Everything posted by nochchi
-
புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு
புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு Published By: VISHNU 09 MAY, 2024 | 02:50 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர். புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு | Virakesari.lk
-
இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு
இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு 09 MAY, 2024 | 11:53 AM (எம்.நியூட்டன்) முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி என்றால் தமிழர்களுக்கு மரணபொறி காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018 ஆண்டு மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி 2,199 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு என்று மகாவலியால் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆண்டு இது 4 ஆயிரம் ஏக்கராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாவலியின் ஆக்கிரமிப்புக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் கருவாட்டுகேணிநில் 6 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகள் இலங்கை சுதந்திரமடைந்ததற்கு முன்பிருந்தே தமிழர்களுடைய பூர்விக காணி என்பதற்கு தெளிவான உறுதிகள் ஆவணங்கள் இருக்கின்றன. இது மட்டுமன்றி 1984 ஆண்டு உதியமலை படுகொலை இடம்பெறுவதற்கு சில காலபகுதியில் விடுதலைப் புலிகள் நூளைந்து விட்டார்கள் என கூறி இப்பகுதி மக்களை கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினர் துரத்தினார்கள் அன்று வெளியேறிய மக்கள் 29 வருடத்திற்கு பின்னரே மிள்குடியேறினார்கள் இந்த விரட்டியடுப்பால் விவசாய செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த நிலமானது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்குமே நெல் உற்பத்தியால் அரிசியை வழங்கி தன்னிறைவு கண்ட மாவட்டமாகும். இவ்வாறான நிலப்பரப்புகளை மகாவிலி என்ற பெயரில் ஆக்கிரமித்து விட்டு தமிழர்களை விரட்ட நினைப்பது எத்தகைய நியாயம். ஆட்சிக்குவரும் இனவாத அரசாங்கங்கள்தான் இத்தகைய முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் மாவட்டத்திற்கு பெறுப்பு கூறவேண்டிய மாவட்ட செயலர், பிரதேச செயலர் அவர்களும் இந்த இனவாத அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை துரத்தும் செயல்பாட்டில் இருக்கிறார்களா? சொந்த மண்ணிலிருந்து அகற்ற நினைக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் அஞ்சமாட்டோம். எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் சட்டி பானைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவேண்டியவர்களாக உள்ளோம். எனவே மகாவலி திட்டத்தை கைவிட்டு தமிழ்மக்களின் காணிகளை தமிழ்மக்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னேடுக்க வேண்டும் என்றார். இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு | Virakesari.lk
-
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நிலையில் குறித்த பிரதேசம் பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம் 1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் திட்டம் திட்டமிட்ட முறையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மூன்று நாட்களில் உங்களை மீண்டும் குறித்த பகுதியில் அனுமதிக்கிறோம் என்றனர். ஆனால் முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்குச் செல்வதற்காக நாம் காத்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த நிலையில் எமது காணிகள் எமக்கு ஒப்படைக்கப்படவில்லை. குறித்த பகுதி விவசாய காணிகளைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில் எமது மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர நன்றாகத் திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டனர். சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் காணிகளைப் பிடித்துக் கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வர வில்லை. ஆகவே தமிழ அரசியல்வாதிகள் இனியாவது உங்கள் வாய்களைப் பாராளுமன்றத்தில் திறவுங்கள். முல்லை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது – குறியீடு (kuriyeedu.com)
-
சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம்
சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன், கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் – குறியீடு (kuriyeedu.com)
-
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். Posted on May 7, 2024 by சமர்வீரன் 44 0 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. நூலின் அறிமுக உரையினை திரு.றகு அவர்கள் நிகழ்த்த மதிப்பீட்டு உரையினை தமிழ்க்கலை அறிவு கூட தலைமை ஆசிரியர் திருமதி குமுதா இளமுருகன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து நூலினை தமிழர் ஒருங்கினைப்பு குழு பெல்சிய கிளைப்பொறுப்பாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின் முதல் பிரதியினை பெல்சிய கிளையின் மாவீரர் பனிமனைப்பொறுப்பாளர் செல்வன் கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.பின்னர் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று இனிது நிறைவு பெற்றது. க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். – குறியீடு (kuriyeedu.com)
-
பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!
பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! Posted on May 5, 2024 by சமர்வீரன் 47 0 பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)
-
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி Posted on May 1, 2024 by சமர்வீரன் 132 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி – குறியீடு (kuriyeedu.com) பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 Posted on May 8, 2024 by சமர்வீரன் 48 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
தமிழர்கள் வீதியில் இறங்கிப்போராடியதைத் தவிர்த்து, பலஸ்தீனர்களால் பல்கலைக்கழங்களுள் போராடுவதுபோல் ஏன் தமிழர்களால் முடியாதுபோனது. குறைந்தளவு மாணவர்களாயினும் எங்காவது முயற்சியாவது செய்யப்பட்டதா? துருக்கி இஸ்ரவேலின் உறவை முறித்ததுபோல் ஏன் NATO இல் இருந்து வெளியேறவில்லை.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சிறையில் கற்று பிரபல தேசியக்கட்சியின் அரசியல்வாதியாக வெளியேவந்தாலும் ஆச்சரியப்படமுடியாது. நன்றி.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
படங்களும் பார்வைகளும் சிறப்பு. சில இடங்கள் நான் சென்ற இடங்களாகவும் உள்ளன. காட்சிக்குள் நானும் இணைவதுபோன்றதொரு உணர்வு. சிறுகுறிப்புப்போல் இருந்ததாலும் அவை கனதியான செய்திகளைச் சொல்லி நிற்கிறது. படங்களைப் பேசவைத்துள்ளீரகள். வலைஞனைத்தொலைத்தவிட்டு நினைவுகளோடு அலையும் இனமாகத் தமிழினம். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். Posted on April 29, 2024 by சமர்வீரன் 602 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து அகமேந்தியதைத் தொடர்ந்து அகவை நிறைவுவிழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்திருந்த யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக்கட்சியின் ஸ்ருற்காட் மாநகரசபை உறுப்பினர் திருமதி மரினா சில்வெறி, கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் இளையோர் அணித்தலைவர் திரு.லியோனாட் றெசிமண், ஸ்ருற்காட் சிறீ சித்திவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ சிவகுமார் குருக்கள், யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்சன் கோட்டப்பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், தமிழாலய கீதத்துடன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின. பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் தமது செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஏற்றமாகப் பெற்றவர்களையும் அதனைப் பெறவைப்பதற்காக உழைக்கும் பணித்திறனாளர்களையும் மதிப்பளிக்கும் பெருவிழாவாக இவ்வகவை நிறைவு விழா தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. முன்சன் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. நாகராசா நிர்மலதாசன் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும். தமிழ்த்திறன், கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முன்சன் தமிழாலயம் 1ஆம் நிலையையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் நிலையையும் பெற்றுக்கொண்டன. தமிழ்த்திறன் போட்டியில் முதலாவது நிலையைத் தமதாக்கிய முன்சன் தமிழாலயம் மாமனிதர் இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதைக் கையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியில் மாநிலப் மட்டத்தில் முன்சன், ரூட்லிங்கன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றதன் அடிப்படையில் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 21:00 மணிக்கு அகவை நிறைவு விழா தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்குடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் திட்டமிடலுக்கேற்ப 34ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களிலும் சிறப்புடன் நிறைவடைந்தது. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். – குறியீடு (kuriyeedu.com)
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.
வாழ்த்துகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழாவை அணியம் செய்து, அணியாக நின்று செயற்பட்டுவரும் இளையோருக்கு உரித்தாகட்டும். வாழ்த்தியமைக்கு நன்றி.
-
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது Posted on April 23, 2024 by தென்னவள் 20 0 ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது – குறியீடு (kuriyeedu.com)
-
யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.
யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை. Posted on April 23, 2024 by தென்னவள் 18 0 யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.யாழ். ஊடக அமையம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களிற்கு சேவையாற்றவென அரச நிதியிலிருந்து சம்பளம் பெறுகின்ற எந்தவொரு அரச பணியாளரும் தமது சேவைகள் தொடர்பில் சமானியன் ஒருவனது விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியவர்கள் என்பது பரகசியமான தொன்றல்ல. அவ்வகையில் வடக்கு ஆளுநரும் அவரது நிர்வாக கட்டமைப்பும் விதிவிலக்காகவும் முடியாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கழுத்தை நெரித்து தடுக்க ஆட்சியாளர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவது தெரிந்ததொன்றே. அதிலும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென இலங்கை அரசு அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றது. ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் வெற்றிக்கான கனவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிவிட தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தே வருகின்றனர். இத்தகைய சூழலில் நல்லாட்யொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக பொலிஸாரைப் பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்றதாகவோ அல்லது பாராட்டத்தக்க நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை தோற்றுவித்து பாராட்டு பெற்றுக்கொள்ளவோ வடக்கு ஆளுநர் தவறியே உள்ளமை இத்தகைய அச்சுறுத்தல் பாரம்பரியத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய ஊடகத்துறை கடந்து வந்திருந்த பாதையொன்றும் மகிழ்ச்சிகரமானதாக கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை. அது மரணங்களும் வலிகளும் நிரம்பியதாகவே இருந்திருந்தது. வடகிழக்கு தமிழர் தாயகங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது கடந்த காலங்களில் அரச இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளால் 39 பேர் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஊடகவியலளார்கள் நாட்டை விட்டு உயிருக்கஞ்சி வெளியேறிய இருண்ட நாட்கள் பற்றியெல்லாம் வடக்கு ஆளுநர் சிலவேளைகளில் அறிந்திருக்காதிருக்கலாம். ஆனால் அவற்றினையெல்லாம் தாண்டி பயணித்த ஊடக வரலாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களிற்கும் பணியாற்றிய ஊடகவியலாளர்களிற்கும் உள்ளதென்பதை மீண்டுமொரு முறை ஆளுநர் கவனத்திறகு எடுத்து செல்ல விரும்புகின்றோம். ஊடகவியலாளர்களது மரணங்களிற்கு நீதி கோரிய கோவைகள் பலவும் இதே பொலிஸ் களஞ்சியங்களில் கிடப்பிலுள்ளமையும் இரகசியமொனதொன்றல்ல. அவ்வகையில் மக்கள் வரிப்பணத்தில் நல்லதொரு மக்கள் சேவையினை வடமாகாணசபை வழங்கவேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கங்களை தம்மை செம்மைப்படுத்த முன்வைக்கப்பட்டதொரு கருத்தாக கவனத்தில் கொள்ள வடக்கு ஆளுநர் தவறியமை நல்லாட்சி தொடர்பில் கேள்விகளையே எழுப்பி நிற்கின்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிய பின்னராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் சர்வாதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்படுமென்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றுள்ளது. யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை – குறியீடு (kuriyeedu.com)
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
ஐ.நா.சபை ஒரு தோல்வியுற்ற அமைப்பாகிப் பதினைந்து ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. ஈழத்திற் தமிழின அழிவுக்கு மௌனமாக அனுமதித்து வெளியேறியபோதே அதனது தாற்பரியம் உலகறிந்தது. ஐ.நாவை அமெரிக்க அவையென்பதே பொருந்தும். நன்றி
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்.
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். Posted on April 21, 2024 by சமர்வீரன் 492 0 யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற்றிடும் வகையிலே “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் நினைவு அரங்கமாகத் தென்மேற்கு மாநில அரங்கைத் தமிழ்க் கல்விக் கழகம் அணிசெய்திருக்க, காலை 09:30 மணிக்குத் தமிழ்மொழியையும் தாய்நிலத்தையும் காத்திட விதையானோரின் நினைவோடு பொதுச்சுடரேற்றி விழாத் தொடங்கியது. ஈழதேசத்தைக் காத்திட அறவழிப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. “நாட்டுப்பற்றாளர்” வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களது திருவுருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் அரசவை உறுப்பினர் திரு.புளோறியன் மாயர், லண்டவ் வெளிநாட்டவர் ஒருங்கிணைப்பு அவை உறுப்பினர் திரு.திருட்டின் வோங், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்லண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் துணைப் பொறுப்பாளர் திரு.கந்தையா பூபால், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் வீஸ்பாடன் நகரச் செயற்பாட்டாளர் திருமதி சிறீமதி சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கால்ஸ்றுகே நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.நாராயணபிள்ளை தேவஞானம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் சுவேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புறுக்சால் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.திருநாவுக்கரசு ஜீவராசா ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிப்புகளும் நடைபெற்றது. கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் பிராங்பேட் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் பிராங்பேட், கால்ஸ்றுகே, லண்டவ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 40 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்து வரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தென்மாநிலத்துக்கான அகவை நிறைவு விழா 27.04.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். – குறியீடு (kuriyeedu.com)
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.
விசுகு அவர்களுக்கு வணக்கம், அவர்கள் இருவரையும் நேற்றுமுன்தினம் சந்தித்தேன். அவர்களுக்கு மாணவர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்த காட்சி மனநிறைவுக்குரியது. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். Posted on April 16, 2024 by சமர்வீரன் 714 0 யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களான பீலபெல்ட் நகரத்தின் துணைமுதல்வர் திரு.இன்கோ நூர்ன்பேர்கர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடராசா திருச்செல்வம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.இளையதம்பி துரைஐயா, தமிழர் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.சுந்தரலிங்கம் கோபிநாத், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி யமுனாராணி தியாபரன், பிறீமன் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. பேர்லின் தமிழாலயத்தின் ஆசிரியர் “தமிழ் மாணி” திருமதி ரஞ்சினி கருணாகரமூர்த்தி அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 25 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 17:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா மத்தி, வடமத்தி மற்றும் வடமாநிலத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்தில் 20.04.2024 சனிக்கிழமையும் தென்மாநிலத்தில் 27.04.2024 சனிக்கிழமையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். – குறியீடு (kuriyeedu.com)
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். Posted on April 15, 2024 by சமர்வீரன் 847 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் கொண்டாடி வருகிறது. 34ஆவது அகவை நிறைவு விழாவின் முதல் விழாவை மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கில் 06.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் கொண்டாடியதைத் தொடர்ந்து, தனது அடுத்த விழாவை 13.04.2024 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் அரங்கில் கொண்டாடியது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த என்னெப்பெற்றால் றூர் மாவட்ட நிர்வாகி திரு. ஒலாவ் சாடே, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலச் சிறப்புப் பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஜெயக்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலம் 1இன்; பொறுப்பாளர் திரு.முத்துவேல் ஜெயவலதாஸ், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் மத்தி மற்றும் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கிருபாரதி சிவராம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் துணைப் பொறுப்பாளர் திரு.லதக்குமார் சந்திரன், வாறன்டோர்வ் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. திரு.சதானந்தம் இராஜேந்திரம், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்களின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து விழாவை வளப்படுத்தின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. டோட்முன்ட் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.வல்லிபுரம் மனோகரன், கேர்ன தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திருமதி சறோஜினிதேவி தங்கரட்ணம், மால் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.செல்லத்துரை சிவராசா, வாறன்டோர்வ் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.சதானந்தம் இராஜேந்திரம், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திரு.கந்தையா அம்பலவாணபிள்ளை ஆகியோர் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் வாறன்டோர்வ் தமிழாலயம் 1ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் வாறன்டோர்வ், போகும், எசன் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 41 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள மற்றைய மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். – குறியீடு (kuriyeedu.com)
-
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள் : தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு வலி.வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதம்
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள் : தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு வலி.வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதம் 21 APR, 2024 | 06:33 AM ஆர்.ராம் வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு ஒருமாத கால அவகாசத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகரவை தலைமையாகக் கொண்ட மேற்படி குழுவின் செயலாளர் சூலா ஹேரத் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வலிகாமம் வடக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் 05-03-2024அன்று சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் பாராளுமன்ற குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணிப் பிரச்சினையானது இன முரண்பாடுகளை மையப்படுத்தி வேரூன்றி இருப்பதாலும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாலும் ஆழமாக ஆராயப்பட்டது. அதனடிப்படையில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ள காணிகள் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள காணிகளின் பதிவுகள் அனைத்தும் 2017ஆம் ஆண்டே மேற்கொள்ளப்பட்டள்ளதோடு விகாரை அமைந்துள்ள காணியானது ஐந்து பகுதிகளாக பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது பாராளுமன்ற மனுக்கள் பற்றிய குழுவின் பரிந்துரையின் மூலம் தெரியவந்துள்ளது. அக்குழுவின் இராணுவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம், 8.98 ஏக்கர் பகுதியானது விகாரை கொண்டிருப்பது பட்டய நில அளவையாளர்களால் அளவீடு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 1956ஆம் ஆண்டு வரைபடத்துக்கு அமைவாகவும், 1971ஆம் ஆண்டு நகரத்திட்டமிடல் வரைபடத்துக்கு அமைவாகவும் குறித்த விகாரை அமைந்துள்ள பகுதியில் உண்மையில் மேலதிகமான நிலங்கள் உள்ளதா என்பதை கருத்தில் கொள்வது பொருத்தமானது. அதனடிப்படையில், விகாரையைச் சுற்றியுள்ள காணிகளையும், விகாரை அமைந்துள்ள எல்லைக்குள் உள்ள காணிகளையும் அளவீடு செய்து விகாரை உள்ள பகுதியில் தனியார் காணிகள் காணப்படுமாயின் அதற்குப் பதிலாக அருகாமையில் உள்ள வேறு பொருத்தமானி காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், திஸ்ஸ ரஜமகா விகாரைக்குச் சொந்தமான காணிணை முன்னுரிமை அடிப்படையில் விகாரைக்கு வழங்குவதோடு அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக அடுத்த ஒருமாத காலத்துக்குள் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகின்றது என்றுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள் : தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு வலி.வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதம் | Virakesari.lk
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். நன்றி
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!"
தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக.
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி தமிழ்த்திறன் 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
திரியோடு தொடர்புடைய காணொளியென்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச் நன்றி - யூரூப்
-
ஒரு கிலோ விளாம்பழம்
அழகான எழுத்துநடை. எனக்கு முறிப்புக் குளத்தால் ஏறி அப்படியே கோணாவில் ஊடாக மல்லாவி வரை ஓடிய நினைவைத்தருகிறது. அந்த வீதியிலும் விளாமரங்களைக் காணலாம். இன்று இயற்கை தொலைந்த செயற்கை வாழ்வினுள் தொலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் நாட்டை மட்டுமல்ல எம்மையும் சேர்த்தே தொலைக்கின்றோம். நன்றி