சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. சுண்ணக்கல்லை கொன்கிறீட் கல்லு போன்ற முடிவுப்பொருட்களாக மாத்திரமே அனுமதியிலாமல் கொண்டு செல்லப்பட முடியும் என்று இந்த சுற்று நிருபம் சொல்கின்றது. தமிழாக்கம் சுண்ணாம்புக் கல்லின் நொறுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான பிரச்சினை இது மேலே குறிப்பிட்ட விஷயத்தைக் குறிக்கிறது. 06.05.2024 தேதியிட்ட எங்கள் கடிதத்தின் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபடி, நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான போக்குவரத்து உரிமம் பெறுவது அவசியம். (குறிப்பிட்ட கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் எண் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் எண் 33 1992 இன் பிரிவு 28 (1) இன் படி, எந்த நபரும் ஆய்வு, சுரங்கம், போக்குவரத்து, செயல்முறை, வர்த்தகம் அல்லது இந்தச் சட்டத்தின் விதிகள் மற்றும் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் அல்லது வேறுவிதமாக அல்லாமல் எந்தவொரு பொருளையும் ஏற்றுமதி செய்யலாம் மேலும் பிரிவு 28 (ii) இன் கீழ், அரை-உருவாக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு போக்குவரத்து உரிமம் தேவையில்லை. ஆனால் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு அரை முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாக அடையாளம் காண முடியாது. Kumaravelu Ganesan
  6. காகத்திற்கு கனவிலும்.... கிளிநொச்சி நினைப்புத்தான். இதுவரை வரை வடக்கு, கிழக்கு பாடசாலை மாணவர்களிடையே இருந்த போதை மாத்திரை பழக்கத்திற்கு காரணமானவர்களைப் பற்றி ஓரு கருத்துக் கூட வைக்க முடியாத சுமந்திரனின் செம்புகளுக்கு வேறு தொழில் இல்லை என நினைக்கின்றேன். கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பிடிபடும் போதை வஸ்து கடத்தல்காரர்களுக்காக வாதாடி சிறையில் இருந்து வெளியே எடுத்துவிடும் சுமந்திரனைப் பற்றி எழுத தன்மானம் இடம் கொடுக்குது இல்லையோ. நீங்கள் எவ்வளவுதான்... சுமந்திரனுக்கு வெள்ளை அடித்தாலும், அந்த நிறத்தையும், குணத்தையும் மாற்ற முடியாது என்பதே கள நிலைமை. மக்கள் அந்தளவுக்கு... தெளிவாக சுமந்திரனை தோல்வியடையச் செய்துள்ளார்கள். சுமந்திரனை... ஆளுமை, மண்ணாங்கட்டி என்று... பப்பாவில் ஏற்றி, கீழே விழுத்தியதில் உங்களைப் போன்றவர்களின் பங்கும் முக்கிய காரணம். அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சிக்கு மரண அடி விழ இருக்கு. வாங்கிக் கட்ட ரெடியாய் இருங்கோ.
  7. இனி இந்தியாவில் இறந்த அனைவரையும்… வேகத்தடை மேல் வேகமாக ஒரு ஓட்டம் ஓடி, உயிர்ப்பிக்க வேண்டும். 😂
  8. யாழ்.மக்கள்... வாள்வெட்டு கோஷ்டி, கிறீஸ் பூதம், வெள்ளைவான் எல்லாத்தையும் பார்த்த ஆட்கள். இதற்கு பயப்பிடுவார்கள் என நினைக்கவில்லை.
  9. முதன் முதலாக இப்போதான்... ஜக்கம்மாவை பார்க்கின்றேன். 😂 விதையை நட்ட உடையார்... சிலவருடங்களின் பின் காசு கொடுத்து மரத்தை தறிக்கின்றாரோ தெரியாது. 🤣
  10. சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன். அண்மையில் ஐரோப்பாவில் வசிக்கும் பிரபல்யமான ஒரு எழுத்தாளர் என்னைக் காண வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு இளம் அரச ஊழியர். என்னுடைய மாணவர். அவர் சொன்னார்,தான் வெளிநாட்டுக்குப் போக போவதாக.ஏன் நாட்டில் இருந்து உழைக்க முடியாது என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். “ஓம் நான் ஒரு வீடு கட்டினேன். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய்கள் கடன்.கடனை அடைக்க என்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து பெரிய தொகை போகிறது. அதனால் வீட்டுச் செலவுகளுக்கு அம்மாவும் அப்பாவும் ஒரு கடை வைத்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கான முதலீடு கூட புலம்பெயர்ந்த நண்பர்கள் சிலர் தந்தது தான்.ஒரு அரச ஊழியனாக என்னால் அந்தக் கடனைக் கட்டி முடிப்பது கடினமாக உள்ளது.ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அது ஒரு சிறு காசு.என்ற படியால்தான் ஒரு கடனாளியாகவே இருப்பதை விடவும் புலம் பெயரலாம் என்று முடிவெடுத்தேன்.”என்று சொன்னார். அப்பொழுது அவரோடு வந்த எழுத்தாளர் சொன்னார், அவர் சொல்வது சரி. ஊரில் ஒரு செத்த வீடு. என்னுடைய வயதுக்காரர் பலர் வந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கிழடு தட்டி பற்களும் விழுந்து வயதை விட கூடுதலான அளவுக்கு முதியவர்களாகக் காணப்பட்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு கடுமையானதாக சுமையானதாக மாறிவிட்டது போலும்.” என்று. அதாவது தமது அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படும் ஒரு வாழ்க்கை.ஒரு சுமையாக மாறிய வாழ்க்கை. கடந்த மாதம் நடுப்பகுதியளவில் வந்த புள்ளி விவரங்களின்படி, முழு நாட்டிலிருந்தும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் தேடி புலம்பெயர்ந்து விட்டார்கள். இவர்களில் எத்தனை விகிதத்தினர் நாட்டில் தொழில் துறைகளோடு இருந்தவர்கள் என்பதும், எத்தனை விகிதத்தினர் தமிழர்கள் என்பதும் தெரியவில்லை.ஆனால் முழு நாட்டிலிருந்தும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் முடிவு வரை 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள். இருபதாவது லட்சம் ஆள் தாய்லாந்தில் இருந்து வந்த ஒரு ஊடகவியலாளர். அதை சம்பந்தப்பட்ட இலங்கை அமைச்சுக் கொண்டாடியது. கொண்டாடட்டும்.ஒருபுறம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.இன்னொரு புறம் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடுவது போல ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வெளியேறும் பலரும் படித்தவர்கள், பட்டதாரிகள்,குறிப்பாக சுகாதார,மருத்துவத் துறை சார்ந்தவர்கள். தமிழ் மக்கள் மத்தியில் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவர்களில் சிறு தொகையினர் திரும்பி வருகிறார்கள் என்பது இந்த மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் பண்புகளில் ஒன்று. நாடு பொருளாதார ரீதியாக முன்னரை விடக் கூடுதலாக முன்னேறியிருப்பதாக அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருந்து உழைக்க முடியாது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. இலங்கைத் தீவைப் போலவே பொருளாதார நெருக்கடி வந்த கிரீஸ், அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளிலும் கிரீஸ் ஒப்பீட்டளவில் முன்னேறியிருப்பதாக அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. ஆனால் அர்ஜென்டினா இப்பொழுதும் தடுமாறுவதாகத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நாடுகளில் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக அரசாங்கங்கள் மாறியிருக்கின்றன. அல்லது நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.அர்ஜென்டினா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்கள் அடிக்கடி மாறின.நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். நாடு மறுபடியும் நிமிர்ந்து நிற்க பல மாதங்கள் எடுத்தன. உதாரணமாக,கிரேக்கத்தில் ஐந்துஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது.அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இலங்கைத் தீவிலும் கடந்த நாலாண்டு காலப் பகுதிக்குள் மூன்று அரசாங்கங்கள் வந்துவிட்டன.நான்கிற்கு மேற்பட்ட நிதியமைச்சர்கள் வந்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை. இப்பொழுது நாட்டை ஆளும் என்பிபி அரசாங்கம் நிரந்தரமானதா இல்லையா என்பது அது பொருளாதாரத்தை எந்தளவுக்கு நிமிர்த்தும் என்பதில்தான் தங்கி இருக்கிறது.அது எந்த அளவுக்கு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளப் போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. என்பிபிக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பார்த்துப் பிரமிக்கும் பலரும் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். என்பிபி பெற்ற வெற்றி என்பது ஒரு விதத்தில் பொருளாதார நெருக்கடியின் விளைவு. எனவே பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவில்லை என்றால் இந்த வெற்றி தோல்வியாக மாற முடியும்.அவ்வாறு பொருளாதார நெருக்கடியைக் கையாளாமல் இனப்பிரச்சனை தீர்வைக் குறித்தோ,அதற்காக யாப்பை மாற்றுவது குறித்தோ என்பிபி அரசாங்கம் சிந்திக்குமா? பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தணிந்தாலும் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடைசிப் பகுதியில்தான் அவர்கள் அவ்வாறு சிந்திக்கலாம். அதாவது பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்குத் தணித்த பின்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி யோசிக்கலாம் என்ற நிலைமை உண்டு. இலங்கையைப் போலவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கிரீசில் நிலைமை முன்னேறி வருவதாக அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிரீஸ், தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்று 2010 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் அது வங்குரோத்தாகிய நாடாக அறிவிக்கப்பட்டது. கிரீஸ் தனது அரசுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால், ஐரோபிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதிய (IMF) ஆகியவற்றால் மீட்புத் திட்டங்கள் வழங்கப்பட்டன. கிரீஸ், தனது பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு 40% வளர்ச்சியுடன்,2024இல் Athens General Stocks Index (ATG) 13.1% உயர்ந்துள்ளது.கிரீஸின் பொருளாதாரம், 2025 இல் 2.3% வளர்ச்சியை எட்டுமென ஐரோப்பியக் கமிஷன் கணித்திருக்கின்றது. ஆனால் கிரேக்கத்தின் கதையும் இலங்கைத் தீவின் கதையும் ஒன்றல்ல. இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் காரணங்களால் ஏற்பட்டது. ஜேவிபி கூறுவது போல, அல்லது ஏனைய தென்னிலங்கைக் கட்சிகள் கூறுவது போல, அரச மயப்பட்ட ஊழல், அரச மயப்பட்ட மோசடி போன்றவற்றின் காரணமாக ஏற்பட்ட ஒன்று அல்ல.அது இனப்பிரச்சினையின் விளைவு. தென்னிலங்கை கட்சிகள் எவையும் அதனை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சிகள் மட்டுமல்ல, சிங்கள அறிவு ஜீவிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனப் பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியாது. உடனடிக்கு பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளில் இருந்து நாட்டை காப்பாற்றலாமே தவிர பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்ப்பது என்றால், இலங்கைத் தீவின் இன ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். இன ஐக்கியத்தைப் பாதுகாப்பது என்று சொன்னால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசம், தேசிய இனம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை ஏற்றுக்கொண்டு அதைத் தீர்ப்பதற்கான அடிப்படை கட்டமைப்புசார் மாற்றங்களை செய்தால்தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம். இனப்பிரச்சினையைத் தீர்த்தால்தான் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்கலாம். ஆனால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று என்பிபி அரசாங்கம் சிந்திக்கின்றது.அனுர மட்டுமல்ல சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பும் அப்படித்தான் சிந்திக்கின்றது.எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்படித்தான் சிந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முயல்வது என்பது வலி நிவாரணி அரசியல்தான். அதாவது உடலில் ஏற்பட்ட காயத்துக்கு உள் மருந்து கொடுக்காமல் காயத்தைக் கழுவி மருந்து கட்டுவது போன்றது. அனுர அரசாங்கம் அதைத்தான் செய்யும்.அதற்கு மேல் போய் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அனுமதிக்காது. குறிப்பாக மகா சங்கம் இப்போதைக்கு அனுமதிக்காது. எனவே பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிக்கலாம் என்றுதான் என்பிபி அரசாங்கம் சிந்திக்கும். நாட்டை முதலீட்டு கவர்ச்சி மிக்கதாகக் கட்டி எழுப்புவதென்றால் முதலில் அதனை இன முரண்பாடுகள் இல்லாத ஒரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை வைத்து இனப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் முரண்பாடு நீங்கி விட்டது என்றும் கற்பனை செய்யக்கூடாது. ஸ்ரீலங்காவை கிளீன் செய்வது நல்லது. ஆனால் சிறீலங்காவின் அரசியல் கறை அதாவது உண்மையான கறை எது? இன முரண்பாடுகள்தான் அந்தக் கறை. அதை அகற்றாமல் நாட்டின் அரசியல் கலாசாரத்தைக் கிளீன் பண்ண முடியுமா? https://athavannews.com/2025/1415269
  11. வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது ! போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒரு 20 வயதுடைய பட்டதாரி யுவதியை ஹன்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். யுவதி, துபாயில் தலைமறைவாகிய கடத்தல்காரருடன் தொடர்புடையவராகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும் பொலிஸாரின் விசாரணைகளில், இந்த யுவதி இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாகவும், வெளிநாடு செல்ல தேவையான பணத்தை சம்பாதிக்க போதைப்பொருள் விற்பனைக்கு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந் நிலையில் அவரது சந்தேகத்தை உறுதி செய்த பிறகு, ஹன்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும், துபாயிலிருந்து இந்த யுவதியின் உறவினரின் மூலம் போதைப்பொருள் விநியோகமாகி இருக்குமெனவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஹன்வெல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றவாளிகளின் வலையமைப்புக்கு இணையான ஒரு பகுதியில் இந்த யுவதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1415270
  12. மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களிற்கு, நினைவு அஞ்சலிகள்.
  13. ஜாம்பியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி கைது! ஜாம்பியாவில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு டஜன் கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பறியும் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஃபிரி செவ்வாய்க்கிழமை காலை “போதையில் இருந்த நிலையில்” செல் சாவிகளை வலுக்கட்டாயமாக கைப்பற்றினார் என்று ஜாம்பியாவின் பொலிஸ் சேவை புதன்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பிறகு, அந்த அதிகாரி ஆண் மற்றும் பெண் செல்களை திறந்து, சந்தேக நபர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி, அவர்கள் புத்தாண்டை கொண்டாட சுதந்திரமாக இருப்பதாக கூறியதாக பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. தலைமறைவாக உள்ள 13 கைதிகளுக்கு உண்டான தேடல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. சில கைதிகள் தாக்குதல் மற்றும் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. காவல்துறை, எந்தவொரு அதிகாரியும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணாக செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. https://athavannews.com/2025/1415265
  14. இவர்களை பிடித்து, ஐந்து Battery போட்ட ரோச் லைற்றால், கண்ணுக்குள் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். 😂 அதிக வெளிச்சம் உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். "முள்ளை... முள்ளால்தான் எடுக்க வேண்டும்". 🤣
  15. நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி கைது! பலாங்கொடை: இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி, பொது பாதுகாப்பு பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த மூடைகள் பலாங்கொடை நகரின் கடைகளுக்கு விநியோகிக்க பணி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. சம்பவம், பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் அருகே நடைபெற்றது. அங்கு, லொறியில் அரிசி மூட்டைகளை இறக்கும் பொழுதில், நாய்கள் மூட்டைகளுக்கு இடையில் இருந்ததை கண்டெடுத்த ஒரு நகரவாசி, அதை கைத்தொலைபேசியில் பதிவு செய்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பினார். அதன்பேரில், அதிகாரிகள் லொறியை கைப்பற்றி மேலதிக விசாரணைகள் மேற்கொண்டனர். அந்த லொறியில் 21 இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்கப்படக்கூடிய அரிசி கையிருப்பு இருந்ததாகவும், இந்த லொறி திஸ்ஸமஹாராமவில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு சொந்தமானது என்றும் விசாரணைகள் தெரிவித்தன. https://athavannews.com/2025/1415261
  16. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள். Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும். சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று (04) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2025/1415241
  17. யாழ்ப்பாணத்தின் அனுமதியுடன் சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம் என்று சொன்னால்.. நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் வரவேற்று நாசம் செய்கிறோம் என்று அர்த்தம். அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விஷேச புவியியல் அமைப்புக் காரணமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும். நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம். முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளுக்குள் வந்தால் பிறகு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி கதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு. Sivakumar Subramaniam
  18. இந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நிலவு உருகி அருவியாக கொட்டுவது போன்ற வியப்பை ஏற்படுத்தும். இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ளது. 2425 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் சில நாட்களில் இத்தகைய அழகோவியத்தை காணலாம்.
  19. புதிய வைரஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள சீனா. சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படும் புதிய வகை வைரஸ்கள் தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது. இதில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த வைரஸ் தாக்கமானது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீனா தரப்பு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. Human metapneumovirus (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது. அந்தவகையில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீன தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடக்கு காற்றின் காரணமாக, குளிர்காலத்தில் வழக்கமாக சீனாவில் நுரையீரல் பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் தாக்கமானது குறைவான பாதிப்பை கொண்டிருக்கிறது என்றும் கடந்த ஆண்டை விட பாதிப்பும் தீவிரமும் குறைவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீன மக்கள் மற்றும் சீனாவில் வாழும் வெளிநாட்டினரின் சுகாதாரத்தை உறுதி செய்வதில், சீன அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், சீனாவுக்கு பயணம் செய்வது இன்னமும் பாதுகாப்பானதுதான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். அத்தோடு, நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது என்றும் எதுவும் அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கம் அங்கு காணப்பட்டாலும், இதுவரை அதனை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1415169

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.