Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருகலைப்பு செய்ய மறுத்த டாக்டர்: இந்திய பெண் அயர்லாந்தில் பலி

Featured Replies

[size=4]கருகலைப்பு செய்ய டாக்டர்கள் மறுத்ததால் இந்திய பெண் அயர்லாந்து மருத்துவமனையில் இறந்தார்.

இது குறித்து விசாரணை நடத்த அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.[/size]

[size=4]இந்தியாவைச்சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர் (36), இவர் அயர்லாந்தில் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவீதா ஹலப்பான்னாவர் (31). இவர் 17 வார கர்ப்பிணியாக இருந்தார். நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கால்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதில் இதயத்துடிப்புஅதிகமானதால் கருகலைப்பு செய்தால் தாய் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. [/size]

[size=4]இதையடுத்து கணவர் பிரவீன் , தனது மனைவிக்கு கருகலைப்பு செய்யுமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார். ஆனால் டாக்டர்கள் , மறுத்துவிட்டனர். [/size]

[size=4]அயர்லாந்து நாட்டின் மதசட்டப்படி கருகலைப்பு செய்தால் குற்றவழக்கு என்பதனை பிரவீனிடம் எடுத்துகூறப்பட்டது. இந்நிலையில் சவீதா உடல்நிலை மோசமானதால் அவர் சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்தார். சவீதா இறந்தது தொடர்பாக அந்நாட்டு அரசுவிசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AF%8D-%E0%AE%9F-215700416.html

  • தொடங்கியவர்

[size=5]கருக்கலைப்பு மறுப்பு: சவீதா மரணம் எழுப்பும் கேள்விகள்[/size]

[size=4]ஐயர்லாந்தில் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு தேவைப்பட்ட இந்தியப் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததையடுத்து, அயர்லாந்தில் கருக்கலைப்பு தொடர்பான சட்டம் திருத்தப்பட வேண்டும் என இந்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.[/size]

ஐயர்லாந்தில் வாழ்ந்துவந்த இந்தியப் பல் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர் கருத்தறித்த பின்னர் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக அவர் தனது கருவை கலைத்துவிட வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.

[size=3][size=4]ஆனால் கத்தோலிக நாடான ஐயர்லாந்தில் கருக் கலைப்பு செய்ய சட்டப்படி தடை இருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]அதனால் அவருக்கு கருக்கலைப்பு செய்ய அங்குள்ள மருத்துவர்கள் மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]பின்னர் சவீதாவின் கரு தானாக கலைந்தபோது செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி சவீதா இறந்துவிட்டார்.[/size][/size]

[size=3][size=4]அயர்லாந்தில் விரும்பத்தகாத கருக்களை கலைக்க பெண்கள் அண்டையிலுள்ள ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் மற்ற நாடுகளுக்கும் வருவது பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.[/size][/size]

[size=3][size=4]சவீதா உயிரிழந்ததை அடுத்து கருக்கலைப்பு செய்யும் உரிமையை பெண்களுக்கு மறுக்கமுடியுமா என்ற ஒரு விவாதம் எழுந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இவ்விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதர் அயர்லாந்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கவலை வெளியிட்டுள்ளதோடு விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121116_savithaabortion.shtml

இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைத்து குழந்தைகளை கொல்லுவது நிறுத்தப்படுமா?

பெண்சிசுக்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனது இந்தியாவின் நீதி?

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து அரசைக் கேள்வி கேட்கும் தகுதியை, இந்தியா முள்ளி வாய்க்காலில், தொலைத்து விட்டது! :o

  • தொடங்கியவர்

[size=4]இவ்வாறான ஒரு சட்டம் ஒரு முஸ்லீம் நாட்டில் இருந்து ஒரு மேற்குலக பெண் மரணித்து இருந்தால், மேற்குலகம் முதல் தர செய்தியாக வெளியிட்டு இருக்கும். பின்னூட்டங்களும் காரசாரமாக இருந்திருக்கும். [/size]

இருந்தும் போராட்டம் நடத்துபவர்கள் இந்தியர் மாதிரி தெரியவில்லை. அடிப்பது அவர்களாக அணைப்பதும் அவர்களாவேதான் இருக்கிறார்கள்.

நமக்கு தெரிந்து எல்லாம் ஆயிரம் மாற்றுகருத்துகள் கண்டுபிடித்து எதிரிக்கு வால்பிடித்து......

இப்படியான ஒன்றில் தன்னும் நம்ம கோழை கிந்தியர்கள் முன்னல் நின்று போராடுவதாக தெரிய வில்லயே.

சிங்களவரையும், பாகிஸ்தானியரை தவிர தென்கிழக்காசிய கோமாளிகள் எல்லோரும் யாராவது ஒருவரால் ஆளப்படத்தான் தகுதியான இனமாகவே நடந்துகொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பெண் மரணம் எதிரொலி: அயர்லாந்து பிரதமர் அவசர ஆலோசனை!

Published: Saturday, November 17, 2012, 11:33 [iST]

டப்ளின்: கருக்கலைப்பு சட்டம் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கூறியுள்ளார். ஐரீஸ் நாட்டு மக்களிடையே பன்னெடுங்காலமாக உள்ள நம்பிக்கையில் திடீர் முடிவுகள் எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார்.பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், "உங்கள் வயிற்றில் வளரும் கரு, இயல்பான நிலையில் இல்லை. இதனால், வலி ஏற்பட்டுள்ளது' என்றனர்.இதைக் கேட்ட சவீதா, "17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள்' என்றார். ஆனால், "இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு; கருவை கலைக்க முடியாது' என, டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவியது. இதனால், இரண்டு வாரங்களுக்கு முன், சவீதா இறந்துவிட்டார்."கரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார். அவரது மரணத்துக்கு டாக்டர்கள் தான் காரணம்' என, சவீதா பெற்றோர், வழக்கு தொடர்ந்துள்ளனர்.தற்போது இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே கருக்கலைப்பு மறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்தும் கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரியும் 2 ஆயிரம் பேர் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். இதேபோல், ச‌விதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் அயர்லாந்து நாட்டு தூதரகம் எதிரே நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ச‌விதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி ரேடியோவில் பேசுகையில், கருக்கலைப்பு செய்ய முடியாமல் போனதால் ரத்தம் விஷமாக இந்தியப் பெண் மரணமடைந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. கருக்கலைப்பு சட்டத்தில் தீடீர் என்று எந்த முடியும் எடுக்க முடியாது. இது இந்த நாட்டு மக்களின் பன்னெடுங்கால நம்பிக்கை என்றார். மேலும் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

http://tamil.oneindia.in/news/2012/11/17/world-indian-woman-s-death-irish-pm-wont-be-rushed-164789.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.