Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🫢.............. உண்மையாகவா அண்ணா..................... எங்களூர் அம்மன் கோவில் திருவிழா நாட்களில் நாங்கள் ஊர்க் கட்டுப்பாடு, அம்மன் கண்ணைக் குத்துவார் என்று சொல்லி வளர்க்கப்பட்டு, 15 நாட்களும் கிழங்கு ரொட்டி தான் சாப்பிட்டுக் கொண்டு திரிந்தோம். அம்மன் திருவிழாவின் போது ஊரில் எல்லா ரொட்டிக் கடைகளிலும் கிழங்கு ரொட்டி மட்டுமே போடுவார்கள். உங்கள் இடத்தில் மேளம் அடிப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்................ என்னுடைய ஊரில் கோவிலில் இருந்து 300 மீட்டர், 400 மீட்டர் என்று அளந்தால் அடுத்த ஊர் வந்துவிடும். அந்த நாட்களில் கோவிலின் முன் பக்க அருகாமையில் (சிவாஜிலிங்கத்தின் வீட்டருகே), பின் பக்க அருகாமையில் (தலைவர் வீட்டருகே) என்று ஏராளமான ரொட்டிக் கடைகள் இருந்தன. இந்தப் பதினைந்து நாட்களும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர்த்து, ஏனைய நாட்களில் நல்ல கொத்துரொட்டி போடுவார்கள். கோவிலின் முன்பக்கம் இருந்த ரொட்டிக்கடை மிகவும் பிரபலம். 25 மீட்டர் தூரம் அல்லது குறைவாக வரும் என்று நினைக்கின்றேன். இதுவரை நல்லூரைச் சுற்றி அருகாமையில் இப்படியான கடைகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம் தான்............ அங்கிருக்கும் மக்களின் மனம் புண்படுகின்றது என்றால், கொஞ்சம் தள்ளி கடையை போட்டுக் கொள்ளுங்கள்................ ஈழம் ஒரு சிவபூமி, சைவர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படும் மற்றும் எழுதப்படும் போது, அவர்கள் வேறு ஒரு பிரதேசத்தை சொல்லுகின்றார்கள் என்ற உணர்வே இன்றுவரை ஏற்படுகின்றது. சிவசேனாவும், வேலன் சுவாமிகளும் அதைவிட அந்நியமாகத் தெரிகின்றார்கள்.
  2. முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.
  3. போதிய வேலை வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட பல நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் சில இட ஒதுக்கீடுகள் இருக்கின்றன. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் போக்கை காணலாம். நாட்டில் சில காரணங்களால் பின்தங்கிப் போனவர்களை முன்னோக்கி கொண்டு வரும், சமூகநீதியை வளர்க்கும் சரியான ஒரு நோக்கம் இதன் பின்னால் இருக்கின்றது. தற்காலிகமாக சில வருடங்களுக்காவது அரசதுறைகளில் சில இடங்களை அங்கு நீண்டகாலமாக அல்லது அங்கேயே பிறந்த ஈழத்தமிழ் பின்புலம் கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கலாம். உலகெங்கும் வெவ்வேறு தொழில்களுக்கான ஊதிய வித்தியாசங்கள் அந்தந்த நாடுகளில் இருக்கும் தேவை மற்றும் வழங்கல்களை பொறுத்து தான் அமைகின்றது. அத்துடன் நாட்டின் வருமானமும் இதை தீர்மானிக்கின்றது. சில வரலாற்றுக் காரணங்களும், அவை தவறானவை என்றாலும், இருக்கக்கூடும். ஊதிய வித்தியாசங்கள் குறைக்கப்பட்டாலும், வேலைகள் மற்றும் தொழில்களுக்கிடையேயான வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். Job versus Career என்று இந்த வேறுபாட்டைச் சொல்லலாம். செய்யும் வேலையில் முன்னே முன்னே சென்று அடுத்த கட்டங்களை, அதன் தொடர்ச்சியாக இன்னொரு வேலையை அடையலாமா, இல்லாவிட்டால் ஒரே இடத்திலேயே தங்கி நின்று விடுகின்றதா என்பது இதன் அடிப்படை வேறுபாடு. மேலும் உடல் உழைப்பு எவ்வளவு அதிகமாக தேவையாகின்றது என்பதும் இங்கே இன்னொரு பிரதான வேறுபாடு. மனிதர்கள் நடுத்தர வயதுகளின் பின் தாங்கள் செய்யும் வேலையை அதே வினைத்திறனுடன், செயல் திறனுடன் செய்ய முடியாமல் போகும் நிலை சில வேலைகளில் ஏற்படலாம். இது போன்ற காரணங்களாலேயே ஆரம்ப ஊதியம் குறைவாக இருந்தாலும், அடிப்படையில் தேவையான கல்வித் தகுதி மற்றும் பயிற்சிகள் அதிகமாக இருந்தாலும், இளைய தலைமுறையை ஒரு பக்கம் போக விடாமல் இன்னொரு பக்கமாக போங்கள் என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.
  4. நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் பலதும் மிகச் சரியான கவனிப்புகள், வசீ. சில வேளைகளில் 'என்னடா இது.................' என்று களைத்தும் போயிருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் பிறரை அல்லது பிற நிகழ்வுகளை குற்றம் சொல்லும், காரணமாகக் காட்டும் இயல்பு எங்களிடம் கொஞ்சம் அதிகமாக வந்து விட்டதோ என்றும் தோன்றும்................😌.
  5. இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள். குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது. பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும். தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.
  6. நந்தன் - புலவருடன் நாங்கள் நாலு பேர்கள் கூட்டணி வைத்ததற்காகவே லக்னோ ஒரு 240 அடிக்கவேண்டும்........................😜.
  7. ஆறு கோள்களும் ஒரு நேர் கோட்டில் வருவது என்பது இதைத்தான்........... புள்ளிகளை இப்பவே போட்டு விடலாம்................🤣. ஆறும் பத்தரை மாற்றுத் (24 காரட்) தங்கங்கள்..................😜.
  8. மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன். 'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன். வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள். தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு. ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே. இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள். வேறு சில தகவல்கள்: தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல. தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.
  9. அவரும் மற்றவர்கள் செய்வதையே செய்துவிட்டார்............... அவுட்டாகிப் போனார்............ ஜக்கம்மாவிற்கு ஜே................
  10. கடைசி இரண்டு ஓவர்களிலும் மும்பை பையன் சாருக்காக விளையாடினது போல இருந்தது...........
  11. எடுத்துக் கொண்ட சத்தியத்தை ஐந்து தடவைகளுக்கு மேலே வெளியே சொன்னால், அது இல்லாமல் போய்விடும் என்று ஒரு சத்திய விதி இருக்கின்றது, பையன் சார்.................🤣. ** மும்பை அணி கொஞ்சம் தள்ளாடுதே, அதனால் தான் இந்தப் புது விதி...................😜.
  12. 🤣................ முடிந்த வரைக்கும் தாய் சொல்லை மீறக் கூடாது தான்........ ஆனால் இங்கே அம்மா ஜக்கம்மா சொல்லவில்லை தானே........... மகன் தானே மும்பையை முழுதாக நம்பி வாக்குக் கொடுக்கின்றார்......... அதை அங்கே இங்கே அப்பப்ப மீறலாம் தானே.................😜. எப்படியும் என்னுடைய இந்த லாஜிக்கிலும் ஓட்டைகள் இருக்கும்........... செம்பா எப்படியும் விடப் போவதில்லை.....................🤣.
  13. நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடே, ஆனால் நீங்கள் அதைச் சொல்லியிருக்கும் விதம் குத்திக் கிழிப்பது போன்று இருக்கின்றது. ஊரில் நான் சிறு வயதில் இருந்த ஒழுங்கையின் தொடக்கத்தில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் அவர்கள் ஒரு குடும்பமாக வந்து கடை ஒன்றை சொந்தமாக நடத்தினார்கள். அவர்கள் எங்கள் ஒழுங்கையிலேயே ஒரு வீட்டில் வசித்தார்கள். அங்கு பலரும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெயரிலேயே அவர்களை பேச்சில் குறிப்பிடுவார்கள். நாங்கள் என்ன ஒரு சமூகமாக இருந்திருக்கின்றோம் என்று இப்பொழுது வேதனையாக இருக்கின்றது. அவர்களின் வீட்டில் என் வயதை உடைய ஒருவரும் இருந்தார். அந்த வீட்டுக்கார அக்காவின் தம்பி. சில காலத்தில் நானும் அவனும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவர்களின் கடையிலேயே வேலை செய்தான். பின்னர் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்................. நான் இங்கு யாழில் ஒரு வருடத்தின் முன் இணைந்த போது எழுதிய குறுங்கதை ஒன்று கீழே உள்ளது. இது இன்னொரு நிகழ்வு. இது கற்பனையில்லை. தலைப்பே தலைவிதியாக மாறியது போல இருக்கின்றது....................
  14. 👍................ நீங்கள் ஜக்கம்மா என்று எழுதுவதை இங்கே முன்னரும் பார்த்திருக்கின்றேன், பையன் சார். வேறு எவரும் எழுதியதாக நினைவு இல்லை. ஆதலால் ஜக்கம்மாவின் அருள் உங்களுக்கே.................🤣. நான் சிறுவனாக இருந்த போது, எங்களூர் தியேட்டரில் 'ஜக்கம்மா' படம் வந்தது. அப்பொழுது அதில் நடித்திருந்த நடிகர் ஜெய்சங்கர் தமிழ் ஜேம்ஸ் பாண்ட். பின்னர் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஜக்கம்மாவை தெய்வமாகக் கொண்டிருந்தார் என்று வாசித்திருக்கின்றேன். அவர் வழி வந்த குடுகுடுப்பைக்காரர்களும், முகம் பார்த்து பலன் சொல்பவர்களும் இன்றும் ஜக்கம்மா என்று சொல்லியே பலன் சொல்ல ஆரம்பிக்கின்றனர். வீரப்பையனும் ஜக்கம்மாவின் ஒரு புதல்வன் போல..................👍.
  15. 🤣................. சென்னை இந்த சீசனில் விளையாடியதைப் பார்த்த ஜக்கம்மா கிரிக்கெட் பார்க்கிறதை கைவிட்டு விட்டாராம்.............. ஆகவே நீங்கள் தற்செயலாக சத்தியத்தை மீற வேண்டிய ஒரு நிலை வந்தாலும் ஒரு பாதகமும் இல்லை, ஜக்கம்மா கண்டுக்கமாட்டார் ......................😜.
  16. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகங்களில் இதுவும் ஒன்று. அதற்கு அவர்கள் காரணமாக முன்வைத்த 'இலங்கை எங்களின் நட்பு நாடு...............' என்னும் காரணம் மிகவும் பொய்யான ஒன்று. 1993ம் ஆண்டில் சில குடும்பங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்தன. அவர்களை வவுனியாவில் ஒரு மண்டபத்தில் கொண்டு வந்து விட்டிருந்தார்கள். சில பாத்திரங்கள், ஆளுக்கொரு போர்வை, அவர்களின் கைகளில் ஆயிரம் ரூபாவோ என்னவோ. இது மட்டுமே அவர்களிடம் இருந்தது. அடுத்த அடுத்த நாட்களில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எந்த அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவவில்லை. அன்றைய வவுனியா இன்று போல இல்லை. அன்று வவுனியா நகரிலிருந்து மகாறம்பைக்குளம் தாண்டிய பின் முற்று முழுதாக காடாக இருந்தது. அவர்களில் சிலர் மகாறம்பைக்குளத்தில் இருந்து சில மைல்கள் உள்ளே இருக்கும் சாந்தசோலையில் குடிசை போட்டுத் தங்கினார்கள். குட்டிக் குட்டி குடிசைகள். மொத்தமுமே எட்டு அடிகள் x எட்டு அடிகள் அளவான ஒரு குடிசை. இது தான் ஒரு குடும்பத்தின் வாழ்விடம். வவுனியா நகர் வந்து போக சைக்கிள் வசதி கூட அவர்களிடம் இருக்கவில்லை. தொழில் இல்லை. எதுவுமே இல்லை. எவ்வளவோ முயற்சித்தார்கள் அந்த மனிதர்கள். பின்னர் மீண்டும் மன்னார் ஊடாக கடல் கடந்து மண்டபம் போய்ச் சேர்ந்தார்கள். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் சிறு குடியிருப்புகள், சில இலவசங்கள் மற்றும் அங்கங்கே கிடைக்கும் சில வேலைகள், உதாரணம்: நாமக்கல் பகுதிகளில் கோழிப்பண்ணைகளில் கிடைக்கும் வேலைகள், என்று எம் மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்பும் எண்ணத்தில் இல்லை. அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளுக்கு இலங்கையுடன் எந்த விதமான உணர்வுப் பிணைப்பும் இல்லை. இவர்கள் அந்தச் சூழலில், அதே குடியிருப்புகளில் அமுங்கிப் போகாமால், அந்த நாட்டில், அந்த சமூகத்தில் எப்படி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அவர்கள் முன் இருக்கும் சிக்கல்.
  17. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகின்றது, அண்ணா................ இங்கு களத்தில் எழுதப்படும் பல கருத்துகளை அவரவர் சொந்த விருப்பங்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் எப்போதோ வந்துவிட்டது. அவை நடைமுறை உலகில் இல்லாதவை, எத்தனை தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும். நேற்று தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை. ஒரு இடத்தில் இலங்கை தமிழர்களின் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து விட்டது என்று செய்தியில் காட்டினார்கள். அங்கு குடியிருப்பவர்கள் அந்த ஊரில் இருக்கும் அங்கன்வாடியில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் செய்தியாளர்களிடம் கதைத்தார். அவருடைய தமிழில் ஈழ அடையாளம் எதுவுமே இல்லை. அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை போல. இது தான் நிஜ உலகம்.
  18. இவர் ஒரு பாகிஸ்தானியர். இங்கு பலருக்கும் நன்றாகவே தெரிந்தவர். இவர் என்ன சொல்லுகின்றார் என்று கேட்டுப் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=S3DH4DtFp-8 நாங்கள் எல்லாம் அங்கே போய் குடியிருக்க முடியாது. எந்த வெளியாருமே அங்கே போயிருக்க முடியாது. ஒரு விடுமுறைக்காகக் கூட அங்கே நாங்கள் போவதில்லை. இன்று இந்தியாவில் ஒரு ஈழத்தமிழ் குடும்பத்தினருக்கு அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் மனவருத்தமான செய்தி. ஆனால், பாகிஸ்தானுக்கு போய் அங்கே வாழுங்கள் என்று நாங்கள் அவர்களுக்கு சொல்ல முடியுமா...... இது தான் உலகில் நாடுகளுக்கிடையேயான வித்தியாசம்...................
  19. இந்தச் செய்தி மனதைப் பிசைந்தது. இந்தியாவும் அகதிகளாக எம்மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாதுள்ளது. உலகிலுள்ள பல நாடுகள் இலங்கைத் தமிழர்கள் பலரை அகதிகளாக ஏற்காமல் திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். சிறையில் வைத்து இருந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியா இப்படி செய்யும் போது, உறவே கைவிட்டது போல இருக்கின்றது. எங்கே போகும் இந்தச் சனங்கள்....................😔.
  20. அதிபர் ட்ரம்ப் என்ற மனிதரைப் பற்றிய உங்களின் பார்வை மிகச் சரியானது. அவர் ஒரு தனிமனிதராக தன்னுடைய இலாப - நட்டக் கணக்கையே எங்கெனும் பார்க்கின்றார். நண்பர்கள், எதிரிகள் என்று இல்லாமல், இலாபம் வருகின்றதா, இல்லையா என்றே எண்ணுகின்றார். ஆனல் அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருக்கின்றது. நடு அமெரிக்காவில் இருக்கின்றனர்; வருமானம் பெரிதும் குறைந்தவர்கள்; ஒரு அடையாளம் கொண்டவர்கள். வேறு சிலர் மிகப் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். இவர்கள் இலாப நட்டக் கணக்கு பார்ப்பவர்கள் இல்லை. இங்கிருக்கும் குடியேறிகளை மனிதத்தன்மை அற்ற முறைகளினூடு வெளியேற்றிக் கொண்டே, தென் ஆபிரிக்காவில் இருந்து வெள்ளை இன மக்களை புதிய குடியேறிகளாக கொண்டு வருபவர்கள் இவர்கள். ஆங்கிலம் மட்டுமே இங்கு ஒரு மொழி என்பவர்கள் இவர்கள். DEI வேண்டாம் என்பவர்கள் இவர்கள். அதிபர் ட்ரம்ப் இந்த விடயங்களில் அக்கறை இல்லாதவராக இருக்கக்கூடும். ஆனால் அதிபரின் வாக்கு வங்கி இவர்கள் தான். அதனாலேயே இந்தக் கொள்கைகள் இன்று இங்கு முன்னிறுத்தப்படுகின்றன. இதன் வேர்கள் நீண்டு, அது இறுதியில் ஒரு இனப் பாகுபாடாக வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ஆமாம், மோடி அவர்களில் ஒருவர், அவர் பாடம் கற்றதே ஆர் எஸ் எஸில் தான். அதன் பின்னர் தான் அரசியலுக்கே வந்தார்.
  21. சீனாவோ அல்லது இன்னொரு மிகப்பெரிய வளமுள்ள நாடு விரும்பி, இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கினால், நிச்சயம் இந்தியா திணறும். ஆனால் இன்றைய உலகில் தங்களுக்கு சேதாரம் அதிகம் இன்றி எந்த ஒரு நாடும் இதைச் செய்வார்களா, செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. உக்ரேன் போன்ற ஒன்று கிடைத்ததால் அமெரிக்காவும், மேற்குலகும் ரஷ்யாவிற்கு இதையே செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவால் ஒரு முனையில் போரை நடத்த முடியுமா என்பதே இப்பொழுது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல முனைகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தால், இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. மற்றும் இன்றைய இந்தியாவின் பொருளாதாரமே உலகிற்கு சேவைகளை வழங்குதலில் தங்கியிருக்கின்றது. யுத்தமும், சேவைகள் வழங்குதலும் ஒன்றாக இருக்கமுடியாது. இந்தியா உடைந்து போக வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பமே. அதன் மூலம் இந்திய வெறுப்பை காட்டவும், பிரிவதால் எங்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அதனாலேயே பலரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள். நான் நடைமுறைகளையும், உலகின் போக்கையும் அடிப்படையாக வைத்தே எனது கருத்துகளை எழுதுகின்றேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு தவிர்த்து விடுகின்றேன். 'நீங்கள் எந்தப் பக்கம்..................' என்ற கேள்விக்கு முன்கூட்டிய பதில் இது..................🤣
  22. இந்தியாவில் மஹாத்மா காந்திக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே எதிர்ப்புகள் எங்கும் இருந்தன. அவர் சுட்டுத்தானே கொல்லப்பட்டார். அம்பேத்கர் வாழும் காலத்திலேயே காந்திக்கு எதிர்ப்பக்கத்தில் தான் அவர் இருந்தார். இன்றும் அம்பேத்கர் வழி நிற்பவர்கள் காந்தியை கண்டிக்கும் இடங்கள் பல உண்டு. சில இந்தியச் சமூகங்களே காந்திக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த விதத்திலும் உறுதியானதும், சக மனிதர்களை நேசிப்பதுமான கொள்கைகளும் இல்லாதவர்கள், பத்தோடு பதினொன்றாக காந்தியையும் கண்டிப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை. உதாரணமாக, அம்பேத்கர் வழி நின்று காந்தியை குற்றம் சொன்னால் காது கொடுத்து கேட்கலாம். மேலும், இது ஒன்றும் பிரிந்து போவதற்கான காரணமோ அல்லது ஒரு ஊக்குவினையோ அல்ல. தமிழ்நாட்டில் பெரியார் வழி நிற்பவர்களே ஆளுகின்றனர். பெரியாரை எதிர்ப்போரும் அரசியல்வாதிகளாக உள்ளோர். ஆனால் இந்தப் பிளவின் அர்த்தம் தமிழ்நாட்டை பிளவுபடுத்தும் என்பது இல்லைத்தானே. தீவிரப் போக்குடைய அரசுகள் சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பது மிகத் தெளிவானது. இந்தியாவின் மோடியும், அமெரிக்காவின் ட்ரம்பும், இன்னும் பல நாடுகளில் பல தலைவர்களும் இப்படி இருக்கின்றார்கள். 'அமெரிக்கா அதன் இனப் பாகுபாட்டின் மூலத்தை மீண்டும் தேடுகின்றதா............................' என்பது போல ஒரு கட்டுரையை கடந்த வாரம் வாசித்திருந்தேன். அமெரிக்கா அதன் இன்றைய அரசால் உடைந்து துண்டாகப் போவதில்லை. ஆனால் முரண்பாடுகள் கூர்மையாகும். இதுவே தான் இன்றைய இந்தியாவிற்கும். மனிதர்கள் தான் பின்னோக்கி போவார்கள். காலம் என்றும் முன்னோக்கியே செல்லும். இடையிடையே பின்னோக்கிப் போகும் மனிதர்கள் பின்னர் பாய்ந்து கொண்டு முன்னோக்கி ஓடி வருவார்கள்.
  23. இந்தப் பகுதியில் மியான்மார் கூட சீனாவின் இன்னொரு சிற்றரசு தான். மஹிந்தவின் காலத்தில் இலங்கை கூட சீனாவின் கைப்பாவை என்றே தோன்றியது. இதே போலவே, உலகில் இதே வகையான நாடுகள் சில ரஷ்யாவின் சிற்றரசுகளாக இருக்கின்றன. இந்த வகை சிற்றரசு நாடுகளில் இருக்கும் பெரிய குறைபாடு அவர்களின் முற்று முழுதான மக்கள் விரோதப் போக்கு. இந்த நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆட்சியாளர்கள் துரத்தப்படுவார்கள், கலைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பது சாத்தியம் அதிகமான ஒரு விடயம். உள்நாட்டில் ஸ்திரத்தன்மை அற்ற இவர்களால் அந்நிய நாடொன்றுக்கு தேவையான ஆதரவை எப்போதும் வழங்க முடியுமா என்பது சந்தேகமே. மேலும் இந்த நாடுகள் உள்நாட்டு உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும், தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நீண்ட காலத்திற்கு உயர்த்தாமல் இருப்பது ஒரு உள்நாட்டுப் புரட்சிக்கான ஆரம்பமாகவே முடியும். சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று. வட இந்தியாவில் இந்து - இஸ்லாம் பிணக்குகள் பெரிதாக்கப்பட்டு, பெரும் இழப்புகள் வருவதற்கு சாத்தியங்கள் நன்றாகவே உண்டு. ஆனால் நீண்ட ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக வாழாததால், பிரிவினை என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கின்றேன். எங்களின் கிழக்கு மாகாணம் போலவே, சேர்ந்து வாழ்வதே நடைமுறைத் தீர்வாக இருக்கும். காஷ்மீர் விவகாரம் வேறு, இன்று அது அவர்களின் தொடர்நிலம். தென்னிந்திய அரசியல்வாதிகள் வெறும் மேடைப் பேச்சாளர்கள். மேடையில் எதுவென்றாலும் பேசுவார்கள். இதில் அந்த எட்டு வீதத்தினரும் அடக்கம். இவர்களில் கூட எவரும் தனியே பிரிந்து போவதாகச் சொல்லமாட்டார்கள்.
  24. சென்னை அணியே கௌரவம் பார்க்காமல் சிரித்துக் கொண்டு திரிகின்றார்கள்...................🤣. முன்பு தமிழ்நாட்டில் நடிகர் சூர்யா நிறைய விளம்பரங்களில் வருவார். இப்பொழுது தோனி தான் வருகின்றார். நடிகர் ரஜனி போல ஒரு விதமான தமிழும் கதைக்கின்றார்...................
  25. இருவரும் ஒன்றாகவே போகின்றார்கள், ஒன்றாகவே வருகின்றார்கள்.............. ஒரு இடைவெளி கிடைக்குதில்லையே இன்னுமொருவர் இவர்களுக்கு இடையில் போய் நிற்பதற்கு.................🤣. கிருபன் முன்னரே சொல்லியிருந்த அநதப் போட்டியும் வந்து போய்விட்டது..........🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.