Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை பிள்ளையார் ஆலய படுகொலையின் 22ஆவது நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது

Featured Replies

அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் 22ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது. சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட ஆத்மசாந்தி பூசை நடத்தப்பட்டதுடன் வீரமுனை சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றது. வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இந்த ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த போது சம்மாந்துறை பள்ளிவாசலில் யும்மா தொழுகையை நடத்திய முஸ்லீம்கள் அங்கிருந்து இந்த ஆலயத்திற்கு வந்து 55பொதுமக்களை வெட்டிப்படுகொலை செய்தனர். இவர்களுக்கு சிறிலங்கா படையினரும் துணையாக இருந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இன்று சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் நடந்த ஆத்மசாந்தி பூசைகளிலும், வீரமுனை சந்தியில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியிலும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

www.Thinakkathir.com

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அனைத்து உறவுகளின் சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் இனவாதிகள் இந்தப் பாவத்தைக் கழுவ தமிழ்த்தேசியத்தைத் தழுவிக்கொள்ள வேண்டும்..! அதைவிட்டு மத அரசியலை இன்னும் நம்பிக்கொண்டிருப்பது கேவலம்மிக்க செயல்..!!

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!!!

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசலில்... தொழுதுவிட்டு, நேரெ... இந்துக்கோவிலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழ் மக்களை கொன்ற முஸ்லீம்கள் வெட்கித்தலை குனிய வேண்டும். இந்தச் செயலுக்கு எந்த முஸ்லீம் தலைவர்களும் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது.... கண்டிக்கப் படவேண்டியது.

இறந்த தமிழ் மக்களுக்கு நினைவு அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!!!

மனித சமூகமே வெட்கித் தலை குனியும் வண்ணம், மத வழிபாட்டுத் தளமொன்றில் அகதியாக தங்கி இருக்கும் பொழுது, கற்பழித்து கொல்லப்பட்ட பெண்களுக்கும், கோயில் சுவரில் மோதி தலை தெறித்த மழலைகளுக்கும், வெட்டியும் கொத்தியும் கொல்லப்பட்ட ஏனைய மக்களுக்கும் எனது ஆழ்ந்த் இரங்கல்கள்.

இறந்தவர்களின் தொகை 55 அல்ல. இதைவிட மிக அதிகம்.

[size=4]ஆழ்ந்த அனுதாபங்களும் நினைவு அஞ்சலிகளும். [/size]

[size=1]

[size=4]மேலே பல உறவுகளும் நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.