Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்

Featured Replies

கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி

லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்

இன்று மாலை சனிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்;கிலேயர் என பலர் பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் நாட்டின் சில பிரதானிகள் அன்றைய அரசருக்கு எதிராக ஆங்கிலேயரிடம் நாட்டை காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே ஆங்கிலேயரால் எம்மை ஆள முடிந்தது.

ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இன்று இங்கு பல்லாயிரக்கனக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.

அரசசார்பற்ற நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் ஒரு சில அமைப்புகளும் கனவு காணும் சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முன் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுங்கள், அதற்கு பின் நாட்டை பற்றி சிந்திக்கலாம் என்பதாகும். இவர்களது பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இந்த நாட்டு மக்களுக்கு தேவையான வளமான வாழ்வையும் பொருளாதார ஸ்திர நிலையையும் ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேருமாறு வேண்டுகின்றேன்" என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38656-2012-03-31-16-10-38.html

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இங்கு உரையாற்றுகையில்,

"ஜெனீவா தீர்மானத்தால் நாட்டுக்கு எதுவும் நடக்க போவதில்லை. ஜெனீவா தீர்மானம் வேறு, பொருளாதார தடை வேறு. நல்லிணக்க ஆணைக்குழுவான எமது ஜனாதிபதி நியமித்த ஒரு குழுவாகும். இது சர்வதேச குழு அல்ல. அக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த கோரியே சர்வதேசம் கூறுகிறது. அதனை அரசாங்கம் கட்டம் கட்டமாக நிறைவேற்றும்" என்றும் கூறினார்.

இக் கூட்டத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, டியூ குனசேகர, தினேஷ் குனவர்தன, மாகாண அமைச்சர் அனுஷியா சிவராசா உட்பட பலர் உரையாற்றினர்.

  • கருத்துக்கள உறவுகள்

பயம்

பயம்

பயம்

கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று

நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்

ஆம் ஓடி எஸ்கேப் ஆகிவிடுவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்.  நிக்க வைச்சு டயர் போட்டு கொழுத்துவார்கள் சிங்கள மக்கள்.

கடாபி கதைத்த மாதிரியே கதைக்கிறார்.

காடாபி செய்த மாதிரியே எல்லாம் செய்கிறார்.

கடாபி மாதிரியே மடுவுக்குள்தான் கடைசியில் ஒழிக்க போகிறார என்பதை டி.வி யில் யாரவது சாத்திரம் கூறினால்த்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் பயம் அந்தபயத்தை போக்குவதற்கு வெளியே ........ பயம் இல்லாததுபோல் நடிப்பது :lol:

ராஜபக்சவின் உளறல்:

இப்போதெல்லாம் கெட்ட ...... கெட்ட கனவாக வருகுதே ...... கனவில கடாபிக்கு நடந்ததுபோல் நடக்குதே ....... :lol: :D

  • தொடங்கியவர்

கடாபி கதைத்த மாதிரியே கதைக்கிறார்.

காடாபி செய்த மாதிரியே எல்லாம் செய்கிறார்.

கடாபி மாதிரியே மடுவுக்குள்தான் கடைசியில் ஒழிக்க போகிறார என்பதை டி.வி யில் யாரவது சாத்திரம் கூறினால்த்தான் தெரியும்.

இவர் ஈரானுக்கு உதவினால் இவரின் அழிவு விரைவுபடுத்தப்படும்!

32255_121697754525998_128355057212158_221995_4545734_n.jpg

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட நம்மால் முடிவதில்லை.

கடாபியைக் கொன்றது போலவே தன்னையும் கொல்லச் சொல்கிறார். நாட்டு மக்களுக்கு இது புரிந்தால் சரி.

அது என்ன போர்த்துக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் நாட்டைக் கைப்பற்ற முனைந்தும் தமது ஒற்றுமையால் முடியாமற் போயிற்றாம்.? 1948 ஆம் ஆண்டு யாரிடமிருந்து சுதந்திரம் பெற்றார்களாம். அதுவும் போனால் போகுது என்று சேர் பொன் ராமநாதனிடம் கொடுத்தது.

அச்சம் என்பது அடி மனதின் வெளிப்பாடு.மகிந்த அன்ட் கோ இற்கு இப்போதாவது புரிந்ததே!

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட நம்மால் முடிவதில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98244&st=60

நன்றாக உள்ளது தோழர் .. தங்களுக்காக இங்கு தனி திரி தொடங்க பட்டுள்ளது இங்கிட்டு வாங்க.. கருத்துகளை சொல்லுங்க... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் கண்டது இவரது ஆட்சி போகிற காலத்தில் சிங்களவர்களே இவரை வீதியில் இழுத்து சென்றாலும் செல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.