Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே பதில் சொல்ல மறுக்கும் சொல்ல முடியாது போ என மிரட்டும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! அங்கே சிகிச்சை பெறுகின்ற மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற பொழுது அவர்களுக்கு பதில் அளிப்பாரா??? இல்லை என்பதை இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகின்றது . இவ்வாறான யாழ் போதன வைத்தியசாலை பணிப்பாளராக இவ்வளவு காலம் பணியாற்றுகிறார் என்றால் அவர்கள் பின்னால் அரசியல் செல்வாக்கு இருக்கின்றது என்றே பொருள்படும். வைத்தியர் Mp Archchuna Ramanathan கேட்க்கும் வினாவுக்கு அவர் பதில் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது. நாயை வெளியேற்றுவது போல் பாதுகாப்பு அதிகாரியை பணிக்கின்றார் உண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உரிய மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும் யாராக இருந்தாலும். வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தொடர்பான பிரச்சனை தொடர்பாக வினாவுவதற்காக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்!!!! ஒரு அநீதி இடம்பெறும் போது அதனை கேள்வி கேட்க வினாவுவதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருக்கின்றதா இல்லை!!! சிகிச்சையின் போது இடம்பெறுகின்ற கொலைகள் எந்த கணக்கில் காட்டப்படுகின்றதோ?? ஒவ்வொரு உயிரிழப்புக்கு பின்னால் அவர்களது குடும்பம் படுகின்ற வேதனைகள் சொல்லன்னா துயரங்கள் அவர்களை நம்பி இருக்கின்ற குடும்பத்தின் நிலை யாராவது எண்ணி பார்த்து இருக்கிறீர்களா?? யாழ் போதானா வைத்தியசாலை பணிப்பாளரின் இவருடைய மனநிலையில் குறைபாடு இருக்கின்றது. வைத்தியசாலை பணிப்பாளருக்கு உரிய மரியாதை அவர் அனைவரிடமும் எதிர்பார்ப்பது போல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துத்தான் ஆக வேண்டும் இல்லை என்று அடம் பிடிப்பது எவ்வாறு??? பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு வைத்தியரை வெளியேற்ற முயல்வதா அவரது செயற்பாடு!!!! உரியவர்கள் வினாவுகின்ற பொழுது அதற்குரிய பதிலை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா??? ஒரு பதவி நிலை அதிகாரியாக இருந்தால் சரியான முறையில் பதில்களை வழங்குதல் வேண்டும்.. அனைவருக்கும் இதனை பகிர்வதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...... Ramanathan ArchchunaAll reactio
  2. நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு; மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் - நளின் பண்டார சாடல் 10 Dec, 2024 | 02:07 AM (எம்.மனோசித்ரா) நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். திங்கட்கிழமை (9) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது. ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. எனினும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஜனவரியில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது. கடந்த மார்ச்சில் 4 சதவீதம் மாத்திரமே மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று இலங்கை மின்சாரசபை கூறிய போது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலையிட்டு 21 சதவீத கட்டண குறைப்பினை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. ஜூலையிம் மின்சாரசபை 4 சதவீதம் எனக் கூறிய போதிலும், 22.9 சதவீத கட்டண குறைப்பினை மேற்கொள்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தியே இடம்பெறுகிறது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக 17 சதவீத மின் உற்பத்தி இடம்பெறுகிறது. நிலக்கரி உள்ளிட்ட செலவு குறைந்த முறைமை ஊடாக குறிப்பிட்டளவு மின் உற்பத்தி இடம்பெறும் அதேவேளை, 5 சதவீத மின் உற்பத்தி மாத்திரமே எரிபொருட்களால் இடம்பெறுகிறது. நீர்மின் உற்பத்தியின் போது ஒரு மின் அலகுக்கு 57.85 சதத்துக்கும் 2.50 ரூபாவே செலவாகிறது. ஆனால் எரிபொருள் ஊடான மின் உற்பத்திக்கு அலகொன்றுக்கு 105 ரூபா வரை செலவிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தி என்பதால் மின்சாரசபைக்கு பாரிய தொகை மிஞ்சுகிறது. ஜே.வி.பி.யினரால் 76 ஆண்டுகள் சாபக் காலம் எனக் கூறப்படும் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தம்பே, சமனலவாவி, கொத்மலை நீர் தேக்கங்களாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நன்மையை அனுபவிக்கிறது. தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார். மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி, சிறு மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் அவர்கள் மின் கட்டணத்தைப் பார்த்து பதறி ஓடுகின்றனர். எனவே மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  3. அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர் 10 Dec, 2024 | 02:11 AM தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் தேசிய ஷுரா சபை பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை (6) சந்தித்த தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட அடிப்படையில் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்த அப்பிரதிநிதிகள், முன்னுரிமை வழங்கி தீர்வுகாணப்படவேண்டிய 27 விடயங்களை உள்ளடக்கி தாம் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வழங்கியிருந்த ஆவணத்தை டில்வின் சில்வாவிடம் கையளித்தனர். அதேபோன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளடங்கலாக நாட்டின் சகல துறைகளுக்கும் அவசியமான பங்களிப்பை வழங்கக்கூடிய அறிவும் திறனும் உடைய பலர் முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விதமாக சமூக மட்டத்திலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அதேவேளை தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் தமது சமூகம் கொண்டிருக்கும் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அப்பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினர். மேலும் அராபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் பணத்தில் அவர்களது பங்களிப்பு 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும் டில்வின் சில்வாவிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இந்நாடுகளுடன் வலுவான தொடர்பைப் பேணவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
  4. அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் வசந்த சமரசிங்க 10 Dec, 2024 | 12:53 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சூழ்ச்சி செய்கின்றனரென வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. அனைத்து சூழ்ச்சிகளையும் சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றும் குறிப்பிட்டார். அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதோ அல்லது அவர்களின் தொழிற்றுறையை கேள்விக்குள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்து அவற்றை அரிசியாக்குவதற்கான புதிய திட்டங்களை அரச கட்டமைப்பில் முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என்றார்.
  5. பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல் 10 Dec, 2024 | 02:14 AM (நா.தனுஜா) சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரிசி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடித் தீர்மானங்களை மேற்கொள்வதைப் பார்த்தோம். ஆனால் சந்தையில் அரிசி இல்லை. இருக்கின்ற அரிசியின் அளவு போதுமானதாக இல்லை தற்போது அரிசி தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த ஆண்டுகளில் நாம் தேவையை விட அதிகமாக அரிசியை உற்பத்தி செய்திருக்கிறோம். அவ்வாறிருக்கையில் இப்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பேரளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியைத் திட்டமிட்டுப் பதுக்கியிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் அதிக இலாபமீட்டுவதற்கு முனைகிறார்கள். இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தற்போது இச்சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆகையிலேயே உற்பத்தியாளர்கள் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அரிசி உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபாவுக்கும் மேல் வருமானமீட்டுகிறார்கள். அவ்வாறிருக்கையில் டட்லி சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுகிறார். இந்நிலையில் அதிகாரிகள் ஊடாக அரிசி ஆலைகளில் சோதனை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் அவசியமற்றவை. மாறாக மந்தபோசணை உயர்வாகக் காணப்படும் இலங்கையில், இனினும் அரிசி உற்பத்தியை வியாபாரமாக மாற்ற இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
  6. உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 10 Dec, 2024 | 05:47 AM ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.
  7. உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை - ரணில் 10 Dec, 2024 | 02:33 AM மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக ஒரு கலால் அனுமதிப்பத்திரம் கூட வழங்கப்படவில்லை எனவும், புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட முறையின் சட்டபூர்வமான தன்மையை தேர்தல்கள் ஆணைக்குழு 2024 ஓகஸ்ட் 19 ஆம் திகதி கலால் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான வருமானம் ஈட்டும் கலால் உரிமங்களை தொடரவோ அல்லது ரத்து செய்யவோ தற்போதைய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  8. திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு எலிக்காய்ச்சலா என சந்தேகம் திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்கள் மூவரின் காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் மூவரும் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும். ஆயினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209108/
  9. கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது! பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் 16 பேரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேரும் வவுனியா காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2024/209114/
  10. இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313390
  11. யாழில் நாளை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவையும் இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/313413
  12. எம்.பி.யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (8) பிற்பகல் கொழும்பு – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/313374
  13. வைத்தியர் அர்ச்சனாவும் -வைத்தியர் சத்தியமுர்த்தியரும்.🤭
  14. பார் பேமிட் ஏன் வழங்கினேன்?; ரணில் விளக்கம். கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கப்பட்ட உரிமங்கள் ஊடாக, குறித்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு, 2022 வரை கலால் உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் பணம் வசூலிக்கவில்லை. அப்போது, நாட்டில் நேரடி வரியை இழக்கும் போக்கு காட்டப்பட்டது. அப்போது, நாடு நிலவும் கடுமையான பொருளாதார திவால்நிலையில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான பாராளுமன்றக் குழுவும் அரசுக்குத் தெரிவித்தது. அதன்படி, உடனடி நேரடி வரி இழப்புக்கு மாற்றாக, அரசு வருவாயை அதிகரிக்க, பணம் வசூலிக்கவும், கலால் உரிமம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 2024 பட்ஜெட் உரையில், கலால் நிர்வாக மேம்பாட்டு முறை மற்றும் வரிக் கொள்கைத் திருத்தம், பல்வேறு வகையான கலால் உரிமங்களுக்குப் பொருந்தும் வழிகாட்டுதல்களை நெறிப்படுத்துதல், புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், உரிமங்களைப் பெறுவதற்கான வரம்புகளை நிர்ணயித்தல், நிர்வாகக் கட்டணங்களை வழங்குதல் கோரிக்கைக்கு ஏற்ப உரிய உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய வரவு-செலவுத் திட்ட ஆவணத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. அரசியலமைப்பின் பிரிவுகள் 148 முதல் 152 வரை, பொது நிதிக் கட்டுப்பாட்டின் மீது பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இது தவிர, பொது நிதிப் பொறுப்புச் சட்டத்தின் பிரிவு 3, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. மேலும், பொருளாதார மாற்றச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ், அமைச்சர்கள் குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிட பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03/2024 ஆம் இலக்க கலால் அறிவிக்கையானது ஏற்கனவே உள்ள கட்டணங்களை அதிகரித்து, புதிய திருத்தங்களை 2024 பெப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார மேம்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவுகளின் d மற்றும் h இன் படி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2008 ஏப்ரல் 10, திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண். 1544/17 (கலால் அறிவிப்பு எண். 902) மூலம் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 2024 ஜனவரி 12, திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2366/39 மூலம் திருத்தப்பட்டன. அவை அனைத்தும் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்படி, மாநகரசபை அதிகார வரம்புகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் 15 மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக, வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணமாக 1 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையும், நகராட்சி அதிகார வரம்புகளுக்கு வணிகத்தில் நுழைவதற்கு வசூலிக்கப்படும் ரூ.10 மில்லியன் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.08 லட்சம் வருடாந்திர உரிமக் கட்டணம் மற்றும் ரூ.05 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை, ஏனைய பகுதிகளுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் ஒரு மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் 06 இலட்சம் ரூபாய் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை 05 இலட்சம் ரூபாய், 1,000 மில்லியனுக்கும் அதிகமான வணிக வளாகங்கள் அல்லது கடைகளுக்கு, வணிகத்தில் நுழையும் போது வசூலிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, வருடாந்த உரிமக் கட்டணமாக 1.5 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு வைப்புத் தொகையும் வழங்கப்பட்டன. மதுபானங்களின் சில்லறை விற்பனை வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 1, முதல் 2024அக்டோபர் 31, வரை, புதிய திருத்தத்தின்படி, 172 மதுபானக் கடைகள் மற்றும் 89 மால்கள் அல்லது கடைகளுக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தின் கீழ் R.B.4 (F.L.4) இன் எக்சைஸ் உரிம வகைப்பாட்டின் கீழ். புதிய மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்கள் அனைத்தும் கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்கும் போது, கலால் ஆணையர் ஜெனரல் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வெளியே ஒரு கலால் உரிமம் கூட வழங்கப்படவில்லை. இது தொடர்புடைய ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தால் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவைக் கொண்டு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 04 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தைப் பெற முடியும். இந்த முறையின் வெற்றி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு முதல் 250-300 கலால் உரிமங்கள் ஏல அடிப்படையில் குறைந்தபட்சம் 25 மில்லியன் ரூபாய் ஏலத்தில் வழங்கப்படும், மேலும் 25 சதவீத வருமானத்தில் இருந்து ஒரு நிதி ஒதுக்கப்படும். நிதானமான இயக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது மேலும் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய கலால் சட்டம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. வழங்கப்பட்ட மதுபான உரிமம் தொடர்பாக கலால் திணைக்களத்திற்கு கிடைத்த பொது முறைப்பாடுகளின் அடிப்படையில் கலால் ஆணையாளர் நாயகம் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் 9, அன்று உரிமம் பெற்றவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 2024.07.26 முதல் 2024.09.21 வரை) மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டால் முறையானவை தேர்தல் ஆணையம் 19.08.2024 திகதியிட்ட கடிதத்தின் மூலம் கலால் ஆணையர் ஜெனரலுக்கு ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் அரசியல் பதவி உயர்வு இல்லாத உரிமங்களை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. என்ன நடந்தது என்றால், அவை விற்கப்பட்டு கணிசமான தொகை மாநில வருவாயில் வசூலிக்கப்பட்டது. நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட இந்த கலால் உரிமம் வழங்கும் நடைமுறை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. தற்போதைய செயல்பாடு வெளிப்படையானது மற்றும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வருமான வழியை இரத்து செய்வதா, இல்லையா என்பது தொடர்பில், அவ்வாறு இல்லையேல் புதிய கலால் வரி சட்டத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பாராளுமன்ற அனுமதியுடன் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, இதனை முன்னெடுத்து செல்வதற்கோ அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு உரித்துடையது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thinakkural.lk
  15. டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொலிஸ் தீவிர சோதனை புதுடெல்லி: டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். அவையெல்லாம் மிகச் சிறிய அளவிலானவை. அவற்றால் கட்டிடங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், வெடிகுண்டுகள் வெடித்தால் நிறைய பேர் காயமடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் தனக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தொடரும் மிரட்டல்கள்: முன்னதாக கடந்த வாரம் டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா குளோபல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. அதற்கும் முன்னதாக டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்த பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றுவட்டாரத்துக்குள் குறைந்த சக்தி கொண்ட மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் போது அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் செய்யப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஆம் ஆத்மி அரசும் டெல்லி காவல்துறையும் இணைந்து வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள்வது தொடர்பாக விரிவான நிலையான செயல்பாட்டு வழிமுறையை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எச்சரித்த மத்திய அரசு: நாடு முழுவதுமே பள்ளி, கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அவ்வப்போது விடுக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. முன்னதாக, கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில், அதனைக் கையாண்ட முறைக்காக எக்ஸ், மெட்டா தளங்களை கடுமையாக சாடிய மத்திய அரசு, ‘சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.
  16. ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் – ரஸ்யா பதவிகவிழ்க்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ள ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் அவர் அமைதியான ஆட்சி மாற்றத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் ரஸ்யா ஈடுபவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு சிரியாவில் உள்ள தனது தளங்கள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றிற்கு ஆபத்தில்லை என குறிப்பிட்டுள்ளது. சிரியாவின் எதிர்தரப்பை சேர்ந்த அனைத்து குழுக்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது. பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியின் நெருங்கிய நேசநாடு ரஸ்யா என குறிப்பிட்டுள்ளது.
  17. விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/200816
  18. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச உதவிகளை வழங்கும் ஜப்பான் ஜப்பானின் தூதுவர் அகியோ இசொமதா, AKIO ISOMATA, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார். நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்காக இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09) மாலை இடம்பெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலக பிரதம பிரதிநிதி செட்சுயா யமடா ஆகியோரும் கலந்துகொண்டனர். நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களில் 230 கூடாரங்கள், 1,300 மெத்தைகள் மற்றும் 30 தார்ப்பாய் சீட்கள் அடங்கும். இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், தூதுவர் இசொமதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் மிகவும் தேவைப்படும்போது அதற்கு ஆதரவாக நிற்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த அனர்த்த நிலைமையின் போது, வடமாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்திற்கு சுகாதார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை விநியோகித்ததன் மூலம் JICA வும் கைகோர்த்தது. ஜப்பான் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, தேவைப்படும் மக்களுக்கு பயனுள்ள உதவிகளை வழங்கி, இலங்கையின் பேரிடர் நிவாரணம் மற்றும் இடர் குறைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கான எங்கள் நீண்டகால அர்ப்பணிப் உறுதி செய்கிறது.
  19. நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர் கைது ! நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து குறித்த கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவர் இன்று திங்கட்கிழமை (09) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
  20. வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் கைது! வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் , பாமன்கட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து BMW மற்றும் KDH ஆகிய இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் கொட்டாவை பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனம் ஒன்றிலிருந்து வாடகைக்கு பெற்ற KDH ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை மீரிகம பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் , முல்லேரியா பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெற்ற BMW ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள கணக்காளர் ஒருவருக்கு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
  21. 10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல் வருகிறது இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அடங்கிய கப்பல் அரிசி கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியைத் தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அரிசி இறக்குமதிக்கான வரையறைகளையும் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதற்கமைய சிறிய துறைமுகங்களிலிருந்து பல இறக்குமதியாளர்களால் கொள்வனவு செய்யப்பட்ட செய்யப்பட்ட 20, 000 மெட்ரிக் தொன் அரிசி எதிர்வரும் வியாழக்கிழமை (13) முன்னர் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  22. யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து திருடிய நபர் பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து300 தங்கப்பவனுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 லட்சம் ரூபா பணத்தினையும் திருடிய நபரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும் திருடன் குறித்து நாங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இருந்தோம். இது தொடர்பான தகவல்களை திரட்டி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக, வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்சீய தனபால மற்றும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா காளிங்க ஜயசிங்க ஆகியோர் எனது தலைமையிலான குழு ஒன்றினை நியமித்தனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மற்றும் யாழ். பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு அதிகாரிகளை நியமித்து இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கணினி மூலமான வரைபடத்தை தயாரித்து அது தொடர்பாக விசாரணை செய்து குறித்த சந்தேகநபரை கொழும்பில் வைத்து கைது செய்தோம். குறித்த நபர் சுமார் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து களவுகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இருவருடன் இணைந்து திருடி வந்த இவர், பின்னர் தனியாக துவிச்சக்கர வண்டியில் சென்று திருட்டுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து திருட்டுக்களை மேற்கொண்டு விட்டு அந்த நகைகளை கொழும்பில் விற்பனை செய்து வந்துள்ளார். அந்தவகையில் அவருடன் மேலும் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து தடுப்பில் வைத்திருக்கின்றோம். இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 12 திருட்டு சம்பவங்கள் குறித்து இவர் தகவல் வழங்கியுள்ளார். அதுபோல கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் 10க்கு மேற்பட்ட களவுகள் குறித்து தகவல் தந்துள்ளார். இறுதியாக மேற்கொண்ட இரண்டு திருட்டுகளும் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக காணப்படுகின்றது. அந்தவகையில் இவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட களவுகளின் அடிப்படையில் 66 மில்லியன் பெறுமதியான உடைமைகளை திருடியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற மக்கள் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறும்போது, திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை எமக்கு சரியாக வழங்கும் பட்சத்தில் எங்களால் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார். யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து திருடிய நபர் பொலிஸாரால் கைது!
  23. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி! யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று இன்று திங்கட்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி!
  24. முதலாமவர் இரண்டு லட்சம் ருபா சரீரப் பிணையில் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உதயனில் நான்கு நாட்களுக்கு முன் செய்தி வெளியீட்டு இருக்கிறார்கள்..
  25. வாடகை வாகன சாரதிகளிடம் கொள்ளையிடும் கொள்ளையர்கள் கைது! வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (08.11.24) கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக் கொடுத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அதிலிருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனை நிலையத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் சுமார் 15 பொலிஸ் பிரிவுகளில் அடிக்கடி இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2024/209088/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.