Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by நிலாமதி

  1. கண்ணைக் கவரும் அழகில் ஆபத்தும் இருக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் 😃
  2. பிஞ்சுப்பாதங்களின் அழகில் பிழைகள் தெரிவதில்லை.
  3. சின்ன பிரச்சினைக்கும் மூக்கை நுழைத்து ஊதிபெரிதாக்குவதே இவர் வேலையாய்ப் போச்சு, நா டுகளுக்கிடையேயும், வீட்டுக்குள்ளேயுமா ? குடடையை குழப்பி மீன் இல்லை பெரிய திமிங்கிலத்தையே பிடிப்பார் .
  4. மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியதுஉயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் வணக்கம் மந்தாகினி (மாதினி ) (ஆங்கில எழுத்து படி ) Maathine வரவு நல் வரவாகுக ..தொடர்ந்து இணைந்து இருந்து ஆக்கங்களைத் தாருங்கள்.
  5. தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.
  6. இவர்களது முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  7. நினைக்க மறந்தவர்களுக்கு அன்னையர்தினம் வருடத்தில் ஒரு நாள். தினம் தினம் நினைப்பவர்க்கு தினமும் அன்னையர் தினமே.
  8. The cardinal electors of the Catholic Church elected an American from among their own ranks on Thursday to serve as the new pope. Chicago-born Cardinal Robert Prevost was elected and accepted his fate as the next Bishop of Rome, leader of the world's 1.4 billion Catholics. Prevost chose Leo XIV as his papal name. உலக கத்தோலிக்க திருச்சபைக்கான பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கவைசேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரேவோஸ்ட் ...ஆவர். திருச்சபையில் லீயோ XIV ....என அழைக்கப்படுவார் . மன்னிக்கவும் ஏற்கனவே கோஷன் இணைத்துவிடடார் ஒரே தலைப்பின் கீழ் இணைந்துவிடவும்.
  9. 77 வயது, மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன். இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம். இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்.இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல, இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டுஎண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக,போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது, முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்,எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை, துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி,அவர்களின் ஆடையோடு கூடஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள். கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை,மருமகளும் சொல்லவிடுவதில்லை, இன்னும் நான்கு நாட்கள்தானே என்று,ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்,கடைசி மருமகளின் வீட்டு போக என்னுடைய உடைகளை நானே,ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன். கடைசி மகன் மற்றவர்களை போல்,கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை, வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும் இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது.நான் ஊருக்கு போகும்போதெல்லாம்,மருமகள்தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள். அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு போவதில் அப்படி என்ன ஆனந்தமோ,எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக்கொண்டே போக,நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்,அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த,ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டுபிடித்து விடுவாள். வீட்டுக்கு போனதும் என்னுடைய கட்டை பையை ஆராய்ச்சி செய்து,மருந்து மாத்திரைகளாவது சரியாகவாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று,தேடிப்பார்த்து திட்டுவாள்.அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டைநான் வாங்கி வந்திருப்பதை பார்த்து,சிரித்துவிடுவாள். இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று,மீனாட்சியிடம் சண்டை போடக்கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய வருத்தம் எனக்கு. நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன், எப்போதும் போல் எனக்கு முன்வந்து காத்திருந்தாள். ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டாள், உங்களை ஷேவிங் பண்ண கூடகூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா? அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....என்று ஆரம்பிக்கும்போதே இப்படியே பேசி பேசி அவங்களைகாப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான் அழைத்து சென்றாள். கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள், பெயிலான மார்க் சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கி ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்.கோபத்தை வெளிக்காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள். இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா....என்று முறைத்தாள், என்னிடம் பதிலில்லை ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது..இதேவேலையா போச்சி எல்லாருக்கும்,என்று முணுமுணுத்துக்கொண்டே கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள், துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க,பொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க,என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,அவளும் சிரித்துவிட்டாள்! எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக்கொண்டு,வீட்டுக்கு அழைத்து சென்றாள். ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது ,லேசா மயக்கமா இருக்கு சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்.கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல,மெதுவாக சாய்ந்துகொண்டேன். உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன், இன்னும் ஒரு மாதத்திற்கு, அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள். படித்து ரசித்தவை நன்றி முக புத்தகம் .
  10. கோடைகாலம் தொடங்கிவிடடால் கோவிற் திருவிழாக்களுக்கு ஆடம்பரம் காட்டுவதற்கும் குளிரில் உழைத்த காசை கோடையில் கொட்டிச் செலவழிப்பதற்கும் (கடன்பட்டாவது ) ஆரம்பித்து விடுவார்கள். கடவுள் ஆடம்பரத்தைக் கேட்டாரா ? அமைதியில் இறைவனைக் காணுங்கள். ஏழைக் குழந்தைக்கு கல்வி கொடுங்கள். உணவு கொடுங்கள் உழைக்க வழிவகை செய்யுங்கள். உங்களால் ஒரு குடும்பம் வளரும் வாழும் ..
  11. இதற்கும் பலாலிக்கும் என்ன சம்பந்தம் ? பலியாடுகள் தானே உங்களுக்கும் குசும்பு கூடிப்போச்சு 😃
  12. முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதாயில்லை. யாராவது கலைச்சு எட்டிபிடியுங்கோ 😃
  13. நீண்ட காலத்தின்பின் வசந்த காலத்தென்றல் உடன் வந்துள்ளீர்கள். உங்கள் மூலம் யாழ்களம் தென்றல் வீசட்டும். பகிர்வுக்கு நன்றி .
  14. அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி ) அண்மையில் ஒரு சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது . மனித நேயம் எங்கே என்று ....ஒரு முதியோர் ஒன்றுகூடும் நிகழ்வில், அந்த நிகழ்வு நிறைவுறும் தருவாயில் ஒரு மூதாட்டிக்கு மூக்கினால் ரத்தம் சிந்த ஆரம்பித்தது. நன்றாக இறுக்கி பிடித்தவாறு இருக்கிறார் ...துடைக்கும் பேப்பர்கள் தோய்ந்துபோகின்றன அயலில் நின்றவர்கள் எத்தனையோ பேப்பர்களை கொடுத்தாகிவிட்ட்து (அத்தனையும் ரத்தத்தால் தோய்ந்தபடி ) அம்புலன்சுக்கு அழைத்தாகி விட்ட்து.ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்கிறார்கள். ஒருவாறு பத்துநிமிடத்தில் அம்புலன்ஸ் வருகிறது . அவர்கள் அந்த நிலையத்தை தாண்டி செல்கிறார்கள் ..பின் மேலும் ஐந்து நிமிடம் கழித்து திருப்பி கொண்டு வருகிறார்கள். நோயாளி நடக்க சிரமம் உள்ளவர் .படியைக் காட்டி ஏறி உள்நுழையும்படி சொல்கிறார்கள் .மூதாட்டி முடியாமல் படியில் உட்க்கார்ந்து விட்டார் . அதுவும் இரண்டு வெள்ளையின பெண் ஒட்டியும் உதவியாளரும்.(இரக்கமென்பதே இல்லாமல் ) .ஒருவாறு ஒருவர் ஸ்ட்ரெச்சர் ஐ வெளியே எடுத்து அதில் படுக்க வைத்து ஏற்றிச் சென்றார்கள்... ..(.மீதி அவர் சொல்லக்கேள்விப்பட்ட்து ). அங்கு கொண்டுசென்றதும் ஒரு காத்திருப்பு இடத்தில நிறுத்திவிட்டார்கள் ஒருவர் நேர்ஸ் வருவார் என ...சொல்லிவிட்டு .( மதிய நேரம்,.... பதடடம் ) ரத்தம் கசிந்துகொண்டேயிருக்கிறது. மேலும் ...மேலும்.... துடைக்கும் காகிதம் கேட்க்கிறார் அவர்களும் தேடுகிறார்கள் ஒரு துடிப்பு.....ஒரு உதவும் மனம் ...(பொசிந்து ஓடுவது ரத்தம அதை உடலில் பெற எவ்வளவு ஊட்ட்ச்சத்துக்கள தேவை இடையே கட்டிபடட ரத்தம் வாயாலும் வடிகிறது ) ஒரு இரக்கம் அனுதாபம் ....மேலும் ரெண்டு மணி நேர தாமதத்துக்கு பின் ( படுக்கை இல்லையாம் . கிளீண் பண்ணுகிறார்களாம்) டாகடர் பார்க்க வருகிறார்..... உதவி டாகடர் பார்த்து ..மருந்து தோய்ந்த பஞ்சு ஒன்றை மூக்கினுள் செலுத்தினார்களாம் அதுவும் நிற்கவில்லை பின் பெரிய டாகடர் வந்து ஒருவித வயர் பூடட படட (சற்று அசெளகரியம் தரும்) மூக்கினுள் நுளைத்து சற்று கவனித்து மேலும் அரைமணி தாமதித்து வீட்டிற்கு அனுப்பினர்களாம். மூன்றாம் நாளதை நீக்க வரும்படி . நாம வாழும் நாடு (கனடா )மருத்துவ துறையில் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு காலத்தில ....தற்போது ...தாமதங்கள் ...கால நீடிப்புகள் .வைத்தியர் பற்றாக குறை .....உதவியாளரின்( பணியாளரின் ) அசமந்த போக்கு ....எங்கே செல்கிறது மனித நேயம். சிறப்பு வைத்தியரின் முன்பதிவு எடுக்க மாதங்களாகும் ( மாசி மாதம் நோயால் வருந்தியவனுக்கு ஆடிமாதம் சிறப்பு வைத்தியர் முன்பதிவு கிடைத்தது ) மனித உயிர் அவ்வளவு மலி னமா ? தாமதிக்கும் ஒவ்வொருகணமும் ... தவணை முறையில் மரணம் நிகழும் ....
  15. செயற்கை ? போட்டொஷொப் ? அண்மையில் வாசித்தேன் மிளகாய் வியாபாரி தன்னை உறை பற்ற மிளகாய்க்கன்றுகளை ஏமாற்றி விற்றுவிடார்கள் என்று திணைக்களத்துக்கு முறையீடு செய்தாராம் . தனது மிளகாய்களை காரமற்றவை என்று வாங்குகிறார்களில்லை , விலைப்படவில்லையாம்.
  16. இவர் மட்டுமல்ல உலகம் முழுக்க இருந்து கர்தினால்மாரை எடுப்பார்கள் கிடட தடட 142 பேர் அதில் தான்( ஒட்டு போட்டு )தெரிவு செய்யப்படுவார். முன்பு அதிகம் ஐரோப்பா காரர் தான் தெரிவுசெய்யப்படுவார்கள் கடைசியாக லத்தீன் அமெரிக்கரை எடுத்தார்கள். அடுத்தவர் யாரோ ?
  17. கவலைவேண்டாம் நாங்க 3 பேர் கூட இருக்கிறோம்.
  18. பூக்களின் நறுமணம் வேர்களுக்கு தெரிவதில்லை.
  19. ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃
  20. இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் . இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும் Handsome Guy What is your nice name ? (அவரது கணவன் இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..) இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.
  21. இதை ஏற்கனவே துரோகி எனும்பெயரில் எழுதி இருந்தேன்.(படித்தவை )
  22. நானும் விடிகாலையில் பிரான்சிலிருந்து செய்தி (message ) வந்தபோது காலையில் இவரிடம் இதுதான் சொன்னேன். பெருநாளின்போது பொதுமக்களுக்கு உரையாற்றியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்வு நீடிக்கவில்லை.
  23. நந்தனார் வெற்றிகளைக் குவிக்கிறார்...மேலும்பல வெற்றிகளைக் காண வாழ்த்துக்கள்.
  24. தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.