Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. Pitch and conditions Both games played in Mullanpur this season have seen 200-plus scores batting first. Each time, the team batting first went on to successfully defend it. Don't rule out a big total on Tuesday, when temperatures are expected to slide to 27 degrees Celsius in the evening after rising to 38 degrees in the morning. இன்றைய போடியில் 200 ஓட்டங்கள் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது இந்த கிரிகின்போ தள கணிப்பின் மூலம் தெரிகிறது, அத்துடன் மைதான பனிப்பொழிவு அதிகம் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பது அவர்களது அறிக்கையில் மறைமுகமாக கூறப்படுவதாக கருதுகிறேன். சில அணிகள் ஆரம்பத்தில் மைக் மோகன் மாதிரி இருந்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள், இந்த வருடம் பஞ்சாப் அணியின் நிலை அப்படி வரும் போல இருக்கிறது. KKR ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியினை முடித்துவிடுவார்கள் போல் இருக்கிறது, பஞ்சாப் அணி இங்கிலிஸினை அணியில் இணைக்கவேண்டும் என பரவலான கருத்து நிலவுகிறது, மக்ஸ்வெல்லின் நிலை பரிதாபமாக இருக்கிறது, ஸ்ரோனிஸ் கூட இந்த போட்டியில் சிரமப்படுவார் எனவே தோன்றுகிறது. கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியின் 219 ஓட்டங்களை துரத்த முயன்று 201 ஓட்டங்களை எடுத்தது இந்த மைதானத்தில்.
  2. சென்னை அணிக்கு தோனி மாதிரி யாழ்கள விளையாட்டு திரிக்கு நிங்கள் இருக்கிறீர்கள், இரண்டு பேரும் சரியான நேரத்தில் மீள வந்ததால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன். அஸ்வினுக்கு தற்போது கொடுத்துள்ள இடைவேளை அவர் மீண்டும் சிறப்பாக சென்னை ஆடுகளத்தில் மீண்டும் ஆட வழிவகுக்கலாம், அவரை சென்னை போட்டியில் பயன்படுத்துவார்கள், ஆனால் அடுத்த போட்டி மும்பாயில் நடைபெறும் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள் என நம்புகிறேன். நூர் அகமட், குல்டீப் இருவரும் இடதுகை மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள், இவர்களின் தாக்கம் 20 ஓவர் போட்டிகளில் அதிகமாக காணப்படும். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, நான் தெரிவு செய்த அணிகள் கூட நினைவிருப்பதில்லை, கிருபன் போடும் அந்தந்த நாளுக்குரிய தெரிவுகளை பார்க்கும் போதுதான் தெரியும் எனது தெரிவுகள்.
  3. தல மட்டுமல்ல அஸ்வினும் காரணம், வழமையாக பவர் பிளேயில் 20 ஓட்டங்களையாவது விட்டுக்கொடுப்பார். இனிமேல் ஆறுமுகத்திற்கு ஏறுமுகம்தான்.🤣
  4. நீங்கள் கூறுவது போல பந்தினை அவர் சரியாக கணிக்கவில்லை, சான்ட்னரின் அவுட்டாகும் முதல் பந்து போலவே பந்து அதிகமாக வெளியே திரும்பும் என எதிர்பார்த்தார். அதுவரை பந்திற்கு ஏற்ப விளையாடியவர் பின்னர் எதிர்பார்ப்புடன் விளையாடினார் என கருதுகிறேன், அப்போது இருந்த களத்தடுப்பு ரிவர்ஸ் சுவீப், சுவீப் அடிக்க முடியாமல் அமைக்கப்பட்டிருந்தது, இரண்டு பெரிய இடைவெளி ஓப் சைடில் டீப் பொயின்ற்கும் லோங் ஓன்னிற்கும்டையேயும், லெக் சைடில் டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே இருந்தது அதனால் அவருக்கு பின் காலில் சென்று தூக்கி அடிக்கும் ஒரு தெரிவினை உருவாக்கியிருந்தார்கள். 4 அடித்த பந்து பின் காலில் சென்று லோங் ஒனிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்கும் இடையே அடித்தார், அடுத்த பந்து பின் காலில் சென்றால் பந்தினை தவறவிடுமாதிரி வீசப்பட்டது (வேகமாக பந்து கீழிறிங்குவதால்), பெரும் பாலும் LBW எடுப்பதே இதன் நோக்கமாகும். கருன் இந்த பந்தை டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே தூக்கி அடிக்க முயன்றார், பந்து அதிகமாக திரும்பாமல் உயர்ந்து வந்து காலிற்கும் துடுப்பிற்குமிடையே நுழைந்து விக்கெட்டில் பட்டது. ராகுலுக்கும் அதே ஓவரில் முதல் பந்தில் அவ்வாறே வீசினார் ஆனால் அது ஒரு மெதுவான பந்து ஆனால் கருணிற்கான பந்து வேகமான பந்து.
  5. வழமையான விரல் ஸ்பின்னின் நடுவிரல் கட்டிற்கு கீழே நடுவிரலிலின் பிடி, இந்த பந்தில் நடுவிரல் கட்டிற்கு மறுபுறம் இருக்கும், பந்தை விடும் போது side spin ஆக வரும் அதனால் அதிக ஸ்பின்னுடன் drift உடன் இருக்கும். undercutter போல இருந்தாலும் பந்தின் கட்டு wobble seam ஆக வரும் மட்டைக்கு உள்ளே வரும் என எதிர்பார்க பந்து சட்டென மட்டைக்கு வெளியே திரும்பும்.
  6. சென்னை musical chair மாதிரி வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றிக்கொண்டுள்ளது, அதற்கு இரசிக்ர்களும் ஒரு காரணம். அனைத்து அணிகளின் திட்டமிடல் அதன் ஐ பி எல் ஏலத்தில் ஆரம்பித்து அதனடிபடையில் திட்டமிடலுடன் போட்டியில் இறங்கியுள்ளன, ஒரு அணி வெல்லும் போது அவர்களது திட்டம் கேள்விக்குள்ளாக்கப்படாது, ஆனால் தோற்கும் போதே இரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும். ஐ பி எல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த சென்னை அணியினரே அரையிறுதிக்கு போவதற்குரிய வாய்ப்பு அற்ற அணியாக உள்ளனர் என அணியினை அடிப்படையாக வைத்து எனது அபிப்பிராயத்தினை குறிப்பிட்டிருந்தேன். போட்டியின் பெறுபேறுகளினடிப்படையில் (result) திட்டங்களை மாற்றுவது பேரழிவாகும், சரியான திட்டமில்லாமல் சில வேளை அதிர்ஸ்ட வெற்றி கிடைக்கலாம் அதே போல் நல்ல திட்டமிருந்து கூட தோல்வி ஏற்படலாம் ஆனால் போட்டியினை நெறிப்படுத்தலில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது(Follow the process). மேலே சும்மா நகைசுவையாக குறிப்பிட்டது போல குறிப்பிட்டிருந்தாலும் சென்னை தற்போது அடி மட்டத்தில் உள்ளது, இதற்கு கீழ் இறங்க முடியாது சில வேளைகளில் இந்த புள்ளியில் இருந்து ஒரு யு டேர்ன் ஏற்படலாம், மேலும் 8 போட்டிகள் உள்ளன இன்னமும் வாய்ப்பு உள்ளது, ஆனால் திட்டங்களை நம்பி அதனை செயல்படுத்தவேண்டும். இறுதியாக இது ஒரு விளையாட்டு என்பதனை இரசிகர்கள் உணர வேண்டும், வெற்றியோ தோல்வியோ நல்ல போட்டியினை அணிகள் வழங்க வேண்டும். அணியின் வெற்றி தோல்வியினை தனிப்பட எடுப்பதனால் எந்த இலாபமும் இல்லை. சில வேளைகளில் இந்த திரியில் கூட இது ஒரு விளையாட்டு திரியாக இல்லாமல் இருப்பது போல உணருகிறேன். விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையிலும் உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
  7. ஆறு போட்டிகளில் விளையாடிய சென்னை ஆறுமுகத்திற்கு இனிமேல் ஏறுமுகம்தான்.
  8. ருத்துராஜ் தொடக்க நிலை ஆட்டக்காரர் அவரது இடத்திற்கு ஒரு தொடக்க நிலை ஆட்டக்காரரான திருப்பாதிரியினைத்தான் மாற்றீடு செய்யமுடியும், அந்த இடத்தில் இடைநிலை ஆட்டக்காரரையோ அல்லது சகலதுறை ஆட்டக்காரரை இறக்க முடியாது. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்,அணிக்கூட்டணியினை (Team compination)விரும்பியவாறு மாற்றமுடியாது. ஒவ்வொரு நில்லைக்கும் ஒரு மாற்றுவீரர் எனும் நிலையில், ஏதாவது காயம் ஏற்பட்டாலோ வீரர் சுயவீருப்பில் விலகினாலோ பயன்படுத்துவதற்காக உள்ள மாற்று வீரர்களை அந்த இடத்திற்கு மாற்ற முடியும். முதல்தர திட்டமிட்ட அணியில் பெரிதாக மாற்றம் செய்யமாட்டார்கள், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதை வாங்கத்தான் வேண்டும்.🤣
  9. 88% வரி அல்ல, நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி - இறக்குமதி) ஆனது அமெரிக்காவின் இலங்கை மொத்த இறக்குமதியின் விகிதம் ஆகும், மேலே கணிப்பு உள்ளது அந்த விகிதத்தில் அரைப்பங்கு வரியாக இல்ங்கை பொருள்களுக்கு விதிக்கப்படுகிறது. 44%. இது அமெரிக்காவின் இறக்குமதி வரி.
  10. Pitch and conditions The Chepauk surface continues to be a mystery, with CSK coach Stephen Fleming saying that they haven't been able to come to grips with it in recent years. The weather is expected to be clear. இறுதியாக நடைபெற்ற போட்டியில் சென்னை சிகப்பு ஆடுகளத்தினை பயன்படுத்தியிருந்ததாக நினைவுள்ளது அதில் 180 -190 ஓட்டங்களுக்குரியதாக காணப்பட்டது. அதே ஆடுகளத்தினை பயன்படுத்தினால் ஆடுகளம் 175 -185 ஓட்டத்திற்குரியதாக இருக்கும் அல்லது வேறு சிகப்பு மண் ஆடுகளத்தினை பயன் படுத்திகிறார்களோ தெரியவில்லை. ஆனால் சிகப்பு ஆடுகளம் சென்னை காலநிலையின் படி மைதான ஈரலிப்பு காணப்படாது என கருதுகிறேன், மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் இரண்டாவதாக ஓட்டத்தினை துரத்துவது கடினமாகும் (ஆடுகளம் விரவாக உடையும் more gripp and slow), அதனால் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடுவார்கள். இரண்டு அணிகளிலும் சுழல்பந்து வீச்சாளர்களின் தாக்கம் இருக்கும், வேகப்பந்து வீச்சிற்கு புதிய பந்து சாதகமாகவும் சிகப்பு ஆடுகளத்திற்குரிய பந்து உயர்ந்து வரும் நிலை காணப்படலாம், சென்னை எந்த ஆடுகளத்தினை பயன்படுத்த போகிறது என தெரியவில்லை.
  11. https://www.youtube.com/shorts/_1rFA7fCOTE அமெரிக்க இரண்டு வகை வரி விதிப்பு பற்றிய தனது கருததினை முன்வைக்கும் சிங்கப்பூர் பிரதமர். இலங்கையின் பொருள்களின் மீதான வரி 44% ஆக அதிகரிக்கும் 100 பொருளின் விலை 144 இருக்கும் ஒப்பீட்டளவில் அதிக விலை என்பதால் அந்த பொருளிற்கு மாற்றீடான பொருள்கள் இந்தியாவிலிருந்து அதே 100 ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் விலை இந்தியாவின் வரியான் 27% அதிகரிப்புடன் (27% கருதுகிறேன்) 127 ஆக இருக்கும். ஒரே பொருள் 144 மற்றும் 127 இல் இருக்கும் போது வாடிக்கையாளர் விலை குறைந்த இந்திய பொருளை வாங்குவார்கள். இலங்கை பொருள் விற்பனையாகாது. அமெரிக்க அரசு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் மேல் வரி விதிப்பதால் உள்ளூர் பொருள் ஒப்பீட்டளவில் விலை மலிவாக இருப்பதால் மக்கள் உள்ளூர் உற்பத்திகளை நாடுவதன் மூலம் அமெரிக்க உற்பத்திதுறையினை முன்னேற்ற ட்ரம்ப் எடுக்கும் முயற்சிதான் மற்ற நாடுகளின் பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிப்பு அதன் வரி வருமானம் அமெரிக்க அரசிற்கு செல்லும் மற்ற நாடுகளுக்கல்ல.
  12. இயல்பியல் விதியின்படி எல்லாம் ஒரு சமனிலைப்படுத்தும் இயல்பாகவே, எந்த வினைக்கும் சமனும் எதிரான வினை இருக்காவிட்டால் நிலமை மோசமாகிவிடும்.
  13. கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.
  14. எனக்கு தெரியும் உங்களுக்கு இவற்றை பார்க்க இரத்த கொதிப்பு ஏற்படும் என🤣, ஆனால் இப்படியான விளம்பர உலகில் வாழ்கிறோம், விளம்பரத்திற்காக அந்த மக்களுக்கு உதவி என செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் வக்கிரங்களை அம்மக்களை மோசமாக நடத்தவதன் மூலம் வெளிப்படுத்தும் போலிகள் ஆக பெரும்பாலான புலம்பெயர்ஸ் இருக்கிறார்கள் ஆனால் அதனை அறிய முடியாதவர்களாக இருப்பது அதனை விட கொடுமை.🤣
  15. இது பழைய செய்தி, ஆனால் அந்த ஊகங்கள் வந்த பின்னர் ருத்துராஜ் விளையாடியிருந்தார், அல்லது இது பரீட்சைக்கு முதலே பேப்பரை லீக்காக்கி விட்டார்களோ?🤣 2 மாதகால போட்டியில் ஆடுகளம் மெதுவாகிவிடும் அது இயல்பாக சென்னை அணிக்கு சாதகம், மெதுவான ஆடுகளத்திற்கு ஏற்ப அணியினை சென்னை கொண்டுள்ளதால் சென்னை அணியினை புறந்தள்ள முடியாது அவர்கள் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.
  16. புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.
  17. https://www.bbc.com/news/articles/c93gq72n7y1o அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான வரி கணிப்பு முறை.
  18. வந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது, ஓய்வின் பின்னர் அடுத்த போட்டியில் கலந்து கொள்ளவார் என கருதுகிறேன்.
  19. இலங்கை வரி இல்லை, இது அமெரிக்ககாவின் இலங்கை மீதான வரி, ஏற்றுமதி இறக்குமதி நிலுவையினடிப்படையில். அமெரிக்க இரண்டு வகையான வரிக்கொள்கையினை தற்போதய ட்ரம் அரசு பின்பற்றுகிறது. அனைத்து இறக்குமதிகளின் மீதும் 10% வரி மற்றது அதிகமாக அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்வோருக்கு பிரத்தியேகமான வரி. இலங்கையின் அமெரிக்க இறக்குமதி $368 மில்லியன். இலங்கையின் அமெரிக்க ஏற்றுமதி $3000 மில்லியன். அமெரிகாவிற்கு இலங்கையினுடனான வர்த்தகத்தில் ஏற்படும் நட்டம் $2632 மில்லியன். வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை மீது அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.
  20. எனது புரிதல்களில் அமெரிக்கா இரண்டு வகையான வரி விதிப்புகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10% வரிவிதிப்பது முதலாவது வகை(Non trade deficit). இரண்டாவது வகை அமெரிக்க ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதனை விட இறக்குமதி அதிகமாக உள்ள நாடுகளின் மேல் விதிக்கப்படும் வரி இரண்டாவது வகைப்படும் (Trade deficit). அவுஸ்ரேலியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதனை விட பல மடங்கு இறக்குமதி செய்கின்றது, இருப்பினும் முதலாவது அடிப்படை வரி மூலம் அவுஸ்ரேலிய பொருள்களுக்கு 10% வரியினை அவுஸ்ரேலியா செலுத்துகிறது. இலஙையின் நிலவரம் வேறானது, இலங்கை அமெரிக்காவிற்கு $3000 மில்லியன் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இறக்குமதி $368 மில்லியன் (கடந்த ஆண்டு) இந்த வர்த்தகத்தின் மூலம் அமெரிக்காவிற்கு $2632 மில்லியன் வர்த்தக நிலுவை ஏற்படுகிறது. வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை பெறுகிறது. இதில் இலங்கையினால் எதுவும் செய்ய முடியாது, இலங்கையின் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவிலான தாக்கம் ஏற்படும் ஆனால் அமெரிக்காவின் புதிய வரி கொள்கை அவர்கள் நாட்டில் நலிந்து போகும் உற்பத்தி துறையினை வளப்படுத்தும் முயற்சி என கூறுகின்ற நிலையில் இலங்கையின் பெருமளவான ஏற்றுமதி விவசாயதுறை ஏற்றுமதியாக இருக்கும் என கருதுகிறேன் அதனால் இந்த வரிகளால் உற்பத்தி துறைக்கு எந்த நலனும் இல்லை மறுவளமாக சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பே ஏற்படும், ஏனெனில் இந்த வகையான விவசாய பொருள்கள் பெருமளவான அத்தியாவசிய ஆனால் மாற்றீடற்ற பொருள்களாக இருக்கும். அத்தியாவசிய பொருள்களின் விலை மாற்றம் அதன் கேள்வியில் தாக்கம் செலுத்துவதில்லை (விலை நெகிழ்ச்சி தன்மை 1 குறைவாக இருக்கும்).
  21. குஜராத் அணி தொடராக சிறப்பாக செயல்படுவர், ராஜஸ்தான் அணி எப்படி இவர்களால் இப்படி சொதப்பமுடிகிறது என்பதனை கணிக்கவே முடியாத அணி, ராஜஸ்தான் அணி வெல்ல சுவியும், நந்தனும் நேரடியாக களத்தில் இறங்கினாலேயே வாய்ப்புள்ளது🤣 (நகைசுவகைக்காக கூறியது கோவிக்க வேண்டாம்).
  22. Pitch and conditions Ahmedabad offers a choice of surfaces - black soil, which makes the pitch slower and lower, and red soil, which offers pace and bounce. All that considered though, batters have scored runs at a rate of 9.76 per over, which puts this ground behind only Hyderabad (10.16) in terms of high-scoring venues this IPL. கிரிக் இன்போ தளத்தின் ஆடுகள கணிப்பின் படி இது ஒரு கறுப்பு மண் கொண்ட ஆடுகளம், அதனால் பவர் பிளேயில் அடித்தாடுவார்கள் என கருதப்படுகிறது, பந்து மென்மையான பந்து இலகுவாக மட்டைக்கு வராது. அதிக ஒட்டங்களை எடுக்க கூடிய ஆடுகளம் என கிரிகிபோவில் குறிப்பிடப்பட்டுள்ளது, முதலாவதாக துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கும், மைதான ஈரலிப்பு இருந்தால் இரண்டாவது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்வார்கள், மெதுவான ஆடுகளம் மேலும் மெதுவாகும் நேரம் செல்ல செல்ல. சுழல் ஆதிக்கம் காணப்படும். இன்றைய போட்டியில் ரபாடா இசாந்திற்கு பதிலாக விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  23. உலக அளவில் ஒரு பந்து வீச்சாளரோ அல்லது துடுப்பாட்டக்காரரோ அல்லது அணிதலைமையோ சோபை இழந்து காணப்படும் போது இலங்கைஉடன் ஒரு போட்டித்தொடருக்கு போனால் அவர்களது ஆட்டம் வழமைக்கு திரும்பும், ஐ பி எல்லி சென்னை அணி தற்போது இலங்கை அணியின் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது போல தெரிகிறது.🤣 ரியான் பராக் அணித்தலையில் குழறுபடிகளுடனிருந்தவர் சென்னையுடனான போட்டியின் பின் சிறப்பாக செயல்படுகிறார், ஆர்ச்சர், ரான, தீக்சனா, கசரங்க , ரானா என ஒரே அணியிலே பலர் தமது சோவை இழந்து கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியுடன் ஒரே ஒரு போட்டியில் விளையாடி அனைவரையும் வளமைக்கு கொண்டு வந்த சென்னை அணியினர். 🤣 இன்றைய போட்டியில் ராயஸ்தான் அணி வென்றால் அந்த புகழ் சென்னைக்கே.
  24. சென்னை அணியின் திட்டமிடல் குறைபாடாக சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் அஸ்வினை பவர் பிளேயில் பயன்படுத்துவது, புதிய பந்து ஆடுகள்த்தில் அதிகமாக திரும்பாத வழுக்கி செல்லும் நிலை காணப்படும். பொதுவாக சுழல்பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பந்து வீசுவதனை விரும்புவதில்லை என கருதுகிறேன், பவர் பிளேயில் இலகுவாக எதிர்பார்க்க கூடியவாறாக வழமையாக பந்து வீசும் முறையினை பயன்படுத்தி களத்தடுப்பில் இருக்கும் கட்டுப்பாட்டினை பயன்படுத்தி அதிகமாக ஓட்டமெடுக்க அஸ்வினின் பந்து வீச்சு இலகுவாக இருக்கும். தீக்சனா, நரேன், வருண் போன்றவர்களின் மாயாலால பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பவர் பிளேயில் துடுப்பாட்டக்காரர்கள் எதிர்பார்க்க கூடியவாறு இல்லாமல் இருக்கும் தன்மை மற்றும் கிடையாக வீசுவதால் (flat) அடித்தாட முடியாதநிலையும் காணப்படும் அதனால் விக்கெட் எடுப்பதுடன் ஓட்டங்களையும் கட்டுப்படுத்தலாம். ஜடேயாவின் பந்துவிசும் முறை பவர் பிளேயில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காமல் வீசலாம் ஆனால் விக்கெட் எடுக்க முடியாது ஆனால் அவரது பந்து வீச்சில் எந்த எதிர்பாரா விடயமும் அஸ்வினின் பந்து வீச்சு போல இருக்காது ஆனால் அஸ்வினை தொடர்ந்து பயன்படுத்துவது அவரது பந்து வீச்சினால் ஓட்டங்கள் அதிகம் எடுக்கும் போது மட்டையாளர்கள் வலிந்து தவறு செய்யும் நிலை உருவாகி விக்கெட் எடுக்கலாம் எனும் நோக்கமாக இருக்கலாம். இரண்டு பந்து வீச்சாளரிகளின் பந்து வீச்சும் வேறுபட்டது ஜடேயாவின் பந்து வீச்சு கிடையாக தாழ்வாக புதிய பந்தில் வேகமாக வரும் ஆனால் அஸ்வின் பந்து வீச்சு மெதுவாக உயர்ந்து வரும் அது துடுப்பாட்டக்காரர்களுக்கு பந்தினை தூக்கி அடிக்க இலகுவாக இருக்கும். பத்திரானாவை பவர்பிளேயில் பாவிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பத்திரனாவின் பந்து வீசும் முறையால் பந்து ஆரம்ப ஓவர்களில் காணப்படும் சுவிங் ஆகும் (no seam up) தன்மை குறைவாக இருப்பதால் அவரது பந்து வீச்சினை பவர் பிளேயிற்கு வெளியே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவரது பந்து வீச்சின் அளவுகளை கணிப்பது சிரமமாக இருப்பதால் பவர் பிளேயில் கூட அவரை சிறப்பாக பயன்படுத்தலாம், ஆனால் அவரது பந்து வீச்சு ஒரு போது கட்டுப்பாடாக இருப்பதில்லை எனும் குறைபாடு உள்ளது. ஆனால் தற்போது சென்னை அணி கொடைவள்ளல்களாக பவர்பிளேயில் இருப்பதால் அதுவும் ஒரு தோல்விக்கான காரணியாக உள்ள நிலையில் பத்திரானாவை பவர் பிளேயில் பயன்படுத்துவது ஒரு நல்ல மாற்று திட்டமாக இருக்கலாம். சென்னை அணி தனது சுழலை நம்பி களமிறங்கினாலும் சுழலை முழுமையாக பயன்படுத்துவதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் போது எழுந்தமானமாக பயன்படுத்தாமல் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப எதிரணி வீரர்களுக்கு ஏற்ப பயன்படுத்தினால் அவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். அணித்தலமையிடம் எப்போதும் ஒரு திட்டமிருக்கும் ஆனால் சென்னை அணியில் அவ்வாறான திட்டத்துடன் போட்டிக்கு செல்வதில்லை என முன்னால் சென்னை அணி வீரர் ராயுடு ஒரு பேட்டியில் தெரிவித்தார், அப்போது தோனி அணித்தலைவராக செயற்பட்டார், அவர் கள சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுவதால் வலிந்து ஒரு ஒரு திட்டமிடலுடன் சென்று களநிலை மாறுபாடு அணியினை குழப்பலாம் என நினைத்து அதனை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போதய சென்னை அணியிடம் எந்த தெரிவுமில்லாமல் ஒரு குழப்பகரமான நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு புதிய ஆட்டக்காரர்கள் எனும் நிலை காணப்படுகிறது, சென்னை அணியில் இப்படியான குழப்ப நிலை வீரர்களை பாதிக்க ஆரம்பித்து விட்டது, மிக சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் கூட சாதாரண சுழல் பந்து வீச்சாளர்கள் கொண்ட எதிரணியினரை விட மோசமாக செயற்படுகிறார்கள், இதே நிலைதான் துடுப்பாட்டத்திலும் காணப்படுகிறது. உண்மையில் சென்னை அணி ஒன்றும் மோசமான வீரர்களை கொண்ட அணியல்ல. அஸ்வினும் சிறந்த பந்துவிச்சாளர்தான், ஆனால் நீங்கள் கூறிய பந்து வீச்சாளரகளை கையாழும் முறையாலேயே அவரரது பந்து வீச்சு சோபை இழந்து காணப்படுகிறது, அஸ்வினுக்கு போட்டி தொடர்பான புரிதல் அதிகம், அவர் அணித்தலைமைக்கு ஒரு தெரிவாக இருக்கலாம், ஆனால் இளம் வீரரான ருத்துராஜை நீண்ட கால நோக்கில் தயார்படுத்துகிறார்கள் என கருதுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.