Everything posted by nochchi
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Gaza -வுக்குள் நகரும் Israel இராணுவம்..அடுத்து என்ன? | Niraj David's Nitharsanam | IBC Tamil | Hamas
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சாத்தான்கள் 'சாது' காளாக மாறி வேதம் ஓதுகிறார்களாம். அதனால் எவளவு பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாதாம். அரச பயங்கரவாதம் அனுமதிக்கக்கூடியதாம். இது இவர்களின் சந்தர்ப்பவாத சனநாயகம். ?????????????????
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி இங்கே நான் 'அமைதிகாத்தல்' என்பதை பக்கச்சார்பற்றிருத்தல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். யாரையும் எதையும் அறியவேண்டாம் என்று எங்கேயும் நான் சுட்டவில்லை. அறிவதன்வழியே நாம் எதைக் கற்றுக்கொள்கின்றோம். எந்த அடைவுகளை எட்டுகின்றோம் என்பதை திட்டமிட்ட நிலப்பறிப்பையும் இன அழிவையும் எதிர்கொள்ளும் இனமென்ற நிலையில் இருந்து நோக்க வேண்டும். பலஸ்தீனப்பகுதிகளில் இன்று நெந்தன்யாகு செய்வதையே (டட்லியிலிருந்து ரணில்வரை) கந்தளாய் முதல் மயிலந்தமடு வரை நில அபகரிப்பு சிங்களக்குடியேற்றம் எனத் தொடர்கிறது. எதுவும் செய்ய முடியாதவர்களாகப் புலம்பெயர் தமிழர்களாகிய நாமும் இருக்கின்றோம். இதிலே நாம் யார் பக்கம்? நன்றி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாகிவிட்ட போரை ஆதிக்க சக்திகளால் மட்டுமே நிறுத்த முடியும் என்பதையே ஐநாவிலே குப்பையில் போடப்பட்ட போர்நிறுத்தம் கோரிய மனு சுட்டுகிறது. ஐ.நா 2008இல் தமிழீழத்திலேயே தோற்றுவிட்டது. எனவே அது ஐ.நா சபையல்ல அறிக்கைச்சபை மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகளுக்கான சபை போன்ற பாத்திரங்களையே வகிக்கிறது. ஐ.நா உண்மையில் அதிகாரமுள்ள சபையெனில் சிறிலங்காவால் தமிழீழத் தமிழர்கள் மியன்மாரால் ரொகிங்கியர்கள் துருக்கியால் குர்திஸ்கள் இந்தியாவில் காஸ்மீர் மணிப்பூர் என இன அழிவுகள் தொடராது தடுக்கப்பட்டிருக்கும். ஐ.நாவில் கூடும் ஆதிக்க சக்திகளின் சதுரங்க ஆடுகளமாகிவிட்டபின் ஐ.நாவை அப்பாவி மக்கள் நம்புவதால் பயன் உண்டா? நன்றி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இங்கே யாழிலும் இருதரப்பு ஆய்வாளர்களது(யூத,பலஸ்தீன)கருத்துகளிலும் ஒருவகைக் கணக்கெடுப்பு மனப்பாங்கு மிளிர்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். அதனையும் யோசியத்தோடு ஒப்பிடலாமா? இங்கே நான் குணா அவர்களது பார்வை சரியானது என்ற நோக்கில் எழுதவில்லை. மனிதப் பேரவலம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும் இனஅழிவைச் சந்தித்த தமிழ் இனத்தின் முகமாக இருக்கும் புலத்தமிழரில் ஒரு பகுதியினர் துடுப்பாட்டப் போட்டியின் வர்ணனைபோன்று எழுதும் மனப்பக்குவத்தைப் பெற்றிருப்பதுகூட பெரும் வளர்முகம்தான். யூதரும், பலஸ்தீனரும் தத்தமது இறைமைக்கான போராட்டத்தில் இதில் தமிழீழத்தவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். யூதருக்குப் பலம் வாய்ந்த பல்வகைப் படைகளுடனும், பலம்வாய்த அரசாகவும், மேற்கினது செல்லப்பிள்ளையாகவும், பலஸ்தீனருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசும் படைகளுமாகவும் அயலிலே அவர்களுக்கு கைகொடுக்கப் பெரும் அரபு நாடுகளுமாக இரு பெரும் அணிகளாக உலகே பிரிந்து நின்று உதவுகிறது. ஆனால், தமிழீழத்தவர் மீதான இன அழிப்பில் உலகோ ஒரு நேர்கோட்டில் நின்று எம்மை அழிப்பதற்கு உதவியது. உலகின் இந்த அசைவின் ஊடாகவே எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகினது ஏழை நாடுகள் பல திவாலாகியது தனியே கொரோனா மட்டுமல்ல. ரஸ்ய – உக்ரேன் போரும் ஒரு கரணியமென்பது அனைவரும் அறிந்தது. இன்று பல வளர்ந்த நாடுகள் உக்ரேனுக்கு முண்டுகொடுத்து விழிபிதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப் போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும். யூதர்களோ பலஸ்தீனர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதுபோன்றே தற்போதைய மனிதப்படுகொலைகள் சுட்டுகின்றன. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்குப் எப்போதும் முதற்பலியாவது அப்பாவி மக்களே என்பதை இவ்வுலகு அறிந்திருந்தும் அதை அனுமதித்திருப்பதை எப்படி நோக்குவது. யூதப் பொதுமக்களை கமாஸ் கொன்றது பயங்கரவாதமென்றால், இஸ்ரேல் பலஸ்தீனப் பொதுமக்களைக் கொல்வதும் பயங்கரவாதமென்றே கொள்ளமுடியும். இரு பயங்கரவாதமும் உலகுக் கேடனதே. இரண்டும் ஒரே கனதியானவையே. நாமும் இனஅழிப்பிற்குள்ளாகும் இனமென்றவகையிலே உலகில் நடைபெறும் இன அழிப்புகளை நோக்க வேண்டியவராயுள்ளோம். நன்றி- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் யுத்தத்தில் அமரிக்க போர்க்கப்பல் எதற்காக? Israel Palestine War?/ kUNA kAVIYALAHAN இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே உங்கள் தொடர் செயற்பாட்டிற்கு நன்றி.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி நடந்தால் நல்லது. ஆனால், நான் நம்பவில்லை. கொல்லப்பட்டு தெருவோரத்திலே வீசப்பட்டிருக்கும் பலஸ்தீனர் மீது யூதாஸ் உச்சாபோவதைக் கண்டிக்க யாருமில்லை. இந்த இலட்சணத்தில் எங்களைப்பற்றிப் பேசுவார்கள்?- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர்கள் பேசி முடிப்பதற்குள் இஸ்ரேல் அழித்து முடித்திருக்கும்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உக்ரேன்-ரஸ்யாப் போரினைத் தொடர்ந்து இன்னொரு அதியுயர் உணர்முனையில் போர் தொடங்கியுள்ளது. இரண்டுமே ஆக்கிரமிப்பு எதிர் விடுதலை என்ற கோணத்திலேயே நடைபெறுகிறது. இரண்டுமே உயிரழிவுப்போர்கள் என்றவகையில் ஏற்புடையனவல்ல. இதிலே தமிழீழத்தவர் என்ன செய்ய முடியும். எமது இனத்தின் அழிவையே தடுக்கமுடியாது கைகளைப்பிசைந்துகொண்டு புலம்பெயர்நாடுகளின் தெருக்களில் நின்று கூவென்று அழைத்தபோதோ, அழுதுபுலம்பியபோதோ யாரும் எம்மைத் திரும்பிப்பார்க்கவில்லை. இதே தெருக்களில் எம்மை வேடிக்கை பார்தவாறு யூதரும், பலஸ்தீனியரும், உக்ரேனியரும், ரஸ்யரும் கடந்துபோனார்கள். அதேவேளை இவர்களின் அரசுகளும், அதிகார சபையும் சிறிலங்காவுக்கு ஆயுத, தொழில் நுட்ப, புலனாய்வு எனப்பலமுனை உதவிகளைத் தாராளாமகச் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்று செய்தார்கள். அதற்காக நாம் இவர்களை எதிரிகளாகக் கொள்ள முடியாதுதான். ஆனால், இந்தச் சுற்றினுள் நாம்போய் விழுந்து புதிய எதிரிகளை உருவாக்காதிருப்பதை பற்றிச் சிந்திக்கலாம் அல்லவா? நன்றி- மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- 124 replies
-
-
- 1
-
-
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
-
Tagged with:
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
- சாள்ஸ் அன்ரனி
- தம்பி
- தலைவர்
- தலைவர் மாமா
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- துவாரகன்
- துவாரகா
- தேசியத் தலைவர்
- பாலச்சந்திரன்
- பாலா
- பாலாயிரம்
- பிரபாகரன்
- பிரபாகரன் மதிவதனி
- பெரியவர்
- பொக்கான்
- மதி
- மதி மாமி
- மதிமகள்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- வேலுப்பிள்ளை மனோகரன்
- தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
வஞ்சம் நிறைந்த அரசியல் எம் நெஞ்சம் நிறைந்த புலிப் படைவீரரை வஞ்சத்தழித்து வீத்தியபோதும் நெஞ்சம் கனத்திடும் நினைவுகளூடே நிலைத்தேயிருப்பர் நிலைத்தேயிருப்பர்! வீரவணக்கம்!- 1199 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அன்றே இந்த அரசியல் தலைமைகள் ஆயுதஅமைப்புகளையும் இணைத்து ஒரு அரசியல் திட்டத்தை தயாரித்து ஒரு சமஷ்டித்தீர்வுக்கான ஆவணமாக இந்திரா அவர்களிடம் கையளித்து யே.ஆருக்கு அனுப்பியிருந்தால், யே.ஆரை மாவட்டசபையிருந்து மாற்றியோசிக்க வைத்திருக்கலாம் அல்லது பிடிவாதமாக இருப்பின் இந்தியாவிடம் பந்தைத் திருப்பிவிட்டிருக்கலாம். கையாலாகத அரசியற் தெளிவற்ற தலைமைகள். இன்றும்மாறாது அதே அச்சில், காலச் சுழற்சியில் வந்து நிற்கிறது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் உணர்வார்களா?- சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
தென்னாசியாவில் மக்கட்தொகையில் முதலிடம் வகிக்கும் ஒருநாடு(தமிழர் எதிர்நிலை,தமிழ்மொழி அழிப்பு,கிந்தி,கிந்து மதத் திணிப்பு என்பவற்றைக் கடந்து)என்ற வகையில் மிகச் சிறந்த வெற்றியே. பொதுவாக இந்தியர்களது பெருமைக்குணம் மாறாதது. அவர்கள் ஒரு கூட்டத்தில் முதலில் ** விட்டாலும் அதனையும் பெருமையாகக் கூறிவிட்டுச் செல்லக்கூடியவர்கள். வெட்க துக்கம் பாராது கடந்துவிடுவர். அதுகூட அவர்களது வளர்ச்சிக்குக் கரணியமாக இருக்கலாம். அயல்நாடென்ற வகையில் பாராட்டுதற்குரியதே. மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளூர் அரசுகளின் ஊழலற்ற நிர்வாகத்தினாலும், செயற்றிறன் மிக்க அதிகாரிகளினாலும் மட்டுமே அடையமுடியும்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த இனக்கொலைகளினதும் சொத்தழிப்புகளினதும் முக்கிய பங்காளி. அவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முனைபவராம். சரியாக யே.ஆரைப்(மாமனாரை)போலவே சாதுரியமாகக் காய்நகர்த்தித்தமிழினத்தை இனிமேல் எழாதவாறு முழுமையாகச் சிறிலங்காவுக்குள் அமிழ்த்தி அழிக்கும் நோக்கிலே செயற்படுகின்றார். எங்கே இந்த சிங்களக்கொடியாட்டிய சம் அவர்கள். அவர் இவற்றை அறியாதவரா அல்லது அப்போதென்ன கோமாவில் இருந்தாரா? பிறகேன் குட்டிக் குள்ள நரிக்குக் கடிதம்?- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த வரலாற்றுப் பதிவைப் படித்தபோது மனதிலே எழுகின்ற சோகமும் வலியும் இன்றைய அரசியல்வாதிகள்மீது வெறுப்பையே வரவைக்கிறது. இனவழிப்பில் கைதேர்ந்த ஐ.தே.கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்கள் எவளவுதூரம் சூடு சுறணையற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழினம் முதலில் எந்வொரு சிங்களக் கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முன்வரலாமா? இவர்கள் செய்வித்த, செய்கின்ற கொடுமைகளை மறந்துவிடலாமா? ஏனிந்தச் சூனிய நிலையில் மீண்டும் மீண்டும் தமிழினம் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்று புரியாமல் உள்ளது. யே.ஆரின் அதே தந்திரத்தோடு நகரும் ரணிலையும் நம்புவதற்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர் என்பது எவளவு மதியீனமானது. ஏதிர்காலத்திலாவது தமிழ்க் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் புலமையாளர்கள் ஒன்றினைந்து தமிழ்த் தேசியத்திற்கான பொது முன்னணியொன்று கட்டமைக்கப்பட்டு கட்சிகளுக்கான முதன்மை நிலை களையப்பட்டு, தமிழரது தேசியப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி நகரும் நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதிலே புலமாக இருந்தாலும் தாய்நிலமாக இருந்தாலும் ஒரு நிலைப்பாட்டுடன் ஒரு அணியாகத் தாயகத்திலும் புலத்திலும் நகர்வதே தமிழருக்கு விடிவைத்தரும். சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவரையும் தமிழினம் ஆதரிப்பதைக் கைவிடுவதோடு, அவர்களின் சலுகைகளுக்கு ஏமாறாது இருக்கும் வகையில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்திலே தமது கட்சிக்கு மட்டும் முதன்மை தேடும் கட்சியோ அல்லது தனிநபரோ இனங்காணப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் பரப்புரைகளின்போது பேரிவாதக் கட்சிகள் செய்த நிலப்பறிப்பிலிருந்து இன அழிப்புவரையான தொகுப்பினைத் தமிழரிடையே காட்சிப்படுத்தும் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கடந்தகாலத்தில் தமிழர் பட்ட அவலங்கள் இளைய தலைமுறையினரிடம் பரவச்செய்யப்படுதல் வேண்டும். அதிலே டொன் ஸ்ரெபான் செனனாயக்க முதல் இன்றைய ஆட்சியாளர்வரை செய்த, செய்துவரும் தமிழின அழிப்புவிடயங்கள் முழுமையாக நிரலாக்கம் செய்யப்படுவது அவசியமாகும். இலங்கைத்தீவு முழுவதும் தமிழினத்தின் குருதிச்சுவடுகள் பரவியுள்ளதை அறியாத தமிழ்ப் பரம்பரைக்கு இவற்றை நாம் கடத்தாதுவிடுவதும் ஒருவகை வரலாற்றுத் துரோகமே. றஞ்சித் அவர்களே, நாம் செவிவழியாகக் கேட்டபோதும், இடம்பெயர்ந்து வந்தோரை வரவேற்றபோதும் கிடைக்காத பல அரிய வரலாற்றுண்மைகளும், எமது இனம் எதிர்காலத்தில் உறுதியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளெனும்; தீரம்மிகு அமைப்பின் பின்னைய நடவடிக்கைகளின் நியாயப்பாடுகளுக்கும் மேலேயுள்ள இன அழிப்பினதும் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் ஊறிப்போன பேரினவாதமுகத்தினையும் ஒவ்வொரு துகள்களாகப் பதியமிட்டுவருகிறது.களத்தினதினது நோக்கத்தை நகர்த்தும் உங்களின் அயராத முயற்சிக்கு நட்பார்ந்த நன்றியுடன் பாராட்டுகின்றோம். யாழ் களம் ஏதாவது சிக்கலுக்குட்பட்டாலும் தாங்களவாது பதிவுகளைச் சேமித்து வைப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
றஞ்சித் அவர்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் அதற்கானதொரு வழிவரைபடமோ திட்டமோ ஆவணமாக இல்லாதிருந்திருக்கலாம். இரு பக்கத்திலும் உயிரப்பாதுகாப்பற்ற அச்ச உணர்வு மற்றும் 6ஆம் திருத்தச்சட்டத்தால் ஏற்பட இருந்த அழுத்தம் போன்றவும் அவர்களைத் தம்மைப்பாதுகாக்கும் நிலையை நோக்கித்தள்ள அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.- வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம். இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன்,விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே. சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே நன்றி, தொடருங்கள். ஆட்சிகள், அதாவது ஆளும் தரப்புகள் மாறினாலும் எப்படிச் சிங்களம் திட்டமிட்டு இன அழிப்பை ஒரு நிரலாகவும், தெளிவாகவும் செய்துவருகிறது. சமகாலத்தில் வேறுநாடுகளில் நடைபெற்ற இன அழிப்பக்குத் தண்டனை, தீர்வு என்று நிலைமை முன்னேறிச் செல்ல நாமேன் பின்தள்ளப்படுகின்றோம்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தங்கள் நேரத்திற்கும் முயற்சிக்கும் நன்றி. யூலை (1983) இன அழிப்புக்காலத்தில் பொருத்தமான பதிவாக உள்ளது. இன்றும் தொடரும் அவலமாக நடந்தேறுகிறது. யூலையில் யே.ஆரால் திட்டமிடப்பட்டிருந்த இனஅழிப்புக்கான திட்டங்களை(இந்தப்பதிவிலே சுட்டியவாறு)தமிழினம் எதிர்கொள்ள முடியாதநிலை அன்றுமட்டுமல்ல, இன்றும் இருக்கின்ற ஆட்சியாளரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவரும் இன அழிப்பை இதுவரையான பட்டறிவின்பாற்பட்டுத் தமிழ்த் தலைமைகள் சிந்திக்கமறுப்பதேன்? ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் கொண்ட கட்சிகளாகவும், வெற்றுக்காட்சிகளாகவும், வெறும் அறிக்கைகளாகவும் தொடர்வதேன்? சாதாரணமானவர்கள் செய்கின்ற தொண்டில் ஒரு துகளளாவது இந்த அரசியல்வாதிகள் செய்கிறார்களா?- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அதனால்தான் மாபெரும் ஆளுமையாக இந்த உலகு உள்ளவரை படிக்கப்படும் ஒரு படைத்துறை வல்லமையாகவும் எம் தலைவன். ரஞ்சித் அவர்களே நன்றி.- கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ஊடகங்களுக்கு செய்தி. உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்தோர் யாரென்றறியாத துயரத்துள் வெதும்பும் நிலை. இந்த அவலட்சணத்தில் ஐ.நாவும் மனித உரிமையும் என்று கதையளப்பு. - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.