Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னாபிரிக்காவை மீண்டும் நழுவவிட்டது சிறிலங்கா

Featured Replies

தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் அந்த நாட்டின் அரச நிகழ்வாக நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்காவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், இரு அனுதாபச் செய்திகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இறுதிச்சடங்கில், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினார்.

டர்பன் மைதானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் இரங்கலுரை நிகழ்த்திய எட்டுப் பேரில் ஆறு பேர், படையாச்சியின் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுதாப உரை நிகழ்த்திய எஞ்சிய இருவரில் ஒருவர் சுரேன் சுரேந்திரா. மற்றவர் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஆவார்.

இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன.

தென்னாபிரிக்காவின் ஆதரவை தமிழர்களின் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்கு சுரேன் சுரேந்திரா இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் விசனம் அடைந்துள்ளன.

தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த படையாச்சி மறைந்த போதும், அவரது இறுதிச்சடங்கைப் பயன்படுத்திக் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் கருதுகின்றன.

இறுதிச்சடங்கை நெறிப்படுத்திய அமைச்சர் மனுவல், “மறைந்த அமைச்சர் படையாச்சி சிறிலங்கா தமிழர் விவகாரங்களுடன் நெருக்கமாக பணியாற்றியவர்“ என்று குறிப்பிட்டபோது, தொலைக்காட்சிகள் சுரேன் சுரேந்திராவை நோக்கித் தமது பார்வையைத் திருப்பியிருந்தன.

இந்த நிகழ்வில் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா மற்றும் அந்த நாட்டின் அனைத்துலக உறவுகளுக்கான அமைச்சர் மைட்டி நிகோனா மசாபான் ஆகியோருடன் சுரேன் சுரேந்திரா கலந்துரையாடியுள்ளதாகவும், படையாச்சி இல்லாத நிலையிலும் புலம்பெயர் தமிழர்கள் தென்னாபிரிக்காவுடனான உறவுகளை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தென்னாபிரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள கிடைத்த மற்றொரு வாய்ப்பை சிறிலங்கா தவற விட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அண்மையில், ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அந்த நிகழ்வைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் அனைத்துலக அளவில் உறவுகளை வலுப்படுத்தி வருவது சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

படையாச்சியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிய செய்தியும், அவரது இறுதிச்சடங்கில் வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

http://www.puthinappalakai.com/view.php?20120513106186

உலகத் தமிழர் பேரவையின் நல்லதொரு அரசியல் நகர்வு. வாழ்த்துக்கள். !

மற்றும் தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சிக்கு எனது இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவைக்கு நன்றிகளும், பாராட்டுதல்களும்..! :rolleyes:

திட்டுவதோடு மட்டும் நின்றுவிடாது நல்லன செய்யும்போது அவற்றைப் பாராட்டுவதும் நம் கடமையாகும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

படையாச்சியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிய செய்தியும், அவரது இறுதிச்சடங்கில் வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

TNSTC_bus3.jpg

பஸ் ஸ்பேருக்கு காசு இல்லை என்றால் கொடுத்துவிடுங்கப்பா...!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவைக்கு நிதிசேகரிக்க சிட்னியில் வரும் ஒக்டோபர் மாதத்தில் இசை நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவைக்கு நன்றிகளும், பாராட்டுதல்களும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.