Everything posted by நிலாமதி
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை!
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்… மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....! 5.ய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்… மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.... . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா! ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்… மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கனுமா நாங்க? 7.ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்… மனைவி : பக்கத்து வீட்டு மோகனப் பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை மருதமலைக்குத் தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க! 8.ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்… மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்.... 9.ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்… மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க! 10.ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்துப் பேசினால்… மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப் பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்! 11.ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் … மனைவி : இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா? ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை! எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும் அன்பான அர்ப்பணிப்பு உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்! நன்றி முகப்புத்தகம்
-
கொஞ்சம் ரசிக்க
இந்தக் கால சிறுசுகள் வலு சீமாட்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : பூவே பூச்சூடவா படடாசை சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா சித்தடை சிட்டு தானம்மா (௨) தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என்பாட்டிசொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன்பைங்கிளி . ..ஹேய் காலத்துக்கேற்ற பாடல் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வருங் கால தலை முறையினருக்கு ...உதவும்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : சீவல்பேரி பாண்டி கிழக்கு சிவக்கையிலே கீரை அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே நான் பழசை நினைக்கையிலே அருவா பட்டிருச்சு மீசை வெட்ட்ருவா என் ஆசை சுட்டிருமா உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கையிலே நெஞ்சுருகிப்போயிருச்சே
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : தாய் சொல்லைத் தடடாதே பாடல் : சிரித்து சிரித்து என்னை சிறை யிலிடடாய்
- தவிக்கும் தன்னறிவு
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு என து தீபாவளி வாழ்த்துக்கள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ."...அயலவர்கள் தரும் விருந்து- நடனங்கள்.
https://www.facebook.com/reel/2313664882399779- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எதோ மனிதன் பிறந்து விடடான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்து விடடான் நாயாய் மனிதன் பிறந்திருந்தால்நன்றி என்னும்குணம் நிறைந்திருக்கும் நரியை உருவெடுத்தாலும் தந்திரமாவது தந்திரமாவது இருந்திருக்கும். காக்கை குலமாய் அமைந்திருந்தாலே ஒற்றுமையாவது நிலைத்திருக்கும்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : இதயத்தில் நீ ( 1963 ) யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம். பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக மாறலாம் வருவது ஒன்று பிரிவது ஒன்று மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இறந்தவர்களுக்கு அஞ்சலி ...இது ஒருவகையில் பொதுமக்களின் அறியாமை என்றுகூட சொல்லலாம். வீட்டில் நேரலையில் பார்க்க முடியாதா ? பசி ,நேரம் செலவிட்டு ,குடிக்க நீர் கூட இல்லாமல் சன நெரிசலால் அவஸ்தைப்பட்டு விஜய்யின் உரையைக் கேட்க வேண்டும் என்பது கடடாய மா ? ஜன நடமாடடம் உள்ள இடங்களில் நோய்த்தொற்று கூட ஏற்படலாம். கர்ப்பிணிகள் வயோதிபர் சிறுகுழந்தைகளை தவிர்த்திருக்கலாம். வரும் மக்களுக்கு என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள். விஜய் பதில் சொல்ல வேண்டும். .- மருத்துக் கடையில் தமிழாசிரியர்
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே- ஒரு பயணமும் சில கதைகளும்
பயணக் கதையை தொய்வில்லாமல் இடையிடையே நகைச்சுவையும் கலந்து பொறுமையாக தடடெழுதி சுவைபட தந்த ரசோதரனுக்கு பாராட்டுக்கள். உங்கள் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருத்தி. எழுத்துப்பிழை யற்ற நல்ல ஒருஆசானிடம் தமிழ்கற்ற மாணவன் போல நிறைய புத்தகங்கள்தேடி வாசிப்பீர்கள் போல , உங்களைப்போல பலர் இங்கு தேவை .- எனக்கு பிடித்த சில வரிகள்.
எல்லா மெளனங்களும் திமிர் அல்ல சில மௌனங்கள் சொல்ல முடியாத ஆறாத காயங்கள் சரியோ தவறோ உன் வாழ்க்கை எனும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கி தள்ளி விடுவார்கள். சரி பாதியாக வாழ்வது இல்லை வாழ்க்கை. சரியும் போது சாயும் தோள் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை வாழ்க்கையை சற்று தனித்து வாழும் கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் நம்மோடு இருப்பவர் எப்போது காற்றில் மறைந்து போவார் என்பது தெரியாது. வலியுடன் வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது சிலர் கடந்துபோவார்கள் சிலர் மறந்து போனார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம் தன்னம்பிக்கை குறிக்கோள் திட்டமிடல் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்ட மென்று கடவுளிடம் கேட்டேன் அதற்கு கடவுள் சொன்ன பதில் இந்தக் கஷ்டமெல்லாம் உன்னை சுற்றியிருப்பவர் முகத்திரையை கிழிக்கும் ஆயுதம் என்று புரிந்தால் நீ அறிவாளி . மனதில் வைத்துக் கொள் உறக்கம் இரக்கம் என்பது அளவோடு இருக்க வேண்டும். அதிகம் தூங்கினால் சோம்பேறி என்று எண்ணுவார்கள் அதிகம் இரங்கினால் ஏமாளி என எண்ணி எடை போட்டுவிடுவார்கள். எனவே அளவோடு வைத்துக் கொள் தொலைவில் இருக்கும் வரை நாயும் நரியும் ஒன்றாகத்தான் தெரியும் அருகில் இருந்தால் மட்டுமே நாயின் நன்றியும் நரியின் தந்திரமும் புரியும். உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும் . உனக்கானமாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும் உனக்கானவாழ்வின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும் Virus-free.www.avg.com- யாரோ ஒருவர் நெஞ்சை உருக்கிய நிகழ்வு
நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான் அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும் வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில் அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும் பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும் பாவம்.. பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம் "கால் வலிக்குதுப்பா" கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில் பிள்ளை சொன்னபோதெல்லாம் தூக்கிக்கொண்டிருக்கலாம் என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே அன்போடு ஒரு வேளை சமைத்து பரிமாறியிருக்கலாம் ஏதோ ஒரு சண்டையில் வார்த்தைகள் முற்றிய தருணத்தில் கையிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம் காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் அக்கறையோடிருந்திருக்கலாம் பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம் சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம் அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்.. அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய் வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம் ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின் சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ? புரண்டு படுக்கும் போதெல்லாம் உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும் மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள் நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும் ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர் உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ? நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு- விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
மருத்துவ தொழில் ஒரு உன்னதமானது . நாட்டுக்கும் அவர் குடும்பத்திற்குபேரிழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
நாம் வாழும் காலத்திலே இவற்றையெல்லாம் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று.....கொல்லும். ...இப்போது எல்லாம் சுடச்சுட ....- எனக்கு பிடித்த சில வரிகள்.
இருட்டுக்குப் பயந்தால் தூங்க முடியாது கஷ்டத்துக்கு பயந்தால் வாழ முடியாது. உழைக்க பயந்தால் வாழ முடியாது. வாழக் கற்றுக் கொள் வாழ்க்கை ஒரு முறைதான் வாய்ப்பு தரும். ஒரு காலத்தில் என் பிள்ளைகள் கூட தனியே நடக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் என் மனைவி என் கை பிடித்து தான் நடக்க ஆசைப்படுகிறாள். காடு மலை தாண்டி ஆவது கல்வி கற்று விடு. கட்டியவன் கை விடடாலும் நாம் கற்றுக்கொண்ட கல்வி ஒருபோதும் நம்மைக் கைவிடாது. எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் " நீ நல்லாய் இருப்பாய் ""என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்போடு ஓடச் செய்கிறது உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்கும் வரை அதன் அருமை தெரியாது .எப்போது பழுதடைந்து போகிறதோ அப்போது தான். அதனருமை பெருமை புரியும் . வாழ்க்கை சற்று கடினமான தேர்வு தான் பலர் அதில் தோல்வியுற காரணம் ,அவரவர்க்கு தனித்தனி கேள்வித்தாள் என அறியாது பிறரைப் பார்த்து நகலெடுப்பது தான் சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கி கொண்டு நம்மை எழுந்து நடமாட வைக்கும். நம் மனம் தான் சிறந்த நண்பன். உதவிக்கு யாரும் இல்லை எண்ணாதே.தைரியமாய் போராடு உதவிக்கு நான் இருக்கிறேன் .இப்படிக்கு தன்னம்பிக்கை அனைத்தும் ஒரு நாள் கடந்து போகும் எனக் காத்திருந்தேன் . ஆனால் எதுவும் கடந்து போகாது பழகிப்போகும் என உணர்த்தி விட்டது காலம். காலத்துக்கேற்ப மாறவில்லை என்றால் அதுவாகவே நம்மை மாற்றி விடும்.- வணக்கம்
நல் வரவாகுக . தொடர்ந்து இணைந்து இருங்கள்.- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாசில்லா உண்மைக்கு காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே பேசும் வார்த்தை உண்மை தான பேதையை ஏய்க நீங்கள்போடும் வேஷமா நான் சின்னாக இருக்கும் போது என் தந்தை விடுமுறைக்கு வந்தால் கொஞ்சம்" கள்" அடிப்பார் ..அம்மாவுடன் செல்ல சண்டைபோட்டு இதை பாடுவார் இரண்டுமூன்று வரிகள்தான் ...நினைவில் வந்து போனது இருவரும் பரலோகம் போய்விடடார்கள் .- ஆடவரெல்லாம் ஆட வரலாம் ..
ஆடவரெல்லாம் ஆட வரலாம் .. https://www.facebook.com/reel/1847174665830900 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.