Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3542
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by alvayan

  1. . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் எங்கையோ உதைக்குது...இது புதுசாக் கிடக்கு..
  2. வணக்கம் சகோதரி..முன்பு ஒர் திரி திறந்துபூட்டிவைக்கச் சொல்லிவிட்டீர்கள்...அது சம்பந்தமாக ..ஒரு விடையத்தை குறிப்பிட விரும்புகின்றேன்....என்னுடைய அனுசரணையுடன் 5 பேருக்கு விண்ணப்பித்தேன்.. இதில் இருவர் வந்து சேர்ந்துவிட்டார்கள்,,,3 பேர் வெயிட்டிங்..அதுவும் விரைவில் கிடைத்துவிடும்...கனடாவில் வாழுவது போவது அவர்கள் விருப்பம் ...என்னால் ஆன உதவியை செய்திருக்கின்றேன்...என்ற இந்த மகிழ்வான செய்தியை இத்திரியில் கூறிவிட்டு ...மகிழ்வுடன் இந்த திரியில் இருந்து விடைபெறுகின்றேன்...நன்றி வணக்கம்
  3. முல்லைத்தீவில் மட்டுமல்ல கனடாவும் குறிவைக்கப் படுகிறது...மனோகணேசனின் வருகையுடன் ஆரம்பித்தது...இப்ப இராசாங்க அமைச்சர் வருகை எங்கையோ உதைக்குது...சாமீ கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட மலையகப் பெண்! (படங்கள்) விளம்பரம் கனடாவில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காபுரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்திரா ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடைபெற்றது. பிரதம அதிதி குறித்த தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார்.
  4. இந்த செய்தியை தூக்கி தாங்கிப் பிடிப்பவருக்கு..இந்த செய்தி சொல்வதென்ன கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள் இரு நாட்களாக படையெடுப்பு; மக்கள் சந்தேகம் அவைசெய்தால் இனிப்பு...தமிழர் செய்தால் கசப்போ..
  5. அது மட்டுமில்ல ..பச்சை கட்டிடமும் எழும்பாமல் இருந்தால் சரிபாருங்கோ...யூ டியூப் பார்த்தால் இவை அங்கை நிற்பினம்..பிறகென்ன..
  6. இன்ன்கு நம்மினம்தான் படிக்க வேண்டும்..நாம்தான் ஆசிரியராக இருக்க வேண்டும் ...நம்ம உடைதான் போடவேண்டும் என்று கேட்கலையே ....பெய்ரே ஐலன்ட் தானே..அப்ப இது இன்னொருவகை கான்சர் போல கிடக்கு...😁
  7. நம்ம காத்தான்குடி ஆட்கள் அடுத்த வெள்ளிக்கிழமை மனுவுடன் ரெடியாகிவிடுவினம்....சுவிசில் புர்க்காவி மகிமைபற்றி சுவிசின் ..காத்தான் குடி மாணவி விவுரஇ செய்தவ என்று யாழ் முசுலிம்பேப்பர் கொட்டை எழுத்த்ல் போட்டவையே அதுக்கு என்னாச்சு....
  8. பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை. இது சம்பந்தமாக ஒரு வருடம் முன்பே யாழில் குறிப்பு எழுதி இருந்தேன்.....இது ஒரு கான்சர் வியாதி...ஊழல் அதிகாரிகளல் நாம் நாட்டையே இழப்போம்..
  9. ஏலவே சாட்டிப் பகுதியில்.. தமிழ் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாதபடி.. முஸ்லிம் மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... வேலணையும் குறிவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. இந்த லொகேசன் எல்லாம் யாழில் இருந்தும் போகிறது...அதைவிட நம்ம யூடியூப் சனல்காரர்மூலம் தகவல் பெற்று ..ப்ரம்பல் செய்கிறார்கள்.... நம்ம யூடியூப்பெசும் விய்யூஸ் பெற நாயாக அலையினம்...இவை அதுக்கிள்ளை விக்கிற காணியை வேண்டி இனப்பரம்பல் செய்யினம்...
  10. யாழ் முஸ்லிம் இணையத்தளம்.. இந்தச் செய்தியை உருவகிக்கவும்.. அதனை கொழும்பான் இங்கு கொண்டு வந்து ஒட்டவும் இருந்த உள்நோக்கம் நன்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. (ஒட்டியதோடு சரி கொழும்பான்.. ஒரு கருத்தும் பதியவில்லை.) அட இதுவா விசயம் ... அதுதானே பார்த்தான்..எமிமினத்தின் கேடுகெட்ட் செய்திகளுக்கு யார் முன்னுரிமை கொடுப்பது என்பது... நன்றி நெடுக்கர்..
  11. இனி மீண்டும் களைகட்டும் அரபு வசந்தம்...புல்லாவின் தொல்லை இனி கட்டுக்கடங்காது...அணிலுக்கு அரபு வோட்டு தேவைப்படுகுது... இனி செந்தில் தொண்டமானின் ஆட்டமும் முடிஞ்சுது..
  12. அப்ப இது கனடவுக்கு ஒரு முன்னுதாரணம்...விசிட்டர் விசாவோடை கொடியேறும்...என்ரை வீட்டிலை🙃 இருக்கிறசனத்தையும் நடத்தி விடுவம்.....
  13. வெள்ளிக்கிழமை மவுலி உசுப்பேத்தியிருபார்..அதிலை 7 பேருக்கு உறைச்சிருக்குது...அந்த 7 கன்னிகையும்..சொந்த மாளிகையும்...அவைக்கு இதைவிட வேறு தேவையில்லை..
  14. கோவம் ஒண்டு இல்லப்பா....அவர்களின் சில போக்குகள்....தமிழினம் ...என்பதில் இருந்து திசை மாறுவதுபோல் தெரிகிறது...வேறு யாரும் நாணயம் பூட்டி இழுப்பதுபோல ஒரு சந்தேகம்..
  15. சனல் 4 காணொளிக்குபின்பு உசாரடைந்த ஒரு இனம் இருக்கல்லே..அவைக்கு இப்ப குளிர் விட்டுப்போச்சு..அவையின்ரை சமாதியும் உள்ளே கிடக்கென்று நம்ம சனமே கதைவிடுகுது.....அவையும் தங்கடை பங்குகுக்கு வெள்ளிக்கிழமைகளில் உசுப்புத்துவினம்....நம்ம புலம்பெயர்ஸ்க்கு ..கொலிடே போறதுக்கு இடமில்லமல் போயிடும் ...பாவம்தானே
  16. போற போக்கைபார்த்தால் நல்லூர் கோவிலும் ஒருநள் மயானமாக பிரகடனப் படுத்தப்படும்...பாவம் புலம் பெயர்ஸ் ...
  17. மோசடியாக சம்பாதித்த சொத்துக்களை வெளிநாடுகளில் மீட்க தேவையான உதவிகளை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்குகிறது இந்த ராசபச்ச நீதி அமைச்சராக இருக்கும்வரை மற்ற ராசபச்சர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார் ..இது மைத்திரி காலத்தில் இருந்தே தொடர்கிறது... எழுதாத ஒப்பந்தம் இது
  18. இது இவ்விடத்தில் தேவையில்லாத ஆணிதான்....சொல்ல வேண்டியதை சோலிமுடிக்கின்றேன்...அண்மையில் கனடாவில் நடந்த தெருத்திருவிழாவில்...கண்டதும் வேதனைப்பட்டதும்...மலையக மகள்.. எங்களவள்தான்...ஒரு பூத் வாடகைக்கு எடுத்து..உண்டியல் குலுக்கும் நம்மவர்...நாட்டிலே காணாமல் ஆக்கப்ப்ட்டு...அங்கம் இழந்த போராளிகளூக்கு ஒரு பூத் திறந்து உண்டியல் குலுக்கலாமே...போதாக்குறைக்கு இளம்சந்ததியை..சினிமாமோகத்தில் இழுத்த்விடும் நிலையும் ஏற்படுகிறார்கள்.. மனோகணேசனை அழித்து ஆரத்தி எடுத்து ஆலவட்டம் பிடிக்கிறார்கள்..... மனோகணேசன் 2009 பிற்பாடு கதைத்த கதையும் ..நல்லாட்சியில் நம்மினத்தை நாய்க்கு சமனாக..படுத்தியபாடும் மறக்கமுடியுமா...இப்போ கனடாவில் எம்ஜிஆராக வலம் வந்து திரிகிறார்..சேர்ந்து போட்டோ எடுக்காத நம்ம சனமே இல்லை...ப இவர் இங்கு வந்ததே ரணிலின் அம்பாக....அம்ம்பு தன் வேலையைகாட்டத்தொடங்கிவிட்டது...பாவம் இனி சி ரிசி....போதாக்குறைக்கு...முசுலிமூகள் பூத்துவைத்து ..நாம் தமிழர்..( கனடாவில் மட்டும்தான்...இலங்கையில் வேறுமுகம்)>.பூத்தை எட்டிப்பார்த்தபோது ..இந்த மூறை புலிப்படுகொலை புத்தகங்கள் நேரடியாக இல்லை..ஆனால் சிறுகதகளில் செருகல்லகள் நிறைய இருக்கு...இவைக்கு ஆதரவு நம்ம சம்பந்து அய்யாவின் வலதுகை உதவிபோல...அவருடைய புத்தகம் இலவசம்...இந்த மிகப்பெரும் சனத்தொகை விழாவை குழப்ப இரண்டுபக்கமும் முனைகினம்..வெற்றியும் அடைவினம்...இப்ப அவையின் நிலைப்படு..ஊடுருவி பதவிபெறுவதே...இதையெல்லம் நம்ம சனம் பெரிதாக எடுக்காது ...கொத்துரொட்டியும் அயிசுக்கிறீமும் சாப்பிடுவதில் பிசியாக இருந்தால் காணும் ...இதுவும் கஜேந்திரகுமாருக்கு நடப்பதுபோலத்தான் ..இங்கு கனடாவில் நம்ம இனத்துக்கு நடக்கும்...
  19. வாழ்த்துக்கள்.. தங்கள் மகளின் பெருமையில்..நானும் வாழ்த்தி மகிழ்கின்றேன்..
  20. இதுவும் ஒரு புதுக்கதை..அதுவும் எங்கடயாள் சொன்னவராம் ... யழ் முசுலிமில் படித்தது..பிரதி உங்கள் பார்வைக்கு....வெட்டு விழுமோ தெரியாது...படித்ததை போடுகின்றேன். சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட, புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது . Sunday, August 27, 2023 கட்டுரை ரமேஷ்(முன்னால் தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் அவர்களின் சிறப்புக் கட்டுரை. கடந்தகால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு . ஒரு பாலச்சந்திரனுக்காக துடிதுடிப்பவர்கள் , 30 பாலச்சந்திரன்களை பள்ளிவாசலில் சுட்டும் வெட்டியும் புலிகள் கொன்ற போது ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்? என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று கேட்பவர்கள் ,என்ன பாவம் செய்தார்கள் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இந்த 30 பாலகர்கள் என்று கேட்க ஏன் மறுக்கிறார்கள்? 1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது. ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது. ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது,சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா? ஆண்டுகள் பல கடந்த நிலையிலும்கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். 1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டனர் புலிகள். அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். "முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள் . சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள்; வாதாடினார்கள்,இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். புலிகளுக்கு ஏது மனசாட்சி? புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது. அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன்,உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள். புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை. சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள். மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள் . கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள், பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள்,ஒருகாலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத்தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை , நிவாரணப் பொருட்களையும் , நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள். யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள்,அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள். ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த , எந்த ஊடகமும் , எந்த அரசியல்வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை. நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை, அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற ,ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது.ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை. ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது ,இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன, புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள் , ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த , நான் பிறந்த இடத்தில் , பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய , எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது. புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி, புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது. இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் , அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளனார் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் ஒற்றை படத்தினை பிடித்து இனியும் போராட முடியும்?30 பாலச்சந்திரன்களை புலிகள் அன்றே கொன்றுள்ளார்கள் . உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது, இறுதி யுத்தத்தில் ஈரான் ,பாகிஸ்தான் எல்லாம் ஓடிவந்து சிங்களவனுக்கு உதவ இதுவும் காரணம். என்னிடம் ஆயுதம் இருக்கின்றது, இது என் நாடு அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது, அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம் . ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலகநாடுகள் திரண்டபொழுது புலிகள் காணாமல் போனார்கள்,இப்படி எல்லாம் ஆடிய புலித் தலைமைகள் தான் கடைசியில் முள்ளிவாய்காலில் எல்லோராலும் வெறுக்கபட்டு கொல்லபட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதும் இல்லை அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இல்லை, ஆனால் புலிகள் இவை அனைத்தையும் அந்த முஸ்லீம் மக்களுக்குச் செய்தார்கள் ,இப்போது கூறுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி புலிகளை ஆதரிப்பார்கள்? உண்மையை கூறுவதானால் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், புலிகள் அவர்களிடம் மிகவும். கடுமையாகவும் , கொடுமையாகவும் நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சாவகச்சேரியில் செப்டம்பர் 04ஆம் திகதி, புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாசலை தாக்க முற்பட்டபோது முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர், புலிகள் அவர்களை என்ன செய்தார்கள் தெரியுமா? மோதலில் ஈடு பட்டவர்களை விடுவித்ததும் இல்லாமல் , சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எச்சரிக்கையும் விட்டார்கள்? எப்பிடியிருக்கு நியாயம் ? சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது . Share it Tweet Share it Share it Pin it கட்டுரை சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட, புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது . August 27, 2023 கட்டுரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்... August 27, 2023 கட்டுரை ஏன் இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில், வரலாறு காணாத மக்கள் திரள்...? August 25, 2023
  21. அப்ப என்னை ஆமி பிடிச்சுக்கொண்டுபோனது.. வயசு....படிக்கிறபள்ளிக்குடம் கேட்டபின் சிலரை..வி..ட்டவை ..அந்த குறூப்பிரிப்🙃பிலை நீங்களும் இருந்தனீங்களோ ... கப்பலிலை ஏத்தும்போது எங்கை ஏத்தினவை..😄 இந்த இடத்திலை நடந்த அந்த கோடூரம் யாருக்கும் ஏற்படக்கூடாது.....மறக்கவும் மாட்டேன்...மன்னிக்கவும் மாட்டேன்..சிங்களவனை
  22. இந்தக் கூத்தாடிகளின் கதை இப்படித்தான் இருக்கும் ..இவரு அப்பனே அந்தக்காலத்தில்... அப்படித்தான்...இதுகளை இப்ப ஒரு பொருட்டாக எடுப்பவர்கள் புலியின் வாசம் பிடியாதவர்களே...புத்தக வெளீயீடு என்றுவிட்ட்டு கக்குவது முழுக்க புலிவாந்திதான்... அதை வான்கப் போறவையும் அவரின் ரசிகர்களே...அப்பரின் புத்தகம் விற்று பணம் பண்ணவேண்டின் ..இப்படித்தான் உளறவேண்டும்..பாவம் புழச்சுப் போகட்டும்
  23. இது இப்போ இலகுவாக கனடாவில் நுழைகிறது..போன்முறை தெருத்திருவிழாவில் பூத் ஓன்றை எடுத்து கடைபரப்பி எமக்கு எதிரான் நூல்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன...இது முதல்படி...இனி இந்த நிர்வாகத்துள் எப்படியும் நுழைவார்கள்...ஏங்கடையாக்களின்நுனி நாக்கு இங்கிலீசு அவையை உள்ளெடுக்கும்...அப்புறம் கழுதைக்கு இடம்கொடுத்த நிலைதான் ..இது இலங்கை அரசின் தந்திரம்...இதைவிட அதேஇடத்தில் தமிழர் அங்காடி ஒன்று உண்டு வீதிகளே தமிழ்பெயரில்...இப்ப அதில் மொத்தமும் புத்தபிரானையும் ..அவரின் பூசைப் பொருடகளையும் பட்டிக் உடுப்பு வகைகளையும் கொண்டகடை சாய்பகவன் பெய்ரில் நம்மஆள் ௹ஈரந்து ஈயோட்டுறார் ,,இது யார்ர்ன் காசோ , சொத்தோ தெரியாது..இப்படிப் பல
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.