Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. ஓம் மச்சான்... புட்டின் ஆபிரிக்கா காட்டுக்குள்ள பிறந்த கருப்பு சொக்கத்தங்கம். என்டபடியால நாங்கள் புலம்பெயர்ஸ் எல்லாம் அவருக்கு பின்னால அணிவகுக்கிறம். மற்றது நாங்கள் அசைலம் அடிக்கேக்க...அடிக்கும் முதல்ல... ஓடோடி வந்து கேஸ் அக்செப்ட் பண்ணி எங்களை ஆப்பிரிக்காவில அந்த மாதிரி வாழ வச்ச மனிசன். நான் செய்யிற தொழில், அடிக்கிற கோட்டம் எல்லாம் கருவல்ஸ் புட்டின் தந்த வரம்.
  2. 😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை. அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣 "டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ. ~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!!
  3. உடான்ஸ் சாமியார்... கற்பனையிலும் கனதியான பல செய்திகள் சொல்லியிருக்கிறார். 👌 என்ன.... அதை வாசித்தது, கிரகிக்க எக்ஸ்டரா ஐகியூ தேவை. அது "டிக் டொக்கில்", "மீம்ஸ் கிளிப்பிங்கில்" கிடைக்கும் சமாச்சாரம் அல்லவே !!
  4. ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣
  5. ரஞ்சித் மன்னிக்கவும், இங்கே ஒரு வரிகூட எழுதக்கூடாது என்றே நான் நினைத்தேன்... இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறேன். ரஞ்சித் யாழ் அகவை - சுய ஆக்கங்கள் - பகுதியில் தனது அவதானிப்பு, புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு கட்டுரை வரைகிறார். அதற்கான இடத்தை , சுதந்திரத்தை அவருக்கு கொடுக்கும் அடிப்படை மாண்பு மீறி தங்களது கிறுக்குப்பிள்ளை அரசியல் எதிர் வாதத்தையும் இங்கே வைக்கிறார்கள். உங்ககளால் முடிந்தால் ரஷியா தன்னிச்சையாக மேட்கொண்டு வரும் யுத்தம், அவர்கள் பக்கத்துக்கான ஞயாயங்களை பக்கம் பக்கமாக எழுதுங்களேன். யார் உங்களை தடுத்தார்கள்? வெறுமனே ஆதாரமற்ற "உக்ரைன் போட்ட "பொஸ்பரஸ்" குண்டு, உக்ரைன் கொன்ற "செஞ்சோலை சிறார் " போன்ற "டிக் டொக்" வீடியோ பார்த்து உணர்ச்சி பிழம்பாவத்தை விட்டு உருப்படியாக எதையாவது எழுதுங்கள் நாங்களும் வாசிக்கலாம். இன்றும் கூட ஒரு வீடியோ பார்த்தேன்... கைகள் கட்டப்பட்ட ஒரு மனிதனின் நெஞ்சாங்கூடு பிளக்கப்பட்டு, தசை நார்கள் கிழிக்கப்பட்டு இதயம் துடிக்க துடிக்க பிடுங்கப்படுகிறது... பின்னணியில் "நித்திரையோ தமிழா நீ .. திரும்பிப்பாரடா" பாட்டு ஓட்டுகிறது. ஆனால் அந்த வீடியோ தென்அமெரிக்க நாட்டில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது. இப்படித்தான் எம்மவரை "உணர்ச்சியுள்ள தேசியவாதிகளாக" காட்ட பாடுபடுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அதன் முடிவில் நியாயங்களை, "மாயங்களை" தீர்மானிப்பது வாசிப்பவர்களாக இருக்கட்டும்.
  6. புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள்.
  7. உண்மை தான் ஓணாண்டியாரே மனிதம் வறண்ட, சிந்தனை சிதைந்த உங்களை போன்ற "தொகையறாக்கள்" மத்தியில் எம்மை போன்ற "வகையறாக்கள்" மஹா ஞானிகளாக, புத்தர்களாகதான் தெரிவார்கள். ரஷியாவின் "அடாவடிதனமான", "அவசரத்தனமான" உக்ரைன் போரில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு ஆத்மார்த்த ஆதரவினை தெரிவித்துக்கொண்டு உங்களை பொருட்படுத்தாமல் கடந்து போகிறோம்.🙏
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Cheers!!!
  9. நானும் நீர்வேலியான் எழுதிய கருத்தை வாசித்தேன் ... ஆனால் அவர் அப்படி ஒன்றும் சொல்லாமலேயே நீங்கள் அவர் கருத்தை ஹைஜாக் செய்து, உங்கள் பக்க ரஷிய ஆதரவு தேடுகிறீர்கள் போல இருக்கிறதே. என்னண்ணா இப்டி பண்ணறீங்களேன்ணா? 😜
  10. விசுகு அண்ணா.... நீங்கள் எழுதிய "எங்களை தெய்வங்களாக" கருதிக்கொண்டு என்ற கருத்தில் "தெய்வத்தன்மை" குறித்த "அளவுகோளை" நீங்களோ, சிறி அண்ணரோ எழுதினால் என்னால் "மனித நேயம்" குறித்த அடிப்படை அளவுகோள் குறித்து எழுதலாம். இன்னும் ஒரு கேள்வி 🙏 உங்களை போன்றவர்களுக்கு இந்த செய்திகள் பற்றி எதுவும் தெரியுமோ? இல்லை தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பீர்களா? "நாங்கள் எங்கே ரஷியாவை ஆதரித்தோம்... யுத்தத்தின் கொடூரம் நாம் அறிவோம்... என்ற அர்த்தமற்ற வார்த்தைகளை விட்டு விட்டு முதிர்ந்த கருத்துக்களை தாருங்கள். 2009 யுத்ததில் தமிழீழ விடுதலை புலிகளை அழித்தொழிக்க, இலங்கை அரசுக்கு ரஷிய அரசு கொடுத்த முதல் கட்ட உதவி மட்டும் $300 மில்லியன். இலங்கை அரசுக்கு ராணுவ தளபாட, அதி நவீன தொழில்நூட்ப மற்றும் யுத்த ஆலோசனை வழங்கிய நாடுகளின் வரிசையில் (ரஷியா, சீனா, இந்தியா) இந்த பட்டியலில் உங்கள் ஆதர்ஷ நாடான ரஷியாவே முதல் இடம். ஐநா சபையில் இறுதி யுத்தம் நேரத்தில் கடைசி நேர யுத்தம் நிறுத்தம் ஒன்றுக்கு பல நாடுகளில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்ட போதும் அதை அடுத்த கட்டம் நகர்த்த விடாது நீர்த்துப்போக வைத்த நாடும் உங்கள் ஆதர்ஷன நாடான ரஷியா தான். (Reuters) - Sri Lankan president Mahinda Rajapaksa left on Saturday for Moscow, where he will sign a $300 million loan to buy military equipment from Russia, despite an end to his country's quarter-century civil war. Sri Lanka defeated the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in May in a final offensive that prompted allegations of human rights abuses from the international community. Russia, one of the main arms suppliers during the war apart from China and India, backed the Sri Lankan government on several occasions at the Geneva human rights council to head off a debate over the conduct of the war in Sri Lanka. "We don't manufacture arms," an official at the presidential office told Reuters when asked about the Russian deal. "Sri Lanka might need arms for its armed forces. It is a legitimate need for its forces." "In the UN, Russia has supported Sri Lanka in nearly every resolution brought forward against them. The most notable one was during the final stages of Sri Lanka's civil war in 2009 when European nations along with Canada and Mexico brought a ceasefire bill against the Sri Lanka Army." Pledging full military support to Sri Lanka in its war against the LTTE, Russia has endorsed the measures taken by Colombo to contain terrorism, claiming it was similar to the steps taken by Moscow to defeat Chechnya terrorists. ",Russian government pledged all measures to provide military technology and expertise to Sri Lanka in its endeavor,", a statement issued by the Defence ministry in Colombo said, referring to the assurance given to Defence Secretary Gotabhaya Rajapaksa during his recent visit to Russia. The statement said that Russia endorses the measures taken by Sri Lankan government against terrorism and added that it pledged its fullest support to the endeavor. The Russian government viewed Sri Lanka's struggle against terrorism similar to the measures taken in the past by Russia to defeat Chechnya terrorists,", the statement said.
  11. விசுகு அண்ணா.... இங்கே தம்மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்நோக்கும் உக்கிரைன் மக்களின் மீதான மனிதாபிமான பார்வை கொண்ட யாரும் தம்மை தெய்வங்களாக நினைக்கவில்லை. அதே நேரம்; தமிழ் ஈழத்தில் நடந்த ஆக்கிரமிப்பு யுத்தம் பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டே; உக்ரைன் குழந்தைகள், பெண்கள், அவர்கள் நாட்டு கட்டுமானம் என அழியும் போது உள்ளுக்குள் ரசிக்கும் மனப்போக்கு கொண்டோர்; மனிதர்களாக / மனித நேயவாதிகளாக இருக்கவும் வாய்ப்பில்லை. 🙏
  12. உக்ரைனை காப்பாற்றும் நோக்கம் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இருந்தாலும், இதை நேரடியான ஒரு ராணுவ முஸ்தீபுகளை கொண்டு செய்ய முற்படாது என்றே நினைக்கிறன். ஆகா அவர்களிடம் இருக்கும் ஒரே வழி ராணுவ தளபாட உதவி, பொருளாதார தடை. இதில் என்ன சிக்கல் என்றால் ரஷிய ஒன்றும் இராக், அல்லது இரான் போன்ற நாடல்ல. அவர்களின் பொருளாதாரம் சீரழிந்து சேடை இழுக்க பல வருடங்கள் இந்த பொருளாதார தடை பாய வேண்டும். அது ஒட்டு மொத்த உலக நாடுகள் எல்லாவற்றியனதும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும். மேற்குலக மக்களுக்கு உள்ளூரில் விலைவாசி கூடிக்கொண்டு போக ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சுக துக்கங்களை சற்றே ஒதுக்கி, உக்ரைன் என்ற நாட்டுக்கான தங்களின் சின்ன தியாகமாக, ரஷிய அதிகாரத்தை உடைக்கும் தேவை உள்ளதாக எல்லாம் பார்க்க போவதில்லை. அடுத்த தேர்தல் எப்ப வரும் என்று பார்த்து (ஜனநாயக ) முறைப்படி தங்களின் கஷ்டப்பட்டுக்கு காரணமாக இருந்த ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் ரஷியாவில் அப்படியல்ல.. என்ன தான் பொருளாதார தடையால் மக்கள் பட்டினியில் செத்தாலும் வெளியே பெரிதாக தெரிய போவதும் இல்லை, சர்வாதிகாரி புட்டினும்; இன்னும் தொடர்ந்து 10 வருடங்கள் வேண்டும் என்றாலும் ஆட்சியில் தொடரலாம். இதனால் எல்லாமே ஒரு இடத்தில் அடிபட்டு போகும். 21 ஆம் நூற்றாண்டின் இந்த பெரிய சிக்கல் எப்படி தீர்க்கப்படப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
  13. புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் அகதிகளாகவே இந்த நாடுகளுக்கே வந்துள்ளோம். அந்த வகையில் நம் சொந்த நாட்டில் ஒரு சுபிட்சமாக வாழ்வதற்கான (நாமோ, அல்லது நமது உறவுகளோ) எடுக்கும் தீர்மானங்களில் நிச்சயம் எங்களது பங்களிப்பும், கருத்துகளும் உள்வாங்கள் அவசியம் என வலியுறுத்தி அது சார்ந்த அரசியல் சமைக்கப்படல் வேண்டும். சும்மா வெறுமனே காசு அனுப்பிக்கொண்டு இருக்கும் கூட்டமாக இருக்க முடியாது தானே. எல்லாவற்றுக்கும் சகோதரி பிரபா சிதம்பரநாதன் சொன்ன ஒற்றுமை அவசியம். இனியும் காலம் தாழ்த்தாமல் இவை இடம் பெற வேண்டும்.
  14. இது ஒன்றைத்தான் நாங்கள் செய்யலாம். எம்மை நோக்கி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி கிடப்பில் போடப்பட்ட எமக்கான நீதியை கேட்டு மீண்டும் ஒரு முறை அவர்களது கதவுகளை தட்டலாம். (எங்களுக்குள் உணர்ச்சிமாயமாய் கவிதை பாடி , கண்ணீர் வழியாமல்) இதை விட ஏதாவது யுக்திகள் இருந்தால் யாராவது சொல்லட்டும் கேட்போம்.
  15. கு.சா அண்ணா, இது என்னுடைய தமிழக நண்பர் / தம்பி சிவராவணன் வெகு சிரத்தையோடு தமிழீழ போராட்டம் சார்ந்த உண்மைகளை அப்போதிருந்த பதிவுகள், புத்தகங்கள், குறிப்புகள், போராளிகளுடனான உரையாடல் போன்ற தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி அவரின் குரல் வடிவத்தோடு YouTube, Spotify பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறார். இவை காணக்கூடியவாறு தற்போதைக்கு இருக்கின்றது. எப்போது தூக்கப்படுமோ தெரியாது. தம்பி சிவராவணன் ராஜீவ் கொலை வழக்கில் இப்பொழுதும் சிறையில் வாடும் சகோதரர்களோடு தொடர்பில் இருக்கிறார். அவர்களின் சாட்சியங்களாக நிறைய விடயங்களும் இங்கே பகிரப்பட்டுள்ளது. நேரம் இருக்கும் பொழுது இதை கேளுங்கள். நானும் இன்னும் ஒரு திரி திறந்து இதை பிரத்தியேகமாக பகிர எண்ணியுள்ளேன். நான் வாகனத்தில் நெடுநேர பயணங்களின் போதும், இரவு நித்திரைக்கு செல்லும் முதலும் அநேகமாக கேட்ட பதிவுகள் இவை. இவற்றை ஆங்கிலத்தில் பதிவு செய்யும் செயல் பாடு பற்றி அவரோடு பேசிக்கொண்டும் இருக்கிறேன். அடுத்த சந்ததிக்கு கொண்டு போகும் இந்த பதிவுகள் கூடிய சீக்கிரம் நிறைவேறும்.
  16. நடந்தது அண்ணா. 😥 தேசிய தலைவரை குறிவைத்து யாழ் பல்கலைகழக கட்டிட தொகுதியில் தரை இறக்கப்பட்ட IPKF பாரா படைஅணி பெரும் இழப்பை சந்தித்தது (ஆபரேஷன் பவன்). அவர்களில் எஞ்சிய ஓரிருவரை காப்பாற்றுவதற்கு மேல்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு படை நகர்வு ரயில் பாதையை மையமாக வைத்து முன்னேறியது. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை முகம் கொடுக்க திரணியில்லாமல் அவர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான மக்கள் மீதான படுகொலைகளே (கண்ணில் அகப்பட்ட அப்பாவிகளை ரோட்டில் படுக்க வைத்து செயின் பிளாக்கால் ஏற்றி நசுக்கிய) அந்த பிரம்படி லேனில் நிகழ்த்தப்பட்டது.
  17. ஓணாண்டியாருக்கு ... நான் எழுதின வரிகள் எல்லாம் செவிடன் காதில ஊதின சங்குமாதிரி... இனி உந்த சங்குஊதுற வேலைக்கு நான் வரேல்ல. 👇எதோ மேற்குலக செய்திகளை மட்டுமே பார்த்து மூளை சலவை செய்யப்பட்டதாக நினைக்கும் சிலபேர் இங்கே இருக்குறீர்கள்... முடிந்தால் இலங்கையில் எழுதப்பட்ட இந்த கட்டுறையையும் வாசியுங்கள். For some of us who remember 1987, the “parippu drop” and subsequent signing of the Sri Lanka- India Accord . Ukraine recalls the vulnerability of small states situated near Big Powers and the difficulty of pursuing their dreams of independence. https://dbsjeyaraj.com/dbsj/archives/76518#more-76518 கட்டுறை ஒரு சில வரிகள்... Yet, lest we forget, Sri Lanka’s relations with Ukraine go back to the time of the armed conflict when the Sri Lankan Airforce had depended heavily on its four Ukraine built AN32 B aircraft to maintain the lifeline with the Palaly complex as described by Dr Gamini Goonetilleke in his book In the Line of Duty on recollections of treating war casualties and armed forces personnel injured in battles in the north. Initially the four purchased aircraft had even been flown by Ukrainian pilots. As I recall one Ukrainian pilot lost his life in a crash. Just recently the remaining planes were refurbished in Ukraine factories and returned to Sri Lanka .
  18. எதோ மேற்குலக செய்திகளை மட்டுமே பார்த்து மூளை சலவை செய்யப்பட்டதாக நினைக்கும் சிலபேர் இங்கே இருக்குறீர்கள்... முடிந்தால் இலங்கையில் எழுதப்பட்ட இந்த கட்டுறையையும் வாசியுங்கள். For some of us who remember 1987, the “parippu drop” and subsequent signing of the Sri Lanka- India Accord . Ukraine recalls the vulnerability of small states situated near Big Powers and the difficulty of pursuing their dreams of independence. https://dbsjeyaraj.com/dbsj/archives/76518#more-76518 கட்டுறை ஒரு சில வரிகள்... Yet, lest we forget, Sri Lanka’s relations with Ukraine go back to the time of the armed conflict when the Sri Lankan Airforce had depended heavily on its four Ukraine built AN32 B aircraft to maintain the lifeline with the Palaly complex as described by Dr Gamini Goonetilleke in his book In the Line of Duty on recollections of treating war casualties and armed forces personnel injured in battles in the north. Initially the four purchased aircraft had even been flown by Ukrainian pilots. As I recall one Ukrainian pilot lost his life in a crash. Just recently the remaining planes were refurbished in Ukraine factories and returned to Sri Lanka . Posted by Administrator on 13 March 2022, 12:24 am
  19. "பாலியல் துன்புறுத்தல்" இது பற்றி பதிவுகள், செய்திகள் எங்கும் இருந்தால் தந்து உதவுங்கள். நான் கடந்த 15 நாட்களாக 505 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து உக்ரைன் ரஷியா பற்றி கருத்தாடல் செய்யும், (அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மனித நேய செல்பாட்டாளர்கள், ஐ.நா பிரதிநிதிகள், பூகோள அரசியல் வல்லுநர்கள்) பங்குபற்றும் தளத்தில், அவர்களது கருத்துகளையும் கேட்டு உள்வாங்கி, என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்து வருகிறேன். நீங்கள் கூறிய "பாலியல் துன்புறுத்துதல்" இதுவரையிலும் பேசப்படாத ஒன்று. இது குறித்து ஒரு கவனத்தை ஏற்படுத்தலாம் அவ்வளவே.
  20. ஒரு சில உக்ரேனிய அதிகாரிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் செய்த இந்த செயல் மிகவும் தவறு. கண்டிக்கப்படவேண்டியது. இவர்களின் செயல் ஒட்டு மொத உக்ரேனிய மக்களை பிரதிபலிப்பதாக நான் நினைக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் "கிளப் ஹவுசில்" ஒரு கூட்டம் இப்படி பேசிக்கொண்டது, அறுபதுகளில், எழுபதுகளில் யாழ்ப்பாணத்தவர்கள் பாமர சிங்கள, மலைநாட்டு வறிய இளம்பிள்ளைகளை தங்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு சொல்லெனா துயரங்களையும், மிகவும் மோசமான துவேசத்தையும் காட்டியதாக. அதானால் யாழ்ப்பாணத்தவர்கள் இன்றைக்கு வரைக்கும் அடையும் துன்பங்கள், படும் சீரழிவுகள் நியாயம் தான் என்று. ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை... இது ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தவரின் பண்பு என்று நான் நினைக்கவில்லை. தமிழ் சிறி அண்ணா "கிளப் ஹவுஸ்" கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  21. அண்ணா, இதெல்லாம் இங்கே பதியப்பட்ட ஒரு சில வரிகள்... இவை எனதும் இன்னும் பலரின் கண்ணுகளுக்கும் தன்னிச்சையுடன் புட்டின் தொடுத்த இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் / ஞாயம் கற்பிக்கும் (justifying) கருத்துக்களாகவே படுகின்றன. உங்களுக்கு எப்படி? "நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... " "சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது. ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?" யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால் திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும்." "உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.." "இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂" "வல்லரசு ரஷ்யாவின், இருப்புக்கு….. 😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்…. 🤔 புட்டின்… தனது நாட்டை காக்க, உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁" "போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்" "புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம். புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍"
  22. பரவாயில்லை கப்பித்தான்... என்னுடைய பதிவு கோழைத்தனமான இழி செயலாகவே இருக்கட்டும் ... இந்த திரியில் நீங்கள் எழுதிய பல கருத்து கண்றாவியை திருப்பி வாசித்தீர்களா? ஆனால் அதில் கூட கப்பித்தானின் அரசியல் கேனைத்தனத்தையும், அவரின் மனிதம் சாரா கேவலத்தையும் நான் கொஞ்சம்கூட மிஞ்சிவிடவில்லை என்று திடமாக நம்புகிறேன். 👍
  23. எனக்கும் அதே சலிப்பு தான் சகோதரி... வாய் கிழிய அடக்கி, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட எமது மக்களின் தேசியம், அவலம் பற்றி பேசுவோர், சுயஆட்சி அதிகாரத்தோடு பிரிந்து சென்ற நாட்டின் மக்கள் கண்முன்னே 3 மில்லியன், 4 மில்லியன் என்று அகதிகளாக்கப்பட்டு, நீங்கள் சொன்ன மனித அவலங்கள் உட்பட பல இன்னல்களை சந்திக்கின்ற போதும் தார்மீக உணர்வோடு அதை பேசாமல்... சர்வாதிகாரி புட்டினுக்கு அடிவருடிகளாக கதை அளக்கும் பண்பை பார்க்க எனக்கும் அதே சலிப்புதான் தான். 😥
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.