Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டது - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-Fonseka.jpg

[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஏப்ரல் 19ம் நாளே முடிந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“போர்முறை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் போரைப் பற்றி முட்டாள்தனமாக பேசினார்கள்.

உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது.

அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான்.

போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று கூறுவோருக்கு, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அதற்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது தெரியாது.

நான் நாட்டை விட்டுச் செல்ல முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர்.

இறுதிக்கட்டம் கேணல்கள் மற்றும் லெப்.கேணல்களின் கையில் தான் இருந்தது.

போர் நடந்து கொண்டிருந்ததால், சீனாவுக்கான பயணத்தை நான் ஐந்து முறை பிற்போட்டிருந்தேன்.

எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் தான் நான் சீனாவுக்குப் பயணமானேன்.

2009 மே 11 தொடக்கம் 17வரை நான் சீனாவில் இருந்தபோது கூட, கொழும்பிலுள்ள எனது அதிகாரிகளுடன ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்டு முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொண்டிருந்தேன்.

அந்தக் கட்டத்தில், போர் வலயத்தில் சிக்கியிருந்த 85 ஆயிரம் மக்களை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றலாம் என்பதே எனது கரிசனையாக இருந்தது.

முப்பதாண்டுகளாக இழுபட்டு வந்த ஆயுதமோதலை நான் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்களில் முடித்து வைத்தேன்.

பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர்.

நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.

19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120616106400[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனி என்னத்தையும் புளுகலாம் சார். அடிவாங்கி அடிவாங்கி நாடு நாடா ஓடினதுகள் எல்லாம் மறந்து போச்சுது போல. காலம்.. உங்கள் பக்கம்..! ஜமாயுங்க..! :(:icon_idea:

உண்மையாக என்ன நடந்தது என்பதைக்கூற இப்போது புலிகள் அங்கு இல்லை அதற்க்கான காலம் வரவேண்டும் அதுவரை காத்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லவாறான் என்பது விளங்குது.. அதாவது ஏப்ரல் 19 க்குப் பின்னால் நடந்தவை எல்லாவற்றையும் கேணல், லெப். கேணல் தரத்திலான இராணுவத்தான்களின் தலையில் பொறித்து விட்டிருக்கிறான்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர்.

இப்படிசொல்லிப்போட்டு பின்னர் ஏன் இப்படி சொல்கின்றார் ? :rolleyes:

நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.

19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

:blink:

இந்தாளுக்கு நுரை ஈரலில்தான் செல் பீஸ் பட்டு டமேச்சானது என்று கேள்விபட்டேன் ஆனால் இந்தாள் உளறுவதை பார்த்தால் மூலையிலும் சில பீஸ் இருக்கு போல இருக்கின்றது :D:icon_idea:

உண்மையாக என்ன நடந்தது என்பதைக்கூற இப்போது புலிகள் அங்கு இல்லை அதற்க்கான காலம் வரவேண்டும் அதுவரை காத்திருப்போம்

அப்படி ஒரு கனவு மாயையில் தான் இன்னும் இருகின்றீர்களா?

அப்படி ஒரு கனவு

... கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ... வெள்ளி கலைய ... ஒட்டிசுட்டான் மாலை மயக்கங்கள் விலாவாரியாக ஓசிப்பேப்பரில் ... மன்னிகணுமுங்கோ பாம் பீம் பாம் வெடிக்கப்போகுதுங்கோ!!!!!! :icon_mrgreen:

Edited by Nellaiyan

[size=4]உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் (17ம்திகதி?) நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது.

அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான். (17ம் திகதி முடிவடைந்த போரின் உடல்களை 19ம் திகதி புதுp பொலிவுடன் கண்டு பிடித்தார்களா?)

போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று கூறுவோருக்கு, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அதற்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது தெரியாது.(அதற்குப் பிறகு பொன்சேக்கா கொமாண்டில் இல்லை. அது இறுதி நாள்களின் பிரச்சனையிலிருந்து தான் தப்ப பொன்சேக்கா போட்டு வைத்திருக்கும் முடிச்சா அல்லாது கோத்தா போரில் வந்த ஏமாற்றத்தால் இவரை வெளியே அனுப்பினாரா?)

நான் நாட்டை விட்டுச் செல்ல முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர்.( நான்கு கரையும் -கடலிலும்- ராணுவம் சூழ்ந்திருந்த போது தப்பி ஒடினார்கள் என்றால் அது என்ன?தேவையான காய்களை தப்பவிட்டு விட்டதாக மகிந்தா இவர் மீது குறைப்பட்டிருப்பார்)

இறுதிக்கட்டம் கேணல்கள் மற்றும் லெப்.கேணல்களின் கையில் தான் இருந்தது.(இதை நேரடியான கோத்தாவின் கும்மாளம் என்பதா?)

முப்பதாண்டுகளாக இழுபட்டு வந்த ஆயுதமோதலை நான் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்களில் முடித்து வைத்தேன்.

பெரும்பாலான மக்கள், பிரபாகரனும் அவரது 100 வரையிலான போராளிகளும் ஓடிய இறுதிநாட்களையே உறுதியான வெற்றியாக பேசுகின்றனர். - எத்தனை கட்டை ஓடியிருப்பார்கள்? எங்கே ஓடுவது?அதன்பிறகு எஞ்சிய பொதுமக்களை கொன்ற பொற்குற்றம் தான். ஏந்த தேடுதல் நடவடிக்கையின் போது மனித தொண்டு தன்னார்வ நிறுவனங்களை கூப்பிடவில்லை. போர் மகிந்தாவின் பயனத்திற்கு பலநாட்கள் முன்னரே வெற்றியாகத்தீர்மானிக்க பட்டு விடதா?.வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் பொன்சேக்காவின் கருத்துபடி போர்முடிந்த பின்தான் வந்தார்களா? செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் கதை இதில் எங்கே வருகிற்து. போர்முடிந்த பின்னர் என்றால் ஏன் அவர்களுக்கு சரண் அடைந்தவர்களை பெற்றுக்கொள்ள அனுமதி மறுக்க பட்டது?

நந்திக்கடல் பகுதியில் இறுதிச்சமர் மே 17ம் நாள் பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. அன்று காலை 10 மணியளவில் 30 விடுதலைப் புலிகள் வரை கொல்லப்பட்டனர்.

19ம் நாள் அவர்களின் உடல்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலுடன் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டன“ என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.[/size] (பாலசந்திரனின் புதிய கதை இங்கே கிட்டவும் வராது. பாலச்சந்திரனின் கதைதான் என்ன?. தலைவர் சிறுவனை ஆமி ஏற்றுக்கொளும் என்று நம்பி ஒருபோதும் சரணுக்கு அனுப்பியிருக்கார். அதை கடைசிவரை உயிருடன் இருந்து, கடைசி நப்பாசையுடன் சரணுக்கு ஒரு முடிவெடுத்து, செய்து பார்த்து சிறுவனுடன் இறந்துபோனா போராளி தலைவருக்கு மிகவும் நெருக்க மானவராக இருந்திருக்க வேண்டும்? யாராய் இருக்க முடியும்.)

[size=4]http://www.puthinapp...?20120616106400[/size]

புதினம் தாறுமாறாக கிறுக்கவில்லை என்றால், பொன்சேக்கா நிறைய சொல்லி இருக்கிறார். ஏதாவது பத்திரிகை இதைபற்றி ஒழுங்ககான ஆய்வு எழுதினால் தயவு செய்து அதை இங்கே பதியுங்கள். பொன்சேக்கா முன்வந்து கேள்விகளுக்கு விடை சொல்ல விரும்புகிறாரா என்ற சந்தேகம் வருகிறது? "போராளிகள் உண்மையில் ஒடிவிடார்கள். மகிந்தா உங்களை ஏமாற்றுகிறார் என்று கூறி எங்களின் காதுகளை குளிரவைப்பாரா?"

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.