Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தையால் சித்ரவதைக்காளான 3 மாத குழந்தை அப்ரீன் மாரடைப்பால் மரணம்

Featured Replies

பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அது சற்று நேரத்திற்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தது.

அப்ரீனின் தந்தை உமர் பாருக், தாய் ரேஷ்மா பானு. உமர் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்திருந்தபோது அப்ரீன் பிறந்ததால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அதை சிகரெட் துண்டால் சுடுவது, அடிப்பது என்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார். குழந்தையின் கழுத்தை நெறித்து கொல்லவும் முயன்றுள்ளார்.

இனியும் விட்டுவைத்தால் குழந்தையை கொன்றுவிடுவார் என்று நினைத்து ரேஷ்மா அதை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். முன்னதாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உமரின் பெற்றோர் மறுத்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி தான் ரேஷ்மா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ரேஷ்மா உமரின் இரண்டாவது மனைவி ஆவார்.

http://tamil.oneindia.in/news/2012/04/11/india-bangalore-baby-afreen-dies-following-cardiac-arrest-aid0128.html

இவனுங்க எல்லாம் மனுசங்க தானா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் செய்யவும் மனம் வருமா ஒரு மனுஷனுக்கு? உண்மையிலேயே குற்றம் நிரூபிக்கப் பட்டால் இந்த மனிதனை உயிருடன் சிங்கக் கூட்டுக்குள் தள்ளிக் கொல்வது தான் சரியான தண்டனையாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பல கொடுமைகள் குழந்தைகள் மேல் நிகழ்த்தப்படுகின்றது ........ ஒருசில கொடுமைகள் மட்டும் வெளியே கொண்டுவரப்படுகின்றது :(

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்/ கொலைகள் இன்னும் குறையவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துகாட்டு!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையா மனிதனா...??! அல்லது இவருக்கு ஏதோ உளவியல் பிரச்சனை இருந்திருக்க வேண்டும்.

மேற்கு நாடுகளில் சொந்தத் தாய்மாரே.. பிள்ளைகளை.. சலவை இயந்திரத்துக்குள் எல்லாம் போட்டு சாகடிக்கிறாங்க. அவர்கள்.. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டே அப்படி செய்கின்றனர் என்கிறார்கள் வைத்தியர்களும் ஆய்வாளர்களும். இவருக்கும்.. கவனிக்கப்படாத மன அழுத்தமே இந்த அப்பாவி பெண் குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது போலத் தெரிகிறது.

இதில் தண்டனை அவருக்கு மட்டுமானதாக அன்றி.. அவரின் இந்த நிலையை உணராமல்... அவரை குழந்தையோடு நெருங்க அனுமதித்த அனைவருக்கும் தண்டனை வழங்குவதும்.. அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய சமூகமும்.. தண்டிக்கப்படனும்..! (இங்கிலாந்தில்.. பேபி P சாவில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை பெற்றது போல..!) அல்லது சீர்திருத்தப்படனும்..! அதுமட்டுமன்றி எதிர்காலத்தில்.. மன அழுத்தமுள்ள பெற்றோரிடம் இருந்து குழந்தைகளைப் பெற்று அரசுகள் அவற்றைப் பராமரிக்க முன் வர வேண்டும்..! இதன் மூலமே இவ்வாறான படுகொலைகளை மனிதத்திற்கு.. மனித நாகரித்துக்கு அப்பாலான செயல்களை கட்டுப்படுத்த முடியும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.