Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ்

17 நவம்பர் 2012

எங்கள் ஜனாதிபதி மாகாத்மா காந்தி போன்று இல்லாவிடினும் அவருக்கு மகாத்மா காந்தியின் குணவியல்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு பேசிய ராவய வார இதழ் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போயி;விட்டது என குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எல்லா இனங்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். எல்லா இனங்களும் சமத்துவமாக வரவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர் என நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், பசு உன்னைக் கொல்ல வரும்போது அதனை நீ கொல்லலாம் என்றும் மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். அதை ஒத்ததுதான் புலிகள் இயக்க அழிப்பும். மனித வம்சத்துக்கே சாபக்கேடாக இருந்த இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது. அதனை அழிப்பது நியாயமாகவும் கடமையாகவும் இருந்தது.இரண்டு மணி நேரத்துக்குள் எமது மக்கள் யாழ்.குடாநாட்டில் இருந்து விரட்டப்பட்டமை மிகவும் கொடிய நிகழ்வாகும். அச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு விரட்டப்பட்ட மக்களை அரவணைத்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அவசிய உதவிகளையும் செய்திருந்தேன்.அன்று எமது மக்க ள் விரட்டப்பட்டமைக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாக இருந்தேனோ என எண்ணுகின்றேன்.

இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நானும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷவும், ரிசாட் பதூர்தீனும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் விசேட திட்டங்களை அமைத்துள்ளோம்.எனவே எந்தளவிற்கு கூடிய விரைவில் இம் மக்களை மீளக்குடியமர்த்த இயலுமோ அந்தளவுக்கு விரைவாக குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்களான எ.எச்.எம். பௌசி, சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதூர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணாநாயக்க, எ.எச்.எம். கிஸ்புல்லா, வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, மேல்மாகாண ஆளுநர் அளவு மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, வெளிநாட்டு தூதுவர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85513/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரை யாருடன் ஒப்பிடுவது என்று தெரியாத ஜென்மங்கள்.

உண்மைதான் மகிந்த மகாத்மா மாதிரி

டக்கு சேகுவரா மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ........ அந்தளவுக்கு மோசமானவரா மகாத்மா காந்தி ? :rolleyes:

இது காந்தியை மட்டுமல்ல, கோட்சேயையும் அவனமானப்படுத்தும்..

கக்கீம் மட்டும் மன உலைச்சாலால் வைத்திய சாலையில் படுத்திருந்தவர். அவரின் பிரநிதி நயீப் மயீத பங்குபற்றினார். <_<

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்களான எ.எச்.எம். பௌசி, சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதூர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணாநாயக்க, எ.எச்.எம். கிஸ்புல்லா, வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, மேல்மாகாண ஆளுநர் அளவு மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, வெளிநாட்டு தூதுவர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தேவனந்தா மகிந்தா காந்தி மாதிரி என்று சொல்லவில்லையே.

[size=4]அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதில் உண்மை இல்லாமல் இல்லை.[/size]என்றாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எல்லா இனங்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். எல்லா இனங்களும் சமத்துவமாக வரவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர் என நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.
கக்கீமுக்கு கிடைத்தளவு தேவானந்தாவுக்கும் கிடைத்திருக்கு. சிராணி, மஞ்சுள் திலகரத்தினாவை விட தேவ நல்லாய் இருக்கிறான். பிறகு...... மகிந்தா மனிதாபிமானப்போர் தான் செய்ததாக கூறினார். NFZ அமைத்தார்...... நனாரகத்தான் அணைத்தார்(பிறகுதான் முதுகில் குத்தினார்)

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், பசு உன்னைக் கொல்ல வரும்போது அதனை நீ கொல்லலாம் என்றும் மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.
புலி இயக்கததை பசுவுடன் தானே ஒப்பிடுகிறான. பசு மகாத்மா காந்தி போன்றோர் வனங்கும் தெய்வம். புலிகள் தப்பியிருந்தால் தேவா பலகுற்றங்களுக்கு விசாரிக்கப்பட்டிருப்பன். புலி பசுவாகத்தான் இருந்தது ஆனால் கொல்ல வேண்டி வந்தது தனிபட்ட காரணம் என்று தானே பொருள்.

மிகுதி மகிந்தாவின் அன்பை வேண்ட சொல்லப்பட்டதுதான். இருந்தாலும்..... அவன் தனது முதலாளிகலையும் தஜா பண்ணத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிப் பெண் காந்தியாக வர முடியுமென்றால்...

உலகில், உள்ள எல்லோரும்... காந்தியே...

-தமிழ்சிறி காந்தி-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ்

சிங்களவன் அவ்வளவுத்துக்கு மடையனாகிட்டான்.

கூட்டத்துக்கு முன்னால இப்படி கதைப்பவன் தனிமையில் சந்தித்தால் என்னத்தையெல்லாம் குடுப்பானோ?

நக்க வெளிப்பட்டால் செக்கென்ன? சிவலிங்கமென்ன?

அதாவது பயங்கரவாதி ராஜபக்சவும் மகாத்மாகாந்தி போல சுடப்பட வேண்டும் என்று சொல்கிறானோ இந்த டக்லஸ்?

இவனுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?

அதாவது பயங்கரவாதி ராஜபக்சவும் மகாத்மாகாந்தி போல சுடப்பட வேண்டும் என்று சொல்கிறானோ இந்த டக்லஸ்?

இவனுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.