Everything posted by நிலாமதி
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- எனக்கு பிடித்த சில வரிகள்.
தங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும். நன்றி அண்ணா- எனக்கு பிடித்த சில வரிகள்.
நமக்கு பிடித்தவர்கள் " நீ பேசுவதை நிறுத்து .".என சொல்லும்போது ,நாம் பேச நினைக்கும் வார்த்தைகளை தடுக்கும் போது , நம்மை பேச விடாமல் குரலை நசுக்கும் போது, நம்மிடம் பேச என்ன இருக்கு என எண்ணும் போது, ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம் குரல் வெறுக்க பட்டு விட்டது.இனி அன்பாக பேசினால் பிடிக்காது என்ன பேசினாலும் தப்பா தெரியும். எந்த சூழலிலும் யாரையும் நம்பாதீர்கள் . என்றால் இப்போது மனிதர்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் துரோகம் செய்யக் கற்றுக் கொண்டு விட்டார்கள் வீட்டில் தாய் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பணக்காரன் இந்த பூமியில் இன்னும் பிறக்கவில்லை . இறந்துபோன மீன்கள்தான் தண்ணீர் வழியாக போகும் . ஆனால் உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்து தான் செல்லும் அதனால் உங்கள் பிரச்சினைகள் போராடி வெல்லுங்கள். மூன்றாவது வகுப்பு படிக்காதவன் , மூன்று ஜி யு வலேரி கடை வைத்து நடத்துகிறான் . மூன்று டிகிரி முடித்தவர் ...பெட்டிக் கடை போடலாம் என யோசிக்கிறான். தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என் வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றி தான். சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த உலகை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான் ஒரு நாளுனுக்கு பிடித்து போல உன் வாழ்க்கையும் மாறும் . அது நாளையாக கூட இருக்கலாம்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நியாயமான சிந்தனை- சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
படம் பார் பாடம் படி- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்த சின்ன வயதில் பழையபாடடை அருமையாக பாடுகிறார். பாராட்டுக்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
facebook.com/reel/1952320938840381- வேலணையில் தீ!
இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில்..... ஒரு வேளை பற்றைகள் மறைவில் சட்ட விரோத செயற்பாடுகள் நடப்பதால் கொழுத்தி விடடார்களோ ? பாவம் பனைமரங்கள் அழிந்துபோக போகின்றன ,- எனக்கு பிடித்த சில வரிகள்.
தடக்கி விழுந்து விட்டால் எழுந்து ஓடுவதற்கு உங்கள் கால்களை தயார் செய்யுங்கள். விழுந்தே கிடக்காதீர்கள் யாருடைய மௌனத்தையும் திமிர் என எண்ணி விடாதீர்கள் ஒரு வேளை அது அவர்களின் வலியின் வெளிப்பாடு கூட இருக்கலாம் . ஏமாந்து நிற்கும் போது தான் எண்ணுகிறோம் இவ்வளவு நாட்களாக எவ்வளவு முட்டாள்களாக இருந்திருக்கிறார் என்பதை . முதலில் தாங்க முடியாததாக தோன்றும் பின் பரவாயில்லை போல தோன்றும் அடுத்து கடந்து விட முடியும் என நம்பிக்கை தோன்றும் அடுத்து இதற்காகவா இத்தனை வருந்தினோம் என மனம் , லேசான தாகி விடும். வேண்டியது என்னவோ கொஞ்சம் பொறுமையும் வலியை தாங்கும் வலிமையும் தான் . இந்த வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது ..ரொம்ப அசிங்கப்படுத்திட்டிங்க என்னவெல்லாம் பேசினார் தெரியுமா ? என்று யாரோ எப்போதோ பேசுவதை மனதில் பூட்டி வைத்து வருத்தப்படுவது வேண்டாத வேலை. பக்குவ மற்றவர்களும் ,அவசரக்காரர்கள் ,புத்தி கெட்டவர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசியத்தை கல்வெட்டாய் மனதில் வைத்திருக்க கூடாது .அவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு பக்குவம் என கடந்து செல்ல வேண்டும். மன வலி என்பது நாமே நம்மை ஒரு கயிற்றால் கட்டி வைப்பது போல் மனவலியை சுமப்பவர் கவனம் சிதறும் அடுத்த வேலையை செய்ய விடாது சோர்வடைய செய்யும் பணம் செலவு செய்வதில் எது தேவையான செலவு என்பதை விட எது தேவையற்ற செலவு என்பது மிகப்பெரிய தெளிவு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்!- குட்டிக் கதைகள்.
மனைவியிடம் ஜோக் அடிக்க நினைத்தவன்… மருத்துவமனை படுக்கையிலே முடிச்சான்!” ஒரு நாள் ஒரு பிரபலமான பேச்சாளர் கூட்டத்தில் சொன்னார்: “என் வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருந்த நாட்கள், 👉" இன்னொருவரின் மனைவியுடன் கழித்த நாட்கள்தான்!” 😲" அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் 😶🌫️" அமைதியாக இருந்தார்கள். சில நொடிகள் கழித்து அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்: “அந்த இன்னொருவரின் மனைவி… என் அம்மா தான்!” 😍" இதைக் கேட்ட மக்கள் எல்லாம் பெருசா சிரிச்சார்கள் 🤣" > --- அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், “நானும் வீட்டில் என் மனைவியிடம் சொல்லி சிரிக்க வைக்கணும்” என்று நினைத்தான். அந்த இரவு 🍲"உணவு முடிஞ்ச பின், அவன் மனைவியை பார்த்து சொன்னான்: “என் வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருந்த நாட்கள், 👉" r இன்னொருவரின் மனைவியுடன் கழித்த நாட்கள்தான்…” அடுத்த வரி சொல்லும் முன்னாடியே அவன் நேரே கீழே விழுந்து மயங்கிப்போனான். கண் திறந்த போது 🛏️மருத்துவமனை படுக்கை… தலையில் பெரிய காயம் 🩹 அருகில் கோபத்தோடு 🥵" உருட்டுக்கட்டை பிடிச்சுக்கிட்டு இருந்தாள் அவன் மனைவி. --- நீதி பிறர் செய்ததை யோசிக்காமல் காப்பி அடிக்க முயற்சித்தால்… முடிவில் காயம் தான் அடையும் 😂" நன்றி ....முகநூல் .- வணக்கம்
வணக்கம் நியூ பலன்ஸ்..........நல்வரவு . தொடர்ந்து இணைந்து இருங்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலையில் இப்பாடலைக் கேட்க இனிமையாக இருக்கும். ஊரிலே கேட்க்கும் ...உற்சாகமாக இருக்கும். வெளிநாட்டில் ....நாமிழந்த வற்றில் இதுவும் ஒன்று .... ஆனால் வெளிநாட்டில் ஒரு சில வழிபாடுகளில் காலையில், கோவிலுக்கு அண்மையில் வசிப்பவர்களுக்கு இம்மணியோசை கிடைக்கக்கூடும்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை. பாடல் வரிகள் பா.எண் - 161 படம் – ஆரவல்லி 1957 இசை – G. ராமநாதன் பாடியவர் – ஜிக்கி , A.M ராஜா இயற்றியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - சின்னப்பெண்ணான போதிலே சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கன்னியென்னாசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கண் ஜாடை பேசும் எந்நிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மை தனை சொல் நிலவே நீ என்றேன். வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த பாடல் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டுவருகிறது ..எதிர்காலத்தில் பேரன் பேத்திகளுக்கும் பயன்படவேண்டும். ஆங்கில பாடலின் மூலத்திலிருந்து வந்தது . முடிந்தால் உங்கள் மகன் , மகளுக்கு சொல்லி பேரன் பேத்திகளை மனனம் செய்து இந்தப்பாடலைஉயிர் போடு வைத்திருங்கள். காலத்தால் அழியாத பாடல் .- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- எனக்கு பிடித்த சில வரிகள்.
எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது . 7.பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 8.சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள் எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை அவளின் சத்தம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நானும் தாமசுக்கு தான் நம்ம பண்டிதர் சுவி அண்ணருக்கு தெரியாத தமிழ் புலமையா ? 😄- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னை (தங்கம் ) விரும்பும் பூமியிலே என்னை விரும்புமோருருயிரே- கற்க கசறும்
இதை விளங்கி கொள்ள பெற்றோருக்கு புரிந்துணர்வு வேண்டும் . ஒரு வருடம் வீணா போச்சு என்று பிள்ளையை மனம் நோகாமல் பிள்ளை அதற்குள் கிடந்தது அழுந்தாமல் . வெளிய வா பிடிக்கவிட்டால் வேறு துறையை தெரிந்து எடு ....என ஊக்க படுத்த வேண்டும். இங்கும் கனடாவிலும் நடக்கிறது- கற்க கசறும்
இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் பறவையின் குஞ்சுகளாக இருக்குமா ? அல்லது களவாணி யா ?- திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்
(பணக்காரக் )கடவுளுக்கு மேலும் பணமா ? அழியாத செல்வம் கல்வி அதை முன்னெடுக்கு நேர்மையான (அகரம் ) போன்ற கல்வி நிறுவங்களுக்கு கொடுத்தால் பிள்ளைகள் பயன்பெறுவர். படிக்க விருப்பு இருந்தும் எத்தனயோ குழந்தைகள் வசதி வாய்ப்பு இல்லாமல் வாழ் கிறார்கள்- ஒரு சோறு
எஸ்தர் பற்றி எழுதியது சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வு . எஸ்தர் ஒருசரித்திர வரலாற்று பெயர்.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதே போல் நேற்று ஒன்று பார்த்தேன் . பில்லிங் கவுண்டரில் ஒருத்தி தோலை உரித்துவிட்டு எடைபோட சொன்னாள் அவள் . அவள் வைத்திருந்த முடடைகளை ஒருபையில் உடைத்து ஊற்றி எடைபோடவா என்றாரே பார்க்கலாம். 😁 - எனக்கு பிடித்த சில வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.