Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் துயரம் சொல்லும் பகலவனில் நடிக்க மறுத்த விஜய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

vijay_seeman.jpg[/size]

[size=4]ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான்.

அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை. இந்த சமயத்தில் விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பதைப் பற்றி திட்டமிட்டார்கள்.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உருதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சருக்கு பாராட்டு விழாக்கள் வைப்பதில் பிஸியாகிவிட்டார் சீமான். விஜய்யும் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியானார்.

கிடப்பில் இருந்த பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சீமான்,“ தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்” என்று கூறியுள்ளார்.[/size]

நன்றி நக்கீரன்:

நக்கீரன் விஜயை குறை சொல்லுதா.. சீமானை குறை சொல்லுதா..??! கருணாநிதியை புகழாதவரை சீமான் நக்கீரனின் எதிரியாவது தவிர்க்க முடியாததே..! (இது எனது கருத்து.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்தவருக்கே அக்கறை இல்லை.இப்படித் தான் ஒரு சமயம் ஈழத்தமிழர் சார்பாக குரல் கொடுப்பதற்காக கை எழுத்து திரட்டும் போதும் விஜய் கழுவிய மீனில் நழுவிய மீன் தான்..அந்த நிகழ்வில் இருந்தும் சாட்டு போக்கு சொல்லி நழுவி விட்டதாக படித்ததாக நினைவு..விஜயின் படங்கள் வந்தால் மட்டும் விழுந்து கட்டி பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள்..என்னத்தை சொல்வது..

ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்தவருக்கே அக்கறை இல்லை.இப்படித் தான் ஒரு சமயம் ஈழத்தமிழர் சார்பாக குரல் கொடுப்பதற்காக கை எழுத்து திரட்டும் போதும் விஜய் கழுவிய மீனில் நழுவிய மீன் தான்..அந்த நிகழ்வில் இருந்தும் சாட்டு போக்கு சொல்லி நழுவி விட்டதாக படித்ததாக நினைவு..விஜயின் படங்கள் வந்தால் மட்டும் விழுந்து கட்டி பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள்..என்னத்தை சொல்வது..

அந்தப் பெண், தன் கணவரின் புகழை தன் இனத்துக்கு உபயோகமாக இருக்குமாறு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் மனம் மாறி இலத்தமிலரின் அவல நிலையை எடுத்து சொல்லும் காலம் வர வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் விஜயின் அப்பா செய்கின்ற வேலையாகத்தான் இருக்கவேண்டும் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விஜயும் ஒரு வியாபாரிதானே.. வெல்லக்கூடிய படங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுவார்..

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலிப் பெடியன் விஜய்.

என்னை, நடிக்கக் கூப்பிட்டிருந்தால்.... (சஸ்பென்ஸ்)

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலிப் பெடியன் விஜய்.

என்னை, நடிக்கக் கூப்பிட்டிருந்தால்.... (சஸ்பென்ஸ்)

:rolleyes::lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண், தன் கணவரின் புகழை தன் இனத்துக்கு உபயோகமாக இருக்குமாறு செய்யவேண்டும்.

நீங்கள் வேற, அவர் கட்டியிருப்பது என்னவோ ஈழத் தமிழ்ப் பெண்ணைத்தான். ஆனால் குடும்பம் நடத்துவதோ நடிகை திரிஷாவிடம்தான் என்று சொல்கிறார்கள். விஜய் நெடுங்காலமாகவே திரிர்ஷாவுடன் வாழ்ந்து வருகிறார், இந்த லட்சணத்தில் அவர் ஈழத் தமிழர் பற்றிக் கவலைப்படுவதாவது. <_<

[size=4]தமிழக திரையுலகம் ஈழத்தமிழர்களை 'வெறும் நுகர்வோர்களாகவே' நீண்டகாலமாக பார்த்து வருகின்றது. [/size]

[size=1]

[size=4]அமெரிக்காவில் பரிசு பெற்ற இரகுமான் அந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ மக்கள் படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூறி அங்குள்ள மக்கள் (சிங்கள பொருளாதாரத்தின் மிகப்பெரிய சந்தை) மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவந்திருக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]மிகப்பெரும் புகழும் பலமும் கொண்ட இரஜனி இல்லை கமல் கூட எமது மக்களின் அவலத்தை பெரிதளவில் கண்டு கொண்டதில்லை. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.