Everything posted by நிலாமதி
-
நானும் ஊர்க் காணியும்
. "உடையவர் பாரா வேலை ஒரு முழம் கடடை" என்பதுபோல நம்பிக்கையான வர்களை இருத்த வேணும் .அல்லது பென்சனெடுத்துட்டு போய் இருங்கோ.
-
யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
இயற்கையாகவோ ? அல்லது செயற்கையாகவோ? (ஊசி மூலம் ) அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் அதன் மூலம் வீட்டுக் காரருக்கும் சந்தோஷம். இயற்கையின் வரம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எல்லா மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கு 😠
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள். புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வெளிநாடு வந்த போது அவன் முதன் முதலாக வெளிநாடு வந்த போது (துபாய்) அங்கிருந்த ஊரவர் கேடடார் . துபாய் எப்படி இருக்கு? என்று ....இவன் சொன்னான் "பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னும் , வேறு ஒருவரின் காருக்கு முன்னும் நின்று படங்கள் எடுத்து போட்டிராவிடால் என்னைபோன்றவர்கள் இங்கு வந்திருக்க மாடடார்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் அடிப்படை வசதிகளையும் படம் பிடித்து இருந்தால் பலரின் சிந்தனையை அது மாற்றி இருக்கும். ஒரு சமுதாயத்தையே " படங்காட்டி " வெளிநாட்டு வாழ்க்கை என குட்டிச்சுவராய் ஆக்கி இருக்கிறீர்கள்.- கேட்டு ரசித்தவை
கேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது யாருக்கு மறதி என்று.- இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
உண்மையில் நீயா நானா வே மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும் நிகழ்ச்சி ...ஊர் உலகமறியவா..டி வீ யில் வந்து சொல்வார்கள். நாளைக்கு மானம் கப்பலேறிவிடும். இப்படியும் சில மனிதர்கள். 😠- யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
இன்று காலை எழுந்து கடவுளைத்தொழுததும் நினைத்தேன் இன்று சிறீத்தம்பியின் படடாசுகள் ஏதும் வெடிக்கும். சென்ற வருடங்களில்நடந்த உலகச்செய்திகளின் படி . கொழுத்துங்கோ கொழுத்துங்கோ எல்லோரும் சேர்ந்து வெடிக்கலாம் 😃😃😃🎆- 10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
பாவம் குழந்தை அதற்கு பத்து வயதாகும் பொது தாய்க்கு 76 வயதாகும் ...இனியும் தம்பியோ தங்கையோ வராமல் இருக்க வேண்டும்.😃- இரசித்த.... புகைப்படங்கள்.
இன்னும் 7 க்கு இடம் உண்டு 😃- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂- யாழ் இணையமே! தொடர்ந்தும் வெற்றிநடைபோடவேண்டும்
நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கணிப்போ அதிஷ்டமோ தெரியாது.😃 தொடர்ந்து முன்னிலை வகிக்கும் செம்பாட் டானுக்கும் , துணை முதல்வர் அல்வாயனுக்கும்,அவரை பின் தொடர்வோருக்கும் வாழ்த்துக்கள்.- பிழை என்பது என்ன?
பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ? தவறு என்று தெரியாமல் செய்வது பிழை தெரிந்தே செய்வது குற்றம் பிழை மன்னிக்கப்படலாம் தவறு தண்டிக்கப்படும் பிழை வேறு குற்றம் வேறு- இரத்த சொந்தம்
காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா. .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு பிழை இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள் பள்ளிக்கால காதல னை அந்தஸ்து வேறுபாட்டினால் வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். அவளும் அதே ஊரில் வெளிநாட்டில் வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும், அவளது பெற்றோர்களும் இப்படி செய்து விட்டால் எனும் கோபத்தில் , காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும் வரவே அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள். ஊரில் மிகவும் பெரிய ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள். சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து விட்டோமோ என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளைப் பற்றினாள் . . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை வாங்கி கொண்டு அத்தை மடியில் உட்கார்ந்து கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா குடும்பத்தினரையும் சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு வர அழைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார் . மறுநாள் அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு திங்கட்கிழமை அவர்கள் உறவுக்கார மூதாட்டியை பார்க்க நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள் . மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன் இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டும் நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது வார்த்தைகள். பஸ் உம் வரவே முண்டியடித்து ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான் சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர் கா தில் கையை வைத்துக் கொண்டு " கலோ" "கலோ " என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் "என்னை வீட்டுக்கு போக விடு" என தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும். இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும் விடுமுறையில் வந்ததாகவும் சொல்லிக் கொண்டார். மீளவும் பஸ் பயணம். வரும் வழியெங்கும் " நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது. மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று முழுவதும் என்ன இருந்தாலும் அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று. "நீரடித்து நீர் விலகுமா ? " இனி என் பெற்றோர் ஆன்மா மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும். Blood is thicker than Water- சிரிக்கவும் சிந்திக்கவும் .
தற்போது இலங்கையில் பேசுபொருளாகி இருக்கின்ற விடயம் பிரித்தானியாவால் தடை செய்யப்பட்ட இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகளினதும் கருணாவின் தடையும் ஆகும். இதற்கு அரசியல் களத்தில் உள்ளவர்கள் பலவாறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நாமல் ராஜபக்ச ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மகிந்த ராஜபக்சவின் தூக்கத்தை கலைத்த விடயமாக நாமல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது பாலச்சந்திரனுடைய இறப்புச் செய்தியை அறிந்ததும் தனது தந்தையான மகிந்த ராஜபக்ச தூக்கம் கலைந்து எழுந்ததோடு, சில தடுமாற்றங்களை எதிர் கொண்டதாகவும் ஏன் இவ்வாறான இறப்புக்கள் நிகழ்கின்றது என ஆதங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக நாமல் குறிப்பிடுகின்றார். மேலும் தனது தந்தையின் வாழ்நாளில் இவ்வளவு துயரத்தை ஆழ்த்திய சம்பவமாக இதுதான் உள்ளது என நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேசமும் புலம்பெயர் தேசமும் ராஜபக்சவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டதை கருத்தில் கொள்ளாத இவர்களுக்கு எவ்வாறு பாலச்சந்திரனுடைய மரணம் தூக்கத்தைக் கலைந்திருக்கும். இதற்கு பின்னணியில் உள்ள விடயத்தை நோக்கினால் தற்போது பிரித்தானிய விதித்த தடையின் எதிரொலியே ஆகும். இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி... பூசி மெழுகியது காணும் திருந்துங்கடா- பம்பாய் மிட்டாசு...
இதனை தும்பு முடடாஸ் (தும்பி முடடாஸ்) எனவும் அழைப்பதுண்டு . இங்கு கனடாவில் cotton candy எனும் பெயரில் சிறு பாக்கட்டில் வருகிறது.- பூவும் காற்றும் சேரும்போது
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ``` கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது. ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெய்க்க கோபுரம் நீ யாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... ஒரு மகனின் /மகளின் வளர்ச்சி ஒரு அப்பாவின் வழிகாடடலில், கடின உழைப்பில்,பாடலில் அப்பாவின் பாசம் தெரிகிறது.( இன்று என்னைக் கவர்ந்த பாடல்)- கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!
போரின் போது உயிர் காக்க, கடன்பட்டு ஓடி வந்து ,அகதி கேட்டு. துன்பப்பட்டு வந்த இளையவர்களின் கடின உழைப்பு , தற்போதைய இளையவர்களுக்கு ,கஷ்டம் தெரியாதவர்களுக்கு, இருப்பதில்லை . அக்கரைக்கு இக்கரை பச்சை, இலகுவாக(நோகாமல்) உழைக்கலாம் எனும் போக்கு தான் காணப்படுகிறது .- கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!
இளையவர்கள் ஒருபக்கம் படித்து நல்லபேர் எடுக்கிறார்கள். மறுபக்கம் இப்படியும் சில ... கஷ்டப்பட்டு வாழ வழி தெரியாதவர்கள்- சிரிக்கவும் சிந்திக்கவும் .
எங்கள்ஊ ரில்ஒரு மூதாட்டி இருந்தார் . கணவன் இறந்து விட அவரது பென்ஷன் காசில் வாழ்ந்து வந்தார். சங்க கடையில் நாலு மீற்றர் துணி வாங்கி மேற் சடடையும் லுங்கியும் (சாரம் போல ) தைத்த பின் ...பிள்ளை மிச்ச துணி இருந்த ஒரு கைப்பையும் (handbag )யும் அடிச்சு விடு பிள்ளை என்று எனது அயல் உள்ள அக்காவிடம் சொல்லுவார். அந்த நினைவு தான் உங்கள்பதிவை பார்க்க வந்தது .😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தேனீக்கள் கொட்டுகின்றனவா ?- உணவு செய்முறையை ரசிப்போம் !
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.