Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?: தீபச்செல்வன்

Featured Replies

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

DSC09250.JPG

தீபச்செல்வன்

மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட

உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன

நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?

என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே

தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன

நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை

வரலாற்றில் பரப்பிச் செல்லும்

பாலியாறு என்ன தவறிழைத்தது?

நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை

வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள்

எழும்பிக் கொண்டிருக்கின்றன

மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை

யாருடைய கால்த்தடங்களுமில்லாத

பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது

ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து

மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன.

குருதியை நிலத்திலிருந்து துடைத்து ஆற்றில் எறிந்திருக்கிறார்கள்

பாலி ஆறு நெளிந்தபடி கடலைத் தேடுகிறது

உடல் பரிசோதிக்கப்பட்டு

அனுமதிபெறப்பட்டு

கால் நனைத்து முகம் நனைக்கையில்

நம்மோடு இந்த ஆறும் அடிமையாயிருந்தது.

மருது மரங்கள் துயர்க்கோலமாய்

வளர்ந்து கிளைகளை வீசியிருக்கின்றன

யாரும் உள் நுழைய முடியாதபடியிருக்க

ஆறு தனித்து துயரோடு நீண்டு செல்கிறது.

பச்சை சமையல் பாத்திரங்கள் கழுவப்படும்

ஆறாய் அடங்கிக் கிடக்கிறது

துப்பாக்கிகளின் நிழல் விழுந்து அடக்கி

நீரோட்டத்தை குழப்பும் ஆறாய்க்கிடக்கிறது

பச்சை உடைகளும்

பச்சை சுவர்களும்

பச்சை முகாங்களும் பச்சை காவலரண்களும்

மூடியிருக்க ஆற்றங்கரையினில் பறக்கின்றன

ஆற்றில் துவைக்கப்பட்ட பச்சை உடைகள்.

ஒட்ட முடியாத பச்சைகள் மதிக்கின்றன

செழித்து நமது வரலாறு பரவிப் பாயும் ஆற்றின்

வலிமையையும் நீட்சியையும்

நாம் மீண்டும் பெறுவோமா?

மீண்டும் நாம் நீந்தி மூழ்க முடியுமா?

பாலி ஆற்றுப் பக்கமாக தாகத்தோடு

சில குழந்தைகள் தண்ணீர் கோப்பைகளை

இறுகப்பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர்.

அசையாத மணிகளும் யாருமற்ற பல வீடுகளும்

தயங்கி விளையும் பயிர்களும்

துரத்தப்பட்ட மனிதர்களைத்தான் தேடுகின்றன.

நீ வருவாயா உன் கவிதைகள் விளைந்த

பாலியாற்றில் நீந்திச் செல்ல?

மூட முடியாது விரியும்

தடுக்க முடியாது நீளும் பாலியாறு

இன்னும் மெல்ல மெல்லவாக

நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனினும்

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

பின்குறிப்பு :

'பாலியாறு நகர்கிறது' என்பது ஈழக் கவிஞர் ஜெயபாலன் 1968இல் எழுதிய அவருடைய முதல் கவிதை. இக்கவிதைவன்னியில் மல்லாவியில் உள்ள பாலியாற்றை பற்றியது. ஜெயபாலன் வன்னியில் மல்லாவியில் வாழ்ந்து தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். வன்னியின் வளத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலியாற்றை தற்பொழுது இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவத்தின் வசம் வீழ்ந்துள்ள பாலியாற்றுக்கு 2011இல் சென்ற பொழுது ஜெயபாலனை விழித்து எழுதியது

-பூவரசி 2012 ஜனவரி

[size=5]மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட

உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன

நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?

என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே

தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன

நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை

வரலாற்றில் பரப்பிச் செல்லும்

பாலியாறு என்ன தவறிழைத்தது?[/size]

மனதில் ஆழ இழுத்துக்கீறி வலையை உண்டாக்கும் வரிகள் மிக்க நன்றிகள் நிழலி பகிர்வுக்கு இதோ என்னைக் கொள்ளை கொண்ட மூலகவியின் மூல நகர்வு ..............

பாலி ஆறு நகர்கிறது

அங்கும் இங்குமாய்

இடையிடையே வயல் வெளியில்

உழவு நடக்கிறது

இயந்திரங்கள் ஆங்காங்கு

இயங்கு கின்ற ஓசை

இருந்தாலும்

எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்

இல்லாமல் முன் நோக்கி

பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்

அடங்காமல் காற்றோடு

இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.

எண்ணற்ற வகைப் பறவை

எழுப்பும் சங்கீதங்கள்.

துள்ளி விழுந்து

‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை

ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து

கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே

மணற் கரையில் ஒரு மருங்கம்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்

மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து

எழில் மிகுந்த சிறு பெண்கள்

அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்

ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து

கேலி செய்து

சினந்து

வாய்ச் சண்டை யிட்டு

துவைத்து

நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்

அமைதியாய்ப்

பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்

பண்டார வன்னியனின்*

படை நடந்த அடிச் சுவடு

இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்

அவன்

தங்கி இளைப்பாறி

தானைத் தலைவருடன்

தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த

கால்கள் கழுவி

கைகளினால் நீரருந்தி

வெள்ளையர்கள் பின் வாங்கும்

வெற்றிகளின் நிம்மதியில்

சந்றே கண்ணயர்ந்த

தரை மீது அதே மருது

இன்றும் நிழல் பரப்பும்

அந்த வளைவுக்கு அப்பால்

அதே மறைப்பில்

இன்னும் குளிக்கின்றார்

எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

பாலி ஆறு நகர்கிறது.

1968

* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.

https://malaigal.wor...-ச-ஜெயபாலன்-கவ/

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5] பகிர்வுக்கு மிக்க நன்றிகள் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிகமாய் மறக்கப்பட்டுக்கொண்டிருந்த தேசத்தின் சோகம் மீண்டும் நெஞ்சில் நிறைந்தது போன்ற உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

பல தடைவைகள், ஜெயபாலனின், பாலியாறு நகர்கிறது' படித்திருக்கின்றேன்!

அதை இழக்கும்போது தான், அந்தக் கவிதையின் அருமை புரிகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், நிழலி!

இப்போதைக்கு, தீபச்செல்வன்' தான் நமது இழப்புகளின் குரலாக ஒலிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

பாலியாறு பல நினைவுகளை மீள் அசை போட வைத்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.