Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடைவது குறித்த திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை: சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் ஆட்சேபம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைவது குறித்த திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை: சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் ஆட்சேபம் !

[Tuesday, 2012-10-09 22:49:44]

இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது என்றார் ருத்ரகுமாரன்.

அக் கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும் அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத் தக்கது அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.

http://seithy.com/breifNews.php?newsID=68117&category=TamilNews&language=tamil

[size=4]பொய்யர்கள், போர்குற்றவாளிகள் எனப்பலரும் இவரின் கூற்றால் அதிருப்தி அடைவதுடன் இவரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்காமல் ஆளையே அடக்கவும் எத்தனிக்கலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹேம் சொல்வது உண்மை என்றால்

தமிழ் மக்கள் முன் பகிரங்க விவாதத்துக்கு வர எரிக் சொல்ஹேம் தயாரா???

Edited by விசுகு

அதே பதிவென்பதால் நீக்கிவிடேன்.

Edited by மல்லையூரான்

எரிக் சொல்ஹேம் சொல்வது உண்மை என்றால்

தமிழ் மக்கள் முன் பகிரங்க விவாதத்துக்கு வர எரிக் சொல்ஹேம் தயாரா???

அண்ணா அவர் விவாதத்திற்கு வாராரோ இல்லையோ இன்று அவர் சொல்லும் பொய்களை இருமடங்காக்கி விடுதலைப்போராட்டத்தையும்,போராளிகளையும் வித்து வாங்கும் தமிழீழ விடுதலைமேல் உச்ச அக்கறை கொண்ட எங்கள் தேசியவாதிகள் அவர் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவல்லவா வேண்டும் ........

[size=4]பொய்யர்கள், போர்குற்றவாளிகள் எனப்பலரும் இவரின் கூற்றால் அதிருப்தி அடைவதுடன் இவரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்காமல் ஆளையே அடக்கவும் எத்தனிக்கலாம்.[/size]

அதை நம்பித்தான் சொலெய்ம் தனது பொய்களை சொல்லி வருகிரார். இருந்தாலும் நாம் முன்னல் போகவேண்டியதுதான்.

உரித்திரன் இப்ப எண்டாலும் வாயை திறக்கிறாரே. கடைசியில் யார் யாரை கால் வாரினார்கள் என்று சொல்லுங்கோ பிரதமர் அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து மூலம் வன்னிக்கு அனுப்ப தபால், தொலைநகல், மின்னஞ்சல் வசதிகள் இருந்தனவா இறுதிக் காலத்தில்?

உண்மையான வரலாறுகளை எழுத உண்மையானவர்கள் எவரும் இல்லை. எனவே பொய்யும் புருட்டும் சொல்பவர்கள்தான் இப்போது தம் வசதிக்கேற்ப எமக்கான வரலாறுகளை எழுதுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓருத்தர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியும் நக்கல் செய்தும் தான் தமிழர்கள் உருப்படாமல் போயினம். ருத்திரகுமார் அண்ணா சொன்ன கருத்து சரியாக பட்டாலும் பலருக்கு அவர் சொன்னதால அது பிழையக தெரிகிறது... எரிக் சோல்ஹம் ஒரு அரசியல் வாதி என்பதை நாம் மறக்க கூடாது....!

  • கருத்துக்கள உறவுகள்

ஓருத்தர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியும் நக்கல் செய்தும் தான் தமிழர்கள் உருப்படாமல் போயினம். ருத்திரகுமார் அண்ணா சொன்ன கருத்து சரியாக பட்டாலும் பலருக்கு அவர் சொன்னதால அது பிழையக தெரிகிறது... எரிக் சோல்ஹம் ஒரு அரசியல் வாதி என்பதை நாம் மறக்க கூடாது....!

நீண்ட நாட்களின் நிதர்சனைக் காண்பதில் மகிழ்ச்சி. :)

செயலற்றவர்கள்.. தலைவரையே சந்தேகக் கண்ணோட்டத்தில் கண்டவர்கள்.. காட்டியவர்கள்.. இப்ப கேட்க யாருமில்ல என்ற தருணத்தில் வரலாறு படைக்கிறம் என்று தங்கட சுத்துமாத்துகளை சுய புராணங்களை..காழ்புணர்வுகளை எல்லாம் எழுதி இணையத்தில..நூலா வேற வெளியிடுகினம்..! அதை வாங்க ஒருத்தர்.. விற்க இன்னொருத்தர். வாசிக்க ஒரு கூட்டம்..!

எரிக் சொல்கைம் அரசியல்வாதி என்பதுக்கு மேலால்.. அவர் நேட்டோவுக்கான நோர்வேயின் உளவாளி..! எமது போராட்ட அழிப்பில் நேட்டோவின் நேரடியற்ற பங்கும் உள்ளது..! அதனால் தான் மனித உரிமை மீறல்களை சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்து.. தமது தேவைக்கு பயன்படுத்திய பின் மறக்கடிக்கச் செய்ய மேற்குலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது..! அதற்கு இந்தியா பக்கதுணை..ஏன்னா அதற்கும் பிராந்திய மனித உரிமை மீறல்களில் கணிசமான பங்குள்ளது. அதை எவரும் கண்டுக்கக் கூடாது என்பதும் இந்தியாவின் போலி அகிம்சை முகத்திரையை தக்க வைக்க அவசியம்..! அத்தோடு பிராந்தியத்தில் சிறீலங்காவின் சீன பாகிஸ்தான் ஆதிக்கத்தை எம்மை வைத்து கட்டுப்படுத்த விரும்புகின்றன.. இந்த நாடுகள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இப்பொது மட்டும் சொலெய்ம் இது வரையில் இந்தியா புலிகளின் இராணுவ அழிவொன்றை தவிர மற்றயவை எதையும் ஏற்கவில்லை என்கிறார். ஆனால் 2009 முன் இதை ஒரு இடமும் சொல்லவில்லை. ஏன் எனில் தனது சமாதன் நாடகத்தை நம்பி புலிகள் மோசம் போகாமாட்டார்கள் என்ற கள்ளத்தனம் மட்டுமே. இன்று தன்னும் அதை ஒரு உபயோகமான ஐ.நா போன்ற இடங்களில் கூற தயாரிலை.

குயினின் இணைபில் காணப்ப்டும் காணொளியில் செல்லெயும் மட்டும்தான் எதனை பேர் இறந்தார்கள் என்பதற்கு மடக்கு நியாயமாக அதி U.N நின் பொறுப்பு என்பது. முழு கூட்ட நேரமும் மேடையில் இருந்து மூலக் கொதியால் அந்தரப்படுபவர் போல நடந்து கொள்கிறார். இது அவரின் நேர்மையை வெளிக்காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.