Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவில் மகிந்தவை காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது இந்தியா.

Featured Replies

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது.

அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை

நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்குறைப்பு, வடக்குத் தேர்தல் என்பன பற்றி காரசாரமாகக் கருத்து வெளியிட்டிருந்தது.

இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம் வகித்திருந்ததால் இந்தியாவின் அன்றைய கருத்து சர்வதேச மட்டத்திலும், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனால், நேற்று இலங்கை தொடர்பில் நடைபெற்ற இறுதிக்கூட்டத்தில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே முன்வைத்த சிபாரிசுகளை நீக்கியிருந்த இந்தியா அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் அந்தர்பல்டி அடித்தது நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெனீவாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்து சந்தித்து நடத்திய இரகசியப் பேச்சுகளை அடுத்தே இந்தியா தனது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டதாக இராஜததந்திர வட்டாரங்கள் சுடர் ஒளியிடம் தெரிவித்தன.

இதற்கிடையில் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் சில நாடுகள் முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து கடும் கவலை வெளியிட்டன.

இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை இலங்கை அரசு இன்னும் இரு வாரத்துக்குள் அறிவிக்குமென்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுக்குள் இலங்கை அரசு மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜெனீவாவிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் எம்மிடம் சுட்டிக்காட்டின.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

கடந்த முதலாம் நாள் நடைபெற்ற விவாத்தின்போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை நேற்று சமர்ப்பித்திருந்தன.

இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை இலங்கை விவரித்துள்ளது.

அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இலங்கை இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=37626

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஜனனாயகம் என்பது அதன் தொட்டிலிலேயே மகா பாதகங்களை பாலாய்க் குடித்து வளர்ந்தது; இங்கே ஒழுங்கு முறையை எதிர்பார்ப்பதுதான் அறியாமை நிறைந்த ஒன்று!

கொண்டவளுக்கே துரோகம் தீண்டிய நாகத்தை: மக்கள் தலைவன் என்ற அருகதையை அள்ளிக கொடுத்த இந்திய ஜனனாயகம் முதல் தன் மக்களையாவது வாழ் விடட்டும் என்று பிரார்த்திப்போம்!

தாம் மனிதநேயம், பண்பாடு, நேர்மை, மனிதாபிமானம் அற்ற ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் என்பதை இந்தியக் காட்டுமிராண்டிகள் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதுமே ஈழ தமிழர்களிற்கு ஆதரவான நிலையை எடுக்காது எம்மில் சிலர்தான் அடிக்கடி இந்தியா ஏதேனும் மர்மக்கனியை பறித்து தரும் என்று நினைக்கின்றார்கள் அது ஒருபோதும் நடக்காது பார்க்க போனால் மகிந்தரை விட சோனியாதான் ஈழ தமிழர்களை இல்லாது ஒழிக்க சபதம் கொண்டுள்ளார் சோனியா தொலைந்தால்தான் விடிவு.

இந்தியாவிடம் இதை எதிர் பார்த்ததே தப்பு. இன்னும் மேலை நாடுகள் இந்தியாவை ஜனநாயக நாடாக நினைப்பது முட்டாள் தனம். இதற்கு ஒரே வழி நாம் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலககிட்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே. திருடனிடம் திருட்டை பிடிக்க சொன்னால் எப்பிடி நடக்கும். இந்தியாவின் ஆப்பை வாங்கி வாங்கி ஈழத் தமிழர் நாம் களைத்து விட்டோம். இந்தியாவிடம் இப்பிடியான பணிகளை ஒப்படைக்க வேண்டாம் என்று நாம் ஐநாவில் முறையிடுவதே மேல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பினால் ஒருபோதும் விடிவு கிடைக்காது.

[size=1]

[size=4]இந்த குத்துக்கரணம் ஊடாக இந்தியா எதனை கூறி நிற்கிறது?[/size][/size]

[size=1]

[size=4]இது சிங்கள தேசத்திற்கு தந்த இறுதி சந்தர்ப்பமாகவும் பார்க்கலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானம்: இந்திய ஜனனாயகம் அறியாத ஊர்.

விபச்சாரம்: இந்திய ஜனனாயம் பிறந்த ஊர்.

மேலை ஜனனாயகத்தின் கண்களுக்கு: கொள்ளைக்காறன் கையின் திருவோடு இந்திய ஜனனாயகம்.

ஏழையின் ஆக்கத்தைப் பறிக்கும் திருட்டுக் கோழையின் கைவாள் இந்திய ஜனனாயகம்.

ஊரின் பெண்மையைக் பெண்டாளும் கிழங்களுக்கு பன்னிரு கரங்கள் ஆவது இந்திய ஜனனாயகம்.

"மேலைநாடுகளின் அடிமைகள் இந்திய மக்கள்" -இங்கே 'அடிமைகள்' என்ற சொல்லின் இன்னொரு அர்த்தம் 'இந்திய ஜனனாயகம்'

ஈழத்தின் அருகே இந்தியா என்ற குள்ளநரி இருக்கும்வரைக்கும் தமிழனுக்கு விடிவு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இராஜதந்திர Space இப்ப எத்தினை கியூபிக் மீற்றர் இருக்கு? :D

[size=1] [/size]

[size=1]நியானி: சுட்டிய பெயர் நீக்கம்[/size]

[size=1] [/size]

Edited by நியானி

அது தான் நம்ம கண்ணா நிதி ஒரு உண்ணாவிரதம் இருந்துவிட்டாரானால் போச்சு.

தேவையாயின்

பதவிகளை இராஜினாமா செய்யாமல், தமிழ்ஈழம் என்ற சொல்லை பாவியாமல் ஒரு டெசோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தர் பல்டி ஓக்கே.. அவன் அடிப்பான் அது தெரிந்த விடயம் ... ஆனால் குரங்கிற்கு குடுக்க வேண்டிய சவுண்டை அங்கிட்டு குடுக்கணும்.. அதை குடுத்தது யார்...? :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.