Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையும் செய்வாள் "பத்தினி"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]2 மகள்கள் இருக்கிறார்கள் கௌரவமாக நடந்துகொள் என கூறிய கணவன் கொலை: மனைவி கைது [/size]

[size=4]நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அஜந்தா (35). மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களின் படிப்புக்காகவே ரமேஷ் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.[/size]

[size=4]அப்போது அஜந்தாவுக்கும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்த முத்துசாமி (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். குன்னூருக்கு குடி பெயர்ந்த பின்னரும் அஜந்தா-முத்துசாமி இடையேயான தொடர்பு நீடித்தது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரவே ரமேஷ் ஆத்திரமடைந்தார். நமக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ஒழுக்கமாக வாழும் வழியைப்பார் என்று எச்சரித்தார். [/size]

[size=4]மனைவியின் போக்கில் மாற்றம் இல்லாததால், இனிமேல் நீ முத்துசாமியை சந்தித்தால் நடப்பதே வேறு என்று ரமேஷ் எச்சரித்தார். கணவரின் மிரட்டல் குறித்து அஜந்தா தனது கள்ளக்காதலன் முத்துசாமியிடம் கூறினார். ரமேஷ் இருக்கும் வரை நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே அவரை தீர்த்துக்கட்டிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தனர். தனது திட்டம் குறித்து முத்துசாமி தனது நண்பர்களான ரவி, சேட் மற்றும் அஜந்தாவின் தாயார் காளியம்மாள் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.[/size]

[size=4]தங்களது திட்டப்படி முத்துசாமி, ரவி, சேட், அஜந்தாவின் தாயார் காளியம்மாள் ஆகியோர் ரமேஷ் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அஜந்தாவுடன் சேர்ந்து கொண்டு ரமேசின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் எதுவும் நடக்காதது போல் முத்துசாமி உள்பட 4 பேரும் கிளம்பிச் சென்று விட்டனர். தனது கணவர் திடீரென இறந்து விட்டார் என்று அஜந்தாவும் நாடகமாடினார். ரமேஷின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வரும் முன்னரே அவசர அவசரமாக ரமேஷின் உடல் புதைக்கப்பட்டது.[/size]

[size=4]இந்த நிலையில் ரமேஷின் தந்தை குன்னூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனின் சாவில் மர்மம் உள்ளது. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் அஜந்தா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டார்.[/size]

[size=4]இதைத்தொடர்ந்து அஜந்தா, முத்துசாமி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை தீர்த்துக்கட்டியது குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size]

நன்றி: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=84833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கென்னவோ.. கிரைம் ஸ்டோரி வாசிச்ச கணக்கா இருக்குது. ஆனால் நம்ம வாழுற சமூகங்களின் செயற்பாடுகளைப் பார்த்தா.. நாங்க தினமும்.. கத்தி விளிம்பில் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிறோமோ என்ற பயபீதி தான் மிச்சமாகுது. என்ன மனிச வாழ்க்கையோ..! தானும் வாழாது மற்றவனையும் வாழவிடாத மனித ஜீவன்கள் நிறைஞ்சு கொண்டு வருகுது. இப்படித்தான் உலகம் இயங்கும் போல..! :icon_idea:

அட ஆமங்க ........... நெடுகாலபோவான் அண்ணன் இன்னைக்கு பூரா இதேதாங்க பேச்சு . ஒவ்வொருத்தர் ஒவ்வண்ணு சொல்றாங்க . எங்க டாடி ராகவன் ஐபிஎஸ் தான் கேசை இன்வெஸ்ரிக்கேற் செய்யிறாங்க :) :) . டாடிய பாத்திட்டு இருக்கேங்க :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமால.. உங்க குன்னூரில நடந்திருக்கில்ல..!

உங்க டாடிட்ட சொல்லி.. இப்படியாப்பட்ட ஆக்களை எங்கவுண்டரில போடச் சொல்லுங்க. அப்படி நாலு பேரைப் போட்டா மிச்சப் பேர் தானா திருந்துவா..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமால.. உங்க குன்னூரில நடந்திருக்கில்ல..!

உங்க டாடிட்ட சொல்லி.. இப்படியாப்பட்ட ஆக்களை எங்கவுண்டரில போடச் சொல்லுங்க. அப்படி நாலு பேரைப்போட்ட

மிச்சப் பேர் தானா திருந்துவா..! :icon_idea::)

அப்படி நாலு பேரைப்போட்ட

உங்க எழுத்து இதற்கு ஆதரா இருக்கம் என்ற நினைத்து

இன்னும் நாலு பேரை போடச்( கொலை)சொல்கிறீர்கள் என வாசித்துவிட்டேன். :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நாலு பேரைப்போட்ட

உங்க எழுத்து இதற்கு ஆதரா இருக்கம் என்ற நினைத்து

இன்னும் நாலு பேரை போடச்( கொலை)சொல்கிறீர்கள் என வாசித்துவிட்டேன். :lol::D :D

பிழை திருத்தியாச்சு விசுகு அண்ணா. :) சமூக விரோதிகளுக்கு நாங்க ஆதரவா..???! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமால.. உங்க குன்னூரில நடந்திருக்கில்ல..!

உங்க டாடிட்ட சொல்லி.. இப்படியாப்பட்ட ஆக்களை எங்கவுண்டரில போடச் சொல்லுங்க. அப்படி நாலு பேரைப் போட்டா மிச்சப் பேர் தானா திருந்துவா..! :icon_idea::)

நெடுக்கு, நீங்கள் கள்ளமில்லாமல் சொன்னாலும், இது நீதித் துறையில் தலையிடுவதாகும்!

இப் பதிவுகளை, நாங்கள் களத்தில் தொடர்ந்தால், இந்த வழக்கு சுயாதீனமாக நடத்தப் படும் சாத்தியமில்லை, எனக் கொலை செய்தவர்கள் கூற வழிசமைத்து விடும்!

நாங்கள், விலக வெளியில் நிற்பதே நல்லது!

ஏனெனில், சொப்னாவின் அப்பா, இதில் ஈடுபட்டுள்ளார்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே! :o

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆமங்க ........... நெடுகாலபோவான் அண்ணன் இன்னைக்கு பூரா இதேதாங்க பேச்சு . ஒவ்வொருத்தர் ஒவ்வண்ணு சொல்றாங்க . எங்க டாடி ராகவன் ஐபிஎஸ் தான் கேசை இன்வெஸ்ரிக்கேற் செய்யிறாங்க :) :) . டாடிய பாத்திட்டு இருக்கேங்க :) .

தமிழ்நாட்டுத் தமிழில் எழுதவேணும் என்றால் இப்படி எழுதவும் சொப்னா.. :rolleyes:

அட ஆமங்க ........... நெடுகாலபோவான் அண்ணன் ணே.. இன்னைனிக்கு பூரா இதேதாங்க பேச்சு . ஒவ்வொருத்தர் ஒவ்வண்ணு ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க . எங்க டாடி ராகவன் ஐபிஎஸ் தான் கேசை இன்வெஸ்ரிக்கேற் இன்வெஸ்டிகேட்செய்யிறாங்க :) :) . டாடிய பாத்திட்டு இருக்கேங்க :) .

:rolleyes:

அதுசரி.. ஊரிலை நீங்கள் எவிடம் தம்பி? :D அப்பா ராகவன் ஐபிஎஸ் ஐ சுகம் விசாரிச்சதா சொல்லுங்கோ.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.