Everything posted by தமிழ் சிறி
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
நாம் மறந்த பல விடயங்களை… நினைவில் வைத்திருந்து பகிரும் நிழலிக்கு நன்றி. 🙂
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
கடந்த முறை யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.. அதாவது 330 வேட்பாளர்கள் 7 எம்.பி பதவிக்காக போட்டியிட்டனர். இம்முறை யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பற்றாதவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனர்? ஏனெனில் எம்.பி யானால் நல்ல சம்பளம் சலுகைகள் கிடைக்கும். அதைவிட சொகுசு வாகனம் விற்று 5 கோடி சம்பாதிக்கலாம். பார் பெர்மிட் விற்று மூன்று கோடி சம்பாதிக்கலாம். இப்படி சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனரேயொழிய தமிழ் மக்கள் நலனுக்காக அல்ல. தயவு செய்து இம்முறை இந்த திருடர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தோழர் பாலன்
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
கஜேந்திரனை தவிர மிகுதி எல்லாரும் போவார்கள் என்று நினைக்கின்றேன். முதலாவது ஆள்... டக்ளஸ் தேவானந்தா. 😂
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர- நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது. எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும். நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும். நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது. தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதந்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர். அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் இல்லையெனில் வடக்கு மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403915
-
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்
அனைவரும் இதனை வாசிக்க வேண்டும். திருடர் கூட்டம்... சத்தியலிங்கம், சுமந்திரன் எல்லாம் தமிழரசு கட்சியில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டும். தமிழரசு கட்சியில் உள்ள பலரின் முகமூடிகளை அம்பலப் படுத்தும் நல்ல ஒரு கட்டுரை. இணைப்பிற்கு நன்றி ஏராளன்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
வளவன்... நானும் ஊகத்தின் அடிப்படையிலேயே கருணா கொலையாளியாக இருக்கலாம் என நம்பி இருந்தேன். ஏனென்றால் தராகி சிவராம் கொலை செய்யப் படுவதற்கு முன் இரவும் அன்றைய காலையும் கருணாவின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டதால் கருணா கொலை செய்திருப்பான் என நம்பினேன்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
சரியாக சொன்னீர்கள் நொச்சி. ஒட்டுக் குழுக்கள்... கொலைகளை செய்து விட்டு அரச செல்வாக்குடன் பாராளுமன்றம் கலைக்கப் படும் வரை சுதந்திரமாக நடமாடி திரிந்தார்கள். இது பாவப் பட்டவர்களுக்கு மறுக்கப் பட்ட நீதி ஆகும். அவை எல்லாவற்றையும் தோண்டி எடுத்து நீதி வழங்குவதே சரியான முறை ஆகும். அத்துடன்... சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர என்ற நேர்மையான அதிகாரி மீண்டு சேவையில் இணைக்கப் பட்டுள்ளார். முன்னேற்றகரமான நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதே எமது விருப்பம். அவர் சம்பந்தமான தகவல்களை கீழுள்ள இணைப்பில் நேரம் இருந்தால் பாருங்கள். பல தமிழர்களின் கொலைகளையும் வெளியே கொண்டு வந்த திறமைசாலி. 👇 👇
-
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்!
படத்தைப் பார்க்க அழகாக உள்ளது. இயற்கையை... புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம்தான்.
- சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
அண்மைய கால அரசியல் நிகழ்வுகளை. ஒரே பார்வையில் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார் நிலாந்தன் மாஸ்ரர். ✔️ 👍 இங்குள்ள சிலர் தமது அரசியல் அறிவை வளர்க்க, இதனை வரிக்கு வரி வாசித்து... புத்தி தெளிய வேண்டும். வாசிக்க கஸ்ரமாகத்தான் இருக்கும்... எழுத்துக் கூட்டியாவது வாசித்து அரசியல் தெளிவை பெறுங்கள். 😂 கட்டுரையை இணைத்த கிருபன் ஜீக்கும், அருமையான கட்டுரையை எழுதிய நிலாந்தன் மாஸ்ரருக்கும் நன்றிகள். 🙏
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
நல்ல விடயம். 👍 இந்த முறை.... கருணா என்னும் முரளிதரன் தப்ப வழி இல்லை என்றே நினைக்கின்றேன்.
-
மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரியும் முன்னாள் சீ.ஐ.டி பணிப்பாளருமான ஓய்வு பெற்ற ஷானி அபேசகர மீண்டும் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலிஸ் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இம்முறை அவருக்கு Criminal intelligence Analysis and prevention division பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஷானி என்ற நாமம் 1999ம் ஆண்டு தான் இலங்கையில் மெல்ல மெல்ல பிரபல்யமடையத் தொடங்கியது. ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் நடிகர் சனத் குணதிலக்கவுக்கும் காதல் தொடர்பு இருப்பதாய் அப்போது சிங்கள வாசகர்கள் மத்தியில் வெகுபிரபலமாக இருந்த சட்டன பத்திரிகை எழுதியது. இப்பத்திரிகை ஆசிரியர் பெயர் ரோஹன குமார மஞ்சள் பத்திரிகை தரத்திற்கு இறங்கி அடித்தார். இதேவேளை அவுஸ்ரேலியாவில் இருக்கும் குருபரன் என்ற கோடீஸ்வரர் சேனல் 9 என்ற தொலைக்காட்சிச் சேவையை இலங்கையில் தொடங்க சனத் குணத்திலக்கவின் நண்பர் லக்ஷ்மன் ஹுலுகொல்லவை அணுகினார்.அனுமதிப்பத்திரம் பெற்றுத் தந்தால் பதிலுக்கு 20 மில்லியன் டொலர் லஞ்சம் தர ஒப்புக் கொண்டார் குருபரன். ஆனால் சந்திரிக்காவும் காமினி ராஜநாயகம் என்ற பிணாமி பெயரில் தொலைக்காட்சியின் பங்குதாரராக விரும்பினார். இதை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கின சட்டனவும் சண்டே லீடரும். முடிவு , பெத்தகானே சஞ்சீவ என்ற அரச அனுசரணை பெற்ற அந்நாளின் பாதாள உலக தாதாவால் ரோஹன குமார படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அப்படுகொலையின் சூத்திரதாரி பெத்தகான சஞ்சீவ என்று சீ ஐ டி இளம் உப பொலிஸ் பரிசோதகரான ஷானி கண்டு பிடித்த போது உடனே விசாரணை நிறுத்தப்பட்டது. 2005ம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க்கில் நடந்த ஸ்வீடன் யுவதியான இவான் ஜோன்ஸன் படுகொலையும் நாட்டை உலுக்கிய துயரங்களில் ஒன்று .சாட்சியே இல்லாமல் நடந்தேறிய அப்பயங்கரத்தின் பின்னணியை விசாரித்தவரும் ஷானி தான்.ஆங்காங்கே பதிந்திருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளி ஜுட் மஹாவின் கையில் விலங்கைப் பூட்டினார் ஷானி. பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் படுகொலையில் டீ.ஐ.ஜீ வாஸ் குணவர்த்தனவை உள்ளே தள்ளிய பெருமையும் ஷானியையே சேரும். சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, உடத்தலவின்ன முஸ்லிம் இளைஞர்கள் கொலை, பாரத லக்ஸ்மன் கொலை, பதினொரு மாணவர்கள் கொலை, வசீம் தாஜுதீன் கொலை, குடி தண்ணீர் கேட்டுப் போராடிய ரத்துபஸ்வல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் முன்னணி பின்னணி , ஊடகவியலாளர்களான போத்தல ஜயந்த மற்றும் கீத் நொயார் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையை ஒரு நவீன பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பைல்களும் ஷானி திறந்தவைதான். நல்லாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளி ஆட்சி ஷானியோடு சரியாய் ஒத்துழைக்கவில்லை. அதிகாரத்திலிருந்தவர்கள் டீலர்களாய் இருந்ததால் விசாரணைகளும்,கைதுகளும் நகைச்சுவையாகிப் போயின. கோட்டாபய ராஜபக்சே ஜனாதிபதியானதும் பிரதமரை நியமிக்க முதல் உடனடியாய்ச் செய்த முதல் வேலை ஷானியைத் தூக்கி காலி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததுதான்.கெத்தாய், மிடுக்காய் இருந்த ஷானி, கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். அத்தோடு உயிர்த்த ஞாயிறு விசாரணையின் போக்கு மொத்தமாய்த் திசைமாறியது. வாஸ் குணவர்தனவின் கேஸை மையமாய் வைத்து சேவை இடைநிறுத்தம், மூன்று வருடம் ஆறு மாதம் ஓய்வூதியம் இடைநிறுத்தம், பத்து மாதச் சிறை என்று ஷானி மீது பழிவாங்கல்கள் தொடர்ந்தன. வெறும் ஒரே ஒரு அறை கொண்ட ஐந்நூற்றி ஐம்பது சதுர அடி வீட்டில் தான் இன்னமும் வசிக்கிறார் ஷானி.சந்திரிக்கா முதல் கோட்டாபய வரை அவர் எந்தவொரு தலைவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை.அப்படி அவர் சமரசம் செய்து இருந்தால் இலங்கை போன்ற ஒரு பாடவதி சிஸ்டம் கொண்ட தேசத்தில் பில்லியன்களில் உழைத்து இருக்கலாம். இது மீண்டும் ஷானியின் முறை. இத்தனை வருட கால அரசியல் தலையிடிகள் அவருக்கு இனி இருக்காது.எந்த ராஜபக்சேக்களால் ஷானி பழிவாங்கப்பட்டாரோ அந்த ராஜபக்சேக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிட முடியாதவளவுக்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நிலையில் ஷானி வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.என்னவொரு பவர் புல் கர்ம வினை இது. நன்றி: Thowfeek Alimohamed, Zafar Ahmed , Kunalan Karunagaran
-
கருத்து படங்கள்
- அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! ”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் ” சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் ”சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும், அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், பொலிஸாரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403853- டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
ஒண்ட வந்த பிடாரி…. ஊர் பிடாரியை விரட்டி அடித்ததாம்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நீங்கள் சொல்வது போல்…. புலிகள் தம் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் ஶ்ரீலங்காவின் தேர்தலை நடாத்த அனுமதிக்கது இருந்திருக்கலாம் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். சிலவேளை இது பற்றிய மேலதிக தகவல்கள் @நன்னிச் சோழன் க்கு தெரிந்திருக்கலாம்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நிழலி… தக்க நேரத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் கூறிய மாதிரி அந்த நேரம் நூற்றுச் சொச்ச வாக்குளை பெற்று பாராளுமன்றம் போனதை பார்த்து சிங்களவர்களே நகைச்சுவையாக பேசிக் கொண்டது நல்ல நினைவில் உள்ளது. ஒருவர் 120 வாக்குகளுடன் எம்.பி., மற்றொருவர் 150 வாக்குகளுடன் எம்.பி. ஆகினார்கள் என நினைவில் உள்ளது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் குறைந்த வாக்குகளுடன் பாராளுமன்றம் போனவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
சும்முக்கு... கட்டுக்காசு ஆவது வருமா என்று தெரியவில்லை. அதுக்குள்ளை.... வாயாலை, வடை சுட்டுக் கொண்டு இருக்கிறார்.- முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும்.
முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?" அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்...... "அன்பே என்னை மன்னித்துக் கொள். இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள். நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று... பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...! 😂 🤣 Nicole Santana- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஓம். யாழ்.கள தேர்தல் கணிப்பு ஒன்றை @கந்தப்பு அவர்கள் நடத்த இருக்கின்றார்கள். தேர்தல் மனுக்கள் விண்ணப்பிக்கும் நாள் நேற்றுடன் நிறைவு பெற்றறாலும், இலங்கை தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அநேகமாக நாளை அந்த முடிவு தெரியும் என நினைக்கின்றேன். அதற்குப் பின் கந்தப்பு அவர்கள் கேள்விக் கொத்தை தயாரிப்பார் என எண்ணுகின்றேன். நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நீங்கள் சொல்லிய மாதிரி 1994´ம் ஆண்டு தேர்தலாக இருக்கலாம் ஐலண்ட். அதில் டக்ளஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் 200 வாக்கு எடுத்து பாராளுமன்றம் போனதாக செய்தியில் வாசித்த நினைவு.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஒரு முறை தேர்தலை புலிகள் பகிஸ்கரிக்க சொல்லிய போது... பெரும்பாலான மக்கள் வாக்களிக்கவில்லை. அப்போ டக்ளஸ் தேவானந்தா, அண்ணளவாக 200 வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்றார். குறிப்பிட்ட அளவுக்கு மேல்தான்... வாக்குகள் பெற வேண்டும் என்று வரைமுறை இல்லை என நினைக்கின்றேன்.- நாம் ஒரு பலமான எதிர்க்கட்சியாக வருவோம்
சாதிக்குள் அமீனின் கனவு... நனவாக, முற்கூட்டிய வாழ்த்துக்கள்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தகவலுக்கு நன்றி புத்தன். 🙂- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தமிழர் மத்தியில்.... வாழைப்பழத்தை விட மாம்பழத்துக்குத்தான் அதிக மதிப்பு உண்டு. 😂 🤣 - அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.