Everything posted by குமாரசாமி
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
நன்றி உங்கள் கருத்திற்கு....
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
தீராத கோபத்தையும், தீராத பழியையும் தன்னகத்தே சேகரித்து வைத்திருக்கும் இஸ்ரேல் எத்தனை நாட்களுக்கு/காலத்திற்கு தன் மக்களை சுதந்திரமாக வாழ பாதுகாப்பு கொடுக்கும்? கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இஸ்ரேல் பொதுமக்கள் வாழ்க்கை..
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
கிந்தியர்களின்ர உண்மை முகத்தை பாக்க நான் ஏன் டில்லிக்கும் மும்பைக்கும் போகோணும்? 😀 இந்தா பெரிய பிரிட்டிஷ்க்கு போனாலே எல்லாத்தையும் கண் குளிர பாக்கலாம் எல்லோ? 😎 கிந்தியர்களின் அட்டகாசம் கனடாவில எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன் உண்மை தானே? ஒரு சில ஏரியாவில கிந்திய தவிர எந்த பாஷையும் எடுபடாதாமே?
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
வெட்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
மற்றவர்கள் குறை சொல்லாத அளவிற்கு(மேற்குலகம்) இந்த முறை தமிழ் அமைப்புகள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து காட்ட வேண்டும் என்பது என் அவா!
-
பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.
யாழ்களத்தில் இரத்த கொதிப்புள்ளவர்கள், இதய பலவீனமானவர்கள் உட் புக வேண்டாம் என ஒரு எச்சரிக்கை பகுதி ஆரம்பிக்க வேண்டுமென கள நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். 😎 ஏனெண்டால் உலக அரசியல் நிலவரங்கள் அந்தமாதிரி குண்டக்க மட்டக்கவாய் போகுது 😂
-
உலகின் பழமை வாய்ந்த மொழி எது?
முற்றிலும் உண்மை. அதிக அமெரிக்கர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கின்றதென்றே தெரியாது. ஏன் அவர்கள் தோழமை நாடுகளான ஐரோப்பாவில் என்ன நடக்கின்றது கூட தெரியாது. உதாரணத்திற்கு நாடுகள் எந்த கண்டத்தில் அமைத்திருக்கின்றது என்பதை கூட சொல்ல மாட்டார்கள். இது ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றில் பார்த்து அறிந்தது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சும்மா எதற்கெடுத்தாலும் பழசையே கிளறிக்கொண்டிருந்தால் ஒரு அடி கூட நகர முடியாது. சேர்ந்து கைகோர்த்து நடந்து போவோம். உதறினால் அதை உலக சாட்சியாக்குவோம்.
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
கரப்பான் பூச்சியை அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎 அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂 போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁
-
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
பத்தோடு பதினொன்றாக இருந்து பொழுதுபோக்கு அரசியல் குளறுபடி செய்யும் இப்படியான பட்டுவேட்டி சால்வை கள்ளர்களை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.😡
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த நியாயமில்லை. அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே! குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝ ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....? இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
எமக்கு/உலகிற்கு தடையாக இருந்த மாமா போய் விட்டார். இனி உலமெங்கும் வசந்த காலம். எமக்கு/உலகிற்கு தடையாக இருந்த மாமா போய் விட்டார். இனி உலகமெங்கும் வசந்த காலம்.
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!
ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஆளும் புதிசு கட்சியும் புதிது ஆட்சியும் புதிசு
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
அந்த கெட்ட களைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முளைக்காமல் இருந்ததின் மர்மம் என்னவோ?
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
குத்துவிளக்கின்ர மெல்லிய வெளிச்சம் தரும் அருமை தெரியாத பாவியா நீங்கள்? கந்தையருக்கு எப்ப பாத்தாலும் அந்த நினைப்புதான் 😂
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
இதுவொரு புதிய ஆரம்பம் என நினக்கின்றேன். ஆளும் புதிசு ஆட்டமும் புதிசாய் இருக்கக்கூடும்.😁 இரு பெரும் கட்சிகளின் ஏமாற்று வேலைகளை பார்த்து அழிந்து விட்டோம். இலங்கை அரசியலில் புதிய முகம். என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம். எதுவும் கெட்டு விடாது. அடுத்த நான்கு வருடங்கள் காத்திருப்போம்.
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!
ஆக மொத்தத்தில்...... சிங்கள புரட்சியையும் கிந்தியா அழித்திருக்கிறது. தமிழர் புரட்சியையும் கிந்தியா அழித்திருக்கிறது. இதனால் விளங்கிக்கொள்வது என்னவெனில்.....? எதிரிக்கு எதிரி கை குலுக்குவதில் தப்பில்லை.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
ஏனப்பா எப்ப பாத்தாலும் புடுங்குப்படுறியள்.பகல்ல சங்கை வைச்சிருங்கோ .. இரவில குத்து விளக்க வைச்சிருங்கோவன் 😎
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இனி வெளிநாட்டுகாரருக்கு விசா எடுக்க காசில்லை எண்டது என்ன மாதிரி?
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
சுமந்திரனை கொஞ்சநாளைக்கு வாய் திறக்க வேண்டாம் எண்டு ஆராவது சொல்லித்தொலையுங்கப்பா 😁
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
இதே போல ரஷ்யா தன்ரை பாதுகாப்பு கருதி உக்ரேன் மீது படையெடுத்தால் குத்துது குடையுது என்பவர்கள் இஸ்ரேல் என்றவுடன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்னவோ? முள்ளிவாய்க்கால் அழிவுகளுடன் ஒப்பிடவும் ஆட்களில்லை.
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
குடி விட்டதை கண்டித்து சிவப்பில ஒரு அமுக்கு 😂
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அதுவும் சரிதான்...😀 என்ன பெரிசு லொள்ளா? 😎 யாழ்களத்திலை இணைஞ்ச நாள் தொடங்கம் உங்களை கவனிச்சுக்கொண்டுதானே வாறன் 🤣
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
நானும் இப்ப அஞ்சாறு நாளாய் பாத்துக்கொண்டு வாறன். இவர் @ரசோதரன் பெரிய கை போலத்தான் கிடக்கு.... அங்கை ஊரிலை எனக்கு காணிப்பிரச்சனை எக்கச்சக்கமாய் கிடக்கு. ஆளின்ர கைய புடிச்சால் சகலதும் சுபம் எண்டு ஒரு பட்சி சொல்லுது 😂