Jump to content

வவுனியாவில் ஆளில்லா வேவு விமானம் வீழ்ந்தது!


Recommended Posts

வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது.

வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது.

200603280020jh.jpg

சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது.

இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிராம மக்கள் சிறிலங்கா காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானப் படையினர் மற்றும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ பகுதியிலிருந்து விமானத்தை மீட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் நாளன்று வவுனியாவின் கனகராயன்குளத்துக்கு கிழக்காக விஞ்ஞானகுளத்துக்கும் 9 ஆம் கட்டைக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் ஆளில்லா வேவு விமானம் விழுந்து நொறுங்கியது.

http://www.eelampage.com/?cn=25112

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக் கிண்டி எலியப் புடிச்ச மாதிரி இருக்குது. இத்தினு}ண்டு பொம்மைப் பிளோன வைச்சு என்னத்தச் செய்யப் போறாங்க. தமிழீழக் குழந்தைகள் விளையாட நல்ல பொம்மை. வன்னிக்குள்ள அறிவுச் சோலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துப் பொத்தென்று சிங்கள விமானம் புூமியில் விழுகுதாம் மெய்யா!!

செத்துப் போனாரா, உயிரோடு உள்ளாரோ கோயபாய ஜயா!!! :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொத்துப் பொத்தென்று சிங்கள விமானம் புூமியில் விழுகுதாம் மெய்யா!!

செத்துப் போனாரா, உயிரோடு உள்ளாரோ கோயபாய ஜயா!!!

தம்பி து}யவன.. இது தமிழ்க்களம் தமிழில கதைங்க.. அதென்ன கோயாபாயா ஐயா ..?? :twisted: :twisted:

என்ன விமானத்தை கையால து}க்கிறாங்க.. விமானமா விமானத்தின் மாதிரியா.. இலங்கைத்தயாரிப்பா..?? பறவாய் இல்லையே. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி து}யவன.. இது தமிழ்க்களம் தமிழில கதைங்க.. அதென்ன கோயாபாயா ஐயா ..?? :twisted: :twisted:

என்ன விமானத்தை கையால து}க்கிறாங்க.. விமானமா விமானத்தின் மாதிரியா.. இலங்கைத்தயாரிப்பா..?? பறவாய் இல்லையே. :wink: :P

நன்றி டமிலினி அக்கா

இது முந்தி வந்த இயக்கப்பாட்டு. அதிலே ரத்வத்த ஜயா என்று வரும். நான் கொஞ்சம் மாற்றம் செய்து போட்டிருக்கேன்.

கொப்பி அடித்தாலும், காலத்துக்கு ஏற்றமாதிரி அல்லவா போடவேண்டும். இப்ப ரத்வத்தை தான் கஞ்சிக்கு டாவடிக்கின்றாராமே!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் டம்பி டு}யவன்.. அந்த பாட்டில நாலு வரி போட்டிருந்தா புரிஞ்சிருக்கும்.. சரி சரி.. ரத்துவத்த கஞ்சிக்கு டாவடிக்கிறாரா..?? அது சரி டாவு என்றால் என்ன.. எப்பதான் தமிழ்ல எழுதப்போறியளோ.. :cry: :cry: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் கதைக்கமாட்டேன் ஆமா!! நான் மட்டும் என்ன தெரிந்து கொண்ணடா சொன்னேன். :evil: :evil: :evil: :roll:

Link to comment
Share on other sites

இதப் பாத்தா வேவு விமானம் மாதிரித் தெரியேல்ல.இதில கமரா இருக்கிற மாதிரியும் தெரியேல்ல.இது அனேகமாக வேவு விமானத்தை இயக்குபவர்களுக்கான பயிற்சி விமானமாக இருக்கும்.இது ரேடியோ வினால் இயக்கப்படும் மொடல் விமானம்.இதை புலத்தில பொழுதுபோக்காக சிறுவர் முதல் பெரியவர் வரை வடிவமைத்து,பறக்க வைப்பார்கள்.இது ஒரு 500 டொலருக்கு மேல வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி கூடத்துக்கு சின்ன பிள்ளையள் கார்ட்போட் பெட்டில சென்ஞ்ச மாதிரி இருக்கு அதுவும் made in sri lanka vam அப்பிடியா தான் இருக்கனும்.. :lol::lol:

Link to comment
Share on other sites

உது பயிற்சி விமானமாக இருக்கும் இல்லை உதுக்குள்ளை வெடிபொருளை நிரப்பி surgical strike செய்யிறதுக்கு (LRRP பாணியில், ஆனால் மனிதர்களை பயன்படுத்தி சிக்கல்கள் இழப்புகளை எதிர்கொள்ளாமல் இருக்க)பயிற்சியாகவும் இருக்கலாம்.

இலங்கை படைத்துறைக்கு இராணுவரீதியாக தொழில்நுட்ப உதவிகளை பெறுவதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் படைகள் என்றரீதியில் சிக்கல்கள் குறைவு. மற்றும் அவர்களின் budget உம் பல மடங்கு அதிகம். ஆகவே அவர்கள் இப்படியான விமானங்களை பறக்க விட ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்கும். இங்கு சிலர் துள்ளிக்குதிப்பது போல் பப்பாவில் ஏத்தும் நோக்காகவும் இருக்கலாம். :P

இலங்கைப் படைகளின் புலநாய்வுத்துறையில் இருப்பவர்கள் (ஒட்டுப்படைகள் அல்ல) கூலிக்கு மாரடிக்கும் சாதாரண சிப்பாய்கள் மாதிரி இல்லை. ஓர்மத்தோடு அர்பணிப்போடு குறிக்கோளோடும் வேலை செய்பவர்கள்.

Link to comment
Share on other sites

நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட அரசின் புலனாய்வுச் செயற்பாடுகள்.

4 ஆவது ஈழப்போர் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டேயிருக்கும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத்துறைஇ தென் இலங்கை ஊடுருவல்களை முறியடிக்கவும் புலிகளின் பிரதேசத்துக்கும் ஊடுருவி புலனாய்வுத் தகவல்களை சேகரிக்கவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரச புலனாய்வு இயந்திரம் கடலிலும்இ தரையிலும்இ ஆகாயத்திலும் தொழில்நுட்ப மயப்பட்ட கருவிகளை பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது புலிகளின் உளவுத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இதனால் புலிகளின் முறியடிப்புப் பணி பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளது.

புலனாய்வை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று தொழில்நுட்ப புலனாய்வு மற்றது மனிதவளப் புலனாய்வு என்பனவாகும்.

புலனாய்வுப் போர் இன்று அறிவியல் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும், வேவுபார்ப்பதற்கும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இன்று மனிதன் தேவையில்லை. அவற்றை எல்லாம் இலத்திரனியல் அல்லது டிஜிட்டல் கருவிகள் செய்கின்றன. மனிதன் திரையின் முன் குந்தியிருக்கிறான். இலத்திரனியல் கருவிகள் தான் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கிழக்கு, மேற்கு நாடுகள் இவ்வாறாக தகவல் தொழில்நுட்பத்துறையில் விருத்தியடைந்ததைப் போல அல்லது இலங்கை அரச புலனாய்வுத்துறை விருத்தியடைந்ததைப் போல தமிழீழ உளவுத்துறை விருத்தியடையவில்லை. ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில்தான் உள்ளது. இதற்குப் பெரும் பிரச்சினை நிதிப் பிரச்சினையாகவேயுள்ளது. மனிதவள பற்றாக்குறையுமாகும்.

தமிழ் மக்களின் உளவுச் சேவை சிங்கள மக்களின் உளவுச் சேவையுடன் ஒப்பிடும்போது ஆளணி மனித வலுச் சமநிலையிலும் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆனால், புலனாய்வு வலுச்சம நிலையில் புலிகளின் உளவுத்துறை வீரியம் பெற்றுள்ளது.

...

.....

4 ஆம் கட்ட ஈழப்போர் என்பதுதகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமையும். எது எப்படி இருப்பினும் 3 ஆம் கட்ட ஈழப்போரின் புலிகளிடம் இல்லாத தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை 4 ஆம் கட்ட ஈழப்போரில் புலிகள் பயன்படுத்துவார்கள். இனிவரும் போர் நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட சமர்க்களமாக அமையும்.

புலிகளின் புலனாய்வு தொழில்நுட்ப விருத்திக்கும் போதிய பொருளாதார மனித வளம் இல்லை. இவ் குறையினை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கரம் கொடுக்க வேண்டும்.

http://www.thinakural.com/New%20web%20site...2/Article-9.htm

Link to comment
Share on other sites

குறுக்கால போனவர்,

உதை நான் ஒரு வருடத்திற்கு முன்னம் தாரகி என்ற பேரில எழுதேக்க குறிப்பிட்டிருந்தனான்.புலத்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.