Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைவு...நிஜமாகுமா....?

Featured Replies

i48053457306422gp.gif

நினைவில் உருவாகி

கனவில் கவிபாடி

காதல் வழர்த்தேனடி...

கனவை நினைவாக்க

நினைவை நிஜமாக்க

நீயே- வருவா யாடி....?

உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி...

உயிரில் உயிராகி

உணர்வில் உனதாகி

உலகை இழந்தேனடி...

உலகில் நாம் வாழ

உரிமை நீ யாக

உனை நீ தருவாயா...டி........??

ஆகா கவி அருமை பாலன் அண்ணா வாழ்த்துக்கள் :(

கட்டாயம் வருவாங்கள் கவலைப்படாதைங்கோ :lol::lol::lol::lol::lol::lol::lol:

ஐய்யோ இதயத்தையே வெளியில் எடுத்து கொடுக்கிறீர்களா? பாவம் நீங்கள்.

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களிற்கு நன்றி சந்தியா , ரமா :lol:

200552842436229lw.gif

கெளரிபாலனின் கனவில் வந்த தேவதைக்கு நனவில் வர நேரம் இல்லையா?

நல்லடாக இருக்கு உங்கள் மனக்க்முறல். அன்பாக கேட்டிருக்கலாமே டி டி டி எஅ கேட்க அவாக்கு உங்க மீது கோவம் வரப்போகுது. அட என்ன கெளரிபாலன் இதயத்தை கையில் எடுத்து கொடுக்கிறீங்க. :roll: காதல் வளர வாழ்த்துக்கள் :P

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

:arrow: உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி... :?: :idea:

காதல் பதியம் வளர்த்தேனடி- பெரும்

கனவை நிறைத்தேனடி

கண்ணில் ஒரு பாதி

உயிரில் மறுபாதி

கலங்க நின்றேனடி

கவிக் களங்கள் கண்டேனடி

மண்ணே உனை நாடி

மகிழ ஒரு கோடி

இன்னல் சுமப்பேனடி - அதில்

இதயம் நிறைவேனடி

கௌரி கருத்தையே மாற்றி விட்டேன் பார்த்தீர்களா?

எப்படி இருக்கிறது?

கோபிக்கவேண்டாம் சும்மா விளையாட்டாக எழுதினேன்.

பிடிக்கவில்லையென்றால் அறியத்தரவும்

இது வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன் உங்கள் கவி படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஆனால் அதன் கீழிருக்கும் படம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கின்றது.

போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் எமது மண்ணில் யாராவது தமக்கெதிராகச் செயற்பட்டால் அவர்களை நடுச்சந்தியில் கட்டிவைத்து, அவர்களது நெஞ்சைப்பிளந்து, துடிக்கத்துடிக்க அவர்களது இதயத்தை வெளியே எடுப்பார்களாம்.

இந்தப்படத்தினைப் பார்த்ததும் அந்தக்கொடூரம்தான் கண்முன்னே வந்தது. எப்படியெல்லாம் எம்மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் பாவிகள்.

நீங்களும் அவர்களைப்போல் ஆகவேண்டாம். அவை பேச்சோடு, எழுத்தோடு மட்டும் நிற்கட்டும், செயலில் வேண்டாம். அப்போதுதான் அவை அழகு.

உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி

வாழ்த்துக்கள் :lol::lol:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களிற்கு நன்றி

வெண்ணிலா, சுஜீந்தன், தாரணி,வல்வை சகாறா, செல்வமுது, sWEEtmICHe

  • தொடங்கியவர்

:arrow: உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி... :?: :idea:

காதல் பதியம் வளர்த்தேனடி- பெரும்

கனவை நிறைத்தேனடி

கண்ணில் ஒரு பாதி

உயிரில் மறுபாதி

கலங்க நின்றேனடி

கவிக் களங்கள் கண்டேனடி

மண்ணே உனை நாடி

மகிழ ஒரு கோடி

இன்னல் சுமப்பேனடி - அதில்

இதயம் நிறைவேனடி

கௌரி கருத்தையே மாற்றி விட்டேன் பார்த்தீர்களா?

எப்படி இருக்கிறது?

கோபிக்கவேண்டாம் சும்மா விளையாட்டாக எழுதினேன்.

பிடிக்கவில்லையென்றால் அறியத்தரவும்

இது வல்வை சகாறா.

மழை விட்டால்

மணக்கின்ற-

மண்போல-உன்

கவி கேட்டால்.....

மனதுக்குள்

மணக்கு தந்த....

தாய்- மண்ணின்

வாசனை தான்...

வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து எழுதுங்கள்...மண்ணை மட்டுமல்ல எல்லாவற்றிலும் பரந்த நோக்குடன் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

கௌரிபாலன் உங்கள் கவி படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஆனால் அதன் கீழிருக்கும் படம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கின்றது.

போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் எமது மண்ணில் யாராவது தமக்கெதிராகச் செயற்பட்டால் அவர்களை நடுச்சந்தியில் கட்டிவைத்து, அவர்களது நெஞ்சைப்பிளந்து, துடிக்கத்துடிக்க அவர்களது இதயத்தை வெளியே எடுப்பார்களாம்.

இந்தப்படத்தினைப் பார்த்ததும் அந்தக்கொடூரம்தான் கண்முன்னே வந்தது. எப்படியெல்லாம் எம்மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் பாவிகள்.

நீங்களும் அவர்களைப்போல் ஆகவேண்டாம். அவை பேச்சோடு, எழுத்தோடு மட்டும் நிற்கட்டும், செயலில் வேண்டாம். அப்போதுதான் அவை அழகு.

காதலியிடம் இதயத்தை எடுத்துக் கொடுப்பதாக சித்தரிக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தினைப் போட்டேன்...

இன்பமோ ..? துன்பமோ..? காதல் கூட ஒரு வலிதானே..? ம்... புரிகிறது இது கொஞ்சம் கூடத்தான்....இனிமேல் கவனத்தில் எடுக்கின்றேன்.

நன்றி தங்கள் அறிவுரைக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.