Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. அதுதானே சொல்லிவிட்டேன் கிருபன்சார்.. எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை பிரபாகரன் கொள்கையாளன்...இன்று நான் .நாளை வசீ...நாளை மறுதினம்..... வாழ்த்துக்கள் வசீ...நாளை முதல்வராவதற்கு...கிருபன் உங்களுக்கும்தான்
  2. எட்டெடுத்து எட்டாத உயரத்தில் நிற்கின்றேன் ராசா... எட்டாக் கனி ஆகியிருந்ததை -இன்று எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை எப்பவோ ஒருநாள் வைப்பேன் விருந்து.. எல்லோரும் ரெடியாகுங்கள் என்ன சாப்பாடு..மரக்கறிப் புரியாணிதான் ஏனெனில் நான் கனடியன்..
  3. வடபகுதியில் கடந்த அரசில் படையினர் அழுத்தம் இருந்தது...இப்போது அது அரசின் .உறுப்பினர்களால்...மிக நெருக்கிய அழுத்தம் பலஇடங்களில் இரகசியமாக கொடுக்கப்படுகிறது...இதுதான் பாடசாலைகளிலும் ...வரவேற்கும் இடங்களிலும் ,பரப்புரைகளிலும் நடக்கிறது...இது ஒரு கண்ணுக்குதெரியாதா அடக்குமுறை...
  4. கனடா என்றவுடன் எனக்கு கோபம்தான் (?) வருகுது..நடந்தது இது...நான் இங்கிருந்து போய் இறங்கியவுடன் என்னுடன் வந்த உறவினன் நண்பர்களுக் கொடுபதற்காக போத்தலாக வாங்கி அடுக்கினார்...நான் அப்படி எதுவும் வாங்கவில்லை...ஊர் போனதும் ..அவர் ஒருவாரம் முன் திரும்புவதால்..கொடுத்ததுபோக எஞ்சியஒன்றை என்னிடம் தந்து ..யாருக்கும் கொடுக்கும்படி சொன்னார்...நான் யரும் குடிப்பவர்களுக்கு என் கையால் கொடுக்கமாட்டேன்...வேறு வழி செய்கின்றேன்..அதன்படி..நான் பயண ம் புறப்பட முன்பு உறவினர் ஒருவரை நெல்லியடிக்கு அழைத்து ...பாருக்கு முன் கூட்டிசென்று..போத்தலை கொடுத்துவிட்டுச் சொன்னென்..இதை யாருக்கும் விற்று காசை வாங்கி நீயெடு...இது எனக்கு முன்னால் செய்யப் பட்டது...இது உண்மை...அதாவது கனடாவிலும் கண்ணகிகள் (கண்ணகன்)>.இருக்கிறார்கள் என்பதை சாத்தான்...ஏற்றுக் கொள்ள வேண்டும் ...இப்படியும் மனிதர்கள் நேர்மையாக உழைத்து...குடி கூத்து இல்லாமலும் கனடாவில்..வாழ்கிறார்கள்... என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்...எழுந்தமானத்தில் எதையும் எழுதக்கூடாது...நீங்கள் ஆதாரத்துடன் குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம்
  5. என்னுடைய அனுபவம்...ஊர் போனேன்....அங்கு சொந்த பந்தங்களின் விட்டுக்கு போனவுடன் கேட்பது ..தண்ணீர்தான்...குடித்துவிட்டு தண்ணீர் எங்காலான் நல்லாயிருக்கே என்றவுடன் உண்மைவரும்...1. வாங்கும் தண்ணீர், 2 ..எங்கள் கிணற்றுநீர்..... .விடை கிணற்று நீராக இருந்தால் மட்டுமே 2ம் 3ம் கிளாஸ் வங்கிகுடிப்பேன்...இலஐயெனில் என் தாகத்தை அடக்கிவிடுவேன்.....நமது 45 அடி ஆழ வெட்டுக்கிணறுகள்.. எல்லாமே நன்னீர் கிணறுகள்... பாழடையவிட்டு கம்பிவலையால்மூடப்பட்டுள்ளன..வீட்டுகு ஒவ்வொரு குழாய் கிணறு....அவை அடிகப்பட்ட ஆழம் 150 அடிவரை...நன்னீரோட்டம் 45 அடிதான் ...150 அடியில் என்னென்று நன்னீர் கிடைக்கும்...இதற்குத் தீர்வுதான் காசுத் தண்ணீர்...வாழ்க்கைசெலவின் கஸ்டத்தின் மத்தியில் தண்ணீருக்கு மேலதிக செலவு...செலவைக் கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பதையே கட்டுப்படுத்துகிறார்கள்.. இதனால் வருத்தங்களும் கூடுகின்றது....இந்த வாழ்க்கைமுறை எதனால் வந்தது.....இப்படிப் பல
  6. அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை. அன்பின் மகத்துவம்...அது பூனையால் வந்தது...மனிதரால் வந்ததுஅல்ல..
  7. பைரவர் மடைக்காக 5 ஆடு ,10 கோழி நேர்ந்து விட்டதோடை....விசேடமாக வெளிநாட்டு மதுபான வகைகளையும் வைத்து படைப்பதாக வேண்டியுள்ளேன்...
  8. இதுவும் அனுர அரசின் தந்திரம்தான்...பாரளுமன்றத்தில் எந்த தீர்வையும் கொண்டுவரவிடாமல் தடுப்பதிற்கும் ...ஒத்துப் போவதிற்கும் ஒருவர் தேவைதானே..இதற்கு சரியான ஆள் .. சும் மட்டுமே...அனுர அரசு தலைகீழாக நின்றும் ..சும்மை உள்ளெடுக்கும்
  9. இதுதான் இந்திய ரீம் என்றால்....என்னுடைய முடிவை மீளப்பெறத் தயராக உள்ளேன்\\...உருண்டு திரண்டு பந்து பிடிக்கவே துப்பில்லை..பந்து போடவும் துப்பில்லை ... சீ கேவலம் கெட்ட ரீம்...
  10. பல சிரமங்களுக்கு மத்தியில், மிகுந்த பிரயாசைப் பட்டு… களத்தை புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி @மோகன் . 🙏 🥰
  11. இதே....எங்கும் தெரியாமல் ...யாழில் அமத்தி விட்டிருக்கின்றேன்.. நன்றி அக்கா...இப்படியும் வரும் ...அப்படியும் வரும்
  12. இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ
  13. உதவி பிரதேச செயலாளர், படுக்கை அறையில் மெழுகுதிரியினால் உயிரிழப்பு Sunday, February 16, 2025 செய்திகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது என்று உயிழப்பதற்கு முன் வைத்தியசாலை முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்
  14. விளங்காத மரணங்கள்...எத்தனையோ விதமாக எமது இளைய சமுதாயத்தை இழந்துகொண்டிருக்கின்றோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.