Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15883
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. புழல் சிறை உணவு விபரம்.. ( கொட்டல் விலை பட்டியல் ஒப்பீட்டுக்காக.. ) காலை 6.30 மணிக்கு சூடான தேத்தண்ணி காலை 7 மணிக்கு ( சுழற்சி முறையில் ) கோதுமை உப்புமா உடன் இரண்டு வகையான சட்னி பொங்கல் உடன் சட்னி, ,சாம்பார் இட்லி, தோசை உடன் சட்னி, ,சாம்பார் சப்பாத்தி உடன் குருமா தக்காளி சாதம் லெமன் சாதம் புதினா சாதம் அவிச்ச முட்டை, கஞ்சி,,பாண் .. பழங்கள் மற்றும் மாதுளை யூஸ் பகல் 11.30 மணிக்கு ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை கோழிக்கறியுடன் அசைவ உணவு .. சோறு,, சிக்கன் கிரேவி,,கோழிக்கறி, சாம்பார், ரசம், கூட்டு, மோர், வாழைப்பழம், ரவை கேசரி (இனிப்பு) பிற நாட்களில் .. சோறு,,சாம்பார்,வத்தகுழம்பு, ரசம், ,மோர், கூட்டு,பொறியல், ,நெய்,, வாழைப்பழம் உள்பட சைவ உணவு வழங்கப்படும் மாலை 3 மணி நேர சிற்றுண்டியாக பச்சை பயறும், , சூடான சுண்டல், நொறுக்கு தீனி மற்றும் தேத்தண்ணி. இரவு 7 மணி உணவாக .. இடியாப்பம் மற்றும் பால், சப்பாத்தி உடன் சென்னா மசாலா (அ) குருமா வாழைப்பழம் அல்லது மேற்கூறிய மதிய சைவ சாப்பாட்டையும் எடுத்து கொள்ளலாம். டிஸ்கி: " வெளியால கடன்காரன் தொல்ல.. உள்ளால . மனிசிமார் தொல்ல.. அதான் சும்மா ஒரு 6 மாசம் ஜாலியா உள்ள இருக்கலாம் என்டு வந்தனன்.." * இணைய வெளியில் தேடியது
  2. அமைச்சராகும் முன்பே பெயர் மாற்றம் செய்து வருகிறார்களா ? இயற்பெயரே இதுதானா.. அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் போல இருக்கு..
  3. ஜியோ இணைய சேவை ( ? )யில் ஒரு மாதற்கும் மேல் யாழ் களம் வருகுது இல்லை.. களம் வருவதும் குறைந்து போனது.😢 இணைய வழங்கியில் குறிப்பிட்ட போர்ட் நம்பர்களை பிளாக் செய்து விட்டதாக சொல்கிறார்கள் .. யாருக்காவது தெரியுமா.. ரெல் மீ .. ஏர் டெல் பரவாயில்லை..😢
  4. யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப் வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வீடியோவை பார்க்கக் குறைந்தது 4, 5 விளம்பரங்களை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. உங்களுக்கு விளம்பரங்களைப் பார்க்க வேண்டாம் என்றால் அதற்கு நீங்கள் பிரீமியம் சந்தா செலுத்த வேண்டும். இதற்குத் தனியாக மாதம் 130 ரூபாயைச் செலுத்த வேண்டும். இருப்பினும், சிலர் முறைகேடாக வீடியோ செலுத்தாமல் பார்க்க ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறார்கள். யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கவே தனியாகச் செயலிகளும் லேப்டாப்பில் எக்ஸ்டென்ஷன்களும் இருக்கவே செய்கிறது. இவை ஊறரிந்த ரகசியம் போலவே இருந்து வந்துள்ளது. இதற்கிடையே ஒரு வழியாக இப்போது இதுபோல முறைகேடுகளைச் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக யூடியூப் தளம் அறிவித்துள்ளது. இது எதோ வெறும் எச்சரிக்கை செய்யும் செயல் மட்டும் இல்லை. யூடியூப்பை பயன்படுத்தும் ஒருவர் ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஞ் வரும். அதாவது உங்களுக்கு, "நீங்கள் ad blockerஐ பயன்படுத்துகிறீர்கள்.. இதை ரிமூவ் செய்யவில்லை என்றால் வீடியோ பிளே ஆகாது" என மெசேஞ் வரும். இப்போதே நீங்கள் ad blockerஐ உடனடியாக தூக்கிவிட வேண்டும். இல்லையென்றால் மூன்று வீடியோக்கள் வரை பார்ப்பார்கள். அதன் பின்னரும் ad blocker இருப்பது உறுதியானால், உங்களை யூடியூப் தளத்தில் இருந்தே பிளாக் செய்துவிடுவார்கள். அதன் பிறகு யூடியூபில் வீடியோவை பார்க்கவே முடியாது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது நிரந்தர தடையாக இருக்குமா அல்லது ad blockerஐ தூக்கியவுடன் மீண்டும் பார்க்கும் வகையில் இருக்குமா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை. அதேநேரம் இப்போது வரை இதை யூடியூப் டெஸ்ட் செய்து வருவதாகவே தெரிகிறது. இதை இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. நெட்டிசன்கள் பலரும் தாங்கள் ad blockerஐ பயன்படுத்துவதாகவும் இருப்பினும் தங்களது கணக்குகள் எதுவும் பிளாக் ஆகவில்லை என்றே கூறி வருகின்றனர். மேலும், எந்த மாதிரியான ad blockerகள் பிளாக் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களும் துல்லியமாக இல்லை. யூடியூப் நிறுவனத்திற்கு அதன் முக்கிய வருவாயாக விளம்பரங்கள் தான் இருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அவர்களும் ஓடிடி போல மாற சந்தா முறையைக் கொண்டு வரப் பார்த்தார்கள். இருப்பினும், யாருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. பல ஆண்டுகளாக யூடியூப் தளத்தை இலவசமாகப் பார்த்துப் பழகிய மக்கள் இப்போது அதற்குச் சந்தா செலுத்த மறுக்கிறார்கள். இதன் காரணமாகவே மீண்டும் யூடியூப் இப்போது மீண்டும் விளம்பரங்களை முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. வீடியோவுக்கு முன்பு இப்போது 2 விளம்பரங்கள் வரும் நிலையில், 4 விளம்பரங்களைக் கொண்டு வருவது குறித்தெல்லாம் டெஸ்டிங் நடந்தது. இந்தச் சூழலில் தான் விளம்பரங்களில் இருந்து தப்பிக்கும் சாப்ட்வேரை கிடுக்கு பிடியாகத் தடுக்கும் நடவடிக்கையில் யூடியூப் இறங்கியுள்ளது. https://tamil.oneindia.com/news/washington/what-is-the-youtube-plan-of-three-strikes-policy-for-stopping-ad-blocking-software-519115.html
  5. சும்மா ஆடுவினம் ..இதில் சலங்கை வேற கட்டியாச்சு... இனி வேற லெவல்...
  6. ரொம்ப கொடூரமான தண்டனை.. அடுத்த பாலியல் தொல்லைக்கும் சேர்த்து அட்வான்ஸ் கட்டி விட்டேன் ..அதில கழிக்க சொல்லு.. படம் : காதல் சடுகுடு.
  7. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா?கடைசியில் பதிலை சொன்ன ஆய்வாளர்கள்.. வாஷிங்டன்: பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர். நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு அறிவியல் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதாகும். இந்த புதிருக்கான விடையை ஆய்வாளர்கள் நெருங்கியுள்ளனர். பில்லியன் டாலர் கேள்வி: கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது பல ஆண்டுகளாகப் புதிராகவே இருக்கும் ஒரு கேள்வி.. இதற்கிடையே தவளைகள் மற்றும் பல்லிகளை வைத்து நடத்திய ஆய்வில் இதற்கான முடிவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊர்வன, பறவை இனங்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாகக் குட்டி போட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 51 புதைபடிமங்கள் மற்றும் 29 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் oviparous விலங்குகள், குட்டி போட்டுப் பாலூட்டும் viviparous விலங்குகள் என இரு வகை விலங்குகளையும் இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர். இந்த முடிவுகள் நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், "இப்போது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் விலங்குகளின் பண்டைய புதைவ படிவங்களை ஆய்வு செய்ததில் அப்போது EER என்ற முறையை இனப்பெருக்கத்திற்கான முறையாக இருந்தது தெரிய வந்தது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த EER என்பது தாய் தனது கருவை அதிக காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதையே குறிக்கிறது. ஆய்வு முடிவுகள்: அந்த ஆய்வு முடிவில், "4 கால்களைக் கொண்ட முதுகெலும்புடன் இருக்கும் அம்மினியோட்ஸ் என்ற வகை உயிரினங்கள் தோன்றும் முன்பு இனப்பெருக்கத்திற்கு நீர் அல்லது நீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தாக வேண்டி இருந்தது. இப்போது உள்ள தவளைகளை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். அதேநேரம் 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அம்னியோட்கள் தோன்றிய பிறகு நிலைமை மாறியது. அம்மினியோட்சுக்கு சற்று கடினமான தோல்கள் உள்ளிட்டவை கிடைத்தது. இதன் மூலம் அந்த உயிரினங்களால் நீரைத் தாண்டி வெளியே செல்ல முடிந்தது. இதில் அம்மோனியோடிக் முட்டை முக்கியமானது. அது உள்ளே இருக்கும் முட்டைகளைப் பாதுகாக்கும் ஒரு குளம் போலச் செயல்பட்டது. இதனால் அவை நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மாறி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உருவானது. இதுவே நிலப்பரப்பில் அவை ஆதிக்கம் செலுத்தக் காரணமாக இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது. வளைந்து கொடுக்கும் உத்திகள்: இப்போது பாம்புகள் மற்றும் பல்லிகளை எடுத்துக் கொண்டால் அவை குறிப்பிட்ட முறை என்று இல்லாமல் வளைந்து கொடுக்கும் இனப்பெருக்க உத்திகளைக் கையாளும். பாம்புகளை எடுத்துக் கொண்டால் சில வகை பாம்புகள் நேரடியாகக் குட்டி போடும், சில வகை பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இதைத் தான் EER - Extended Embryo Retention என்று குறிப்பிடுவார்கள். இது குறித்து ஆய்வாளர் ஜோசப் கீட்டிங் கூறுகையில், "EER இப்போது பல்லிகள் மற்றும் பாம்புகளில் பொதுவாக இருக்கிறது. அதாவது எந்த நேரம் இனப்பெருக்கத்திற்கு ஏற்றது என்பதைக் கண்டறிந்து அவை அதற்கேற்ப முட்டை அல்லது குட்டிகளை இவை ஈடும். இதுதான் EERஇல் இருக்கும் பெரிய அட்வான்டேஜ். பொதுவான வெப்பம், உணவு இருக்கும் காலத்தை உணர்ந்து தனது குட்டிகளைத் தாய் வெளியிடும்" என்றார். அதாவது முன்பு இருந்த அனைத்து உயிரினங்கள் குட்டி போட்டோ பால் கொடுத்துள்ளன. பின்னர் பரிணாம வளர்ச்சியில் சர்வைவல் யுக்தியாகவே சில குறிப்பிட்ட வகை முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும் முறைக்கு மாறியுள்ளன. இப்போதும் சர்வைவலை பொறுத்து பாம்பு, பல்லி போன்றவரை இரண்டும் செய்கிறது. இந்த ஆய்வு முடிவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை என்றாலும் கூட அதை ஆய்வாளர்கள் நெருங்கிவிட்டார்கள் எனச் சொல்லலாம். https://tamil.oneindia.com/amphtml/news/international/what-came-first-chicken-or-egg-the-biggest-mystery-finally-solved-516892.html டிஸ்கி ஆகவே இன்றில் இருந்து குதர்க்கமாக கேள்வி கேட்பவர்கள் மேற்கண்ட உதாரணத்தை கைவிடுக..👍
  8. உண்மையில் அமலாக்க துறையினருக்கு செந்தில் பாலாசி குடும்பதினர் நன்றி நவிலல் வேண்டும்.. ஓயாத பணி சுமை காரணமாக இதுவரை அவருக்கே தெரியாமல் இருந்த "அடைப்புகளை" அடையாளம் கண்டு சரியான நேரத்தில் சிகிச்சை பெற வைத்தமைக்கு..👍
  9. படங்களை தேடி பிடித்து தலைப்புக்கு ஏற்றவாறு இணைப்பதில் வீரகேசரிய அடிச்சுக்க ஆளே கிடையாது..👌
  10. இலங்கையின் சுற்றுலாதுறை தூதராகிறார் நடிகர் ரஜினிகாந்த்? சென்னை சந்திப்பால் வெடிக்கும் சர்ச்சை! சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கு வருகை தர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; மேலும் ரஜினிகாந்த் வருகையின் மூலம் இலங்கையின் சினிமா, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் எனவும் இச்சந்திப்பின் போது டி.வெங்கடேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இலங்கையில் உள்ள ராமாயண பாதை, பவுத்த தலங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இலங்கையின் சுற்றுலா தூதராக நடிகர் ரஜினிகாந்த் செயல்பட வேண்டும் என்பது அந்நாட்டின் விருப்பம். இந்த கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் சுற்றுலா தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ் தேசிய அமைப்பினர் இப்போதே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் https://tamil.oneindia.com/news/chennai/actor-rajinikanth-to-become-sri-lanka-s-tourism-ambassador-514229.html
  11. அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு. தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ஆம் நாளன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள், இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து ஈகைச் சுடர் மற்றும் எழுச்சிச் சுடர் ஏற்றுதல்,மலர் வணக்கம் பிறகு சிறப்பு பேச்சாளர்கள் உரை வீச்சுடன் நடைபெற்றது. மாண்புமிகு திரு.ருத்ரகுமரன் விசுவநாதன், தலைமை அமைச்சர் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam – TGTE) திரு.சுந்தர் குப்புசாமி, செயலாளர் United States Tamil Action Group (USTAG) , Ex president – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA) திருமதி. மீனா இளஞ்செழியன் – Tamil Americans United PAC திரு. பாபு விநாயகம் – பாடல் ஆசிரியர்/ இசை அமைப்பாளர் திரு.கோபி ஏகாம்பரம், கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஆகியோர் இழந்த மக்களை நினைவு கூர்ந்து இனப்படுகொலை பற்றியும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சர்வதேச நாடுகளின் நிலை பற்றியும் பொதுவாக்கெடுப்பின் தேவை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்ட (H . RES . 427) தொடர்பாக இனப்படுகொலை பற்றி உலகிற்கு உணர்த்தும் விதமாக வெளியில் செல்லும்போதோ அல்லது வீட்டிலிருந்து காணொளி வாயிலாக மற்றவர்களுடன் பேசும்போதோ நினைவு நாளை சுற்றத்தாருக்கு வெளிப்படுத்தும் வகையில் குரல்வலை நெரிக்கப்பட்ட இனத்தின் மக்கள் எவ்வாறு நமக்கு நாமே தோள் கொடுத்து உலகம் முழுதும் தெரியப்படுத்தும் வகையில் வலிமையாக இணைத்து செயல்பட வேண்டிய தேவைகளையும் அது எந்த வகையில் இன விடுதலைக்கு வழிகோலும் என்றும் எடுத்துரைத்தார்கள். இனஅழிப்பு போர் நடந்த காலத்தில் மக்கள் வெறும் அரிசிகஞ்சி மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்கள். நமது உறவுகள் உயிரைக் காத்துக்கொள்ள மிகுந்த உயிர் அச்சம், உடற்காயங்கள் மற்றும் கொடுமையான பட்டினி இவற்றுக்கிடையே தொடர்ந்து இடம் பெயரும் போது, எடுத்து வந்திருந்த அரிசி மாவு சிறுபாத்திரம் ஆகியவற்றைக் கொண்டு கல் அடுப்பில் மரக்குச்சிகளைக் கொண்டு எரித்து கஞ்சி காய்ச்சி, அதனை ஆங்காங்கு கிடைத்த தேங்காய் சிரட்டையில் ஊற்றி, உப்பிட்டோ, உப்பிடாமலோ அருந்திப் பசியாற்றி உயிர் பிழைக்கப் போராடியிருக்கிறார்கள். ஆகவே அன்றைய தினம் நம்மக்கள் பட்ட துயரினை நாம் உணர்ந்து நம் அடுத்த தலைமுறைக்கும் உலகிற்கும்உணர்த்தும் விதமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பசித்த வயிற்றில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தேங்காய் சிரட்டையில் அருந்தும் நிகழ்வு நடை பெற்றது. அடுத்ததாக உலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைப்பில் “பொது வாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில்” பொது மக்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்தார்கள். இடம்: 3225 Kinross Cir, Herndon, VA 20171 USA நாள்: *மே 28, 2023 * நேரம்: 10:30 காலை (கிழக்கு) பொது வாக்கெடுப்பின் முடிவின் விபரம். 05/28/2023 சுதந்திர தமிழீழம் 100% சமஷ்டி. 0% ஒற்றையாட்சிக்குள் தீர்வு 0% வேறு தெரிவு 0% செல்லுபடிஅற்ற வாக்குகள் 0% Mock referendum voting results: Tamil Eelam: 100% Federalism: 0% Unitary Undivided Sri Lanka: 0% Other: 0% Disqualified Votes: 0% நினைவேந்தல் நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளர்களை ஏற்பாடு செய்ய பெரும் உதவி செய்த உலகத் தமிழ் அமைப்பின் நிர்வாகிகள், எப்போதும் போல நினைவேந்தல் நிகழ்வில் பெரும் உறுதுணை நின்ற திரு.கண்ணன், திரு. ஜெபா ஜெரின் ஆகியோருக்கும், உலகத் தமிழ் அமைப்பு என்பது அரசியல் கட்சி எல்லைகளை கடந்து தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுவதை உணர்ந்து வழக்கம்போல நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தமது உயிரை இழந்தவர்களை நினைவு கூர்ந்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம். தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்! நன்றி, திரு. இராசரத்தினம் குணநாதன் உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/195366/
  12. பார்க்கவே பரிதாபமாக கிடக்கு.. யாராவது வைத்திய சாலையில் சேர்த்து விடுக.. 😢
  13. நாட்டுல எவ்வளவு திராவிட தலைவர்கள் .. முன்னாள் திராவிட அமைச்சர்கள் "அட்ரஸ்" இல்லாம கிடக்கினம்..😢 நல்ல பெயர் கிடைக்கலையா..?
  14. செல்ல பிராணி வாயை கட்டுவதற்கு எல்லாம் மந்திரம் இருப்பதா சொல்கினம்.. இறைவா இந்த..
  15. வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்! மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விவரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது. https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/194414/
  16. இன்னுயிரை ஆகுதி ஆக்கிய போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.