Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4318
  • Joined

  • Days Won

    10

Everything posted by வாலி

  1. இன்னும் இரும்புக்கடைக்குப் போகவேண்டிய அய்ட்டங்களையும் கூட நிறுத்தியிருக்கலாம். இன்னும் பிரமாண்டமாக இருந்திருக்கும்!😂
  2. துரோகம் பற்றி சொல்லப்போனால், கருணாம்மான் பற்றிய நிகழ்வு வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததற்கு நிகரானது. எவரும் அன்போடு பிள்ளையைப் போல வளர்த்த கடா மார்பில் பாயும் என்று எதிர்பார்ப்பதில்லை. இது துரோகம். பிரிகோஜின் பற்றிய நிகழ்வு நச்சுப் பாம்புக்கு பாலூற்றியதற்கு நிகரானது. அது நச்சுப்பாம்பு ஒருநாள் எவரையோ தீண்டும் என்று தெரியும். அதன் இயல்பே தீண்டுவதுதான். இது கருத்து முரண்.
  3. தன் இனத்தின் விடுதலைக்காக தன் உடல் உயிர் ஆவி பொருள் முழுவதையும் தந்து போராடிய களங்கமில்லா ஓர் உத்தமனையும் பதவி வெறிபிடித்து இன்னொரு நாட்டினை ஆக்கிரமித்து நிற்கும் பொருளாசை பெண்ணாசை போன்ற சகல சிற்றின்பங்களையும் அனுபவிக்கும் கயவனையும் எவ்வாறு ஒரே நோக்கில் உங்களால் பார்க்கமுடிகின்றது என்றெண்ணி வியந்துபோகின்றேன்!
  4. பிரிகோஜினும் புட்டினும் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதிகள். இருவரும் பிரிந்துபோனது ஒரு நல்ல சம்பவம். இருவரும் ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்கள். தற்போதைய சூழ்நிலையில் புட்டினுக்கு பிரிகோஜினை போட்டுத்தள்ளுவது பெரிய விடயமல்ல. ஆனால் முடியாது, ஏனென்றால் ரஸ்ய மக்கள் மத்தியிலும் படைகள் மத்தியிலும் பிரிகோஜின் குறித்த கதாநாயக விம்பம் புட்டினைவிட சற்றுக் கூடுதலாக உள்ளது. உக்ரேன் போர்முனை குறிப்பாக பக்மூட் களமுனை இதை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ஏதோ இருபெரும் மனிதகுலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் பிரிந்துவிட்டனர். இது முடிவல்ல தொடக்கம் தான்.
  5. பிரிகோஜின் ஒரு முடிவெடுத்தால் அதை எந்தப் புழுகர்களினாலும் தடுக்கேலா. சாரி புளக்கர்களினாலும் தடுக்கேலா!😂
  6. கருத்துக்களை கருத்தால் எதிர்கொள்ள முடியாத நிலையில் ஒருவர் தனிமனிதத் தாக்குதலை நிகழ்த்த தொடங்குகிறார் என்பது யாழ்கள வரலாறு!
  7. இவரின் மனைவி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயளலராக இருந்த பீலா ராஜேஸ். எடப்பாடியின் விசுவாசமான காவல் அதிகாரி.
  8. ஒரு கதைக்கு மனித குலத்துக்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதி புட்டின் கீவ் மீது தனது இயாலாத்தன்மையால் அணுவாயுதத்தை பயன்படுத்துகின்றார் என வைத்துக்கொள்வோம். அந்தப் பயங்கரவாதத்தை மிகவும் பொறுப்புடன் நியாயப்படுத்தி மேற்குலகின் மீது பொறுப்புடன் குற்றஞ்சாட்டும் பொறுப்பும் எங்களில் சிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
  9. மண்ணெண்யோட விளக்கெண்ணையும் மிக்ஸ் பண்ணி மினுக்கினால் இன்னும் நல்லா மினுங்கும்!🤣
  10. இவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, புளட்காரர் என்பதற்காகச் சொல்லவில்லை, சரியான தீர்ப்பு இது. பயங்கரவாதிகள் காட்டுமிராண்டிகள் போன்றோருக்கு மரண தண்டனையை விட மேலான பரிசு எதுவுமில்லை!
  11. ரஸ்யாவின் மற்றுமொரு மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதம் இது!
  12. இவர்கள் (தொண்டைமான்கள்) இனவாதிகளுக்கு காலம்காலமாக சேவகம்செய்பவர்களாகவே வாழ்பவர்கள். அதுவே இவர்களது பிரதான பணியும்கூட. இவர் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆளுநர்களுக்குச் சற்றும் குறைந்தவரல்லர் என்பதை வருங்காலம் கூறும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மலையக மக்களின் வாக்குகளை குறிவைத்து ரணில் காய்நகர்த்தியுள்ளார். இதைவிட இதில் அலட்டிக்கொள்வதுக்குப் பெரிதாக எதுவும் இல்லை.
  13. முள்ளிவாய்க்காலில் சாவடைந்தை அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் நினைவு வணக்கம்!
  14. பின்ன கோவில் தீட்டுப்பட நாங்கள் விடுவமே. நாங்கள் ஆறுமுகத்திண்ட ஆக்களெல்லே!
  15. PTR முன்னாள் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொன்னம்பலம் தியாகராஜனின் பேரனாவார். திறமையும் துணிச்சலும் ஊழலும் இல்லாதவர். ஸ்டாலினுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராகும் சகல தகுதிகளும் அவருக்கு உண்டு. நயன்பிரியரான சின்னக்கலைஞர் உதய்ணா முதல்வராவதற்கு PTR தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக ஓரம்கட்டப்பட்டிருக்கின்றார் என்று தோன்றுகின்றது. முக்கிய பொறுப்பான நிதித்துறை கருணாநிதி குடும்பத்தின் விசுவாசியான தங்கபாண்டியனின் மகனான தென்னரசுவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இவரின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை மக்களவைத் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
  16. இணையவன் ஒரு மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதியின் பெற்றோரின் கல்லறைக்கு மக்கள் பூச்செண்டு கொண்டுவந்து வைப்பார்களா என்ன!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.