Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இலங்கையின் பங்களாதேசத்திற்கான துடுப்பாட்ட சுற்றுப்பயணம் யூரியூப்பில் நேரலை செய்யப்பட்டிருந்த்து, அதில் போட்டியினை விட வங்கதேச இரசிகர்கள் இலங்கை இரசிகர்களுக்கிடையே நிகழ்ந்த வாக்குவாதம் மிகவும் சுவாரசிய்மாக இருந்தது😁.
  2. இந்த நிறுவனத்தின் சூரிய மின் தகடுகள் இங்கும் பொருத்துகிறார்கள், நல்ல தரமான சூரிய மின் தகடு, அவுஸ்ரேலியாவினை விட இலங்கையில் உள்ள சூரிய மின் தகடு பொருத்துனர்கள் புதிய சூரிய மின் தகடுகளை பொருத்துகிறார்கள், ஆனாலும் விலை கிட்டதட்ட ஒரே அளவில் உள்ளது. (தற்போதும் அதிக பட்சமாக 400W வினத்திறன் கொண்ட மின் தகடுகளே இங்குள்ள நிறுவனங்கள் பொருத்துகிறார்கள் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்), இங்கு பெரும்பாலும் இந்தியர்கள் இந்த வகை நிறுவனங்களை பெரும்பாலும் நடத்துகிறார்கள்.
  3. நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்திற்கு, ஏராளன், இன்னும் உங்கள் காணொளியினை பார்க்கவில்லை ஆனாலும் சூரிய மின் தகடு பொருத்துதல் தொடர்பான சில சொந்த அனுபவங்களை பகிற்கிறேன். தற்போது உள்ள ஒரு தகடு கிட்டதட்ட 390W வலுவை கொண்டது, எனது வீட்டில் பொருத்தும் காலத்தில் 190W ஆக இருந்ததாக நினைவுள்ளது. 11 தகடுகள் 2.1KW மின் வலுவினை கொண்டதாக பொருத்தப்பட்டது ஆரம்பத்தில் நாளொன்றிற்கு 12KW சக்தியினை பிறப்பித்தது, இலங்கை போன்று பூமத்திய ரேகையில் அவுஸ்ரேலியா இல்லை, அதனால் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வலுப்பிறப்பிக்கும் சக்தி வேறுபடும். நாளொன்றிற்கு உங்கள் சூரிய மின் த்கடுகள் அதனை விட சராசரியாக 4 மடங்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என கூறுகிறார்கள் ஆனால் நடைமுறையில் அது சற்று கூடுதலாக இருக்கும். ஆண்டொன்றிற்கு 0.5% -0.8% அதன் மின் உற்பத்திதிறன் குறைவடைவதாக கூறுகிறார்கள். inverter 10 ஆண்டு காப்புறுதியும் சூரிய மின் தகடு 15 ஆண்டு காப்புறுதியும் வழங்குகிறார்கள், எனது inverter காலாவதியாகிவிட்டது ஆனாலும் தொடர்ந்து இயங்கிறது, உறவினர் ஒருவரது inverter சில வருடங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறினார். இரண்டாம் தர மிந்தகடுகள் 15 ஆண்டுகளின் பின்னர் 80% இயங்குதிறனுடன் காணப்படும் அது அடுத்த 10 வருடங்கள் வரை இயங்கும் ஆனால் உத்தரவாதம் இல்லை. அதனால் இரண்டாந்தர மின் தகடு இலாபமா என்பதனை பார்த்து வாங்கலாம் ஆனால் அது உத்தரவாதம் இல்லை. எனது சூரிய மின் தகட்டினை இன்வேட்டர் செயலிழக்கும் வரை (10 வருட உத்தரவாதம், தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது) அதனது செயற்பாட்டு காலமான 25 வருடங்கள் வரை உபயோகிக்க உத்தேசித்துள்ளேன், காரணம் சுற்று சூழல் ஆர்வத்தினால் அல்ல அதனை மாற்றீடு செய்வதால் இலாபம் ஏற்படாமல் மேலதிக பணவிரயம், ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை மாற்றீடு செய்கிறார்கள் அதன் இயங்குநிலையிலேயே. அவஸ்ரேலியாவிலிருந்து வரும் இரண்டாம் தர சூரிய மின் தகடுகளின் அதிக பட்ச உபயோகிக்கப்பட்ட காலம் 17 வருடங்கள், ஆனால் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் அந்த காலத்தினை விட குறைவாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது. இங்கு விக்ரோரியா மானிலத்தில் மட்டும் சூரிய மின் தகடு மீழ் சுத்திகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் தனியார் பணம் பெற்று பழைய மின் தகடுகளை எடுத்து செல்வார்கள், இலங்கையில் அவ்வாறான பிரச்சினை வராது என கருதுகிறேன். இங்கு ஒரு அலகு மின்சாரம் 0.42 சதத்திற்கு வழங்குகிறார்கள், நாளொன்ற்றிற்கு சேவைக்கட்டணமாக 0.98 சதம் பெறிகிறார்கள் உங்களது மேலதிக சூரிய மின்சாரம், மின்சார சபை மின்சாரத்திற்கு செல்லும் அதற்கு மின் அலகொன்றிற்கு 0.05 சதம் வழங்குகிறார்கள். மின்சாரம் தடைப்பட்டால் சூரிய மின் தகட்டின் மூலம் வரும் மின்சாரம் உடனடியாக நின்றுவிடும், காரணம் அது திருத்த வேலைகளில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சூரிய மின் தகட்டுடன் பற்றரி பொருத்தினால் மின் தடைப்பட்டாலும் மின்சார வழங்கலை தொடர்ந்து பெறலாம் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும். புதிய சூரிய மின் தகடும் இன்வேட்டரும் பொருத்தும் செலவை இங்குள்ள மின் கட்டணத்தினடிப்படயில் அந்த செலவினை இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு வழங்கிவிடும் இந்த சூரிய மின் தகடுகள், பற்றரி இணைப்பு (10 வருட உத்தரவாதம் 80% செயற்திறன்) இலாபம் இல்லை, இந்த தரவு அவுஸ்ரேலிய மின்சார கட்டணத்தினடிப்படையில் (சிலர் மின்சார கார் வைத்திருப்பவர்கள் இலாபகரமானது என கூறுகிறார்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாது). இலங்கை மின் கட்டணத்திற்கு இந்த மின் தகடு பொருத்துவது இலாபமா என்பதனை நீங்கள் கணிக்க வேண்டும். உங்கள் வீட்டில் நீங்கள் மின் திருத்த வேலையில் ஈடுபடும்போது பிரதான ஆழியின் இணைப்பை துண்டிப்பதுடன் சூரிய மின் தகட்டின் பிரதான ஆழியின் (சுவிட்ச்) இணைப்பையும் துண்டிக்கவேண்டும்.
  4. நான் சிறுவனாக இருந்தபோது கற்கண்டு எனும் (தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சஞ்சிகை) சஞ்சிகையில் இத்தாலிய ஓவியர் ஒருவர் (பெயர் நினைவில்லை) பல சிறந்த ஓவியங்களை போல் போலி ஓவியம் தயாரிப்பவர் எனவும் அந்த ஓவியங்கள் உண்மையான ஓவியங்களை விடவும் சிறப்பாக இருக்கும் என வாசித்த நினைவுள்ளது. கலைப்படைப்புக்களை உருவாக்குபவர்கள் வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் எனவும் அவர்கள் தூரதரிசன பார்வை (Big picture) கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என வாசித்த நினைவுள்ளது. தி இ மித் எனும் புத்தகத்தில் வியாபாரம் தொடங்குபவர்கள் ஏன் தோற்றுபோகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவம் ஒன்றை விவரிப்பார் அதில் ஒரு சிறந்த பேக்கர் ஒரு பேக்கரியினை ஆரம்பித்து மிகவும் சிரமப்படுவார், அதற்கு காரணம் அவர் ஒரு டெக்னீசியன் என குறிப்பிடுவார். சிறந்த வர்த்தகர்கள் தொலைநோகுடையவர்கள் என கூறுகிறார். சாதாரண கலைஞர்களுக்குரிய வலது மூளை ஆதிக்கத்துடன் இடது மூளை ஆதிக்க டெக்னீசியனாக அந்த இத்தாலிய ஓவியர் இருப்பார் என நினைக்கிறேன், அதனாலேயே மிக நேர்த்தியாக ஒன்றை பிரதி எடுக்க அவரால் முடிந்திருக்கிறது,
  5. சுருக்கமாக எழுதுவதால் சில புரிந்துணர்வு சிக்கல் ஏற்படுகிறது என்பதனை ஜஸ்ரின் கருத்தின் மூலம் உணர்கிறேன், சூரிய மின் தகடு மீழ்சுத்திகரிப்பில் கண்ணாடியும் அலுமினியமும் முற்றாக சுத்திகரிக்க முடியும் அதில் அலுமினியம் பொருளாதார ரீதியில் சாதகமானது அதனடிப்படையில் கருத்து வைக்கப்பட்டது. லீட், கட்மியம் போன்ற சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் மூலகங்களும் அதில் அடங்கியுள்ளது. சூரிய மின் தகடுகளுக்கு 15 வருட உத்தரவாதம் வழங்குகிறார்கள் அதன் பின்னர் அதன் செயற்பாடு குறைவடையத்தொடங்கும்.
  6. அந்த விடயத்தில் எனக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது,
  7. https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756 இந்த திரியினை திசை திருப்புவது என் நோக்கமல்ல, இந்த இணைப்பினை இணையத்தில் கண்டேன் ப்ல சுவாரசியமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.
  8. உண்மையான ஒருவரின் அடையாளத்தினை திருடி (உண்மையானவர் இங்கிலாந்தில் வாழ்கிறார்) அவுஸ்ரேலியாவில் அவர் வேலை பெற்றிருக்கிறார், தற்போதய தொழினுட்ப வளர்ச்சியில் இது எவ்வாறு சாத்தியமானது என தெரியவில்லை (இது நடந்தது கிட்டதட்ட 10 வருடங்கள் இருக்கும்) நாடுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் நிகழும் காலத்தில் எவ்வாறு இதனை சாத்தியப்படுத்தினார் என்பது தெரியவில்லை. அவரிடம் துறைசார் திறைமை இருந்துள்ளது என்பதனை அவருடன் பணிபுரிந்தவர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள், அதனாலேயே அவரலால் சமாளித்திருக்க முடிந்திருக்கிறது, முன்னா பாய் எம்பிபிஸ் அவரை தூண்டியிருக்கக்கூடும்😁.
  9. இந்த கதை நன்றாக உள்ளது, முன்னர் நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியாவினை சேர்ந்த வைத்தியர் ஒருவர் வேலை செய்திருந்தார், அவர் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஆலோசகராக எமது நிறுவனத்தில் பணிபுரிந்ததாக நினைவுள்ளது. அதற்கு முன்னர் அவர் சிட்னியில் உள்ள மான்லி (அவ்வாறாக நினைவுள்ளது) வைத்தியசாலையில் இரவுநேரக்கடமைக்கு பொறுபாக இருந்த அவரின் கீழ் பல வைத்தியர்களும் தாதியர்களும் பணிபுரிந்திருந்தனர், எமது நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது அவர்கள் கண்டுபிடித்தார்கள், அவர் ஒரு போலி வைத்தியர் என.
  10. எனது உறவினர் இந்தியாவில் உள்ளார், இலங்கையிலும் இவ்வாறு குப்பைகளை மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பதாலால் குறிப்பிட்டேன்.
  11. அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.
  12. நன்றி கோசான்! நேரமின்மை போன்ற பல சிரமங்களின் மத்தியிலும் அனைவரின் கருத்துகளுக்கும் பண்பான முறையில் உங்களது கருத்துகளுக்கு. பெரும்பாலானோர் இந்த பயணக்கட்டுரைகளை நேரமின்மையால் வாசிப்பதில்லை அவை மிக சிறப்பாக இருந்தாலும், உங்களது கட்டுரை மிக சாதாரணமானது (சுவாரசியத்திற்காக திருப்பங்கள், மர்மங்கள், திகில்கள் என சுவாரசியத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல்) ஆனால் பலரையும் கவர்வதற்கான காரணம் (அல்லது எனக்கு பிடித்ததிற்கான காரணம்) மக்களின் மேல் கொண்ட அக்கறையால் அந்த சமூகத்தின் பகுதியாக உள்ள அனைவரும் ஒவ்வொருவரும் உங்கள் பயணத்துடன் கூட பயணிக்கிறார்கள். எனது கேள்விக்கான காரணம் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கலாம், இலஙகையில் உள்ள ஒருவருடன் கதைக்கும் போது இங்கு யாழ்கள உறவு ஒருவரது கருத்தினடிப்படையில் இலங்கையில் அனைத்து வசதிகளும் பிரச்சினை இல்லாமல் கிடைக்கிறதாம் எனக்கேட்டேன், அதற்கு அவர் கோபமாக பதிலளித்தார். அவர் சுற்றுலாவுக்காக வருபவர்கள் என நினைத்து பதிலளித்திருந்தார் அவரிடம் நிரந்தரமாக அங்கு தங்குபவர்கள் எனும் கருத்தினை கூட கூற முடியாதளவில் கோபமாக இருந்தார், இத்த்னைக்கும் அவர் என்னிடமிருந்து எந்த உதவியினையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவிற்கு சென்றுவரும் ஒருவரை மனதில் வைத்து (அவரது சகோதரர்) கூறினாரா என தெரியவில்லை.
  13. நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
  14. உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
  15. ட்ரம், பைடன் இவர்களை விட சிறந்த தலைவர்கள் அமெரிக்காவில் இல்லையா? வினோதம் நிறைந்த அமெரிக்கா!
  16. தற்போது வரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் கூகிள் போன்ற இணைய தேடல் மூலம் தரவுகளை தாமாக சேகரிப்பதில்லை. இந்த செயற்கை நுண்ணறிவிற்கான தரவுகள் ஊட்டப்படுகிறது. பெரும்பாலும் இந்த தரவூட்டலில் பிழைகள் இல்லாவிட்டாலும் அது தெரிவு செய்யும் மாதிரிகள் மற்றும் அல்கோரிதங்கள் தவறாக இருப்பதாலும் இந்த பிரச்சினைகள் உருவாகிறது. தரவுகளுக்கான மாதிரிகளை curve fitting அடிப்படையில் தீர்மானிக்கின்றன இதில் பெரும்பாலும் over & under fitting, தவறுகள் ஏற்பட காரணமாகின்றன. மற்றது தரவுகளை பிரிப்பதிலும்(splitting data) தவறு ஏற்படலாம், ஆனாலும் இறுதியாக Training data, validate and test இல் இதன் குறைபாடுகலை கண்டுபிடிக்கமுடியும், இது நாளாந்த நடைமுறையில் பாவிக்கும் back test, optimization and forward test போன்ற நடைமுறையே, இந்த செயற்பாடு முழுமையாக பின்பற்ற படவில்லை என்பது தெளிவாகிறது, கூகிள் போன்ற மிக பெரிய கட்டுமானத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தின் செயற்கைநுண்ணறிவு இவ்வாறான குறைபாடுகளுடன் இருப்பது இந்த திட்டம் அவ்வளவு இலகு அல்ல என்பதை உணரகூடியதாக உள்ளது.
  17. நான் பணிபுரியும் நிறுவனத்தில் முன்பு ஒருவர் பணிபுரிந்திருந்தார், 2 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலோனோருக்கு பணிநிறுத்தத்தின் போது அவர் தனது வேலையினை இழந்துவிட்டார், அவரது பெரை சுருக்கி எம் டி என அழைப்பார்கள். அவர் தொடபில் ஒரு நகைசுவை பணியிடத்தில் நிலவியது, நிறுவனத்தின் எம் டி அவர் பணிபுரிந்த பகுதிக்கு தொலைபேசி இணைப்பெடுத்து யார் கதைப்பது என வினவ, இவர் எம் டி என கூறினாராம், அதற்கு நிறுவனத்தின் எம் டி நான் தான் எம் டி என கூற இவர் எதிர் தரப்பில் உள்ளவர் தன்னை கலாய்ப்பதாக நினைத்து இல்லை நான் தான் எம் டி என கூறினாராம் என யாரோ விசமத்தனமாக கதையினை கிளப்பிவிட்டுள்ளார்கள் என கருதுகிறேன். உங்கள் பாணியிலான கருத்திற்கு நான் உட்பட பல இரசிகர்கள் உள்ளார்கள், உங்கள் பாணியினை மாற்றாதீர்கள்.
  18. இந்த பகுதி தமிழர் உரிமை போராட்டத்தில் மிக முக்கிய திசை திருப்ப புள்ளியாக அமைந்துவிட்டது, ஒரு மோசமான நிகழ்வினை ஜே ஆர் தனக்கு சாதகமாக்கி கொண்டார் என்பதனை தெளிவாக காட்டுகிறது. ஜே ஆர் தொடர்பாக இந்த தமிழர் போராட்டத்திற்கு காரணமானவர்(UNP) என சிங்கள தரப்பால் குற்றம் சாட்டப்படுகின்றவேளை அவர் தனது சாதுரியத்தினால் தமிழர் போராட்டத்தினை நசுக்குவதற்கான புறக்காரணிகளை உருவாக்கிவிட்டிருந்தார். இவ்வாறான ஒரு தமிழரசியல்வாதி தமிழர் தரப்பில் இதுவரை இல்லை.
  19. முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா? இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁
  20. இந்த சமகாலத்தில் ( பனிப்போர் காலம்) இந்த பிராந்தியம் தவிர தென் கிழக்காசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தேறியது, ஆனால் அங்கு வேறு வேறு மதங்கள் இருந்தன அதற்காக குறித்த மதங்களை யாரும் குற்றம் சாட்டவில்லை, அதே போல் எந்த மதத்திலும் போதை பொருள் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது, இந்த வட்டத்திற்குள் நின்று எந்த மதத்தினையும் குறை கூறுவது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போலாகும். ஒரு பெரும்பான்மையினத்தவர் சிவலிங்கத்தினை பற்றி கேவலமாக கூறினார் (அதனை சைவர்கள் உலகின் படைப்பாக கூறுவர் என நினைக்கிறேன்), அவரிடம் அதற்கான அறியும் ஆர்வம் இருக்கவில்லை, அவரது நோக்கம் கேவலப்படுத்துவதுதான், அவரவர் தாமாக ஒரு நிலைப்பாடாட்டினை எடுத்து அதற்கு கூறும் காரணங்களை அவர்கள் தம்முடனேயே பொருத்தி பார்க்க தவறுவதாலேயே இவ்வாறான கருத்துகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கும் அவர்கள் குற்றம் சாட்டபடுவர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  21. அமெரிக்க உளவு நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக (ஆட்சி கவிழ்ப்பு, அரச எதிர்ப்பு போராட்டங்கள்) ஆசிய நாடுகளில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டது, அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானினூடாக தற்போதும் பெரியளவில் போதைபொருள் இந்தியா இலங்கை போன்ற நாடுக்ளுக்கு கடத்தப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்ற தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் காணப்படுவதால் இந்த நிலை காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?
  22. அமரர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைந்த இந்திய தரப்பு அமரர் ராஜீவ் பிறந்த தினம் வரை பொறுத்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதாக நினவுள்ளது. இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.
  23. நான் கூறிய விடயம் சாதாரணமானது அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது என கூறியது நீங்கள், தற்போது நீங்களே வந்து மரணவீட்டில் பண்பாடில்லாமல் நகைசுவை செய்கிறேன் என என் மேல் பழி போடுகிறீர்கள். கடவுள் இரண்டு மனிதர்களிடம் கேட்டாராம் உலகை சுற்றி பார்த்துவரும்படி முதலாமர் வந்து சொன்னாராம் உலகம் முழுவதும் அயோக்கியனாக உள்ளார்கள் என்று, இரண்டாமர் வந்து கூறினாராம் உலகம் முழுக்க நல்லவர்களாக உள்ளார்கள் என்று. இந்த கதையினை கூறுவதன் பொதுவான நோக்கம் நல்லவர்களுக்கு மற்றவர்களும் நல்லவர்கள் அது போல தீயவர்களுகும், ஆனால் அடிப்படையில் இதுவும் தவறு உள்ளதை உள்ளவாறு பாருங்கள். இரண்டு விஞ்சானிகள் ஒருவர் தனது தச்சனுடன் வாதிட்டார் எப்படி குட்டிப்பூனையும் தாய் பூனையும் கதவிலுள்ள பெரிய துவாரத்துனூடாக செல்லும் சிறிய பூனை சிறிய துவாரத்தினூடாகத்தான் செல்லும் என, மற்றவர் பணிப்பெண் கொடுத்த கடிகாரத்தினை கொதி தண்ணீரில் போட்டு விட்டு முட்டையினை பார்த்து கொண்டிருந்தார். இதனை சாதாரணமானவர் செய்தால் அதற்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கப்படும் ஆனால் அவ்வாறான செயல்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முகம்சுளிப்பினை ஏற்படுத்தும், ஆடையில்லாமல் சென்ற அரசன் போல, அதிர்ஸ்டவசமாக அதனை மன்னனுக்கு உணர்த்த சிறு குழந்தையாவது இருந்திருக்கின்றது. நன்றி வணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.