Sasi_varnam
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by Sasi_varnam
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
செம்மணியை போல, திருக்கேதீஸ்வரத்தை போல, மண்டைதீவைப்போல இன்னும் ஈழத்தில் கண்டெடுக்கப்படும் ஏனைய மனித புதை குழிகள் போல நீங்கள் கேள்விப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் விவகாரமும் வெளிப்பட்டால் நிச்சையம் ஜஸ்டின் கூறிய முறையில் சில உண்மைகளையாவது கண்டறியலாம். So அது வரையில் இப்பொழுது வெளிப்படும் தடயங்கள் குறித்து அதன் பின்னணியை ஆராயலாம்.
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
நல்ல தகவல் ஜஸ்டின். தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்? இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன? இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா? தெரிந்து கொள்ளலாமா?
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
காட்டெருமையின் எலும்பையும், கடவாய் பல்லையும் புத்தரின் விலா எலும்பு, தெத்த பல்லு என்று சொல்லி சரித்திரம் எழுதவும், படுகொலை செய்யப்பட்ட தமிழனின் உடல் எச்சத்தை போர்த்துகீசு என்று சொல்லி மறைத்து ஆடுவதும் சிங்களவருக்கு கைவந்த கலை.
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது. சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
ஒரே ஒரு விமானப்பயணி உயிர் பிழைத்துள்ளதாக தகவல். விஷ்வாஸ் குமார் (பிரித்தானிய பிரஜை)- இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இந்த கொடுந்துயர விபத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அனுதாபங்கள்.- அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு
எது எப்படியோ பைத்தியர் அர்ச்"சூனாவுக்கு" கூடிய சீக்கிரம் ஆப்பு இருக்கிறது.- ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
நம்ம தலைவன் கழுவி ஊத்துவான்னு நினைச்சேன் ஆனா இப்டி காரி துப்புவான்னு எதிர்பார்க்கலே!!- ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
முதல் காட்சி படம் பார்த்தாச்சு... படம் செம மொக்கையா இருக்கு. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு கமல், மணிரத்னம், ரஹ்மான், சிம்பு, திரிஷா... இந்த பட்டியல் கூட்டணியோடு வரும் படமாக இருப்பதால், பேசப்படும் படமாக இருக்கும் என்ற நினைப்பில் தான் போனேன். படத்தை சிம்பு மட்டுமே தூக்கி பிடித்து இருக்கிறார். வேறு பிரமாதமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. திரைக்கதை - அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. பின்னணி இசை - ரஹ்மான் இந்த படத்தில் வேலை செய்தாரா என்று நினைக்க தோணுகிறது. பாடல்கள் - ஆடியோவில் கேட்ட எதுவும் திரையில் சோபிக்கவில்லை. முக்கிய பாடல் "முத்த மலை" படத்திலேயே இல்லை. விண்வெளி நாயகா ... வயலில் களைபிடுங்கும் போது ஒரு பாடலாக வருகிறது... பால் டபா பாடிய மாறா பாட்டு ஒரு சண்டை காட்சிக்கு BGM ஆகா போட்டு தொலைத்து இருக்கிறார்கள். திரிஷா 2 ஆண்களால் அவர்கள் இச்சைக்கு தொட்டுக்கொள்ள பயன்படும் பிச்சையாக இருக்கார். பார்த்து பார்த்து எடிட் செய்து வெளியிடப்பட்ட படமாக தோணவில்லை. சீரியஸ் வசனங்கள் கமல் பேசும் போது தியேட்டரில் சிரிப்பு சத்தம் தான் கேட்டது... "கமல் சொல்ல என்ன இருக்கு .... நீ திரிஷா ஹூக்கை கலட்டு..." கன்னடா ரசிகர் காசு தப்பியது, அப்பாவி கனடாகாரன் மாட்டிக்கிட்டான்.- மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
உங்கள் மீம்ஸில் இருக்கும் முருகன் பிரான்ஸ் நாட்டு குடிமகனுக்குத்தான் நன்றி சொல்லவேணும், கனடாவுக்கு அல்ல.- தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அண்ணர்... ஒரு வேலை இதையே ஒரு தமிழர் செய்திருந்தால் உங்களுடைய வார்த்தை பிரயோகங்கள் இப்படிதான் இருந்திருக்குமா? 😶- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 💐- வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
சட்டத்தரணி நோகாமல் நொங்கு சாப்பிட்ட கதை...- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மக்களே உங்கள் சசிவர்ணம் பேசுகிறேன் புதிதாக "சங்கி வர்ணமாம்" 🤣 சொல்ல வேண்டிய கருத்தை தெரிய வேண்டிய கருத்தாளருக்கு, தெரிந்துகொள்ளும் விதத்தில் பதில் எழுதி ஆயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக பேசுபொருளாக இருந்த Barista நிறுவனம் நிலைமைகளை புரிந்து கொண்டு ஒரு முடிவையும் எடுத்துவிட்டது. யாழ்களமும், வந்தான் வரத்தான், தீவான் (அதுதான் அந்த தீவு மக்கள்) இப்படி புதிதாக நல்லூரில் குடி வந்த மக்களை வியப்புக்குரியோடு அன்னியபடுத்தி கருத்து சொல்வதையும் ஏற்றுக்கொண்டாயிற்று. கோஷன் அப்படி இல்லை என்று வாதாடினாலும் ஒரு உரையாடலில் அந்த குறிப்பிட்ட பதங்கள் வந்ததே தவறு என்று தான் நான் பார்க்கிறேன். இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக வாசித்து வருபவர்களுக்கு தெரியும் எங்கே, எப்படியான நையாண்டி கருத்துக்களில் இருந்து உரையாடல் தடம் புரண்டது என்பதை அவதானிக்க. இது ஒன்றும் யாழ் களத்திற்கு புதிதல்ல, இவற்றை பக்குவமாக ஏற்றுக்கொண்டு நடுநிலை வகிப்பதை போல அல்லது கடந்துபோகும் உன்னத நிலைக்கு யாழ்களம் வந்தாயிற்று. இனி இதிலே குந்தி இருந்து மேலும் மேலும் பிச்சைக்காரன் சொறிந்த புண்ணாய் கருத்து எழுத ஒன்றும் இல்லை. நன்றி 🥰- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஒரு சாதாரண கருத்தாடலில் "தமிழ் தலிபான்ஸ்", "நல்லூரில் வந்தான் வரத்தான்", "தீவார்", "ஐயரின் கை ஜூஸ்" இப்படி பேசுவது இவருக்கு நாகரிகமாக தெரியுதாக்கும்... சும்மா போங்கோ ஐயா காமெடி பண்ணாம... :)- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
முற்போக்கு போர்த்திய முடிச்சவிக்கீஸ் + நடுநிலை நக்கிகள் தங்கள் சல்லித்தன புத்தியில் எதை எதையாவது பேசி விட்டு போகட்டும். அப்படியே Barista எதுவித மாற்றங்கள் இல்லாமல் இயங்கினாலும் தமிழ் தாலிபான்ஸ் வெஜ்ஜி ரோல்ஸ் சாப்பிட்டு காப்பூச்சினோ குடிப்பார்கள். இந்த நடுநிலை நக்கீஸ் எஞ்சி இருக்கும் மாமிச சாப்பாடுகளை ரசிச்சு திங்கலாம் புளிச்ச ஏவரை விடலாம். No questions asked!!- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும், நல்லூர் Barista கிளையில் உணவு தெரிவுகளில் இருந்து மாமிசத்தை நீக்குவதாக தாங்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். நடக்குதா பார்ப்பம்.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
என் அறிவுக்கு எட்டிய வகையில் சைவ கோயில் விதிமுறைகளில், எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிமுறைப்படியும், ஒரு சொற்ப கோயில்கள் ஆதி குடிகளின் (சரியான பதமோ தெரியாது) பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையிலும் வழிபாடுகள் நடாத்தப்பட்டுகின்றன. அதன் அடிப்படையில் தான் ஒரு சில (சிறுதெய்வ, குலதெய்வ) கோயில்களில் உயிர் பலிகள், வேள்விகள் நடத்தப்படுகின்றன. இப்படியான உயிர் பலிகளை பிரத்தியேகமாக நான் விரும்பவில்லை. ஆனாலும் அந்த பாரம்பரிய முறையை பின் பற்றுபவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் போக முடியாது. ஆகவே அப்படி வழிபாடுமுறைகளை வைத்திருக்கும் கோயில்களையும், நல்லூர் கோயில் நடைமுறைகளையும் ஒப்பிடுவதை தவிர்க்கலாம்.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
என்னுடைய இரண்டு அண்ணா, அக்கா மற்றும் பிற சொந்தங்கள் என 5 குடும்பங்கள் நல்லூர் கோயில் சுற்றாடலில் தான் வசிக்கிறார்கள். அதிகமாக சைவம் தான் சமைப்பார்கள், மாமிசம் சமைப்பது மிகவும் குறைவு. காரணம் சுற்றி உள்ள கோயில்களில் தொடர்ந்தும் ஏதாவது உட்சவங்கள் நடக்கும் ( மூத்த விநாயகர், நாச்சி அம்மன் இப்படி பல) ஆகையினால் பெரும்பாலும் மாமிசம் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சமைக்கவே மாட்டார்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? கடை சரியாக கோயில் முற்றத்தில் இருந்து >3௦௦ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும். இந்த இடத்தில் ஒரு மத நல்லிணக்கத்தை பேணினால் தான் என்ன? ரிக்கோ முதல் mango வரை மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை. Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு வழிநடப்பவர். நல்லூர் ஆலய சூழல் பற்றி, அங்குள்ள வழமைகள் பற்றி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அவரின் மெனு கார்டில் சில மாற்றங்களை கொண்டும் வருவார். உங்கள் வீட்டில் உள்ள ஸ்வாமி அரையிலேனுள்ளே மாட்டுக்கறியையும் , மீன் குழம்பையும் தட்டிலே போட்டுக்கொண்டு கொண்டு போய் சாப்பிடுவீர்கள்? அப்படித்தான் இதுவும். ஒரு புரிந்துணர்வு, நம்பிக்கை. இதையும் ஒரு சங்கித்தனமாக, யாழ்ப்பாண மேட்டுக்குடி மேலாதிக்கமாக எப்படி பார்க்க முடிகிறது? நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எதோ ஒரு பள்ளிவாசல் பக்கத்தில் பன்றி இறைச்சிக்கடை வந்தாலும் இப்படித்தான் நான் யோசிப்பேன்.- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
❤️- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
முன்னர் இருந்த நீதித்துறையை விடவும் அதிகம் பொறுப்புகளும், பட்ஜெட்டுகளும் கூடிய அமைச்சு. வாழ்த்துக்கள் ஹரி !!- நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
(1) The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the state to protect and foster the Buddha Sasana, while guaranteeing to all religions the rights granted by Articles 15 (1) and 15 (3). (2) The State shall consult the Supreme Council in all matters pertaining to the protection and fostering of the Buddha Sasana. (3) For the purpose of this Article ``Supreme Council'' means a Council established by law in consultation with the Maha Sangha. அம்மையாரின் / நீலன் ஐயாவின் பொதியின் அடிநாதம் + ஒற்றை ஆட்சி + மேலே உள்ளது.- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல. - இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
Important Information
By using this site, you agree to our Terms of Use.