Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Featured Replies

அந்த நாட்களில் கொடி பிடிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டபோதும், இவர்கள் மக்களிடம் கொடியைக் கொடுத்துப் பிடிக்க வைத்தார்கள். நாம் தொடர்ந்தும் சில நாட்களுக்குக் கொடி பிடிக்காமல் நிகழ்வுகளைச் செய்திருந்தால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும், இவர்கள் பல வருடங்கள் பின்னோக்கியே நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அகூதா, அப்படியே மாவீரர் நாள் கணக்கையும் மக்களுக்கு அறிவிக்கச் சொல்லுங்கள். நம்பிக்கைத் தன்மையை அவர்கள் கடைப்பிடித்திருந்தால் நாமனைவரும் அவர்கள் பின்தான் நின்றிருப்போம். அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணமே தவிர நாமல்ல.

  • Replies 83
  • Views 4.2k
  • Created
  • Last Reply

அந்த நாட்களில் கொடி பிடிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டபோதும், இவர்கள் மக்களிடம் கொடியைக் கொடுத்துப் பிடிக்க வைத்தார்கள். நாம் தொடர்ந்தும் சில நாட்களுக்குக் கொடி பிடிக்காமல் நிகழ்வுகளைச் செய்திருந்தால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும், இவர்கள் பல வருடங்கள் பின்னோக்கியே நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அகூதா, அப்படியே மாவீரர் நாள் கணக்கையும் மக்களுக்கு அறிவிக்கச் சொல்லுங்கள். நம்பிக்கைத் தன்மையை அவர்கள் கடைப்பிடித்திருந்தால் நாமனைவரும் அவர்கள் பின்தான் நின்றிருப்போம். அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணமே தவிர நாமல்ல.

கணக்கை கேட்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. நீங்களும் முயற்சியுங்கள், பார்க்கலாம்.

கொடியை என்றும் மனத்தில் வைத்திருப்போம், சரியான இடங்களில், நேரங்களில் கையில் எடுப்போம்.

கொடி பிடிப்பது கனடாவின் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் எங்கே எந்த நோக்கத்தில் நிற்கிறோம்/பிடிக்கின்றோம் என்பதில் வெற்றி/தோல்வி, மனத்திருப்தி உள்ளது.

இன்று பாராளுமன்ற திடலில் நாம் நிற்பது அடுத்த ஜெனீவா தொடர் வெற்றிகளுக்காக, அதற்கான சர்வதேச ஆதரவை பலப்படுத்த. அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் தேசிய கொடி பிடிக்கப்பட்டும், அதில் தவறில்லை.

2009 ஆம் ஆண்டு நாம் ஒரு தெளிவில்லாத குழப்ப நிலையில் இருந்தோம். அதனால் கொடி பிடிப்பது சரி என்றும் பிழை என்றும் வாதிட்டோம். மூன்று வருடத்தில் படித்த, படிக்கும் சர்வதேச அரசியலில் முன்னகர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலட்சியம் என்பது எமது இனத்திற்கான விடிவைப் படைப்பதே! இந்த விடயத்தில் எம்மினத்தின் ஏகோபித்த கரங்கள் உயருகின்றன. ஆனால் கொடிபிடித்தல் போன்ற விடயங்களில் ஓரளவான கரங்கள் கீழே விழுகின்றது என்பது உண்மைய!

என்னைப் பொறுத்த வரையில் தமிழீழம் என்ற கனவை படைக்கும் கரங்களாக புலி இருந்தமையால் தான் புலிஆதரவு எனது பாதையானது. இன்று தமிழீழக் கனவில் அவர்கள் தோற்றிருந்தாலும் அந்த கடமைக்கு அவர்கள் 100 வீதம் உண்மையாக இருந்தமை அந்த நன்றி உணர்வை போற்ற வேண்டியவனாயும் இருக்கின்றேன்!

அமெரிக்கா சிங்களத்திற்கு சாதகமாகவோ, இல்லை பாதகமாகவோ இயங்கவேண்டிய தேவை வரும் பொழுது நடைமுறையில் இருக்கின்ற ஒழுங்கு விதிகளினூடே அதைப் போற்றியோ, இல்லை தன் வசதியை உள்வாங்கக் கூடிய ஒழுங்கு முறையை தோற்றுவித்தலினூடேதான் அதன் தேவைகள் பயணிக்கின்றது! புலிக் கொடி பிடித்தல் போன்ற செயல்கள் எம்மையும் இந்த வகையான அறிவு நுட்பமான பாதையினூடு பயணிக்க விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

"புலியே, எமது இனதின் 'காவல் அரண்'" என்ற விடயம் எமக்குள் நாம் சொல்லிக் கொள்ள வேண்டியதும் இல்லை!

புலிக்கொடி பிடிப்பதால் இந்த உண்மை மூன்றாம் இங்களிடையே நிரூபிக்கப்படும் என்ற வாதத்திலும் உண்மை இல்லை!

எமக்கு நிகழ்ந்த துன்பத்தைக் எடுத்துக் கூறி காரணமானவனை கூண்டில் நிறுத்த முயற்சி எடுப்பதே எமது சக்திக்கு சவாலாக விளங்கும் போது பலவருடங்களாக அரசுகளால் புலிமேல் கொட்டப்பட்ட அழுக்கை கழுவும் முயற்சிக்கு செலவு செய்ய வேண்டுமா?

தான் தனியவே தண்ணீர்ருக்குள் இருந்து மீண்டுவர முடியாமல் சங்கடப்படும் போது கைப் பொருளையும் மீட்டு வர ஆசைப்படுவது அறிவுடமையாகாது!

பட்டறிவு,அனுபவம் மூலமாக போராட்ட வழிமுறைகளில் சிலசில மாற்றங்கள் ஏற்படுகின்றன; நெகிழ்ச்சி இடம் பெறுகிறது.

இதனை அங்கு வந்த மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அங்கு அவர்கள் குழப்பம் விளைவிக்கவில்லை. எனவே ஏற்றுக்கொண்டு

முன்செல்வோம். சிறிதாவது செயற்படுவோம். பிழைபிடிப்பவர்கள், குதர்க்கம் பேசுபவர்கள் இருக்கவே செய்வார்கள். அடிமை

மோகத்தின் அறிகுறி அது. எனவே சகோதரர் அகூதா விளக்கம் கொடுப்பதை ஓர் அளவுடன் நிறுத்திக்கொள்வது நல்லது.நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.. எம்மில் பலருக்கு புலிக்கொடி என்றால் பயம். அதைத் தூக்கினால் சர்வதேசம்.. கைவிட்டிட்டு ஓடிடும் என்பது அவர்களின் வாதம். சர்வதேசம் ஒன்றும் புலிக்கொடி சார்ந்து நகர்வுகளைச் செய்யவில்லை. அவர்களுக்கு சிறீலங்கா மீதான அழுத்தங்களை நோக்கியே செயற்படுகின்றனர். ஆனால் புலிக்கொடியை எதிர்ப்பவர்கள்.. அதனை அப்படியே கைவிட்டு விட வைப்பதன் மூலம்.. தாங்கள் எதையோ பெற விரும்புவதாக சொல்ல விளைகின்றனர். உண்மையில் அவர்கள் எதனையும் பெறப் போறதில்லை..!

புலிகளைச் சமாளிக்க இணைத்தலைமை நாடுகள் என்ற ஒரு குழுமத்தை உருவாக்கி அதில் ஜப்பானும்.. அமெரிக்காவும்.. முதன்மையாளர்களாக இருந்து.. போரையும் ஆரம்பித்து வைத்து... போரின் ஆரம்பம் தொட்டு இறுதி வரை இவர்களின் கண்காணிப்பின் கீழ் தான் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இன்று அவர்களே அந்த மக்களை வைத்து மனித உரிமைகள் குறித்தும் பேசுகின்றனர்.

காரணம்.. அவர்களுக்கு தெரியும்.. நாங்கள் அரசியல் ரீதியாகவும்... இராணுவ ரீதியாகவும்.. பிராந்திய ரீதியாகவும்.. பலவீனப்பட்டு நிற்கிறோம் என்று.

அமெரிக்காவின் நீண்ட நாள் கொள்கை.. விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி அழித்து.. தமிழர்களின் ஆயுத வழி விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதன் வாயிலாக உலகிற்கு ஒரு காத்திரமான செய்தியை விட்டு வைப்பது தான்.

ஆனால்.. அமெரிக்கா நினைத்தால்.. கூலி கொடுத்தும் அரசுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை தூண்டி விடும். அவற்றை தான் லிபியாவிலும்.. சிரியாவிலும்.. இன்னும் ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளிலும் பார்க்கிறமே..!

அமெரிக்காவோ.. மேற்குலகோ எம்மீது உண்மையான கரிசணை கொண்டிருப்பின்.. ஐநா மூவர் குழு பரிந்துரையை ஏற்று அதற்கு ஏற்ப ஐநாவை கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால்.. அதனை வெகுவாக புறக்கணித்துவிட்டார்கள். இதே அமெரிக்கா 2003 இல் ஐநா விசாரணை குழு ஒன்றின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே ஈராக் மீது படையெடுத்தது. அதுவும் சுத்தப் பொய் அறிக்கை..!

ஆக.. இன்று நம்மவர்களும்.. சில மாயை வலையில் சிக்கிங்கொண்டு பெரிதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வலை அறுந்து தொப்படீர் என்று விழும் போது தெரியும் இவர்களுக்கு மேற்குலகின் இராஜதந்திரமும்.. புலிக்கொடியை விட்டு.. செய்த அரசியலின் இராஜதந்திர வெற்றி என்பதும்.. என்ன என்று..!

எல் எல் ஆர் சி க்கு ஊடாக எமக்கு.. எந்த ஒரு விடிவும் வரப்போறதில்லை. அதேபோல்.. அமெரிக்க தலையீடு.. எமக்கு எந்த வகையான உரிமையையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தித் தரப்போறதும் இல்லை. ஆனால்.. எங்கள் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்திக் கொள்வதன் மூலமும்.. எமது கோரிக்கைகளின் நியாயத்தை சர்வதேச மயப்படுத்திக் கொள்வதன் மூலமும்.. எமது ஒற்றுமையை அதன் பால் காட்டுவதன் மூலமுமே.. நாம் அமெரிக்காவிற்கோ.. அல்லது எந்த நாட்டுக்கோ.. எமது விடயத்தில் கொஞ்சம் என்றாலும் இராஜதந்திர அழுத்தத்தை கொடுக்க முடியும்.

விடுதலைப்புலிகளின் தடை அந்த அமைப்பு அழிக்கப்பட்டு 3 வருடம் ஆகியும்.. ஏன் நீக்கப்படவில்லை..????????! இது குறித்து எவராவது கேள்வி கேட்டிருக்கினம்..????! கேட்டு அதை அமெரிக்கா செவி மடுத்திருக்குது..???! இல்லை அதெல்லாம் அமெரிக்காவின் நலனிற்கு ஏற்ப தடையாகும்.. தடை விலகலாகும். அதே நிலை தான் எம் மீதான மனித உரிமைகள் மீறல்களிலும் அமெரிக்காவின் அக்கறை.

இதனை.. சாட்டு வைத்து.. எமது தேசிய இன விருப்பினை.. சிறுகச் சிறுக இழப்பதன் மூலம்.. அல்லது கைவிடுவதன் மூலம்.. நாம் எம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தமிழீழத்தை.. பிரதியீடு செய்பவர்கள் என்பதைச் சொல்ல எமக்குள்ள தேசியக் கொடியை காவ முடியாத நிலையில்.. எதை எவரோடு பேசி.. நாம் எதை வாங்கப் போகிறோம்..???!

பொறுத்திருந்து பாருங்கள்... சில பதங்களூடு எம் மக்களைக் கட்டிப்போடும்... சர்வதேசத்தின் நகர்வுகள்.. எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த அழிவையும் எமக்கு தரப்போவது குறித்து.. கொஞ்சம் தாமதமாக எம்மவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

நாம் தான் எமது விடுதலையை தீர்மானிக்க வேண்டும் அடுத்தவன் பெற்று அதனை தங்கத்தட்டில் வைத்துத் தரான்.. என்ற தேசிய தலைவரின் கூற்று என்றும் மெய். அதைவிட மற்ற எல்லாம் மாயை..! இடைநிலை மயக்கங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிக்கொடி என்பது எம்முடைய அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கொண்டுசெல்ல தேவையானதொன்று. புலிக்கொடியென்பது தியாகத்தின் அடையாளம்; விடுதலையின் குறியீடு. மாவீரர்களின் தியாகத்தால் அந்தக்கொடியானது தனக்கென்று ஒரு உயிர்பெற்றுள்ளது. புனிதமாகியுள்ளது. அந்தக்கொடியானது எம்மோடு கலந்துவிட்டதொன்று. அதை அகற்றவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. மக்களாக அந்தக் கொடியைக் கொண்டுவரம் பட்சத்தில் அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எமது இனத்திற்கான அடையாளம் அது. கொடியை அகற்றுவது எமது அடையாளத்தை இழப்பதற்கொப்பானது.

ஆனால் மற்றைய இனத்தவரிடம், அரசுகளிடம் கதைக்கும்போதோ அல்லது அரசியல் நகர்வுகளில் ஈடுபடும்போதோ புலிக்கொடி தேவையில்லை. புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக இருக்கும் நாடுகளில், எமக்கு உதவி செய்யக்கூடியவர்கள், செய்யவிரும்புபவர்கள்கூட புலிக்கொடியுடன் சென்றால் தங்களுக்குத் தேவையில்லாத சிக்கல்கள் வந்துவிடுமே என்று எம்முடன் கதைக்க வரமாட்டார்கள். அதனால், தற்போதைய காலகட்டத்தில், இந்த வகையான அரசியல் செயற்பாடுகளில், அதுவும் ஒரு அமைப்புச் செய்யும்போது புலிக்கொடியைத் தவிர்ப்பது நல்லது. நான் இங்கு தவிர்க்கச்சசொல்வது அமைப்பை மட்டுமேயொழிய மக்களையல்ல. அந்தவகையில் தேசிய அவை புலிக்கொடிகளைக் கொண்டுவந்து கொடுக்காதது ஒரு நல்ல நகர்வே. மாறக, அவர்கள் கொண்டுவந்து கொடுத்திருந்தால் அவர்களை ஒரு புலிகளின் ஆதரவு அமைப்பாகச் சித்தரித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கும். எமது நோக்கத்தையும் சிதறடித்துவிட்டிருக்கும்.

தூயவனின் கருத்துக்களில் உண்மைத்தன்மையிருந்தாலும் 2009 காலப்பகுதியையும் இப்போதைய காலப்பகுதியையும் ஒப்பிடுவது சரியானதாகப் படவில்லை. 2009 காலப்பகுதியில் கோவமும் விரக்தியும் கையாலாகாத்தன்மையுமே எமது செயற்பாடுகளைத் தீர்மானித்திருந்தன. அதுவே வீதிமறிப்புகளாகவும் தீக்குளிப்புகளாகவும் அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிர்ப்பானதாகவும் மாறியது. அந்தக் காலத்தில் அமைப்புகள் நினைத்திருந்தால்கூட மக்களின் கைகளிலிருந்தும் இளைஞர்களின் கைகளிலிருந்தும் கொடியை அகற்றியிருக்கமுடியாதென்பது எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவன் என்றவகையில் என்னால் உணரமுடிந்தது. அதுவே ஒட்டாவாவிலும் நடந்தது. மேடையில் உள்ளவர்கள் கொடியைக் கீழேவைத்தால்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று கீழேவைக்கச் சொல்ல ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன. சிலர் கொடியை மடிக்க, சிலர் "கொடியை வைத்தாலும் உவங்கள் வரமாட்டாங்கள். எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டாங்கள். எங்களுடைய கொடியை இறக்குவதற்காக சும்மா சொல்லறாங்கள்" என்று சொல்ல, சிலர் "கொடியை வைக்கச்சொல்ல இவர் யார்" என்று மேடையிலுள்ளவரைத் திட்ட முரண்பாடுகள் முற்றின. கொடியை மக்களிடமிருந்து பிரிக்கமுடியாதென்று தெரிந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கொடியை வைக்கச்சொல்லி யாரும் கேட்கவில்லையென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக இந்தக் காலகட்டத்தில் உணர்வுகளின் தீவிரமே எமது செயற்பாடுகளைத் தீர்மானித்தது என்பதே உண்மை. அந்தவகையில் கொடியை வைத்துவிட்டுப் போவோம் என்று சொன்னவர்கள் துரோகிகளாக்கப்பட்டதும் நடந்தேறிய சம்பவங்கள்தான்.

ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ். இங்கு நம்மவர்களுக்குள் நடைபெறும் நிகழ்வுகளில்கூட கொடியைக் காண்பதரிது. அவ்வாறு சிலர் கொடியுடன் வந்தாலும் "ஆகா குழப்புறதுக்கு வந்துடாங்கள்" என்ற வைகையிலேயே மக்களின் பார்வைகள் இவர்கள்மீது இருக்கும். அந்த அளவிற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு, கொடியை வைத்தால் மற்ற நாடுகள் எமக்கு உதவும் என்று சொல்லும் தமிழிச்சி போன்ற தமிழர்களின் பங்கு அளப்பரியது.

ஆக நான் சொல்லவருவது என்னவென்றால், எமக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு (மே மாத நிகழ்வுகள், கறுப்பு யூலை போன்றவை) புலிக்கொடிகள் கட்டாயம் கொண்டுவரவேண்டும். இதை மக்கள் செய்யவேண்டும். அமைப்புகளாகச் செய்தால் அவர்களுக்கு வரும்காலங்களில் இடம் எடுக்க முடியாமல் போகலாம். அதேவேளை அந்த அமைப்புகள் புலிகளின் அமைப்புகள் என்று முத்திரை குத்தப்படலாம். அதேசமயம் நாம் அந்ததந்த நாட்டு மக்களோடும் அரசுகளோடும் அரசியல் செயற்பாடுகளில் அரசியல் நகர்வுகளில் ஈடுபடும்போது புலிக்கொடி தேவையில்லை. ஆனால் மக்கள் கொண்டுவரும்பட்சத்தில் யாரும் தடுக்க உரிமையில்லை. இது புலிக்கொடியை வைத்தால் எமக்கு உதவுவார்கள் என்பதற்காக அல்ல. எமக்கு உதவ நினைப்பவர்களுக்கு புலிக்கொடியால் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே. புலிக்கொடியை வைத்தால் எமக்கு எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள்.

அடுத்து தூயவன் சொல்வது இனியும் நடக்காது என்பதே எனது கணிப்பு. அதாவது புலிக்கொடியில்லாமல் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களை துரோகிகள் என்று கூறுவது. அப்படிக்கூறினால் தேசிய அவை புலிக்கொடியில்லாமல் நிகழ்வுகள் செய்வதை எடுத்துவிடுங்கள். :icon_idea:

புலிகளை அழிப்பதற்கான முடிவுகள், நகர்வுகள் போர்நிறுத்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இப்பொழுது விக்கிலீக்ஸ் மற்றும் வேறு வழிகளில் வரும் செய்திகள் உறுதிசெய்கின்றன. எனவே 2009 இல் புலிக்கொடியால்தான் சர்வதேசம் எங்களைக் கவனிக்கவில்லை என்று இப்பொழுதும் சொல்பவர்களை அரசியல் அறிவிலிகள் என்றால் மிகையாகாது. 2009ல் நாங்கள் என்ன செய்திருந்தாலும் அழிவுகளைத் தடுத்துநிறுத்தியிருக்க முடியாது என்பதே உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிப்பதற்கான முடிவுகள், நகர்வுகள் போர்நிறுத்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இப்பொழுது விக்கிலீக்ஸ் மற்றும் வேறு வழிகளில் வரும் செய்திகள் உறுதிசெய்கின்றன. எனவே 2009 இல் புலிக்கொடியால்தான் சர்வதேசம் எங்களைக் கவனிக்கவில்லை என்று இப்பொழுதும் சொல்பவர்களை அரசியல் அறிவிலிகள் என்றால் மிகையாகாது. 2009ல் நாங்கள் என்ன செய்திருந்தாலும் அழிவுகளைத் தடுத்துநிறுத்தியிருக்க முடியாது என்பதே உண்மை!

உண்மை..!

இதற்காக 2009 இல் நாங்கள் செய்த போராட்டங்கள் அனைத்தும் வீண் என்று சொல்லவரவில்லை. அந்தப் போராட்டங்கள் மூலம் நாம் பெற்றுக்கொண்டவை மற்றும் கற்றுக்கொண்டவை:

1. எமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியது.

2. அதிகளவிலான மக்கள் மற்றும் இளைஞர்களை செயற்பாடுகளுக்குள் உள்வாங்கியது.

3. எமது விடுதலை எமது பலத்திலேயே தங்கியிருக்கிறது என்பதை உணர்த்தியதுடன் அந்தப் பலத்தைக் கட்டியெழுப்ப மக்களைத் தூண்டியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு மரியாதையை தமிழர்கள்தான் செய்ய வேண்டும். சோனியாகாந்தியோ, இல்லை ஒபாமாவோ அவ்வர்களும் செய்யவேண்டும் அதை என்று நாம் நினைக்கக் கூடாது!

தமீழம் என்ற வெற்றிக்கு புலிகள் ஒரு கருவியாக இருந்தார்கள். அதுவே தமிழர்கள் என்றுமே அவர்களை நினைவில் சுமபப்தற்கு காரணம்... தமிழீழதை விற்று புலிகள் பெருமைக்கு விழா எடுப்பதை (சர்வதேசத்தைக் கொண்டு) தம் உயிரைக் கொடுத்து இலக்கை வெல்லும் புலிகளின் அந்த தியாகம் ஏற்றுக் கொள்ளுமா?

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மற்றைய இனத்தவரிடம், அரசுகளிடம் கதைக்கும்போதோ அல்லது அரசியல் நகர்வுகளில் ஈடுபடும்போதோ புலிக்கொடி தேவையில்லை. புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக இருக்கும் நாடுகளில், எமக்கு உதவி செய்யக்கூடியவர்கள், செய்யவிரும்புபவர்கள்கூட புலிக்கொடியுடன் சென்றால் தங்களுக்குத் தேவையில்லாத சிக்கல்கள் வந்துவிடுமே என்று எம்முடன் கதைக்க வரமாட்டார்கள். அதனால், தற்போதைய காலகட்டத்தில், இந்த வகையான அரசியல் செயற்பாடுகளில், அதுவும் ஒரு அமைப்புச் செய்யும்போது புலிக்கொடியைத் தவிர்ப்பது நல்லது. நான் இங்கு தவிர்க்கச்சசொல்வது அமைப்பை மட்டுமேயொழிய மக்களையல்ல. அந்தவகையில் தேசிய அவை புலிக்கொடிகளைக் கொண்டுவந்து கொடுக்காதது ஒரு நல்ல நகர்வே. மாறக, அவர்கள் கொண்டுவந்து கொடுத்திருந்தால் அவர்களை ஒரு புலிகளின் ஆதரவு அமைப்பாகச் சித்தரித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கும். எமது நோக்கத்தையும் சிதறடித்துவிட்டிருக்கும்.

ஆக நான் சொல்லவருவது என்னவென்றால், எமக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு (மே மாத நிகழ்வுகள், கறுப்பு யூலை போன்றவை) புலிக்கொடிகள் கட்டாயம் கொண்டுவரவேண்டும். இதை மக்கள் செய்யவேண்டும். அமைப்புகளாகச் செய்தால் அவர்களுக்கு வரும்காலங்களில் இடம் எடுக்க முடியாமல் போகலாம். அதேவேளை அந்த அமைப்புகள் புலிகளின் அமைப்புகள் என்று முத்திரை குத்தப்படலாம். அதேசமயம் நாம் அந்ததந்த நாட்டு மக்களோடும் அரசுகளோடும் அரசியல் செயற்பாடுகளில் அரசியல் நகர்வுகளில் ஈடுபடும்போது புலிக்கொடி தேவையில்லை. ஆனால் மக்கள் கொண்டுவரும்பட்சத்தில் யாரும் தடுக்க உரிமையில்லை. இது புலிக்கொடியை வைத்தால் எமக்கு உதவுவார்கள் என்பதற்காக அல்ல. எமக்கு உதவ நினைப்பவர்களுக்கு புலிக்கொடியால் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே. புலிக்கொடியை வைத்தால் எமக்கு எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள்.

விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது 1996 வாக்கில் என்று நினைக்கிறேன். கனடாவில்.. 2000 ம் ஆண்டுகளில்..! பிரித்தானியாவில் 1998 இல்..!

இந்த காலத்தில் இருந்து 2009 வரையான காலத்தில் தமிழீழத் தேசியக் கொடி முன்னிருக்க.. சர்வதேச மட்ட பேச்சு வார்த்தைகள் கூட இடம்பெற்றுள்ளன. அது தாய்லாந்திலாக இருக்கட்டும் .. நோர்வேயிலாக இருக்கட்டும். வன்னியிலாக இருக்கட்டும். ஐநா பிரதிநிதிகள் கூட இந்தக் கொடியின் முன்னிலையில் பேசி உள்ளார்கள்.

தமிழீழத் தேசியக் கொடி என்பது விடுதலைப்புலிகளின் கொடி அல்ல. அவை இரண்டும் வெவ்வேறானவை..! நீங்கள் இந்த அடிப்படையையே ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படை சட்ட ரீதியாக பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு.. தமிழீழ தேசியக் கொடி பிடிக்கப்படுவதில் இருந்து அழுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் கூட தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடி ஏந்தப்படுகின்றது. அதற்கு தடைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கொண்டு வா என்று சொல்ல கொண்டு வரவும்.. கொண்டு வராத என்று சொல்ல கொண்டு வராமல் இருக்கவும்.. ஒரு தேசியக் கொடி என்ன.. விளையாட்டுச் சின்னமா..???!

கனடியர்களுக்கு எப்படி கனடிய தேசியக் கொடி முக்கியமோ.. அதேபோல் தான்.. நமக்கும். இந்த அடிப்படையையே புரிந்து கொள்ள முடியாத நிலையில்.. கனடிய பிரதிநிதிகள் எதைப் புரிந்து கொள்ளப் போகின்றனர்.. என்ற கேள்வியையும் நாம் எழுப்பலாம் இல்லையா..???!

மேலும்.. தமிழீழ தேசியக் கொடியை புறக்கணிப்பதன் வாயிலாக.. கனடியர்களுக்கோ.. மற்ற எந்த நாட்டவருக்குமோ.. எமது தேசியக் கொடியின் தன்மை விளங்காது. அவ்வாறு புறக்கணிப்பது... இன்னொரு செய்தியை அவர்களுக்குச் சொல்லும்.. இவர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை தான் பிடிக்கிறார்கள்.. அதனால் தான் அதை இங்கு புறக்கணித்துள்ளார்கள் என்று.

எமது தேசியக் கொடிக்கு அங்கீகாரம் தேட முடியாத நாம்.. எமது இனத்தின் விடுதலைக்கு எப்படி அங்கீகாரம் தேடப் போகிறோம்..???????????! இப்படி ஒரு பெரிய கேள்விக்கும்.. தேசியக் கொடி புறக்கணிப்பு வழிவிடும். இதைக் கேட்பவர்கள் அறிவிலிகள் என்று பதில் கிடைத்தால்.. அப்படிச் சொல்பவர்கள் மீதுதான் சந்தேகம் எழும்..! கேள்வி கேட்டவர்கள் மீதல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது 1996 வாக்கில் என்று நினைக்கிறேன். கனடாவில்.. 2000 ம் ஆண்டுகளில்..! பிரித்தானியாவில் 1998 இல்..!

இந்த காலத்தில் இருந்து 2009 வரையான காலத்தில் தமிழீழத் தேசியக் கொடி முன்னிருக்க.. சர்வதேச மட்ட பேச்சு வார்த்தைகள் கூட இடம்பெற்றுள்ளன. அது தாய்லாந்திலாக இருக்கட்டும் .. நோர்வேயிலாக இருக்கட்டும். வன்னியிலாக இருக்கட்டும். ஐநா பிரதிநிதிகள் கூட இந்தக் கொடியின் முன்னிலையில் பேசி உள்ளார்கள்.

தமிழீழத் தேசியக் கொடி என்பது விடுதலைப்புலிகளின் கொடி அல்ல. அவை இரண்டும் வெவ்வேறானவை..! நீங்கள் இந்த அடிப்படையையே ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படை சட்ட ரீதியாக பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு.. தமிழீழ தேசியக் கொடி பிடிக்கப்படுவதில் இருந்து அழுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் கூட தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடி ஏந்தப்படுகின்றது. அதற்கு தடைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கொண்டு வா என்று சொல்ல கொண்டு வரவும்.. கொண்டு வராத என்று சொல்ல கொண்டு வராமல் இருக்கவும்.. ஒரு தேசியக் கொடி என்ன.. விளையாட்டுச் சின்னமா..???!

கனடியர்களுக்கு எப்படி கனடிய தேசியக் கொடி முக்கியமோ.. அதேபோல் தான்.. நமக்கும். இந்த அடிப்படையையே புரிந்து கொள்ள முடியாத நிலையில்.. கனடிய பிரதிநிதிகள் எதைப் புரிந்து கொள்ளப் போகின்றனர்.. என்ற கேள்வியையும் நாம் எழுப்பலாம் இல்லையா..???!

மேலும்.. தமிழீழ தேசியக் கொடியை புறக்கணிப்பதன் வாயிலாக.. கனடியர்களுக்கோ.. மற்ற எந்த நாட்டவருக்குமோ.. எமது தேசியக் கொடியின் தன்மை விளங்காது. அவ்வாறு புறக்கணிப்பது... இன்னொரு செய்தியை அவர்களுக்குச் சொல்லும்.. இவர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை தான் பிடிக்கிறார்கள்.. அதனால் தான் அதை இங்கு புறக்கணித்துள்ளார்கள் என்று.

எமது தேசியக் கொடிக்கு அங்கீகாரம் தேட முடியாத நாம்.. எமது இனத்தின் விடுதலைக்கு எப்படி அங்கீகாரம் தேடப் போகிறோம்..???????????! இப்படி ஒரு பெரிய கேள்விக்கும்.. தேசியக் கொடி புறக்கணிப்பு வழிவிடும். இதைக் கேட்பவர்கள் அறிவிலிகள் என்று பதில் கிடைத்தால்.. அப்படிச் சொல்பவர்கள் மீதுதான் சந்தேகம் எழும்..! கேள்வி கேட்டவர்கள் மீதல்ல..! :icon_idea:

தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியை இந்த நாட்டவர்கள் விடுதலைப்புலிகளின் கொடியாகவே பார்க்கின்றனர். செய்திகளிலும் "Tiger Flags" "LTTE Flags" என்றே கூறுகின்றனர். நாம் எவ்வளவுதான் இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளைக்கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவதில்லை. நான் இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்தே வைத்திருக்கிறேன்! நான் புலிக்கொடியைப் புறக்கணிக்கச் சொல்லி எங்கும் கூறவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இங்கு நடந்த சம்பவங்களையே கூறினேன். ஆனால் வேற்றினத்தவர்களிடம் அரசியல் செய்யும்போது புலிக்கொடியை(தமிழீழத் தேசியக்கொடியை) எடுத்துச் செல்வதிலுள்ள சிக்கல்களை (தற்போதைய காலகட்டத்தில்) நான் புரிந்து கொண்டபடியால்தான் அந்த இடத்தில் புலிக்கொடியை கொண்டுசெல்லத் தேவையில்லையென்று கூறியிருந்தேன். கொண்டு செல்லக்கூடாது என்று கூறவில்லை. மக்கள் கொண்டுசென்றால் அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று தெளிவாகவே கூறியிருக்கிறேன். புறக்கணிப்பதற்கும் சில இடங்களில் தேவைகருதி தவிர்ப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலக்கில் உறுதியும் அதை அடையும் முறைகளில் நெகிழ்வுத்தன்மையும் நம்முடைய விடுதலைக்குத் தேவை!

சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குத் தேவையானது தேசத்திற்கான அங்கீகாரம். தேசியக்கொடிக்கல்ல. தேசியக்கொடிக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கவேண்டியது நாங்கள். மற்றைய இனத்தவர்கள் அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிச்சிச்சி...மிகவும் கீழ்த்தரமான விவாதங்கள். ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்றம் ஒன்றும் இல்லை. குறை கூறியே எம்மடை காலம் போகுதடா. என்ன இனமடா சாமி.

விடுங்கடா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியை இந்த நாட்டவர்கள் விடுதலைப்புலிகளின் கொடியாகவே பார்க்கின்றனர். செய்திகளிலும் "Tiger Flags" "LTTE Flags" என்றே கூறுகின்றனர். நாம் எவ்வளவுதான் இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளைக்கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவதில்லை. நான் இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்தே வைத்திருக்கிறேன்! நான் புலிக்கொடியைப் புறக்கணிக்கச் சொல்லி எங்கும் கூறவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இங்கு நடந்த சம்பவங்களையே கூறினேன். ஆனால் வேற்றினத்தவர்களிடம் அரசியல் செய்யும்போது புலிக்கொடியை(தமிழீழத் தேசியக்கொடியை) எடுத்துச் செல்வதிலுள்ள சிக்கல்களை (தற்போதைய காலகட்டத்தில்) நான் புரிந்து கொண்டபடியால்தான் அந்த இடத்தில் புலிக்கொடியை கொண்டுசெல்லத் தேவையில்லையென்று கூறியிருந்தேன். கொண்டு செல்லக்கூடாது என்று கூறவில்லை. மக்கள் கொண்டுசென்றால் அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று தெளிவாகவே கூறியிருக்கிறேன். புறக்கணிப்பதற்கும் சில இடங்களில் தேவைகருதி தவிர்ப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலக்கில் உறுதியும் அதை அடையும் முறைகளில் நெகிழ்வுத்தன்மையும் நம்முடைய விடுதலைக்குத் தேவை!

சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குத் தேவையானது தேசத்திற்கான அங்கீகாரம். தேசியக்கொடிக்கல்ல. தேசியக்கொடிக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கவேண்டியது நாங்கள். மற்றைய இனத்தவர்கள் அல்ல!

அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக தேசியக் கொடியை கைவிட்டுப் போகும் நாம் நாளை தேசத்தையே கைவிட மாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????!

சர்வதேச சமூகத்தின் முன் எமது தேசிய இன.. தேச இருப்பை வெளிப்படுத்தும் ஒரு சின்னம் தான் தேசியக் கொடி..! தேசத்தை தூக்கிக் கொண்டு போய் காட்ட முடியாது. அதனை தேசியக் கொடிதான் பிரதியீடு செய்ய முடியும். அந்த வகையில்.. இது அங்கீகாரமல்ல.. எமது உரிமை..! அதையே தான் நாங்கள் மற்றவர்கள் ஏற்கிறார்கள் இல்லை என்ற தற்துணிவோடு...விட்டுக் கொடுத்திருக்கிறோம்..! இப்படி எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால்.. தேசம் எப்படி மீளும்.. அதற்கு எப்படி அங்கீகாரம் கிட்டும்..!

லிபிய கிளர்ச்சிப் படைகள்.. செய்த முதல் வேலை.. தேசியக் கொடியை மாற்றி தாங்கிக் கொண்டதும் அன்றி தங்களது மேற்குலக காரியாலங்களில் அதைப் பறக்கவிட்டதும். அதன் பின்னரே அவர்களின் இடைக்கால அரசிற்கான கிளர்ச்சி அமைப்பிற்கு.. மேற்குலகம் அங்கீகாரம் வழங்கியது..! அத்துணை சக்தி வாய்ந்த ஒன்று தான் தேசியக் கொடி..!

எமது கருத்து தேசியக் கொடி விலக்கலோ.. புறக்கணிப்போ.. நியாயப்படுத்தக் கூடியவை அல்ல என்பதே..! சூழ்நிலை கருதி எடுத்துச் செல்லாமல் விட்டிருப்பது.. மீண்டும் மீண்டும்.. உதாரணமாக இருக்காமல் இருத்தலை வேண்டியே.. இந்த கருத்துப் பகிர்வுகள். :icon_idea:

Edited by nedukkalapoovan

கொடியும்???????? கோமணமும்???? ... இடத்துக்கு/காலத்துக்கு உகந்த விதத்தில் எதை எதை செய்ய வேண்டுமோ, செய்யுங்கள்! ... முன்பு உந்தக்கொடியை பிடித்து நாம் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை!!! உந்த கொடி இல்லாது ஏதாவது நாலை நாம் செய்ய முடியுமானால் .. கொடியே வேண்டாம்!!

... இந்நிகழ்வில் ஏன் கொடி பிடிக்கவில்லை என அரைகுறைகள்/குழப்பவாதிகள் வேண்டுமென்றே கேள்விகள் கேட்பார்கள் என்ன விதண்டாவாதம் செய்வார்கள்! .. உதுகளின் சலசலப்புகளை காதில் போடாமல் விடுவதே சிறந்தது!

... இல்லை, அப்படி கேள்வி கேட்கும் தமிழ்த்தேசியத்தின் தூண்கள், ஏன் கொடி தாங்கி இந்நிகழ்விற்கு செல்லவில்லை????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

தமிழச்சி அவர்களுக்கு

நான் ராஐகுமார் சுப்பிரமணியம் எழுதிக்கொள்வது.

எனது ஆளுமை பற்றிய உங்கள் கணிப்பீட்டுக்கான உங்கள் சுதந்திரத்தை நான் வரவேற்கின்றேன்.

ஒரு சில விடயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

- Engineer ஆக நான் அங்கு செல்லவில்லை. 4 தடவை அகதித் தமிழனாக ஓடிய அனுபவம்

- 20 வருட காலங்களுக்கு மேலான சுய முயற்சியிலான தொண்டாற்றல்

- தேசியத்தின் மீதான விட்டுக்கொடுக்காத ஈடுபாடு

- இதற்கும் அதிகமான எனது சக உறுப்பினர்களின் வேண்டுகோள்

- வன்னியில் பிறந்து வளந்த எனக்கும் உரிமை உள்ளது என எண்ணியது

- இதற்கும் மேலான என் உறவுகளின் தொடர்ச்சியான வேண்டுகோள்

பல கொலைகளையும், பல தேசவிரோத செயல்களையும் செய்த டக்லஸ் அவர்களை விட்டு விட்டு. என்னை மாதிரியானவர்களை

போட்டு தாக்குகின்றீர்களே? அவர் திறமையின் அடிப்படையில் அங்கே சென்றார்? அவ்வாறான நபர்கள் அனைவரும் போகும் போது, பெரும் ஆலமரத்தின் நிழலில் வாழ்ந்த நான் அங்கே சென்றது எனக்கு பெருமையல்ல..என்னோடு சேர்ந்து அங்கே நின்ற அனைத்து தமிழர்களும் ஒன்றே!! இது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அங்கிகாரம்.

எனது பயணத்தில் சாதித்தது

- பல தனிப்பட்ட நபர்களை சந்தித்து எமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறியது.

- எமது மாநாட்டில் ஏற்றுக்கொண்ட தீர்மாணத்தை 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கையளித்தது

- European Union பிரதிநிதி ஒருவரை சந்தித்தது - நீண்ட நேரம் உரையாடியது

- பிள்ளை அவர்களின் அலுவலகத்தினருடன் இரண்டு சந்திப்புக்கள்

- புது அனுபவங்களை பெற்றுக்கொண்டது. நெழிவு சுழிவுகளை அறிந்தது

- நான் இதற்கு தகுதியானவனா என்பதை தங்கள் மட்டுமே தீர்மாணிக்கும் விடையம் அல்ல. ஆனாலும், நான் என்னால் முடிந்த அனைத்து

உதவிகளையும் என் மக்களுக்காக செய்வேன்.

- நான் சிறிய வயதில் விட்ட பிழைகள் இருந்தால் அவை என்னை வளர்த்துவிட்டிருக்கின்றது. பிழைகள் விடாமல் வளரமுடியாது என்பதையும், அதை சரியாக சுட்டிக்காட்டுகிற போது ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்தையும் அந்த ஆலமரம் எனக்கு கொடுத்திருக்கின்றது.

இங்கே வந்து நாம் சேர்ந்து நின்று தான் செயற்படவேண்டும் என்னும் கருத்தை முன்வைத்துக்கொண்டிருக்கின்றேன். எனது அமைப்பு விட்டிருக்கும் அறிக்கையிலும் நான் அதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

போன மாதம் எனது வீட்டு budget இல் பெரிதான இடி. வீட்டிலும் பிரச்சனை உங்களாலும் பேச்சு. நமக்கு எங்கே வரும் உற்சாகம்?

தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தினால், நான் கூடுதலான விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

global and mail வந்தது வைத்து என்னை மதிப்பீடு செய்யும் நீங்கள், அதில் வருகின்ற அனைத்தையும் மதிப்பீடுவீர்களா? அவர்கள் தொடர்ச்சியாக அவர்கள் எம்மினத்துக்கு செய்துவரும் கெட்ட விளம்பரங்களையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா? Global and Mail பணத்தை வாங்கிவிட்டு தேர்தல் கால விளமப்பரம் செய்யும். அதற்கெல்லாம் நாம் மடிந்துபோகவேண்டுமா?

தங்களுடைய ”வெளிப்படைத்“ தன்மை கேள்விகளுக்கு நான் சலாம் போடுகின்றேன். நாம் தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையினை பேணுகின்றபோதே நாம் போகும் பாதையினையும் வெளிக்காட்ட முடியும். தொடர்ந்து அந்த விமசனங்களை முன்னெடுங்கள். கணக்கு கேளுங்கள். எல்லாவற்றுக்கும் முடிந்தவரை கேள்விகளை முன்வையுங்கள்.

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விடயம். எல்லோரும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் போலுள்ளது. தேசியக் கொடி பிடித்தல், பிடிக்காமல் இருத்தல் பற்றியதான தலைப்பு இதுவல்ல. தேசியக் கொடி பிடிக்க வேண்டியதை நானே பல தடவை இங்கே வலியுறுத்திக் கூறியுமுள்ளேன். அது எங்களின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், முன்பு 2009களில் யுத்தம் நடந்தபோது, மக்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டிய தருணத்தில் கொடி தொடர்பாக பிரச்சனைகளை முதன்மைப் பிரச்சனையாக உருவாக்கி தங்களை மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான விசுவாசத் தளம் என்றும், கொடி பிடிக்காத மற்றவர்கள் துரோகிகள் என்றும், அவர்களின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தியதுமான செயற்பாடுகளின் அடிப்படையில், கடந்த ஒட்டாவா நன்றி கூறலின் போது கொடி பிடிக்காத இவர்கள் எப்படித் துரோகிகள் ஆகவில்லை என்பதே கேள்வி.

அது தான் இங்கு கேட்க முனைந்ததே தவிர, மற்றும்படி எவ்விதத்திலும் தேசியக் கொடி தொடர்பான விவாதமாக இருக்கவில்லை. அது இக்காலத்தில் தேவையுமற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களுடைய ”வெளிப்படைத்“ தன்மை கேள்விகளுக்கு நான் சலாம் போடுகின்றேன். நாம் தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையினை பேணுகின்றபோதே நாம் போகும் பாதையினையும் வெளிக்காட்ட முடியும். தொடர்ந்து அந்த விமசனங்களை முன்னெடுங்கள். கணக்கு கேளுங்கள். எல்லாவற்றுக்கும் முடிந்தவரை கேள்விகளை முன்வையுங்கள்.

இதை செய்யும் போது உங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளுங்கள். வெளிப்படைத்தன்மை உங்களை வெளிக்காட்டுவதன் மூலம் தொடங்குகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கொடியும்???????? கோமணமும்???? ... இடத்துக்கு/காலத்துக்கு உகந்த விதத்தில் எதை எதை செய்ய வேண்டுமோ, செய்யுங்கள்! ... முன்பு உந்தக்கொடியை பிடித்து நாம் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை!!! உந்த கொடி இல்லாது ஏதாவது நாலை நாம் செய்ய முடியுமானால் .. கொடியே வேண்டாம்!!

... இந்நிகழ்வில் ஏன் கொடி பிடிக்கவில்லை என அரைகுறைகள்/குழப்பவாதிகள் வேண்டுமென்றே கேள்விகள் கேட்பார்கள் என்ன விதண்டாவாதம் செய்வார்கள்! .. உதுகளின் சலசலப்புகளை காதில் போடாமல் விடுவதே சிறந்தது!

... இல்லை, அப்படி கேள்வி கேட்கும் தமிழ்த்தேசியத்தின் தூண்கள், ஏன் கொடி தாங்கி இந்நிகழ்விற்கு செல்லவில்லை????

நிச்சயமா நீங்கள் எதையும் வெட்டி விழுத்தப் போறதில்ல. காட்டிக் கொடுக்கிறதைத் தவிர என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது..!

காட்டிக்கொடுப்பதனூடும்.. ஏதேனும்.. எலும்புத் துண்டு கிடைத்தால்.. அதை ரசிக்க உருசிக்க சொல்லக் கூடிய ஆள் தான் நீங்கள். நீங்கள் இங்கு எழுதுவதிலும்.. வீணையோடு சேர்ந்து முகாரி இசைப்பது நன்று.

உங்களுக்கு கொடி.. அதற்காக உயிர் விட்ட உறவுகள்.. அதுபற்றி எல்லாம் கவலையில்ல... நீங்கள் சுகமாக அசைலம் அடிச்சு வாழ்ந்து கொண்டு.. இயன்றவரை குழப்பங்களை விளைவித்துக் கொண்டு.. மக்களை அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதை விரும்புகின்ற ஒரு வகையான மனநிலையில் இருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏன் அக்கறை வரப்போகுது.. நாடு.. மக்கள் என்று. ஏன் உங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசை பிடிக்கவில்லை என்பது இப்போ தெளிவாகிறது..! :icon_idea:

(நீங்கள்.. உங்கள் என்பது குழப்பவாதிகளை. நெல்லையனை குறித்து மட்டும் நிற்கவில்லை.)

Edited by nedukkalapoovan

நிச்சயமா நீங்கள் எதையும் வெட்டி விழுத்தப் போறதில்ல. காட்டிக் கொடுக்கிறதைத் தவிர என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது..!

காட்டிக்கொடுப்பதனூடும்.. ஏதேனும்.. எலும்புத் துண்டு கிடைத்தால்.. அதை ரசிக்க உருசிக்க சொல்லக் கூடிய ஆள் தான் நீங்கள். நீங்கள் இங்கு எழுதுவதிலும்.. வீணையோடு சேர்ந்து முகாரி இசைப்பது நன்று.

உங்களுக்கு கொடி.. அதற்காக உயிர் விட்ட உறவுகள்.. அதுபற்றி எல்லாம் கவலையில்ல... நீங்கள் சுகமாக அசைலம் அடிச்சு வாழ்ந்து கொண்டு.. இயன்றவரை குழப்பங்களை விளைவித்துக் கொண்டு.. மக்களை அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதை விரும்புகின்ற ஒரு வகையான மனநிலையில் இருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏன் அக்கறை வரப்போகுது.. நாடு.. மக்கள் என்று. ஏன் உங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசை பிடிக்கவில்லை என்பது இப்போ தெளிவாகிறது..! :icon_idea:

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டாவா நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு பாராட்டுக்கள்

. நாடு.. மக்கள் என்று. ஏன் உங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசை பிடிக்கவில்லை என்பது இப்போ தெளிவாகிறது..! :icon_idea:

... கடந்த மூன்றாண்டுகளாக ஏதாவது ... ஏதாவது ... செய்ததென்றால் சொல்லுங்கள்??? இல்லை, இனிச்செய்யப்போகிறார்கள் என்றாலும் சொல்லுங்கள்??? ... பின்பு காதலிக்கிறோமா? இல்லையா? என முடிபெடுப்போம்!!!

.. இங்கு லண்டனிலும், பிரான்ஸிலும் நா.க.த.அ ஆனது, தமது (விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம்) அரசியல் பிரிவென பகிரங்கமாக கூறினார்கள்(இங்கு யாழிலும் அது தொடர்பான செய்தி இணைக்கப்பட்டிருந்தது)!... உண்மையா??? ... கடந்த மாவீரர் தினத்தை ... காசுக்கணக்கு காட்டப்போகிறோம்/அடிக்கிறார்கள்/தடுக்கப்போகிறோம்/ .. என்றெல்லாம் விட்டபடி இந்தியாவிலிருந்து இயக்கப்படுபவர்கள், புலமெங்கு வந்து கூத்தாட ... பின் புலமாக நின்று ஆடியவர்கள் நா.க.த.அ க்கள்!!!!!...

  • கருத்துக்கள உறவுகள்

... கடந்த மூன்றாண்டுகளாக ஏதாவது ... ஏதாவது ... செய்ததென்றால் சொல்லுங்கள்??? இல்லை, இனிச்செய்யப்போகிறார்கள் என்றாலும் சொல்லுங்கள்??? ... பின்பு காதலிக்கிறோமா? இல்லையா? என முடிபெடுப்போம்!!!

.. இங்கு லண்டனிலும், பிரான்ஸிலும் நா.க.த.அ ஆனது, தமது (விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம்) அரசியல் பிரிவென பகிரங்கமாக கூறினார்கள்(இங்கு யாழிலும் அது தொடர்பான செய்தி இணைக்கப்பட்டிருந்தது)!... உண்மையா??? ... கடந்த மாவீரர் தினத்தை ... காசுக்கணக்கு காட்டப்போகிறோம்/அடிக்கிறார்கள்/தடுக்கப்போகிறோம்/ .. என்றெல்லாம் விட்டபடி இந்தியாவிலிருந்து இயக்கப்படுபவர்கள், புலமெங்கு வந்து கூத்தாட ... பின் புலமாக நின்று ஆடியவர்கள் நா.க.த.அ க்கள்!!!!!...

பீரிஸிடம் போன் பேட்டுக் கேளுங்கள் சொல்லுவார். நாங்கள் சொல்லி நீங்கள் அதைக் கேட்கக் கூடிய பொறுமையோ.. மனநிலையோ கொண்டிருக்கவில்லை. அப்படியான நிலையில் உங்களோடு இது தொடர்பில் கருத்துப் பகிர்வது வீண் வேலை..!

நித்திரை கொள்பவனை எழுப்பலாம்.. நித்திரை கொள்பது போல நடிப்பவனை எப்போதுமே எழுப்ப முடியாது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

காட்டிக்கொடுப்பதனூடும்.. ஏதேனும்.. எலும்புத் துண்டு கிடைத்தால்.. அதை ரசிக்க உருசிக்க சொல்லக் கூடிய ஆள் தான் நீங்கள்.

நிங்கள், நீங்கள் தான் என்பது விடுதலைப்புலிகளின் தலைச்செயலகத்தின் அரசியல் பிரிவினர் என்று கூறாமல் கூறுவது எமக்கு புரிகிறது!!! .. இதற்குதானே நா.க.த.அ இருக்கிறது!! யார் இயக்குகிறார்கள்? எவர் எவர் இதன் பின் புலம் இருக்கிறார்கள்?? ... என ஆயிரம் கேள்விகள் கேட்க்கப்பட்டும் பதில்கள் இன்றுவரை இல்லை!!!

... இங்கு நா.க.த.அ இன் பிரச்சார பீரங்கியான GTV நிர்வாகம், யமனுக்கு ஆப்படித்த கேபியுடன் தொடர்புகளை வைத்திருக்கிறதென்று ஆதாரங்களுடன், ஒரு பேப்பர் செய்தி வெளியிட்டது!!!!! ... அச்செய்தி பொய்யாயின், ஏன் வழக்கு வைக்கவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.