Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் அங்கால இஞ்சால போய்வந்தா அதுக்கிடையில எவ்வளவு மாற்றங்கள்?

ஏதோ யாழ்க்களத்திலயும் புலிகளை விமர்சிக்கிற அளவுக்கு முதிர்ச்சி வந்திருக்கெண்டது ஆச்சரியமாத்தானிருக்கு.

"தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்குப் படக்கெண்டு........"

  • Replies 64
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. அவை உமக்கு புரியாவிட்டால் அது உமது பிரச்சினை.

மற்றவர்களை கீழ்த்தரமாக மதித்து அப்படியே மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று நீர் முயற்சிப்பது தெரிகிறது. உமது பண்பாடு எனது பண்பாடு அல்ல.

விடுதலைப்புலிகள் தமது நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் போது அது பற்றி விமரிசித்து, அதையும் "ஆதரவு குறையும்", "குழப்பம் வரும்" என்று பிரச்சினை கிளப்ப முயல்வது துரோகத்தனமான செயலாகும். இது எனது அபிப்பிராயம். வேறுயாரும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.

ஜனநாயக முகமூடியை நான் அணிந்து இருக்கவில்லை. நீர் தான் அணிந்திருக்கிறீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே தங்கள் காணிகள், சொத்துக்கள் மட்டில் பலருக்கு இருக்கும் "ஈர்ப்பை" நான் கொச்சைப்படுத்தவில்லை. பலர் விசயம் புரியாமல் சகட்டு மேனிக்கு எதிர்ப்பதாகவும் தெரிகிறது.

நிற்க,

போராட்டத்தேவைக்காக எதையும் செய்தே ஆகவேண்டிய நிலை அவ்வப்போது வரும். கடந்த காலங்களில் புலிகள் எடுத்த தீவிரமான (கவனிக்க இப்போது வந்த காணிச்சட்டம் அப்படியானதன்று) நடவடிக்கைகளில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அது தேச விடுதலைக்குத்தான் என்ற புரிதல் இருந்தது. இந்தக் காணிச் சட்டத்தால் புலம்பெயர்ந்தவர்கள் எதை இழக்கிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாமலுள்ளது. ஆனால் களத்தில் வாழ்ந்த மக்கள் இப்படியான நடவடிக்கையினால் தமது வாழ்வாதாரத்தைக்கூட அர்ப்பணித்தார்கள்.

ஜெயசுக்குறு தொடங்கியபோது பல உழவு இயந்திரங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன.( கவனிக்க, வாங்கிச் செல்லப்படவில்லை). முத்தையன்கட்டுப்பகுதியில் மட்டும் பதினாறு உழவியந்திரங்கள் இவ்வாறு புலிகளால் கொண்டுசெல்லப்பட்டன. அவையனைத்தும் விவசாயத்துக்கான உழவுஇயந்திரங்கள். ஆறுவருடங்களின்பின்தான் அவற்றுக்கான பணம் (வட்டியுடன்) கொடுக்கப்பட்டது. அக்குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து சடுதியான பின்னடைவைச் சந்தித்தன. ஆனால் அது தவிர்க்கவே முடியாத நிலை. யுத்தத்துக்கு வாகனங்களற்ற நிலையில் அதுதான் செய்யப்பட வேண்டியது.

இதைப்போல தனியார் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாகனச்சாரதிகள் கட்டாயம் முன்னணிக் களப்பணி செய்தாக வேண்டும். (இதில் பல வாகனச்சாரதிகள் வீரச்சாவடைந்தார்கள்). மக்களின் வாகனங்கள் களப்பணியில் சிதறிப்போகும் அல்லது சேதமாகும். பல வீடுகள், காணிகள் கூட புலிகளின் முகாம்களாக இருக்கத்தக்கதாக அதற்குச் சொந்தமான நிறையப்பேர் வாடகை வீட்டில் குடியிருந்தார்களே? இவற்றிலெல்லாம் போராளி - மாவீரர் குடும்பங்களென்று கூட பார்ப்பதில்லை.

அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் புலிகள் விமர்சிக்கப்பட்டதில்லை. அங்கிருந்த மக்கள் அதைச் செய்யப்போவதுமில்லை. அவர்கள் புலிகளை வெருட்டியதுமில்லை. நீ ட்றக்ரறைப் பறிச்சா எங்கட பிள்ளையள் சண்டைபிடிக்க வராதுகள் எண்டு சொல்லியதில்லை.

இப்படி எல்லாச் சந்தர்ப்பத்திலும் அனைத்துச் சொத்துக்களும், (உயிர்களும்கூட) தேசப்பாதுகாப்புக்கென்று பயன்படுத்தப்பட்டன. கட்டாயப்படுத்திக்கூட அவை பெறப்பட்டன. அதற்கான உரிமையும் தார்மீகத் தகுதியும் புலிகளுக்கு முற்றிலுமுண்டு. இப்போது ஏற்படுத்தப்பட்ட காணிச் சட்டம்கூட அப்படியானது தானென்றாலும் அதில் கடுமையான எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சரி. இதுவரைகாலமும் இந்தப் புலம்பெயர்ந்தவர்களின் காணியை யார் பார்க்கிறார்கள்?

அவர்களது இரத்த உறவுகள்தான் என்றால் அவர்களே அதைக் கையாழ்வதற்கு இப்போதைய சட்டத்தில் வழியுண்டுதானே? அப்படியில்லாமல் வேறு யாரையாவது வாடகைக்கு விட்டிருக்கிறார்களா? அந்தச்சந்தர்ப்பத்தில் இவர்கள் திரும்பிப்போகும்வரை அவ்வாடகை இவர்களுக்குக் கிடைக்காது என்பதைத் தவிர வேறென்ன சிக்கல்?

காவடி கேட்ட மூன்று கேள்விகள்தான் எனக்கும் தொக்கு நிற்கின்றன.

இல்லை கெதியா உயர் பாதுகாப்பு வலயத்துக்க இருகிற எங்கட காணியளையும் சண்டை பிடிச்சு உயிரக் குடுத்து மீட்டியள் எண்டா நாங்க இன்னும் கெதியா வந்து உவற்றையும் உரிமை கொண்டாட வசதியா இருக்கும்..கெதியாச் சண்டயத் துவக்குங்கோவன்...

இந்த தலைப்பை ஆரம்பித்தவருக்கு கோடி நன்றிகள். பல மனிதர்களின் உண்மை வடிவத்தை அறிந்துகொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா...

வசம்பு, யூட்டு காவடியென்ன, என்னவெல்லாம் ஆடுவியள்!!! உங்களெல்லோருக்கும் எங்கே ஒரு இடம் கிடைக்குதோ, அங்கெல்லாம் முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுகளெல்லாம் போட்டுவியள்!!

தமிழீழ காணிச்சட்டம், ஒரு பாரிய நிலப்பரப்பை நிர்வகிக்கும் ஓர் அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டம்!! அதில் மாற்றங்கள் வரலாம்!!! இங்கு நாமிருக்கும் நாடுகளில் கொண்டுவரப்படாத சட்டங்களா??? திருத்தப்படத சட்டங்களா??? லண்டனில் முன்பு தட்சரின் காலத்தில் "போல் ரக்ஸ்" என்று ஒன்றை கொண்டு வந்தார்கள்!! எதிர்ப்போ உச்சத்தை அடைந்தும், நடைமுறைப்படுத்தினார்கள்!! ஆனால் ஜோன் மேஜர் காலத்தில் அது நீக்கப்பட்டு "கவுன்ஸில் ரக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகில் நடைபெறாத நாடுகளேயில்லை எனலாம்!! அதை விடுத்து நாம் தேசியத்திற்கு ஆதராவானவர்கள், வளர்பவர்கள், அந்நாட்டின் பிரஜைகள்!! நாங்கள் எங்கள் அபிப்பிராஜங்களை தெரிவிக்க உரிமை உடையவர்கள்!!

ஆனால் ... நீங்கள் ஜனநாயகவாதிகள்!! காட்டிக்கொடுப்பீங்கள், ஒட்டுப்படைகளோடு சேர்ந்து சனங்களை கொல்லுவீங்கள், தூள் கடத்துவீர்கள், கோயில் உண்டியல் அடிப்பீர்கள், கொலை, கொள்ளை, ... இன்னாரன்ன செய்து போட்டு கருத்துச்சுதந்திரம்!!!!!! விடுவியள் ... சந்தர்ப்பம் கிடைத்தால் ... ராக்கட்டும்!!!!

தம்பி குறுக்காலபோவான் என்னத்தைச் சொல்ல வந்தீரோ தெரியவில்லை? உமக்கு யார் சொன்னது லண்டனில் கிறடிட்காட்டில் அடித்து காசு கொடுக்கப்பட்டதில்லையென்று? உமக்கு தெரியுமா லன்டனில் திறைசேரிக்கு அளிக்கப்பட்ட நிதியின் தொகை? சும்மா விதன்டாவாததிற்கு எழுதாதீர்!

அது இருக்க, இஸ்ரவேல் எனும் நாடு மலர்ந்து இன்றுபல வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் இஸ்ரவேலின் பாரிய நிதிப்பிரட்சனைகளை புலத்தில் உள்ள யூத மக்களே கரம் கொடுக்கிறார்கள்! இதை என்னத்திற்குச் சொல்கிறேன் என்றால் நாளை மலரப்போகும் தமிழீழத்தில் முதலிடுவதற்கு வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ அடித்துப் பிடித்து முண்டியடித்து வரப் போவதில்லை! புலத்தில் உள்ள நாம்தான் நீண்ட காலத்திற்கு கை கொடுக்க வேண்டிவரும் மட்டுமல்ல கை கொடுக்க வேண்டும்! இது கடந்த காலங்களிலும் கண் கூடு! சுனாமியாகட்டும், வெள்ளப்பெருக்குகள் ஆகட்டும் நாம்தான் கை கொடுத்தோம்! ஒருவரும் வரவில்லை!!!! இன்றைய தேசியத்தின் வளர்ச்சிக்கு களத்தில் உள்ள மக்கள் செய்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டாதவை! மலரப்போகும் ஈழத்தில் அம்மக்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை! ஆனால் புலம்பெயர் மக்களின் பங்களிப்பானது, இன்று பரவி வியாபித்திருக்கும் தேசிய விருட்சத்தில் பாரிய பங்கையும் யாரும் மறுப்பதற்கில்லை!!

அண்ணை நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னான் நீங்கள் ஏன்டென்சன் ஆகுறீங்கள். :?

அ"றோ"கரா...

வசம்பு, யூட்டு காவடியென்ன, என்னவெல்லாம் ஆடுவியள்!!! உங்களெல்லோருக்கும் எங்கே ஒரு இடம் கிடைக்குதோ, அங்கெல்லாம் முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுகளெல்லாம் போட்டுவியள்!!

தமிழீழ காணிச்சட்டம், ஒரு பாரிய நிலப்பரப்பை நிர்வகிக்கும் ஓர் அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டம்!! அதில் மாற்றங்கள் வரலாம்!!! இங்கு நாமிருக்கும் நாடுகளில் கொண்டுவரப்படாத சட்டங்களா??? திருத்தப்படத சட்டங்களா??? லண்டனில் முன்பு தட்சரின் காலத்தில் "போல் ரக்ஸ்" என்று ஒன்றை கொண்டு வந்தார்கள்!! எதிர்ப்போ உச்சத்தை அடைந்தும், நடைமுறைப்படுத்தினார்கள்!! ஆனால் ஜோன் மேஜர் காலத்தில் அது நீக்கப்பட்டு "கவுன்ஸில் ரக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகில் நடைபெறாத நாடுகளேயில்லை எனலாம்!! அதை விடுத்து நாம் தேசியத்திற்கு ஆதராவானவர்கள், வளர்பவர்கள், அந்நாட்டின் பிரஜைகள்!! நாங்கள் எங்கள் அபிப்பிராஜங்களை தெரிவிக்க உரிமை உடையவர்கள்!!

ஆனால் ... நீங்கள் ஜனநாயகவாதிகள்!! காட்டிக்கொடுப்பீங்கள், ஒட்டுப்படைகளோடு சேர்ந்து சனங்களை கொல்லுவீங்கள், தூள் கடத்துவீர்கள், கோயில் உண்டியல் அடிப்பீர்கள், கொலை, கொள்ளை, ... இன்னாரன்ன செய்து போட்டு கருத்துச்சுதந்திரம்!!!!!! விடுவியள் ... சந்தர்ப்பம் கிடைத்தால் ... ராக்கட்டும்!!!!

காவடி என்னய்யா தப்பா எழுதி இருக்கிறார்?

கட்டுவன் பக்கம் கருவாட்டு விலைக்கு வேண்டி விட்டிருக்கிறன். கடவுளே எண்டு உவங்கள் அடிச்சு பிடிச்சுட்டாங்கள் எண்டா 2...3 வருசத்தாலை கண்ணி வெடியள் எல்லாம் எடுத்து முடிய நல்ல விலைக்கு விக்கலாம்.

கதிர்காமத்தானுக்கும் சன்னதிக்கும் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன் பால்காவடி எடுக்கிறன் எண்டு. எல்லாம் அந்தக் கடவுளின்ரை கிருபை இருக்கவேணும் கண்டியளோ. உவங்களுக்கு ரக்ஸ் குடுக்காமல் உறுதியிலை பெயர் மாத்திறது எப்படி எண்டு யாரும் சொல்லுவியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு குறுக்காலை ... நீங்கள் எல்லாரும் காவடியும் ஆடுவியள், கரகமும் ஆடுவியல்!! ஆனால் காவடியோ, கரகமோ ஆடுகிறியள் என்பது பிடிப்பது கஸ்டம்!!!! எங்கையாவது ஒருக்கால் பிடி கொடுத்துடுவியள், அந்தக் கணத்திலை பிடித்தால் சரி!! கொஞ்சம் மேலே உள்ளவர்களுக்கு விளங்கும்!!!

அப்ப இறுக்கி பிடிச்சுக் கொள்ளுங்கோ "றோ"கரா வெண்டானாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவான்,

அது "அடிமாட்டு விலை" எண்டெல்லோ சொல்லுறது?

உண்டியலானின்ர "காவடிக்கதை" நல்லாயிருக்கு.

எல்லாம் அந்தக் காவடிக்கவிஞனுக்கே வெளிச்சம்.;-)

உந்த கவிமணி கவித பற்றி பிரச்சினை எழுந்தபோது வந்தவர், தனது பல கவிதைகள் தந்தவர் இப்போது அவருக்கு போதிய எழுச்சி இல்லை. இரண்டு மூன்று பெயரில் எழுதுறது எண்டது சும்மா விளையாட்டு இல்ல, கவிமணிக்கு கஸ்ரம்போல இருக்கு, அதுதான் அவருக்கு பதிலா வேற ஒருத்தர் வந்து கதைக்கிறார், அதனால் அவர் தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிட்டார். :):):lol:

ஓம் அடிமாட்டு விலைதான் மாறி எழுதிப்போட்டன் நல்லவன்.

அடடா என்ன புண்ணாக்குநாய்வு அருமை பிருந்தன்.

ஓம் அடிமாட்டு விலைதான் மாறி எழுதிப்போட்டன் நல்லவன்.

அடடா என்ன புண்ணாக்குநாய்வு அருமை பிருந்தன்.

எல்லாம் டன்னோட நாயோட சேர்ந்த தோஷம். :):):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.