Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் குற்றச்சாட்டு இந்தியாவுக்கு அதிர்ச்சி – ஜெனிவாவின் எதிரொலியாகவே புதுடெல்லி பார்க்கிறது

Featured Replies

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் சிறிலங்கா திரும்பியுள்ளதாகவும், சிறிலங்கா அரசபுலனாய்வுச் சேவையை மேற்கோள்காட்டி சிறிலங்கா ஊடகம் வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளை, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் ஊடாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை தமிழ்நாட்டு காவல்துறை ஆணையரும் இதனை மறுத்துள்ளார்.

ஆனாலும் இந்தியா மீது சிறிலங்கா திட்டமிட்டே சுமத்தியுள்ள குற்றச்சாட்டாகவே, புதுடெல்லி இதனைக் கருதுகிறது.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததன் எதிரொலியாக, இந்தியா மீது பழிபோடும் வகையில் சிறிலங்கா செயற்படுவதாக அங்குள்ள இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.

செய்தியில் அரச புலனாய்வுச் சேவை ஆதாரம் காட்டப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் சிறிலங்கா அரசே இருப்பதாக இந்தியா கருதுவதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், சிறிலங்கா - இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் நிலை தோன்றியுள்ளது.

அத்துடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆறுநாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையிலேயே, இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்தச் செய்தியை சிறிலங்கா வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

http://www.puthinappalakai.com/view.php?20120403105924

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா தீர்மானம் தமிழருக்கான சரியான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது.

எண்ணெய் ஊத்துவதை நாம் ஒழுங்காகச்செய்தால் வெற்றி தூரமில்லை.

ஜெனிவா தீர்மானம் தமிழருக்கான சரியான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது.

எண்ணெய் ஊத்துவதை நாம் ஒழுங்காகச்செய்தால் வெற்றி தூரமில்லை.

ஆமாம் அதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கடமையாகும்............எண்ணை ஊற்றும் விடயத்திலாவது நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.

அதற்காக ஈரானிடம் மட்டும் எண்ணையை கொள்வனவு செய்வதை நாம் கட்டாயம் தவிக்கவேண்டும்,............. :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கையின் காலடியில் விழவும் தயாராக இருககும்போது இந்த அறிக்கைகள் எல்லாம் இந்தியா சமாளித்துவிடும். இதைச்சாக்காக வைத்து இந்திய மீனவர்களைச்சுடுவார்கள். மத்தியஅரசு கண்டும் காணாமலும் மெத்தனக்கண்டனம் தெரிவித்துவிட்டு இருந்துவிடும். பதிலுக்கு ஜெ அமமையாரும் ஒலு அயிக்கைவிடுலா அத்துடன் அது முடியும். இவர்கள் எல்லாம் நடிகர்கள் என்பதை நாம் மறந்து ஏமாளிகள் ஆவது வருத்தத்திற்கு உரிய செயல்.

காமம் காலமமாக அவ்கள் நடித்து வெளியிட்டுக் கொண்டிருப்பதைத்தான் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றோம்.

எண்ணை ஊற்றும் விடயத்திலாவது நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை சிங்களமே! கழுத்தில் பிடித்து தள்ளினாலே அன்றி தானே அது வெளியால் போகும் நிலை இல்லை என்றே கூறலாம். சூடு, சொரணை அவர்களை என்றோ தண்ணி தெளித்துவிட்டது.

சமூகக்குற்றம் என்ற பாடத்திட்டத்தின் முதுமானி பட்டங்கள் அல்லவா இந்திய அரசியல்வாதி என்ற பதவிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன் பிரதி புலி தளபதி, இப்போதைய பிரதி தள்ளாட்ட அமைச்சர் பின் ஒரு நானூறு புலி கும்பலா நிக்கிறது தெரியவில்லை.  

இவங்கட கடி சிங்க கடி. தாங்கமுடியல. 

எண்ணை ஊற்றும் விடயத்திலாவது நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். :icon_mrgreen:

எங்களில் கூஜாக்களுக்கா பஞ்சம்? ஊத்திட மாட்டம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கையின் காலடியில் விழவும் தயாராக இருககும்போது இந்த அறிக்கைகள் எல்லாம் இந்தியா சமாளித்துவிடும். இதைச்சாக்காக வைத்து இந்திய மீனவர்களைச்சுடுவார்கள். மத்தியஅரசு கண்டும் காணாமலும் மெத்தனக்கண்டனம் தெரிவித்துவிட்டு இருந்துவிடும். பதிலுக்கு ஜெ அமமையாரும் ஒலு அயிக்கைவிடுலா அத்துடன் அது முடியும். இவர்கள் எல்லாம் நடிகர்கள் என்பதை நாம் மறந்து ஏமாளிகள் ஆவது வருத்தத்திற்கு உரிய செயல்.

காமம் காலமமாக அவ்கள் நடித்து வெளியிட்டுக் கொண்டிருப்பதைத்தான் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றோம்.

முடிந்தால் எழுத்துப்பிழையை திருத்தி விடுங்கள் அண்ணா

அப்படியா? இது என்ன அதிர்ச்சி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.