Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" துகிலுரியும் தேவதைகள் "

Featured Replies

கவிதையின் கவிதைகள்

love-pain.jpg

love-pain.jpg

அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள்,

உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும்

கள்ளங்களை அறிந்துகொள்ள...

கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது!

செல்லக் கதைபேசி எண்ணங்கவரும்,

வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்!

சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்...

ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!?

ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது

முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது!

விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும்

காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்!

காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள்

கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்!

காரணமில்லாக் காரணங்களுக்காக

காதல் துகிலுரியும் தேவதைகளைவிட...

காசுக்காய் துயில்கொள்ளும் சிவப்பு தேவதைகளிடம்

கொஞ்சந்தன்னும் நேர்மை இருக்கும்!

மீண்டும் ஒரு கவிதையின் கவிதையை இணைத்ததிற்கு நன்றி.............

ஆனாலும் மற்றைய கவிதைகளுடன் இசைந்த

என் மனம் இதில் மட்டும் இசைவடைய மறுக்கிறது .ஏனனில் காதல் என்பது ஆணினதும், பெண்ணினதும் மனது சம்பந்தமான பிரச்சனை.....காதல் என்னும் அஸ்திவாரம் பலமாக அமைய உண்மை ,நேர்மை கண்ணியம், புரிந்துணர்வு,விட்டுக்கொடுப்பு போன்ற கலவைகளை சேர்த்து கட்டும்போது தான் அது பலமான அஸ்திவாரமாக அமைந்துவிடும்.அதை விட்டு,கவர்ச்சி ,காமம்,அழகு,சுத்துமாத்து இவர்ரைப்போட்டு கட்டும்போது அது உடைந்து விழுந்துவிடும்........இது இரு பாலார்க்கும் பொருந்தும்.ஆகவே இப்படியான முறையில் காதலை அணுகுவோர் கூட நீங்கள் கீழே குறிப்பிட்ட சிவப்பு பெண்களுக்கு நிகரானவர்களாகவே பார்க்கப்படும் [ சிவப்பு பெண் ,ஆண் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் சுய படைப்புக்களை படிப்பவர்களில் நானும் ஒருத்தி...ஆனால் அண்மைய காலங்களில் அவரின் எழுத்தின் கோணம் மாறிப் போய் கொண்டு இருப்பதனால் கவிதையின் கவிதைப் பகுதிக்குள் வர விரும்புவதில்லை..அதுவும் இந்தக் கவிதை பெண்களை துச்சாதனிகளாக,கறுப்பு மனங்களாக,சிவப்பு தேவதைகளாக சித்தரித்து இருப்பது மனதுக்கு சந்தோசத்தை தரவில்லை என்பதை கவிதை நன்கு புரிந்து கொள்ளவேணும்..பெண் என்பவளுக்கு இவற்றில் பங்கு இருக்கிறது என்றால் சரி சமமாக ஆணுக்கும் கண்டிப்பாக இருக்கும்...இருவர் சம்பந்தப்படும் ஒரு வாழ்வு நிலைக்குள் ஒருவரை மட்டும் சாடுவது முறையல்ல...பெண்கள் ஏதோ ஒரு உறவுமுறையுடன் உங்கள் வீடுகளிலும் கண்டிப்பாக இருப்பார்கள்,இருக்க வேண்டும்..அவர்களை ஒருமுறை திரும்பி பார்த்துட்டு இப்படியான எழுத்துக்களை எழுதுங்கள்.....ஒருவர்,இருவர் விடும் பிழைகளுக்காக ஒட்டு மொத்த பெண்களையும் சாடாதீர்கள்..பணத்தையும் வீணான ஆடம்பர வாழ்வையும் செய்து கொடுப்பவர்களும் ஆண்கள் தான்......உண்மையான இதய சுத்தியோடு எந்த தருணத்திலும் ஏமாற்றம் என்ற ஒன்றைக் கொடுக்காமல் வாழ விரும்பும் ஆணோ,பெண்ணோ உயிர் உள்ளவரை தங்களை மாற்றிக் கொள் முயற்சிக்க மாட்டார்கள்..

இந்தக் கவிதைகளை எழுதி வேறு எங்கோ அனுப்பி,அங்கிருந்து இவ்விடம் வந்து சேருவதும் கதை.கவிதை போன்றவற்றை ரசிக்கும் எம்போன்றவர்களை ஒதுங்கவே செய்கிறது...விரும்பினால் படிக்கலாம்,விருப்பம் இல்லாட்டிக்கு போகலாம் என்று சொல்லவும் கூடும்..ஆனால் இதுவரையில் கவிதையிடம் இருந்து எந்த விதமான காட்டமான எழுத்தையும்,பழகுதலையும் காணாதவள் என்ற காரணத்தினால் என் கருத்தை பதிவிடுகிறேன்...கவிதை என்னும் நட்பு கவிதையாகவே இருக்க வேண்டும் என்று விரும்பிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விடுத்து

அம்பை நொந்து என்ன பலன்.......??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேவதை, காரணமில்லாமல், காதலைத் துகிலுரிய முனைந்தால், அதற்கு ஒரு காரணம் கட்டாயம் இருக்கும்!

அதை உங்களுக்கு, அந்தத் தேவதை சொல்லவிரும்பாமல் இருக்கலாம்!

அனேகமாக, நீங்கள் புண் படக்கூடாது, என்பதற்காகக் கூட இருக்கலாம்!

நீங்கள் தேடும் தேவதையை விடவும், உங்களைத் தேடும் தேவதாசியே மேல், என்பது அடியேனின் கருத்து! :icon_mrgreen:

  • தொடங்கியவர்

தமிழ்சூரியன் , யாயினி , விசுகர் , புங்கையூரான் உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் . உங்கள் கருத்துக்களுக்கான பதில்களை இந்தக் கவியைப் படைத்தவர் நிட்சயம் தருவார் . இதில் எனது பாத்திரம் விசுகர் கூறியது போல வெறும் அம்பு மட்டுமே .

அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள்,

உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும்

கள்ளங்களை அறிந்துகொள்ள...

கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது!

செல்லக் கதைபேசி எண்ணங்கவரும்,

வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்!

சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்...

ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!?

ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது

முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது!

விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும்

காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்!

காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள்

கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்!

காரணமில்லாக் காரணங்களுக்காக

காதல் துகிலுரியும் தேவதைகளைவிட...

காசுக்காய் துயில்கொள்ளும் சிவப்பு தேவதைகளிடம்

கொஞ்சந்தன்னும் நேர்மை இருக்கும்!

ஒரு தேவதாசுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேவதைகளா? ஒருவர் எத்தனைபேரை காதலித்துவிட்டு (அல்லது கற்பனை செய்து பார்த்துவிட்டு) இப்படி எழுதுகின்றார்? யாயினி மேலே கூறியதுபோல் ஒருத்தியை வைத்து முழு உலகையே எடைபோடுவது மோசமானது.

காதலில் தோல்வி மிகவும் துயரமான அனுபவம். ஆனால், இரண்டுபக்க தோற்றங்களையும் பார்க்கவேண்டும். ஒருவரின் கதையை மட்டும் கேட்டுவிட்டு மற்றவரைமட்டும் சாடமுடியாது. இந்தக்கவிதைக்கு சம்மந்தப்பட்ட தேவதை பதிற்கவிதை எழுதினால் எப்படியமையும் என்று எண்ணிப்பாருங்கள்.

[size=5]கவிதை, ஏமாற்றும் பெண்களைத் தானே எழுதியிருக்கின்றார்!தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ள வேண்டியது தானே!![/size]

கவிதை வந்து விளக்கமளிப்பார் என்று நம்புகின்றேன்!!

அவர் தான் ஏமாற்றும் பெண்களை பற்றி மேலே கவிதையில் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளாரா? கவிதை வந்து விளக்கமளிப்பார் என்று நம்புவதாய் கூறியபடி கவிதை எழுதிய கவிதைக்கு நீங்களே விளக்கமும், வியாக்கியானமும் பொழிப்புரையும் வழங்குகின்றீர்கள், நன்றாக உள்ளது.

ஊர்ப்புதினத்தில்தான் மொக்கை செய்திகளை போட்டுவிட்டு அதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றார்கள் என்று பார்த்தால் ஆக்கற்களத்திற்கும் இந்த நிலைவந்துவிட்டது.

ஒருவர் அனுப்புவதை வாங்கி ஒட்டுவதற்கு ஒருவர்.

ஒட்டப்படுவதற்கு வியாக்கியானமும், பொழிப்புரையும் கொடுப்பதற்கு இன்னொருவர்.

அதற்குள் தொப்பியும், சப்பாத்தும், கோவணமும் என்று உருவகங்களும், உவமானங்கள் வேறு.

யாழ் கருத்துக்களம் நன்றாகத்தான் முன்னேறிச்செல்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.