Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்ஸ்

24 அக்டோபர் 2012

விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்

நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்ட நபரை இலங்கை அரசாங்கம் ஆதரித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொலை குற்றச் செயல் ஒன்றுக்காக 1997ம் ஆண்டு சிறை வைக்கப்பட்ட பால்க் ருனே ரோவிக் என்பவரே இவ்வாறு, எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ருனே ரோவிக்கின் நடவடிக்கைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கம் இலங்கை தொடர்பாக பின்பற்றி வரும் கொள்கைகள் மற்றும் அமைச்சர் சொல்ஹெய்மின் நடவடிக்கைகள் குறித்து ருனே ரோவிக் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தார்.

இலங்கை தொடர்பில் நோர்வேயின் வகிபங்கை ருனே ரோவிக் இலங்கை உள்ளிட்ட உலக ஊடகங்களில் விமர்சனம் செய்திருந்தார்.

நோர்வே இலங்கையில் பயங்கரவாதத்தை விதைப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கைக் கடும்போக்காளர்கள், ருனேவிற்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சொன்ட்ரே புஜோவிட் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறிச் செயற்பட்டு வருவதாகவும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் கூடுதல் அர்ப்பணிப்பு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ருனேவின் நடவடிக்கைகள் எரிக் சொல்ஹெய்மின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்திருந்தார்.

2007ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84610/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கைம் தொடர்பாக கண்மூடித்தனமான எதிர்ப்புகள்புலம்பெயர்ந்த தமிழ்ர்கள் தரப்பில் சிலரால் வைக்கப் படுகிறது.. அதே தரப்பினர் இந்தியாமீதும் கடுமையான விமர்சனங்கலை வைத்துவருகிறார்கள். மேற்கும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என்கிற நிலைபாட்டை ஈழக் களத்தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்தல்கள் எடுத்துக் காட்டியது.

எரிக் சோல்கைத்தை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பாலா அண்ணர் வல்லமையோடு இருக்கும்வரைக்கும் தமிழருக்கு நீதிகிடைக்கக்கூடிய சமாதானச் சூழலை உருவாக்க முடியும் என்கிற கனவில் எரிக் இருந்தார்.

சமாதான தூதுவர் என்கிற முறையில் அரசுமீதும் எம்மீதும் ஒருவகையிலும் தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மட்டுமே விமர்சனங்களை வைத்தார். அவருடன் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனால் ஒருவேளை போராளிகள் எரிக்கோடு ஒத்துழைத்து மேற்க்கு நாடுகளூடாக பழம் எடுத்துவிடுவார்களோ என்கிற பயம் இலங்கை அரசுக்கு எப்பவும் இருந்தது. அதனால்தான் ருனே ரோவிக் போன்றவர்கள் அரசுக்குத் தேவைப் பட்டது. அரசு யாரைத் தாக்கினாலும் நாமும் அவர்களைத் தாக்கினோம்.அரசின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாக்கினோம். இப்படித்தான் த்னிமைப் பட்டோம்.

இறுதி ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது பாலா அண்ணர் வலுவற்றுப் போனதும் வந்தவர்கள் பிழையான முடிவுகளை எடுத்ததும் எரிக் சோல்கைத்தை மனமுடைய வைத்தது. இவை பற்றி எல்லாம் விரிவாக எழுதவேனும். . எதிர்காலத்தில் நாம் இத்தகைய பிழைகளை விட முடியாது

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அரசு யாரைத் தாக்கினாலும் நாமும் அவர்களைத் தாக்கினோம்.அரசின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாக்கினோம். இப்படித்தான் த்னிமைப் பட்டோம்.

[size=5]இன்னும் தனிமைப்படுவதும் தாக்குப்படுவதும் தாயகத்தில் வாழ்கிற உயிர்களே. அரசுக்கு இலகுவாக நாங்களே எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம்.[/size]

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிக் சொல்கைம் தொடர்பாக கண்மூடித்தனமான எதிர்ப்புகள்புலம்பெயர்ந்த தமிழ்ர்கள் தரப்பில் சிலரால் வைக்கப் படுகிறது.. அதே தரப்பினர் இந்தியாமீதும் கடுமையான விமர்சனங்கலை வைத்துவருகிறார்கள். மேற்கும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என்கிற நிலைபாட்டை ஈழக் களத்தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்தல்கள் எடுத்துக் காட்டியது.

எரிக் சோல்கைத்தை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பாலா அண்ணர் வல்லமையோடு இருக்கும்வரைக்கும் தமிழருக்கு நீதிகிடைக்கக்கூடிய சமாதானச் சூழலை உருவாக்க முடியும் என்கிற கனவில் எரிக் இருந்தார்.

சமாதான தூதுவர் என்கிற முறையில் அரசுமீதும் எம்மீதும் ஒருவகையிலும் தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மட்டுமே விமர்சனங்களை வைத்தார். அவருடன் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனால் ஒருவேளை போராளிகள் எரிக்கோடு ஒத்துழைத்து மேற்க்கு நாடுகளூடாக பழம் எடுத்துவிடுவார்களோ என்கிற பயம் இலங்கை அரசுக்கு எப்பவும் இருந்தது. அதனால்தான் ருனே ரோவிக் போன்றவர்கள் அரசுக்குத் தேவைப் பட்டது. அரசு யாரைத் தாக்கினாலும் நாமும் அவர்களைத் தாக்கினோம்.அரசின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாக்கினோம். இப்படித்தான் த்னிமைப் பட்டோம்.

இறுதி ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது பாலா அண்ணர் வலுவற்றுப் போனதும் வந்தவர்கள் பிழையான முடிவுகளை எடுத்ததும் எரிக் சோல்கைத்தை மனமுடைய வைத்தது. இவை பற்றி எல்லாம் விரிவாக எழுதவேனும். . எதிர்காலத்தில் நாம் இத்தகைய பிழைகளை விட முடியாது

உங்கள் தொடுப்புக் கதைகள்தான் எங்களுக்கு காது குத்த முனைகின்றது, அதில் கவனமாய் இருங்கள்!

எரிக் சொல்கைம் தொடர்பாக கண்மூடித்தனமான எதிர்ப்புகள்புலம்பெயர்ந்த தமிழ்ர்கள் தரப்பில் சிலரால் வைக்கப் படுகிறது.. அதே தரப்பினர் [size=5]இந்தியாமீதும் கடுமையான விமர்சனங்கலை வைத்துவருகிறார்கள். மேற்கும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம்[/size] என்கிற நிலைபாட்டை ஈழக் களத்தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்தல்கள் எடுத்துக் காட்டியது.

எரிக் சோல்கைத்தை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பாலா அண்ணர் வல்லமையோடு இருக்கும்வரைக்கும் தமிழருக்கு நீதிகிடைக்கக்கூடிய சமாதானச் சூழலை உருவாக்க முடியும் என்கிற கனவில் எரிக் இருந்தார்.

சமாதான தூதுவர் என்கிற முறையில் அரசுமீதும் எம்மீதும் ஒருவகையிலும் தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மட்டுமே விமர்சனங்களை வைத்தார். அவருடன் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனால் ஒருவேளை போராளிகள் எரிக்கோடு ஒத்துழைத்து மேற்க்கு நாடுகளூடாக பழம் எடுத்துவிடுவார்களோ என்கிற பயம் இலங்கை அரசுக்கு எப்பவும் இருந்தது. அதனால்தான் ருனே ரோவிக் போன்றவர்கள் அரசுக்குத் தேவைப் பட்டது. அரசு யாரைத் தாக்கினாலும் நாமும் அவர்களைத் தாக்கினோம்.அரசின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாக்கினோம். இப்படித்தான் த்னிமைப் பட்டோம்.

இறுதி ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது பாலா அண்ணர் வலுவற்றுப் போனதும் வந்தவர்கள் பிழையான முடிவுகளை எடுத்ததும் எரிக் சோல்கைத்தை மனமுடைய வைத்தது. இவை பற்றி எல்லாம் விரிவாக எழுதவேனும். . எதிர்காலத்தில் நாம் இத்தகைய பிழைகளை விட முடியாது

[size=5]ஏன் ஈழத்தமிழரின் போராட்டத்தை நசுக்கியவர்கள் என்ற வகையில் இந்தியா மீண்டும் வேண்டாம் இந்தியா மீது நம்பிக்கையில்லை என்று கூறுவதில் தவறேதும் உள்ளதா?[/size]

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை எதிர்ப்பது அந்த நாட்டை எதிர்ப்பதாகாது, சும்மா வெற்று வியாக்கியானக்கள் veeண்டாம், உங்களை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.இந்தியா தனது பிzaiயான கொள்கைகளை மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது.

.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஏன் ஈழத்தமிழரின் போராட்டத்தை நசுக்கியவர்கள் என்ற வகையில் இந்தியா மீண்டும் வேண்டாம் இந்தியா மீது நம்பிக்கையில்லை என்று கூறுவதில் தவறேதும் உள்ளதா?[/size]

[size=1]

[size=4]அவர்கள் இந்தியர்கள்........[/size][/size][size=1]

[size=4]அவர்கள் அடிப்பார்கள் உங்களுக்கு வலிக்கும்.[/size][/size][size=1]

[size=4]நீங்கள் சர்வதேச அரசியலை புரிந்து வலிக்கவில்லை என்று சொல்லவேண்டும்.[/size][/size][size=1]

[size=4]ஊரோடு குண்டடித்து புதைப்பார்கள். [/size][/size][size=1]

[size=4]நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று சொல்லவேண்டும்.[/size][/size]

[size=1]

[size=4]சர்வதேச அரசியலில் இதெல்லாம் சகசமப்பா...[/size][/size][size=1]

[size=4]இதை செய்தாலும் சாவென்றால் இதை செய்யாமலே சாகலாமே?[/size][/size][size=1]

[size=4]அப்படியென்று முட்டாள்தனமான கேள்வியெல்லாம் கேட்ககூடாது. சார்வதேச அரசியலை புரிந்து எழுத பழக வேண்டும்.[/size][/size]

[size=5]இன்னும் தனிமைப்படுவதும் தாக்குப்படுவதும் தாயகத்தில் வாழ்கிற உயிர்களே. அரசுக்கு இலகுவாக நாங்களே எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம்.[/size]

[size=1]

[size=4]அதுதான் நீங்கள் இப்ப எல்லாவற்றையும் புரிந்து நடக்க தொடங்கிவிட்டீன்கள் [/size][/size][size=1]

[size=4]இனி அவர்களுக்கு விடுதலைதான்![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அதுதான் நீங்கள் இப்ப எல்லாவற்றையும் புரிந்து நடக்க தொடங்கிவிட்டீன்கள் [/size][/size]

[size=1][size=4]இனி அவர்களுக்கு விடுதலைதான்![/size][/size]

இப்பிடியே தத்துவ முத்துக்களை தந்து கொண்டு இருங்கோ உங்கள் ஆலோசனைப்படி அவர்களுக்கு துப்பாக்கிளும் தோட்டாக்களும் கொடுத்து போராட வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே தத்துவ முத்துக்களை தந்து கொண்டு இருங்கோ உங்கள் ஆலோசனைப்படி அவர்களுக்கு துப்பாக்கிளும் தோட்டாக்களும் கொடுத்து போராட வைக்கலாம்.

நீங்களும் அதற்குதானே முன்பு ஆதரவு வழங்கி வந்தீர்கள் ....... இப்போதும் அந்த அடிப்படையை வைத்துதானே உங்கள் அரசியலை நடத்துகின்றீர்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அதற்குதானே முன்பு ஆதரவு வழங்கி வந்தீர்கள் ....... இப்போதும் அந்த அடிப்படையை வைத்துதானே உங்கள் அரசியலை நடத்துகின்றீர்கள் ..

தமிழரசு, தயவு செய்து எனது அரசியலை ஒருக்கா விளக்குங்கோ எனக்கே தெரியாமல் என்னை அரசியலாக்கிய உங்களை எனது அரசியல் ஆலோகசகர் பதவிக்கு நியமிக்கலாம்.

நான் ஆதரித்த புலகளை இப்போதும் நேசிக்கிறேன். ஆதரிக்கிறேன். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூவே சர்கரையென்ற மொழிக்கு இணங்க அரசியல்வாதம் செய்கிறவர்களையே கேள்வி கேட்கிறேன்.

விழுந்த இனத்தை தூக்கிவிட்ட பின்னரே அரசியல் அல்லது நீங்கள் நினைக்கிற கனவுக்கோட்டைகளை உயர்த்தலாம்.

நீங்கள் சொல்கிற அரசியல் அடிப்படையை பகுத்தறிவற்ற இந்தப் பாமரக் கண்ணால் புரிந்து கொள்ள முடியாது. எந்த அரசியல் ? என்ன அடிப்படை ? ஒருக்கா விளக்குங்கோ.

பிற்குறிப்பு :- பொது அறிவை வளர்த்துக் கொள்ளவே ஈழ அரசியலை ஈழத்தமிழின அரசியலையும் அறிந்து வைத்திருக்கிற தமிழரசு அவர்களே உங்களிடம் இக்கேள்வியைக் கேட்கிறேன். பெரிய மனது பண்ணி விளக்கம் தாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" இந்தியாவை நாம் பயன்படுத்த வேண்டும்" என்ற கருத்து நியாயமானது. ஆனால் இந்தியாவின் பாணியோ பசுக்கன்றுக்கு பாலைக் காட்டி மொத்தத்தையும் தானே கறக்கின்ற வகைக்குரியது அல்லவா?

இன்று சீனாவின் செல்வாக்குக்குள் இருந்து இலங்கையை தனது செல்வாக்கிற்குள் விழுங்க ஏதுவாகும் திட்டத்திற்கு தமிழ்ர் தரப்பு ஏன் கறிவேப்பிலை உபயேகத்திற்கு ஆளாக வேண்டும்?

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் அப்பாவிகள் மரணங்களின் முற்றத்தில் சிங்களத்தின் தோளுக்கு மாலையான இந்திய வெளியுறவு இனிமேல் பரிதாபம் காரணமாக எமக்கு உதவலாம் என்று காதுகுத்தும் வகையான உபதேசமா செய்ய வருகின்றீகள்?

எரிக் சொறிக்கேம் இற்கு வருகின்றேன்!

இரண்டு தரப்பிற்கு நடுநிலையாளனாய் வருபவர் கொண்டுருக்க வேண்டிய தகுதி என்ன?

எந்தத் தரப்பின் தவறையும் தட்டிக் கேட்கின்ற பலம், அருகதை.

நியாயமான இடங்களில் தன் பொறுப்பை சரிவரச் செய்ய சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருப்பின் அந்த இடத்துடன் வெளியேறவாவது முடிவெடுப்பதால் இந்தப் பதவியை எவரும் சந்தேகப்பட மாட்டார்கள். பதிலாக இந்த சொல்கேம் தன் பதவியின் ஆயுளைத்தான் காப்பாற்றி இருக்கின்றார்! எனவே இந்த நிலையானது உலகத்தில் எந்த சக்திகளோ புலிகளின் பலத்தை முடக்குவதற்கு எடுத்த திட்டத்தின் ஒரு பாத்திரமே சொல்கேம், என்ற நிலைப்பாட்டுக்கு வர போதிய ஆதாரமாகின்றது அவர்களது செயற்பாடுகள்! ஒவ்வொன்றும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]இன்னும் தனிமைப்படுவதும் தாக்குப்படுவதும் தாயகத்தில் வாழ்கிற உயிர்களே. அரசுக்கு இலகுவாக நாங்களே எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம்.[/size]

கருணா, டக்ளஸின் எதிரணி நிலைக்கு எப்படி இந்த வாதம் நியாயமாகாதோ அப்படியேதான் இந்தியா, செல்கேம் என்ற நரிகளின் நிலைக்கும் எவ்வகையிலும் நியாயமாகாது!

இவ்வாறு விடயங்களை பொத்தாம் பொதுவாய் சொல்வதும் முறையாகாது!

எரிக் சொல்கைம் தொடர்பாக கண்மூடித்தனமான எதிர்ப்புகள்புலம்பெயர்ந்த தமிழ்ர்கள் தரப்பில் சிலரால் வைக்கப் படுகிறது.. அதே தரப்பினர் இந்தியாமீதும் கடுமையான விமர்சனங்கலை வைத்துவருகிறார்கள். மேற்கும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என்கிற நிலைபாட்டை ஈழக் களத்தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்தல்கள் எடுத்துக் காட்டியது.

எரிக் சோல்கைத்தை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பாலா அண்ணர் வல்லமையோடு இருக்கும்வரைக்கும் தமிழருக்கு நீதிகிடைக்கக்கூடிய சமாதானச் சூழலை உருவாக்க முடியும் என்கிற கனவில் எரிக் இருந்தார்.

சமாதான தூதுவர் என்கிற முறையில் அரசுமீதும் எம்மீதும் ஒருவகையிலும் தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மட்டுமே விமர்சனங்களை வைத்தார். அவருடன் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனால் ஒருவேளை போராளிகள் எரிக்கோடு ஒத்துழைத்து மேற்க்கு நாடுகளூடாக பழம் எடுத்துவிடுவார்களோ என்கிற பயம் இலங்கை அரசுக்கு எப்பவும் இருந்தது. அதனால்தான் ருனே ரோவிக் போன்றவர்கள் அரசுக்குத் தேவைப் பட்டது. அரசு யாரைத் தாக்கினாலும் நாமும் அவர்களைத் தாக்கினோம்.அரசின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாக்கினோம். இப்படித்தான் த்னிமைப் பட்டோம்.

இறுதி ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது பாலா அண்ணர் வலுவற்றுப் போனதும் வந்தவர்கள் பிழையான முடிவுகளை எடுத்ததும் எரிக் சோல்கைத்தை மனமுடைய வைத்தது. இவை பற்றி எல்லாம் விரிவாக எழுதவேனும். . எதிர்காலத்தில் நாம் இத்தகைய பிழைகளை விட முடியாது

ஈழத்தமிழர் பிரச்சனையில் அன்றுதொட்டு இன்றுவரை இந்தியா என்ன செய்தது என்பதை மக்கள் அறிவார். இந்தியாவின் தேவை ஒன்றுதான் அது இலங்கையில் பிரச்சனை இருக்கவேண்டும் அதில் தாம் மூக்கை நுழைத்து தலையீடு செய்துகொண்டிருக்கவேண்டும். இதைக் கடந்து தமிழ் மக்களில் கரிசனை அக்கறை என்று எந்தக் காலத்திலும் இந்தியா இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை. இந்திய அதிகாரவர்கத்தின் நலன்களுக்கேற்ப நாம் சிப்பிலியாட்டப்பட்டுக்கொண்டிருப்போம்.

எரிக்சோல்கைம் தலமையிலான மேற்கின் தலையீடு அதன் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட கால இழுததடிப்ப்பை செய்வது. இந்தக் கால ஈழுத்தடிப்பில் புலிகளின் கடல்வலைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. உளவுத்துறை தமிழர் பிரதேசம் எங்கும் ஊடுருவியது. புலிகளின் கட்டமைப்பை சிதைப்பது. சம தரப்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து படிப்படியாக புலிகளை மேற்குநாடுகள் பயங்கரவாதிகள் என்று தடையை அறிவித்து சமநிலையை சீர்குலைத்தது. மொத்தத்தில் அகமாகவும் புறமாகவும் போராட்டத்தை பலவீனப்படுத்துதலே சோல்கைம் தலமையிலான நுளைவு. பலவீனப்படுத்தியவுடன் ஓங்கி தலையில் அடித்து கதையை முடித்தது.

இனிமேற்பட்ட கலாத்தில் இந்தியா எப்படிப்பட்டது மேற்கு எப்படிப்பட்டது என்ற புரிதலுடன் இவர்களை நாம் அணுக முற்பட இந்த அனுபவம் உதவியாக இருக்கும் தவிர சோல்கைம் நல்லவர் இந்திரா காந்தி நல்லவ என்ற மாயையுடன் எந்த அணுகுமுறையும் அவசியமில்லை. என்ன அனுபவத்தைப் பெற்றோம் என்ன விழைவைக் கண்டோம் என்ற படிப்பினை புரிதலுடன் தொடர்வதே ஒரே வழி இல்லையேல் சோல்கைம் மேற்கு இந்தியா என்ற விளக்குகளில் தொடர்ந்து விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாக நாமிருப்போம். இதற்கான வளியை காட்டுவது அரசியலாகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் வழித்துணுயோடு எமது பயணம் முன்நகர்த்தப் படும் என்ற நிலை மட்டும் இருந்தால், நிட்சயமாக அந்தப் பயணதினர் ஒருவரிடம்கூட தமிழீழக் கனவை இந்தியா விட்டுவைக்காது. எனவே இந்தியாவின் துணையோடு எதை நாம் எய்த முடியுமோ அதை சீனாவின் துணையோடு பெறுதலே இலகுவானது.

ஏன் என்றால் இந்தியாவை முழுதாய் நம்புகின்ற நிலையைவிட சிங்களத்தை நம்புதல் பொருத்தமானது..

அடுத்து தமிழர்களிடம் எந்த வகையான அதிகாரவரம்பு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றதோ அதைவிட தாராளமானதாக சீனாவின் விரும்பம் இருக்க்ம். அடுத்து மகிந்தாவிடம் இருக்கின்ற அதிகாரங்களிலும் பார்க சீனாவிடமே பலமான அதிகாரங்கள் கிடக்கின்றன!

இலங்கையின் அரசியல்ரீதியான நிர்வாக விடயங்களில் மகிந்தாவின் செல்வாக்கை விட சீனாவின் செல்வக்கே மிகுதியானது என்பதை பலவிடயங்களினூடு நாம் அறியலாம்!

1. மகிந்தா தரப்பிற்கு பதிலாக ரணில் தரப்பின் ஆட்சியாய் இருந்திருந்தால் வெளிநாட்டு அழுத்தத்தின் காரணமாக தமிழர்தரப்பு அதிகாரப் பரவலாக்கத்தில் ஒரு பாதித்தூரமாவது பயணித்திருக்க முடியும் ஆனால் மாறாக மகிந்தாதரப்பின் தலையை பிடித்து வெளி உலகம் உடுட்டும் போது கூட அது துவக்கத்திற்கே தயார் இல்லை என்ற நிலைமை வெளிப்படுத்தும் செய்தி என்ன? சிங்களத்துவத்தின் கைகளுக்கு அப்பால் இன்னொரு கையின் வேலை இது என்று புரிகின்றது அல்லவா?

இதனால்த்தான் நேரே திருடனிடமே போய் பேசுதல் பயனுடையது!

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, டக்ளஸின் எதிரணி நிலைக்கு எப்படி இந்த வாதம் நியாயமாகாதோ அப்படியேதான் இந்தியா, செல்கேம் என்ற நரிகளின் நிலைக்கும் எவ்வகையிலும் நியாயமாகாது!

இவ்வாறு விடயங்களை பொத்தாம் பொதுவாய் சொல்வதும் முறையாகாது!

தேவன், நான் எழுதியதன் கருத்து கருணா கொள்ளையன்களை சேர்த்து அல்ல. பொதுவாக பேசாமல் இருப்பவர்களையெல்லாம் தேவையற்று எதிரியாக்கி தனிமைப்படுகிறோம் என்பது.

இப்போ நரிகளே வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். நரிகளின் தோலுரிய நாள் எடுக்காது கொஞ்சம் நாம் பொறுமை காக்கலாமல்லவா ?

இதனால்த்தான் நேரே திருடனிடமே போய் பேசுதல் பயனுடையது!

ஆயிரம் பச்சைப்புள்ளிகள் இந்த வார்த்தைகளுக்கு.

இங்கு நடப்பது திருடன் போலீஸ் விளையாட்டல்ல. பிராந்திய ஆதிக்கப்போட்டி. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்போ உரிமை மீட்போ எதுவும் பிரதானப்படுத்தப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்நாட்டுப்பிரிவினை தூண்டப்படும் என்பதும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகின்றது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிங்கள அரசிற்கு துணை போவதன் காரணம் மிக வெளிப்படையானது. எதிரிக்கு எதிரி நண்பன்.

அதற்கும் மேலால் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் ஆதிக்க கனவோ அதற்கான வலிமையோ கிடையவே கிடையாது. ஆனால் இப்பிராந்தியத்தில் இந்தியா தவிர்த்து முட்டிமோதிக்கொண்டிருக்கக் கூடிய சக்திகள் சீனாவும் மேற்குலகும் தான்.

இந்தியாவிற்கெதிரான ஈழததமிழ் மக்களின் ஆதரவிற்கு சீனா தலைசாய்க்கக்கூடும் சிங்களம் மேற்குலகின் பக்கம் சாயும் சந்தர்ப்பத்தில் மட்டுமே. இந்தப் பொறிமுறையை சிங்களமும் நன்கு புரிந்து கொண்டே இரட்டைக்குதிரை சவாரியை முன்வைத்திருக்கின்றது என்றே தோன்றுகின்றது. ஆனாலும் இந்த இரட்டைக்குதிரை சவாரி முறையை சீனாவோ மேற்குலகோ அதிக நாள் அனுமதிக்கப்போவதில்லை. அவர்களின் அபிலாஷையும் அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை.

அதுவரை ஈழத்தமிழ் மக்களின் தேவை யாருக்கு அதிகம் தேவைப்படும் என்பதைக்கூறமுடியாத நிலையே காணப்படுகின்றது. அதற்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் இப்போதும் கணிக்க முடியா நிலமையே காணப்படுகின்றது. சீன மேற்குலக முரண்பாடு அதி தீவிரமாக முன்னெடுக்கப்படும் போது அது துரிதப்படக்கூடும். அது வரை எங்களைத் தயார்ப்படுத்தலே அதிகபட்சம் எங்களால் செய்யக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே தத்துவ முத்துக்களை தந்து கொண்டு இருங்கோ உங்கள் ஆலோசனைப்படி அவர்களுக்கு துப்பாக்கிளும் தோட்டாக்களும் கொடுத்து போராட வைக்கலாம்.

[size=4]இப்படித்தான் எல்லோரும் சிந்திக்கிறான் என்ற நினைப்பில்தான் [/size][size=1]

[size=4]பிழைப்பை கெடுக்கும் வார்த்தைகளை வாரி வழங்குகிறீர்கள்.[/size][/size]

[size=1]

[size=4]அடுத்தவனுக்கும் புத்தி இருக்கு....[/size][/size][size=1]

[size=4]உங்களுக்கு தெரிந்தவைகளை விடவும் பல நடந்தவை இருக்கு. [/size][/size][size=1]

[size=4]என்ற சிந்தனை யாவருக்கும் ஆரோக்கியமானது.[/size][/size]

[size=1]

[size=4]இனி சுயவிளம்பரம்தான் குறி என்றால் அடுத்தவர்கள் மேல் பழியை போட்டுவிட்டு எங்களுக்கு மேதாவி வெள்ளை அடிப்பதை தவிர வேறு வழி இல்லை.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இப்படித்தான் எல்லோரும் சிந்திக்கிறான் என்ற நினைப்பில்தான் [/size]

[size=1][size=4]பிழைப்பை கெடுக்கும் வார்த்தைகளை வாரி வழங்குகிறீர்கள்.[/size][/size]

[size=1][size=4]அடுத்தவனுக்கும் புத்தி இருக்கு....[/size][/size]

[size=1][size=4]உங்களுக்கு தெரிந்தவைகளை விடவும் பல நடந்தவை இருக்கு. [/size][/size]

[size=1][size=4]என்ற சிந்தனை யாவருக்கும் ஆரோக்கியமானது.[/size][/size]

[size=1][size=4]இனி சுயவிளம்பரம்தான் குறி என்றால் அடுத்தவர்கள் மேல் பழியை போட்டுவிட்டு எங்களுக்கு மேதாவி வெள்ளை அடிப்பதை தவிர வேறு வழி இல்லை.[/size][/size]

சுயமாய் சிந்திக்கத் தெரியாதவனே சுயவிளம்பரத்தை அடிக்கடி யோசிக்கிறவன். மருதங்கேணி அடிக்கடி சுயவிளம்பரத்தை தேடியே இப்படி சுயமாய் சிந்திக்கிறார்.

[size=5]கரியில் வாழ்கிறவர்களுக்கு வெள்ளையின் மகிமை புரிவதில்லை.[/size]

உங்கள் அதிபுத்திசாலித்தனமான பொழிப்புரைக்கும் கண்டுபிடிப்புக்கும் மிக்க நன்றிகள்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.