Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக் குழுவில் ததேகூ சேருவதுதான் வழி: தென்னாப்பிரிக்கா

Featured Replies

[size=3][size=4]இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதுதான் வழியாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள நிலையிலேயே தென்னாப்பிரிக்காவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.[/size][/size]

[size=3][size=4]தடைபட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க தென்னாப்பிரிக்கா அனுசரணையாளராக இருக்க முன்வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.[/size][/size]

[size=4]ஆனால் இலங்கை விஷயத்தில் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ பங்காற்ற தாங்கள் முயலவில்லை என்று தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் பிபிசியிடம் தெரிவித்தார்.[/size]

[size=3][size=4]அரசுக்கும் தமக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத சூழலில், ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணையாளரின் உதவி இன்றியமையாதது என்றும் அதை கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கை சென்ற தென்னாப்பிரிக்க குழுவினர் அரச தரப்பையும், கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் போது இருதரப்புமே தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தாங்கள் அறிந்து கொண்டாதாக இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.[/size][/size]

[size=3][size=4]நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பினரும் வர வேண்டும் என்றும், அதன் மூலமே தீர்வு காண முடியும் எனவும் அரசு கூறுகிறது.[/size][/size]

[size=3][size=4]கூட்டமைப்போ அரசுக்கும் தமக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்ட பிறகு தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறுகிறது.[/size][/size]

[size=3][size=4]இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.[/size][/size]

[size=3][size=4]அரச தரப்பிடம் பேசிய பிறகு இரண்டாவது முறையாக கூட்டமைப்பினரை தாங்கள் சந்தித்து பேசிய போது அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது என்கிற யோசனையை பரிசீலனை செய்வது போலத் தோன்றுகிறது என பிபிசியிடம் கூறினார் தென்னாப்பிரிக்க அமைச்சர் இப்ராஹிம்.[/size][/size]

[size=3][size=4]கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தென்னாப்பிரிக்காவில் இடம்பெறக் கூடும் என்று கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்புகள் நடந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/08/120819_southafricasrilanka.shtml

ஒரு பக்கத்துக்கு மட்டும் உபதேசம் செய்துகொண்டு - சிங்களப் பயங்கரவாத அரசுக்கும் எது ஒரே வழி என்று சொல்ல வக்கில்லாதவர்கள் நடுநிலை வகிக்க தகைமை இல்லாதவர்கள்!

  • தொடங்கியவர்

[size=4]அப்படியானால் தென் ஆபிரிக்கா சில நிபந்தனைகளை சிங்களத்திற்கு விதிக்கவேண்டும். [/size]

[size=1]

[size=4]ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடிப்படை உரிமைகளை சிங்களம் சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும். இல்லையானால் நாம் தனி தமிழீழத்தை அங்கீகரிப்போம் என்று. [/size][/size]

[size=1]

[size=4]இல்லாவிட்டால் இந்த பேச்சுவார்த்தையும் தமிழர்களை அடிமை கொள்ளவே வழி சமைக்கும். [/size][/size]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்ததான் பிற்பாடு தெரிவுக்குழுவில் சேர்ந்து விடலாம். அநேகமாக இதை விட வேறு வழி இருக்கப் போவது இல்லை.

கூட்டமைப்பு எந்த முடிவையும் அவசரபட்டு எடுக்கக்கூடாது,அதுவும் புலம் பெயர்ந்தவர்களால் உருவாகும் தமிழீழம் இன்றோ நாளையோ என்று இருக்கும் நிலையில் .

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்ததான் பிற்பாடு தெரிவுக்குழுவில் சேர்ந்து விடலாம். அநேகமாக இதை விட வேறு வழி இருக்கப் போவது இல்லை.

[size=4]கூட்டமைப்பை வெல்லச்செய்வது மூலம் அதன் நிலையை கொஞ்சம் வலிமைப்படுத்தலாம் : http://www.tnaglobal.org/[/size]

[size=4]கஜன் என்ற உறவு ஆயிரம் டாலர்களை கொடுத்து செய்கையில் காட்டியுள்ளார்: [/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106146[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்ததான் பிற்பாடு தெரிவுக்குழுவில் சேர்ந்து விடலாம். அநேகமாக இதை விட வேறு வழி இருக்கப் போவது இல்லை.

கூட்டமைப்பு எந்த முடிவையும் அவசரபட்டு எடுக்கக்கூடாது,அதுவும் புலம் பெயர்ந்தவர்களால் உருவாகும் தமிழீழம் இன்றோ நாளையோ என்று இருக்கும் நிலையில் .

இந்த இரு கருத்தும் தான் இங்கு கூட்டமைப்புக்கு வழி காட்டுவதாக உள்ளது. :( :(

கூட்டமைப்பு எந்த முடிவையும் அவசரபட்டு எடுக்கக்கூடாது,அதுவும் புலம் பெயர்ந்தவர்களால் உருவாகும் தமிழீழம் இன்றோ நாளையோ என்று இருக்கும் நிலையில் .

வழமையான நீதியில்லா அர்சுனின் விவாதங்களில் இதுவும் ஒன்று.

1944 ல் சோல்பரி கமிசன் இலங்கைக்கு வந்தது. G.G. தனது வாதத்திறமையை வைத்து 50:50 கேட்டார். அருணாசாலம் அதன் முன்னரே ஆரம்பித்துவிட்டார். 1949 இல் சஷ்டி அரசு கேட்க Fedral Party வந்துவிட்டது. 1972 ல் வட்டுக்கோடைத் தீர்மானத்துடன் கூட்டணி வந்துவிட்டது........

இதனை பேரும் போட்ட அத்திவாரங்களை மறந்து நேற்று வெளிக்கிட்ட புலம்பெயர் தமிழரிடம் தமீழீழம் உருவான புகழை கையளிப்பது, அரிசுனின் ஒரவஞ்சக மனநிலையை காட்டுகிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=5]வெளிநாடுகள் தலையிடக்கூடாது ௭ன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை: விஜித்த ஹேரத்[/size]

[size=4] [/size]

[size=4]தென்னாபிரிக்காவோ அமெரிக்காவோ இந்தியாவோ இலங்கை விவகாரங்களில் தலையிடாமல் இருக்க அரசாங்கம் உடனடியாகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை ௭டுக்கவேண்டும் ௭ன்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது, ௭மது நாட்டுப் பிரச்சினையில் மற்றுமொரு நாடு தலையிடக்கூடாது ௭ன்ற ௭மது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் வெளிநாடுகள் தலையிடும் அளவுக்கு ௭மது பிரச்சினையை இழுத்தடிக்கக்கூடாது ௭ன்பதையும் வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ௭மது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தலையிடக்கூடிய வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையக்கூடாது. ௭னவே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த விரைவாக அரசாங்கம் நடவடிக்கை ௭டுத்தால் [/size]

[size=4]இவ்வாறான வெளியாரின் தலையீடுகளுக்கு அவசியம் ஏற்படாது.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=230[/size]

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதில்தான் நிற்கும். தெரிவுக்குழுவும் இழுத்தடிக்கும் ஒரு தந்திரம்தான். தெரிவுக்குழுவில் தமிழர் தரப்பை இழுத்து, பின்பு ஒவ்வொரு கட்சயின் யோசனையை வைத்துக் கொண்டு இழுத்தடிப்பை செய்யும்.

ஆனால் இப்பொழுது என்ன நடந்தது என்றால், தெரிவுக்குழுவில் சேர்வதா இல்லையா என்பதிலேயே சிறிலங்கா அரசுக்கு பல மாதங்களை நாமாகக் கொடுத்து விட்டோம்.

சிறிலங்கா அரசு கேட்கின்ற அனைத்துக் குழுக்களிலும் உடனுக்குடன் சேர்ந்து இழுத்தடிப்புத் தந்திரத்தை முறியடிப்பதுதான் தமிழர் தரப்பு முதலில் செய்யக் கூடிய சரியான நகர்வாக இருக்கும்.

தெரிவுக்குழுவில் பங்குபற்றி, அடுத்த அரசாங்க உத்தியில் பங்கு பற்றி, அடுத்த ஏமாற்றில் பங்கு பற்றி ....... என்பது தீர்வுக்கு செல்லும் பாதை அல்ல. தெரிவுக்குழு நாடகத்தை கடைசிவரை எதிர்த்து அதை உலக்கிற்கு பகிரங்கப்படுத்துவதுதான் தீர்வுக்கான பாதை. தென் ஆபிரிக்க சென்று இலங்கை இதுவரை வரைந்து கிழித்த ஒப்பந்தங்கள் தொடக்கம் "போரின் பின் தீர்வு" கதைகள் வரை அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டும். அவர்கள் மேற்குநாடுகள் போல இலங்கையின் அரசியல்ச் சரித்திரம் அறிந்தவர்கள் அல்ல.

மகிந்தா முட்டாள்த்தனமாக நேரத்தை போக்க ஆரம்பிக்கப்பட்ட புதிய வழிதான் தெரிவுக்குழு என்பது மகிந்தாவுக்காக செய்யும் பிரசாரம். உண்மை அதுவல்ல. இது தமிழருக்கு சாவு மணி அடிக்க தொடங்கியிருக்கும் தொடக்கம். பங்கு பற்றினால் கூட்டமைப்பு அதில் இருந்து தப்பியோடாத நடவடிக்கைகள் எடுக்கப்படும். தெரிவுக்குழுவில் பங்கெடுத்தால் அங்கே இருக்கும் தேவானந்தா, கக்கீம் போன்றவர்களால் கூட்டமைப்பு "சீறோ" வாக ஒதுக்கப்படும். கூட்டமைப்பு பங்குபற்றும் அன்று தெரிவுக்குழு தான் ஆயத்தமாக வைத்திருக்கும் தனது புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றும். அதில் மகிந்தா மன்னராக முடிசூட்டப்படுவார். இதற்கு உதவியாகத்தான் கிழக்குமாகணத்தேர்தல்.

அமெரிக்கா இன்னமும் தெரிவுக்குழுதான் கடைசி முடிவென்று சொல்லவில்லை. இது இந்தியாவினால் போடப்படும் பொறி. பிரேரணை நேரம் பிளேக் தெளிவாக பேச்சுவார்த்தையிலிருந்து வரும் முடிவுகளைத்தான் தெரிவுக்குழுவில் பரிசீலிக்க சொன்னார். பிரேரணை எந்த இடத்திலும் தெரிவுக்குழுவைப்பற்றி பேசவில்லை.

பிரேரணை நேரம் தெரிவுக்குழுவை பரிந்துரைத்தது கிருஸ்ணா. இவர்களின் அவதி அமெரிக்கா முழுவதாக தலையிட முன்னர் தாம் எங்காவது கூட்டமைப்பை கட்டிபோட்டுவிட வேண்டும் என்பதே. அமெரிக்கா தேர்தல் முடியும் வரை எந்த நாட்டு அரசியலிலும் அதிகம் தலையிடாது.

சம்பந்தர் சரியான தொடர்புகளுடன் தான் இருக்கிறார். அரசு தீர்வு தராவிட்டால் போர்குற்ற விசாரணை வரும் என்று கூறியிருக்கிறார். இதில் என்ன விஷேடமென்றால் போர் முடிந்த சில நாட்களுக்குள் பிளேக் கூறியது, கூட்டமைப்பு போற்குற்ற விசாரணைக்கு அவசரப்படவில்லை. தீர்வைத்தான் எதிர்பார்க்கிறதென்பது. அதாவது இப்போது விசாரணைக்கு காலம் கனிந்து வருகிறதெங்கிறதா கூட்டமைப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவுக்குழுவில் பங்குபற்றி, அடுத்த அரசாங்க உத்தியில் பங்கு பற்றி, அடுத்த ஏமாற்றில் பங்கு பற்றி ....... என்பது தீர்வுக்கு செல்லும் பாதை அல்ல. தெரிவுக்குழு நாடகத்தை கடைசிவரை எதிர்த்து அதை உலக்கிற்கு பகிரங்கப்படுத்துவதுதான் தீர்வுக்கான பாதை. தென் ஆபிரிக்க சென்று இலங்கை இதுவரை வரைந்து கிழித்த ஒப்பந்தங்கள் தொடக்கம் "போரின் பின் தீர்வு" கதைகள் வரை அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டும். அவர்கள் மேற்குநாடுகள் போல இலங்கையின் அரசியல்ச் சரித்திரம் அறிந்தவர்கள் அல்ல.

சம்பந்தர் சரியான தொடர்புகளுடன் தான் இருக்கிறார். அரசு தீர்வு தராவிட்டால் போர்குற்ற விசாரணை வரும் என்று கூறியிருக்கிறார். இதில் என்ன விஷேடமென்றால் போர் முடிந்த சில நாட்களுக்குள் பிளேக் கூறியது, கூட்டமைப்பு போற்குற்ற விசாரணைக்கு அவசரப்படவில்லை. தீர்வைத்தான் எதிர்பார்க்கிறதென்பது. அதாவது இப்போது விசாரணைக்கு காலம் கனிந்து வருகிறதெங்கிறதா கூட்டமைப்பு?

சரியான திசை நோக்கி நகர்வது போல்தான் இருக்கிறது.

ஆனால் இது தேர்தல் நேரம்.

அதன் மீதான பேச்சுக்கள் கொஞ்சம் ஆவேசத்தனமாகவும் முன்னோக்கி பேசவனவாகவும் இருக்கும். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதில்தான் நிற்கும். தெரிவுக்குழுவும் இழுத்தடிக்கும் ஒரு தந்திரம்தான். தெரிவுக்குழுவில் தமிழர் தரப்பை இழுத்து, பின்பு ஒவ்வொரு கட்சயின் யோசனையை வைத்துக் கொண்டு இழுத்தடிப்பை செய்யும்.

ஆனால் இப்பொழுது என்ன நடந்தது என்றால், தெரிவுக்குழுவில் சேர்வதா இல்லையா என்பதிலேயே சிறிலங்கா அரசுக்கு பல மாதங்களை நாமாகக் கொடுத்து விட்டோம்.

சிறிலங்கா அரசு கேட்கின்ற அனைத்துக் குழுக்களிலும் உடனுக்குடன் சேர்ந்து இழுத்தடிப்புத் தந்திரத்தை முறியடிப்பதுதான் தமிழர் தரப்பு முதலில் செய்யக் கூடிய சரியான நகர்வாக இருக்கும்.

இழுத்தடிப்பு போட்டியில் வெல்லலாம்..

இனப்பிரச்சனையில் என்ன செய்வது?

தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிப்பாக தெரிவுக்குழுவில் சேரும், இதை அவர்களால் தவிர்க்க முடியாது. கிழக்கில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றால் கொஞ்சம் மரியாதையுடன் போய்ச் சேரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.