Everything posted by நிலாமதி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்க மட்டும் தான் குரூப் போட்டொ எடுப்பீங்களா ? நாங்களும் எடுப்போமில்ல 😃
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
தமிழினத்தை வேகமாக கருவறுக்கும் செயற்பாடு சத்தமின்றி நடத்தப்படுகிறது .வெளிநாட்டுக்கு காசு இலகுவாக செலவழிக்க கிடைக்கிறது.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
ஒருபெண்ணை அதுவும் கர்ப்பிணியாய் இருப்பவரின் உயிரை எடுக்க யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது? இதைப்பின்பற்றி ஏனைய அறிவு கெடடதுகளும் முயலக் கூடும். சமூகத்துக்கு ஒரு தப்பான எடுத்துக்காட்டு .பிரச்சினையை சற்று ஆறப்போட்டு ஒரு தீர்வுகண்டிருக்கலாம். ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் புத்தி தடுமாறிவிடடது .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ்களத்தில் விளையாட்டுப்போட்டி என்றால் அதில் கிருபன் பெயர் தான் முன்னிலையில் வரும். சளைக்காமல் வருடாவருடம் போட்டியை நடத்திவரும் கிருபனுக்கு நன்றி எனும் ஒற்றைச்சொல் போதாது . விளையாடடை கலகலப்பாக்கும் உறவுகளுக்கும் , முதல்வர் நந்தனுக்கு முன்னிலையில் நிற்கும் ரசோதரன், புலவர் ,செம்பாட டன் ஆகியோருக்கும் எல்லோ ருக்கும் அழைப்பு விடுக்கும் வீரப்பையனுக்கும் வாழ்த்துக்களும் என் நன்றிகளும். ( கடைசியாக கிடந்து மிதிப்படாமல் ஒருவாறு 18 ம் இடத்துக்கு வந்து விட்டேன்.)😃
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ....அருமையான காடசி. நன்றி
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
பக்கத்தில் நின்றபெண்ணுக்கு கிஸ் அடிச்சிருப்பார் போல ...அது தந்த கோபமாக்கும் . இருந்தாலும் மனுஷன் சமாளிக்கிறார் .😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த தடவை எல்லோரும் நந்தனை பின்பற்றுங்கள் . ( கொப்பியடியுங்க)😄
-
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
- இரசித்த.... புகைப்படங்கள்.
கண்ணைக் கவரும் அழகில் ஆபத்தும் இருக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் 😃- கொஞ்சம் ரசிக்க
பிஞ்சுப்பாதங்களின் அழகில் பிழைகள் தெரிவதில்லை.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சின்ன பிரச்சினைக்கும் மூக்கை நுழைத்து ஊதிபெரிதாக்குவதே இவர் வேலையாய்ப் போச்சு, நா டுகளுக்கிடையேயும், வீட்டுக்குள்ளேயுமா ? குடடையை குழப்பி மீன் இல்லை பெரிய திமிங்கிலத்தையே பிடிப்பார் .- நம்பிக்கை துளிர்க்கிறது
மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியதுஉயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் வணக்கம் மந்தாகினி (மாதினி ) (ஆங்கில எழுத்து படி ) Maathine வரவு நல் வரவாகுக ..தொடர்ந்து இணைந்து இருந்து ஆக்கங்களைத் தாருங்கள்.- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.- Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
இவர்களது முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.- அன்னையர் தினம் 2025
நினைக்க மறந்தவர்களுக்கு அன்னையர்தினம் வருடத்தில் ஒரு நாள். தினம் தினம் நினைப்பவர்க்கு தினமும் அன்னையர் தினமே.- New Pope (பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.)
The cardinal electors of the Catholic Church elected an American from among their own ranks on Thursday to serve as the new pope. Chicago-born Cardinal Robert Prevost was elected and accepted his fate as the next Bishop of Rome, leader of the world's 1.4 billion Catholics. Prevost chose Leo XIV as his papal name. உலக கத்தோலிக்க திருச்சபைக்கான பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கவைசேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரேவோஸ்ட் ...ஆவர். திருச்சபையில் லீயோ XIV ....என அழைக்கப்படுவார் . மன்னிக்கவும் ஏற்கனவே கோஷன் இணைத்துவிடடார் ஒரே தலைப்பின் கீழ் இணைந்துவிடவும்.- ஊமைக்காயங்கள்.
77 வயது, மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன். இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம். இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்.இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல, இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டுஎண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக,போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது, முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்,எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை, துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி,அவர்களின் ஆடையோடு கூடஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள். கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை,மருமகளும் சொல்லவிடுவதில்லை, இன்னும் நான்கு நாட்கள்தானே என்று,ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்,கடைசி மருமகளின் வீட்டு போக என்னுடைய உடைகளை நானே,ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன். கடைசி மகன் மற்றவர்களை போல்,கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை, வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும் இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது.நான் ஊருக்கு போகும்போதெல்லாம்,மருமகள்தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள். அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு போவதில் அப்படி என்ன ஆனந்தமோ,எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக்கொண்டே போக,நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்,அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த,ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டுபிடித்து விடுவாள். வீட்டுக்கு போனதும் என்னுடைய கட்டை பையை ஆராய்ச்சி செய்து,மருந்து மாத்திரைகளாவது சரியாகவாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று,தேடிப்பார்த்து திட்டுவாள்.அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டைநான் வாங்கி வந்திருப்பதை பார்த்து,சிரித்துவிடுவாள். இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று,மீனாட்சியிடம் சண்டை போடக்கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய வருத்தம் எனக்கு. நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன், எப்போதும் போல் எனக்கு முன்வந்து காத்திருந்தாள். ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டாள், உங்களை ஷேவிங் பண்ண கூடகூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா? அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....என்று ஆரம்பிக்கும்போதே இப்படியே பேசி பேசி அவங்களைகாப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான் அழைத்து சென்றாள். கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள், பெயிலான மார்க் சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கி ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்.கோபத்தை வெளிக்காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள். இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா....என்று முறைத்தாள், என்னிடம் பதிலில்லை ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது..இதேவேலையா போச்சி எல்லாருக்கும்,என்று முணுமுணுத்துக்கொண்டே கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள், துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க,பொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க,என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,அவளும் சிரித்துவிட்டாள்! எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக்கொண்டு,வீட்டுக்கு அழைத்து சென்றாள். ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது ,லேசா மயக்கமா இருக்கு சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்.கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல,மெதுவாக சாய்ந்துகொண்டேன். உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன், இன்னும் ஒரு மாதத்திற்கு, அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள். படித்து ரசித்தவை நன்றி முக புத்தகம் .- இரசித்த.... புகைப்படங்கள்.
கோடைகாலம் தொடங்கிவிடடால் கோவிற் திருவிழாக்களுக்கு ஆடம்பரம் காட்டுவதற்கும் குளிரில் உழைத்த காசை கோடையில் கொட்டிச் செலவழிப்பதற்கும் (கடன்பட்டாவது ) ஆரம்பித்து விடுவார்கள். கடவுள் ஆடம்பரத்தைக் கேட்டாரா ? அமைதியில் இறைவனைக் காணுங்கள். ஏழைக் குழந்தைக்கு கல்வி கொடுங்கள். உணவு கொடுங்கள் உழைக்க வழிவகை செய்யுங்கள். உங்களால் ஒரு குடும்பம் வளரும் வாழும் ..- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று RR வெல்லும்போல இருக்கே.- கணவனை சுட்டுக் கொன்ற பாட்டி.
இதற்கும் பலாலிக்கும் என்ன சம்பந்தம் ? பலியாடுகள் தானே உங்களுக்கும் குசும்பு கூடிப்போச்சு 😃- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதாயில்லை. யாராவது கலைச்சு எட்டிபிடியுங்கோ 😃- தென்றலாய் வந்தது வசந்தகாலம்!
நீண்ட காலத்தின்பின் வசந்த காலத்தென்றல் உடன் வந்துள்ளீர்கள். உங்கள் மூலம் யாழ்களம் தென்றல் வீசட்டும். பகிர்வுக்கு நன்றி .- அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )
அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி ) அண்மையில் ஒரு சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது . மனித நேயம் எங்கே என்று ....ஒரு முதியோர் ஒன்றுகூடும் நிகழ்வில், அந்த நிகழ்வு நிறைவுறும் தருவாயில் ஒரு மூதாட்டிக்கு மூக்கினால் ரத்தம் சிந்த ஆரம்பித்தது. நன்றாக இறுக்கி பிடித்தவாறு இருக்கிறார் ...துடைக்கும் பேப்பர்கள் தோய்ந்துபோகின்றன அயலில் நின்றவர்கள் எத்தனையோ பேப்பர்களை கொடுத்தாகிவிட்ட்து (அத்தனையும் ரத்தத்தால் தோய்ந்தபடி ) அம்புலன்சுக்கு அழைத்தாகி விட்ட்து.ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்கிறார்கள். ஒருவாறு பத்துநிமிடத்தில் அம்புலன்ஸ் வருகிறது . அவர்கள் அந்த நிலையத்தை தாண்டி செல்கிறார்கள் ..பின் மேலும் ஐந்து நிமிடம் கழித்து திருப்பி கொண்டு வருகிறார்கள். நோயாளி நடக்க சிரமம் உள்ளவர் .படியைக் காட்டி ஏறி உள்நுழையும்படி சொல்கிறார்கள் .மூதாட்டி முடியாமல் படியில் உட்க்கார்ந்து விட்டார் . அதுவும் இரண்டு வெள்ளையின பெண் ஒட்டியும் உதவியாளரும்.(இரக்கமென்பதே இல்லாமல் ) .ஒருவாறு ஒருவர் ஸ்ட்ரெச்சர் ஐ வெளியே எடுத்து அதில் படுக்க வைத்து ஏற்றிச் சென்றார்கள்... ..(.மீதி அவர் சொல்லக்கேள்விப்பட்ட்து ). அங்கு கொண்டுசென்றதும் ஒரு காத்திருப்பு இடத்தில நிறுத்திவிட்டார்கள் ஒருவர் நேர்ஸ் வருவார் என ...சொல்லிவிட்டு .( மதிய நேரம்,.... பதடடம் ) ரத்தம் கசிந்துகொண்டேயிருக்கிறது. மேலும் ...மேலும்.... துடைக்கும் காகிதம் கேட்க்கிறார் அவர்களும் தேடுகிறார்கள் ஒரு துடிப்பு.....ஒரு உதவும் மனம் ...(பொசிந்து ஓடுவது ரத்தம அதை உடலில் பெற எவ்வளவு ஊட்ட்ச்சத்துக்கள தேவை இடையே கட்டிபடட ரத்தம் வாயாலும் வடிகிறது ) ஒரு இரக்கம் அனுதாபம் ....மேலும் ரெண்டு மணி நேர தாமதத்துக்கு பின் ( படுக்கை இல்லையாம் . கிளீண் பண்ணுகிறார்களாம்) டாகடர் பார்க்க வருகிறார்..... உதவி டாகடர் பார்த்து ..மருந்து தோய்ந்த பஞ்சு ஒன்றை மூக்கினுள் செலுத்தினார்களாம் அதுவும் நிற்கவில்லை பின் பெரிய டாகடர் வந்து ஒருவித வயர் பூடட படட (சற்று அசெளகரியம் தரும்) மூக்கினுள் நுளைத்து சற்று கவனித்து மேலும் அரைமணி தாமதித்து வீட்டிற்கு அனுப்பினர்களாம். மூன்றாம் நாளதை நீக்க வரும்படி . நாம வாழும் நாடு (கனடா )மருத்துவ துறையில் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு காலத்தில ....தற்போது ...தாமதங்கள் ...கால நீடிப்புகள் .வைத்தியர் பற்றாக குறை .....உதவியாளரின்( பணியாளரின் ) அசமந்த போக்கு ....எங்கே செல்கிறது மனித நேயம். சிறப்பு வைத்தியரின் முன்பதிவு எடுக்க மாதங்களாகும் ( மாசி மாதம் நோயால் வருந்தியவனுக்கு ஆடிமாதம் சிறப்பு வைத்தியர் முன்பதிவு கிடைத்தது ) மனித உயிர் அவ்வளவு மலி னமா ? தாமதிக்கும் ஒவ்வொருகணமும் ... தவணை முறையில் மரணம் நிகழும் ....- இரசித்த.... புகைப்படங்கள்.
செயற்கை ? போட்டொஷொப் ? அண்மையில் வாசித்தேன் மிளகாய் வியாபாரி தன்னை உறை பற்ற மிளகாய்க்கன்றுகளை ஏமாற்றி விற்றுவிடார்கள் என்று திணைக்களத்துக்கு முறையீடு செய்தாராம் . தனது மிளகாய்களை காரமற்றவை என்று வாங்குகிறார்களில்லை , விலைப்படவில்லையாம்.- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
இவர் மட்டுமல்ல உலகம் முழுக்க இருந்து கர்தினால்மாரை எடுப்பார்கள் கிடட தடட 142 பேர் அதில் தான்( ஒட்டு போட்டு )தெரிவு செய்யப்படுவார். முன்பு அதிகம் ஐரோப்பா காரர் தான் தெரிவுசெய்யப்படுவார்கள் கடைசியாக லத்தீன் அமெரிக்கரை எடுத்தார்கள். அடுத்தவர் யாரோ ? - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.