Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை சொல்ல என்ன பயம்.

Featured Replies

இன்று கனேடிய வானொலியில் பிரிட்டிஷ் தமிழ் போரம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி கேட்டேன் .அவரும் அமெரிக்காவில் இருக்கும் ஜெயராஜாவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அழைப்பில் அங்கு சென்று பல முக்கியமானவர்களை சந்திதிருக்கின்றார்கள் .அதைவிட லண்டன் ,சவுத் ஆபிரிக்கா,நோர்வே ,சுவிர்சிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்த பல அரசாங்க பிரதிநிதிகளையும் கடந்த மாதங்களில் சந்தித்திருகின்றார்.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விரல்நுனியில் அப்டேற்ராக வைத்திருப்பதாக சொன்னார் .

அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்,

ஒன்று, முழு விடயங்களும் பகிரங்க படுதமுடியாது சில தேவைகள் கருத்தில் கொண்டு,

அடுத்து, புலம் பெயர்ந்தவ தமிழர்கள் என்ன வேண்டி நிற்கின்றார்கள் என்பது எமக்கு தெரியும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை,முதலில் ஏதாவது ஒன்றில் இருந்து தான் தொடங்கவேண்டும் அதற்கு தமிழார் தரப்பு ஆதரவு கட்டாயம் தேவை.ஏனெனில் இன்று சிங்கள அரசு தமிழார் பிரதேசங்களில் செய்யும் குடியேற்றம்,புத்த கோவில் கட்டுதல்,இராணுவ பிரசன்னம் போன்றவற்றை இன்னும் சிலவருடங்கள் இழுபடவிட்டால் பின்னர் எதுவுமே செய்யமுடியாத ஒரு சூழ்நிலைக்கு இலங்கை போய்விடும். அதன்பின் தீர்வு என்ற ஒன்றே தேவை இல்லாமலாகிவிடும் என்றார் .தங்களுக்கும் மட்டுப்படுத்த பட்ட சிலவிடயங்கள் தான் செய்யமுடியும் என்றும் கூறினார்களாம்.

இனித்தான் முக்கிய செய்தி.

இதுதான் அமெரிக்கா சொன்னது ஆனால் அதை நாங்கள் கட்டாயம் கேட்கவேண்டுமென்று இல்லை.எமக்கான தீர்வு எதுவோ அதற்காக நாம் விரும்பியமாதிரி போராடலாம் என்றார் .இதைதான் நாடு கடந்த அரசு பொன் பாலராஜனும் சொல்கின்றார்.

எமக்கு இப்போ எந்த ஒரு வழியும் இல்லை இந்தியா ,அமெரிக்கா சொல்வதை கேட்பதைதவிர என்றதை நேரடியாக சொல்ல அவர்களுக்கு துணிவு இல்லை.ஏனெனில் தமிழிழம் தான் தீர்வு என்பவர்கள் தங்களையும் துரோகி பட்டியலில் இட்டு விடுவார்களோ என்ற பயம் .

அதற்காக இராஜதந்திரிகளுடன் கதைப்பதை மக்களுக்கு சொல்ல பயப்பிடுகின்றார்கள்.உலக அரசியலும், இன்றைய தமிழர்கள் நிலையும், யதார்த்தமும் அவர்களுக்கு விளங்குகின்றது.ஆனால் அதை மக்களுக்கு சொல்ல முடியவில்லை .புலிகள் இருக்கும் போதும் இந்த இரட்டை தன்மையைத்தான் தான் இவர்கள் கொண்டிருந்தார்கள்.சர்வதேசம் என சொன்னாலும் யதார்த்தம் அதுவாக இருந்தாலும் நாங்கள் அடிப்பம் பிடிப்பம் என்றுதான் மக்களுக்கு சொன்னார்கள் .

கூட்டைமைப்பு கூட மெல்லுவதும் விழுங்குவதுமாக இருப்பதும் இதற்குத்தான் .

ஒட்டுமொத்தம் அனைத்து அமைப்புகளுமே மக்களுக்கு உண்மையை சொல்ல பயப்பிடுகின்றார்கள் என்பதுதான் உண்மை.

Edited by arjun

"உண்மை எது?" என்பதில் பலரும் வேறுபடுகிறார்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் அரசியல் தலைவர்கள் சில உண்மைகளை கூறப்பயப்படுவார்கள். மகிந்தாவும் கூட பல உண்மைகளை மறைப்பவர். 'புலிகளை அழிக்கின்றோம்' என்ற போரில் மக்களையும் அழித்து சீனாவுக்கு இலங்கை தீவை அன்பளித்து நிற்கிறன இந்தியாவும் மேற்குலகமும்.

தாயக மக்களின் அரசியல் தீர்வில் மனித உரிமைகள் விடிவில் அந்த மக்களின் நிலைமைகளை விளக்கவும் அவர்கள் விடுதலைக்கு உதவவுமே புலம்பெயர் மக்களால் மற்றும் அவர்களை பிரதிநிப்படுத்துபவ்ர்களால் முடியும். அதைத்தான் அன்றும் இன்றும் அனேகமானோர் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் திரியின் தலைப்புப்படி....??

உண்மை சொல்ல???

எது உண்மை?

அமெரிக்கா சொல்வதா?

தமிழரின் இத்தனை கால வரலாற்றை உணர்ந்ததால் இதைத்தான் தருவோம் என்று காட்டப்படுவது மிகமிக சிறியது.

அதனால் அவர்களுக்கே அதை ஏற்றுக்கொள்வது யீரணிக்க முடியாதது. அதை எப்படி வெளியில் சொல்வது???

அவர்களும் இதைத்தான் பிரேரிப்பார்கள் இவர்களும் இரண்டும் கெட்டான் நிலையில் மௌனமாக வருவார்கள் என்று எங்களுக்கும் தெரியும். எங்களுக்கு தெரியும் என்பது அவர்களுக்கும் புரியும்.

ஏனெனில் தமிழருக்கான தீர்வில் எமக்கு ஒரு குறிக்கோளுண்டு. அதை அடையும் வரை நாம் முயல்வோம்.

ஆனால் நாங்கள் படிப்படியாக முன்னேறியுள்ளோம். இன்று எம்மை அழைத்து பேசவும் முக்கிய விருந்தாளி வரிசையில் பேசவும் தொடங்கியிருக்கின்றோம். தொடர்ந்து உறுதியுடன் முன்னேறுவோம்.

இங்கு பிரச்சினை உங்களுக்கு இவர்கள் படம் காடடுகிறார்கள் என்று தெரிவதே. அதற்கு அவர்களோ நாங்களோ பொறுப்பல்ல.

இனி தங்களுக்கு எதையாவதுது சிபாரிசு செய்தும் பலனில்லை. எதற்கெடுத்தாலும் காலைத்தூக்கி 40 வருடங்களாக பழகிவிட்டது. இனி...........???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் திரியின் தலைப்புப்படி....??

உண்மை சொல்ல???

எது உண்மை?

அமெரிக்கா சொல்வதா?

தமிழரின் இத்தனை கால வரலாற்றை உணர்ந்ததால் இதைத்தான் தருவோம் என்று காட்டப்படுவது மிகமிக சிறியது.

அதனால் அவர்களுக்கே அதை ஏற்றுக்கொள்வது யீரணிக்க முடியாதது. அதை எப்படி வெளியில் சொல்வது???

அவர்களும் இதைத்தான் பிரேரிப்பார்கள் இவர்களும் இரண்டும் கெட்டான் நிலையில் மௌனமாக வருவார்கள் என்று எங்களுக்கும் தெரியும். எங்களுக்கு தெரியும் என்பது அவர்களுக்கும் புரியும்.

ஏனெனில் தமிழருக்கான தீர்வில் எமக்கு ஒரு குறிக்கோளுண்டு. அதை அடையும் வரை நாம் முயல்வோம்.

ஆனால் நாங்கள் படிப்படியாக முன்னேறியுள்ளோம். இன்று எம்மை அழைத்து பேசவும் முக்கிய விருந்தாளி வரிசையில் பேசவும் தொடங்கியிருக்கின்றோம். தொடர்ந்து உறுதியுடன் முன்னேறுவோம்.

இங்கு பிரச்சினை உங்களுக்கு இவர்கள் படம் காடடுகிறார்கள் என்று தெரிவதே. அதற்கு அவர்களோ நாங்களோ பொறுப்பல்ல.

இனி தங்களுக்கு எதையாவதுது சிபாரிசு செய்தும் பலனில்லை. எதற்கெடுத்தாலும் காலைத்தூக்கி 40 வருடங்களாக பழகிவிட்டது. இனி...........???

விசுகர், நேரத்தை விரயமாக்காதீர்கள்! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.